சமீபத்திய செய்தி

தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதில் அரசியல்வாதிகளை விட ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் பெரும் பங்காற்ற முடியும் எனவும், இது வரலாற்று ரீதியாக  நிரூபணமாகியுள்ளது என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 18 ஆம் திகதி யாழ்.மாவட்ட அரசாங்க வெளியீட்டுப் பணியகத்தை திறந்து வைத்ததன் பின்னர் யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தேசிய ஒருமைப்பாடு நாட்டின் மிக முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும் என்றார்.

ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் உரையாற்றுகையில்...

“தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு அரசியலை விட ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் முக்கிய பங்காற்ற முடியும்.  இது வரலாற்று ரீதியாக நிருபணமாகியுள்ளது.  ஜனநாயகத்தின் எல்லைக்குள் விமர்சனங்கள் இருக்கலாம், ஆர்ப்பாட்டாங்கள் இருக்கலாம், வாதப் பிரதிவாதங்கள் இருக்கலாம், இவற்றை ஜனநாயகத்தின் பண்புகளாக குறிப்பிடலாம்.  அது ஒரு போதும் உங்களுக்கு இடையேயான நட்பு தடையாக இருக்கக் கூடாது.  ஒரு நாடு முன்னேறுவதற்கு மோதல் அவசியம் இ ஆனால் மோதல் இறுதியில் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.

சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட ஊடகவியலாளர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர் எவ்வாறு சிந்திக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக எதிர்காலத்தில் ஊடக பரிமாற்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். மேலும், யாழ்ப்பாணம் மிகவும் மேம்பட்ட ஊடகப் பாவனையைக் கொண்ட ஒரு இடம். ஏன் தெரியுமா? இந்தப் பகுதியில் ஐந்து பிராந்திய அச்சு ஊடகங்கள் உள்ளன. இலங்கையில் வேறு எங்கும் இப்படி ஒரு இடம் இல்லை.  அவ்வாறே, பேச்சு சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். ஊடகங்களை கடுமையான விதிகளால் கட்டுப்படுத்த முடியும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. அதற்கு சுய கட்டுப்பாடு தேவை. அது நமக்குள் இருக்க வேண்டும். "

ஊடகவியலாளர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசிதிசி காப்புறுதி,  இலங்கையில் முதலாவது பட்டய ஊடகவியலாளர் நிறுவகத்தை ஸ்தாபித்தல் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுகள் தொடர்பிலும் அமைச்சர் விளக்கமளித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேஸ் ராகவன், வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம் . சமன் பந்துலசேனஇ அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் மகேசன் உட்பட அரச அதிகாரிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கல்வியின் எதிர்காலம் இணையத்தில் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும், நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இணைய வசதிகள் மற்றும் தேவையான கருவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள டெல்ஃப்ட் சைவப்பிரகாசா கல்லூரிக்கு அத்தியாவசியமான மடிக்கணினி மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

16 ஆசிரியர்களைக் கொண்ட இப்பாடசாலையில் 68 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன் அவர்களின் எதிர்காலப் படிப்பிற்காக கணினி மற்றும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்இ நாட்டில் நிலவும் கல்வி ஏற்றத்தாழ்வை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

"இலங்கையில் 25% ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள்  பயிற்சி பெறாதவர்களே.  வட மாகாணத்தில் மாத்திரம் 53% பயிற்சி பெறாத ஆரம்பத் பிரிவு ஆசிரியர்கள் உள்ளனர்.  இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இதற்கு மேல் உதாரணம் தேவையில்லை. நான் கல்வி அமைச்சராக இருந்த போது வடமாகாண கல்வித்துறையை ஆராய்ந்தேன். வடமாகாணத்தில் 22  தேசிய பாடசாலைகள் உள்ளதாக அப்போதுதான் தெரிய வந்தது.  ஜனாதிபதியின் ஆயிரம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றும் நிகழ்ச்சியில் வட மாகாணத்திற்கு தேசிய பாடசாலைகளாக 76 பாடசாலைகள் உயர்ந்துள்ளது.  இலங்கையில் 10142 பாடசாலைகள் உள்ளன.  ஒவ்வொரு பாடசாலைக்கும் இணையம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில்,  பிள்ளைகளின் கல்வி இணையத்தில் தங்கியிருக்கும்இ எனவே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வது அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பாகும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற பிரதித் தலைவர், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட செயலாளர் மகேசன்இ மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். பிரதீபன், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, சைவப்பிரகாச கல்லூரியின் அதிபர் அகிலன் தேஷ்வரி மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கான 'உங்களுக்கு வீடு அனைவருக்கும் நாளை' திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மூன்று குடும்பங்களுக்கு வீடுகள் இன்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் கையளிக்கப்பட்டது.

இதன்படி, கங்கொடகம, உடுப்பிள்ளேகொட மற்றும் கிரிந்த மல்வத்துகொட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மூன்று குடும்பங்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ..

வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் ஆகியோர்க்கு இடையே பெப்ரவரி 15 ஆம் திகதி வெகுஜன ஊடக அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

போலியான தகவல்கள் பரவுவது,  இன்று உலகம் எதிர்நோக்கும் கடும் சவாலாக உள்ளதாகவும், அதைத் தடுக்க நியூசிலாந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.

பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஓஷதி அழகப்பெரும மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் கொள்கை ஆலோசகர் செல்வி சுமுது ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுமாறு, மாணவர்கள் மற்றும் பேராசியர் குழாமினால் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் உயர்க் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், விரிவுரை மண்டபங்கள், பீடங்களுக்கான கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” அபிவிருத்தி செய்யப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழக விடுதி மைதானத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள், நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் நலன் விசாரித்தறிந்தார்.

வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கில் கல்வெட்டைத் திறைநீக்கம் செய்து திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம் மற்றும் சகவாழ்வு மையம் போன்றவற்றை மாணவர் பாவனைக்குக் கையளித்தார்.

தகவல் தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட  

ஜனாதிபதி அவர்கள், தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைத் தமது பிரதேசங்களுக்கே வழங்க முடியுமானால், அதுவே தான் பிறந்த இடத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவையாகுமென்று எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளைக் கல்வியினூடாகச் சமூகமயப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று, நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், தேசிய கல்வியைக் கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது என்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் படிப்படையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கலைப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பாடத்திட்டங்களைச் சமூகத் தேவைகளுக்கேற்ப தயாரிப்பதற்காகப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உலகில் அதிக கேள்வி நிலவும் துறைகளை அடையாளம் கண்டு, அத்துறைகளினூடான புத்திஜீவிகளை உருவாக்கும் காலத்தின் தேவையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் எடுத்துரைத்தார்.

“உங்களதும், உங்கள் நண்பர்களதும் மனங்களில் தேசிய சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு, இவ்வாறான பல்கலைக்கழகங்களின் விடுதிகளையும் வகுப்பறைகளையும், மைதானங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார். 

பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் பந்தங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவை என்றும் அந்தத் தொடர்பு, இந்த நாட்டினது அபிவிருத்திக்கு பெரும் ஊன்றுகோலாக இருக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

11.02.2022

மாத்தறை நகரில் உள்ள இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும  அவர்களின் தலைமையில் சனிக் கிழமை (05) பிற்பகல் வெலிகமை பிரதேச செயலாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 மாத்தொட்ட இராணுவ வீர ஒன்றியம், ஹெல ஜாதிக இராணுவ வீர ஒன்றியம், மற்றும் அகில இலங்கை கலாசார ஐக்கிய மன்றம் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

 வெலிகம சாசனாரக்ஷன ஒன்றியத்தின் செயலாளர் வண.வேபத்திர இந்திரசிறி நாயக்க தேரர், மாத்தோட்ட இராணுவ வீர ஒன்றியம் மற்றும் வெலிகமை பிரதேச சபைத் தலைவர் திரு. புஷ்பகுமார பட்டகே, அகில இலங்கை கலாசார ஐக்கிய மன்றத்தின் தலைவர் கலாநிதி திரு. குசான்  ஜயமின் த சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரிவினைவாதமற்ற நாட்டை உருவாக்குவதற்கு கல்வி வழிவகுத்தாலும், சமூக அமைப்பில் அவ்வாறே நடக்காதது பிரச்சினைக்குரியது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார். வெலிகம பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போர்வீரர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரூபவாஹினி ஒளிபரப்பினை டிஜிட்டல் மயமாக்கல் செயற்றிட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கூட்டத்தில் ஊடக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெகுசன ஊடக  அமைச்சினால் அமுல்படுத்தப்படும் தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் பெப்ரவரி முதலாம் திகதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஒலிபரப்பாளர் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, தொலைக்காட்சி டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் குறித்தும், இதில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

ஊடக அமைச்சின் செயலாளர் அனுச nபல்பிட்ட அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க மற்றும் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

சர்வஜன வாக்கெடுப்பை கையாளும் ஊடகங்களின் பலம் அரசியல் நிறுவனங்களின் பலத்தை விட மிக அதிகம் எனவும், அந்த பெரும் பலத்துடன் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பும் இருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஊடக சட்ட மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"ஊடக வரலாற்றில் நம்பகத்தன்மையும் மரியாதையும் அதிகம் இருந்து வந்துள்ளமை நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் இன்று அந்த நற்பெயருக்கு நம்பகத்தன்மை இருக்கிறதா?  ஊடகத்திற்கு உள்ள கௌரவம் குறைந்துள்ளது.  அவ்வாறே நம்பகத்தன்மையிலும் குறையுள்ளது என்பதை வெகுசன ஊடக அமைச்சர் என்ற வகையிலும், ஊடகத் துறையில் உள்ள நாம் அனைவரும் எவ்வித வாதங்களும் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.   அது எப்படி நடந்தது? ஏன் நடந்தது?  அவ்வாறெனில் அதற்கான தீர்வுகள் என்ன? அந்த தீர்வுகளுக்கான அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்குவதே இந்த விவாதத்தின் அடிப்படை.

ஊடகத்துறையில் நமது நம்பகத்தன்மை ஐந்து முக்கிய விடயங்களில் கீழ் களங்கம் அடைந்துள்ளது என்று நான் நம்புகிறேன். முதலாவது, எஜமானனின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல், பொதுமக்களின் நலனுக்காக அல்ல, அரச ஊடகமெனில் அரசாங்கம் என்ற எஜமானுக்கு, இதன் மூலம் சமநிலை இழந்துள்ளது. இது எனது நம்பிக்கையின் அடிப்படையில் முதல் விடயமாகும்.  இரண்டாவது விடயம்  தீவிர அரசியல் மயமாக்கல், அதை நாம் அனுபவிக்கிறோம். சில சமயங்களில் இது வெளிப்படையாக மட்டுமல்ல, மறைமுகமாகவும் நடக்கின்றது. அவ்வாறே, அடுத்த தீவிரமான பிரச்சினை என்னவென்றால், தனியுரிமையின் எல்லைகள் மிகத் தீவிரமான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.. பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் உள்ளனர்.

அடுத்த விடயம் என்னவெனில்,  தகவலின் அடிப்படையில் அல்லாமல்,  மனோபாவத்தின் அடிப்படையில் போலிச் செய்திகளால் மக்கள் ஏமாறுகிறார்கள்.  அவ்வாறே  நாம் அடிக்கடி பார்ப்பதும் அனுபவிப்பதுமான ஒரு விடயம்தான் தேசியம் மற்றும் மதத்தின் அடிப்படையிலான வெறுப்பான கருத்துக்கள்.  நான் கண்டறிந்த விடயங்களுள் இது இன்னொரு விடயமாகும். இதனால் தான் நாம் வரலாற்றில் பெற்றுக் கொண்ட கண்ணியம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதிலிருந்து எப்படி விடுபடுவது?  தணிக்கை தான் இதற்கு சரியான தீர்வு என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.    இவ்வாறான கருத்தாடல்கள் இருக்காலம், ஆனால் நாம் பதற்றமடையத் தேவையில்லை.  நான் வெகுசன ஊடக அமைச்சர் என்ற வகையில் இது சரியான தீர்வு அல்ல என நான் கருதுகின்றேன்.  நான் அதை நிராகரிக்கிறேன்.  ஆனால் எமக்கு ஒருவித ஒழுங்குமுறை தேவைப்படுகின்றது.  .அதை யாரும் நிராகரிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

இக் கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் ரஞ்சன ஹேரத், முன்னாள் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்கிரமநாயக்க, கலாநிதி ரங்க கலன்சூரிய, ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளர் நாலக குணவர்தன, இலத்திரனியல் ஒலிபரப்பாளர் சங்கத்தின் தலைவர் அசங்க ஜயசுந்தர, ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கையின் முன்னணி சமூக ஊடக ஆர்வலர்கள் சிலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கையின் வெளிநாட்டுத்; தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் சுமூகமாக கலந்துரையாடப்பட்டது.

நவீன தொழிநுட்பத்துடன் கூடிய வினைத்திறனுள்ள மேம்பட்ட தபால் சேவையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் 25ஆம் திகதி நடைபெற்றது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சமகி ஜன பலவேக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் சேவைக் கட்சி  போன்ற அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல சுயாதீன தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

இங்கு பிரதானமாக பல விடயங்கள் பற்றி அவதானம் செலுத்தப்பட்டதுடன், தபால் மா அதிபர் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியதன் பின்னர் உரிய ஆட்சேர்ப்புகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

 

தனியார் தபால் சேவையின் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்கின்ற போது பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்காக ஒழுங்குபடுத்தும் நிறுவனமொன்றினை ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், தேவையான பத்திரங்களை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 

தபால் திணைக்களத்தின் வருவாயை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரதேச தபால் பிரிவிற்கும் ஒருவர் என்ற அடிப்படையில்,  புதிதாக  சேர்த்துக் கொள்ளப்பட்ட இணைத்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு சந்தைப்படுத்தல் பயிற்சியளித்து அதன் மூலம் தபால் சேவையின் வருவாயை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தபால் மா அதிபர் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

 

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ருவன் சத்குமார, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நெருக்கடியான காலங்களில் நாட்டிற்காக கொள்கை வகுப்பாளர்கள் மிகப்பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டும் என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மின்வெட்டு தொடர்பில் நேற்று வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் பேச்சுவார்த்தை மேசையில் எடுத்த தீர்மானங்கள் மற்றும் அமைச்சரவையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மின்வெட்டு மேலும் ஏற்படக்கூடாது என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும,

“மேற்படி விடயத்தில் நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பீக் ஹவர்ஸில் 25 வாட் மின்விளக்கை அணைத்து வைக்க முடியுமானால், அந்த ஐந்து மணி நேரத்தில் 140 மெகாவாட் சேமிக்க முடியும்.

அதாவது, பீக் ஹவர்ஸில் ஐந்து மணி நேரம் 25 வாட் மின்விளக்கை அணைத்து வைப்பது என்பது நாம் பெரிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது போல் ஆகும். ஆனால் அது மட்டும் செய்தால் போதாது. அந்த தியாகத்தை குடிமக்கள் மட்டும் செய்தால் போதாது. கொள்கை வகுப்பாளர்களாகிய நாம் இந்த தருணத்தில் மிகப்பெரிய தியாகத்தை செய்ய வேண்டியவர்கள். கொள்கை வகுப்பாளர்களாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அந்த அர்ப்பணிப்பை செய்து காட்ட வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். சில அரச அலுவலகங்களில் குளிரூட்டி இயந்திரங்களை  18 முதல் 19 டிகிரி செல்சியஸ் வரை குறைத்துள்ளனர்.  பொதுவாக குளிரூட்டியின் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருந்தால் போதுமானது என மின்சக்தி வல்லுனர்கள்  கூறுகின்றனர். ஏனென்றால் நாம் ஐஸ்லாந்தில் வசிக்கவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

Latest News right

“அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் – 2023” விண்ணப்பம் கோரல்

செப் 10, 2023
Default Image
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் வருடாந்தம்…

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

மே 23, 2023
Cabinet Decisions on 22.05.2023 Tamil page 0001
2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…