சமீபத்திய செய்தி

 

இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் வருடாந்தம் செயற்படுத்தப்பட்டு வருகின்ற “அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழச்சித் திட்டம்” இம்முறையும் வெகுசன ஊடக அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் “அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப்பரிசில் – 2023” நிகழ்ச்சிக்காக விண்ணப்பம் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய இறுதித் திகதி 2023 ஒக்டோபர் மாதம் 11ஆந் திகதி ஆகும்.

நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் மூன்று வருட சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்துள்ள முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள 18-55 வயதிற்குற்பட்ட ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், வெப் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக தொழில் நுட்ப கலைஞர்களுக்கு இப்புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும். மேலும், விண்ணப்பிக்கின்ற பாடநெறி நேரடியாக ஊடகத் துறையுடன் தொடர்புபட்டதான பாடநெறியாக அமைதல் வேண்டும். விண்ணப்பதாரி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2023ஆம் ஆண்டிற்காக ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கு இந்த புலமைப் பரிசில் திட்ட முறைமை மூலம் இரண்டு முறை பயனைப் பெற்றுக் கொள்ளவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், முதற் சந்தர்ப்பத்தில் தகைமை பெற்று 5 வருடங்கள் கடந்த பின்னர் முதற் பாடநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த வெகுசன ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது சந்தர்ப்பத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த புலமைப் பரிசில் திட்ட முறைமை மூலம் இளமானி மற்றும் முதுமானிப் பாடநெறிகளுக்காக இரண்டு இலட்சம் (ரூ. 200,00.00) அல்லது குறுங் கால அல்லது நீண்ட கால சான்றிதழ் பாடநெறி, டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகளுக்காக வேண்டி ஒரு இலட்சம் (ரூ. 100,00.00) ரூபா அதிகபட்சமாக இந்தப் புலமைப் பரிசில் நிதி வழங்கப்படுகின்றது.  புலமைப் பரிசிலுக்காக தகைமை பெறுகின்ற ஊடகவியலாளர்களுக்கு பாடநெறிக்கான கட்டணத்தில் 50% ஐ பாடநெறியின் ஆரம்பத்தில் முதற் தவனையாகவும், எஞ்சிய 50% இல் 25% ஐ பாடநெறியின் இரண்டாவது தவனையிலும் எஞ்சிய 25% ஐ பாடநெறியினை பூர்த்தி செய்து சான்றிதழை முன்வைத்ததன் பிற்பாடு வழங்கப்படும்.

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படுகின்ற தேர்வுக் குழுவொன்றினால் விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வின் மூலம் பரிசீலிக்கப்பட்டு புலமைப் பரிசில் வழங்குவதற்காக தெரிவு செய்யப்படுவார்கள்.

இதற்காக விண்ணப்பிக்கின்ற அனைத்து விண்ணப்பங்களும் 2023.10.11ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிப்பாளர் (ஊடகம்), வெகுசன ஊடக அமைச்சு, இலக்கம் 163, “அசிதிசி” மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொடை, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் – 2023 தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 0112-513645/0112-514632/0112-513469 என்ற தொலைபேசி இலக்கங்கis தொடர்பு கொள்ளவதினூடாக அல்லது மாதிரி விண்ணப்பப் படிவம் வெகுசன ஊடக அமைச்சின் https://www.media.gov.lk இணையத் தளத்தில் நுழைவதினூடாக பெற்றுக் கொள்ள முடியும்.

கடவுச்சீட்டுக்களை ஒன்லைன் மூலமாக விநியோகிக்கும் வேலைத் திட்டம் இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் முற்பகல் ஹோமாகம பிரதேச செயலகத்தில் இச்செயற்திட்டம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒரு நாள் சேவைகள் வழமை போன்று இடம் பெறுவதாக தெரிவித்துள்ள அவர், ஒன்லைன் மூல விநியோகம் நடைபெற்ற போதும் அவசியமானால் எவரும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு நேரடியாக வருகை தந்து, அதற்கான விண்ணப்பத்தை ஒப்படைக்கவும் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்புதிய வேலைத் திட்டத்தின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்ததன் பின்னர் மூன்று தினங்களுக்குள் கடவுச்சீட்டு கூரியர் சேவைக்கு ஒப்படைக்கப்படும். அதனையடுத்து அதனை வீட்டுக்கே பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குடிவரவு, குடியகல்வு திணைக்களமானது மக்களுக்காக சிறந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் கடவுச்சீட்டுக்காக ஒன் லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒன்லைன் மூலமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போர் அவர்கன்து விரல் அடையாளத்தை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களுடன் இணைந்ததாக, செயற்படும் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் நிளை அலுவலகங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலகங்களின் விபரங்கள் பொதுமக்கள் பாது காப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

@ அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, பொத்துவில், @ அனுராதபுரம் மாவட்டத்தில் நுவரகம், கெகிராவை, ஹொரவபொத்தான, @ பதுளை மாவட்டத்தில் மஹியங்களை, அப்புத்தளை.. @ மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, காத்தான்குடி @ கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம, சீதாவக்க, @ காலி மாவட்டத்தில் கரந்தெனிய, அக்மீமன, நெலுவ @ கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, கம்பஹா, மீரிகம @ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலை, திஸ்ஸமஹாராமை, @ யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, பருத்தித்துறை. @ களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, மத்துகம, பாணந்துறை. @ கண்டி மாவட்டத்தில் கம்பளை, குண்டசாலை, பூஜாபிட்டிய @ கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, ருவன்வெல்ல @ கிளிநொச்சி மாவட்டத்தில் கரச்சி. @ குருநாகல் மாவட்டத்தில் வடமேல் மாகாண பிரதேச செயலகம், குளியாப்பிட்டி நிக்கவரெட்டிய @ மன்னார் மாவட்டத்தில் மன்னார் மேற்கு @ மாத்தளை மாவட்டத்தில் நாவுல. @ மாத்தறை மாவட்டத்தில் அதுரலிய தெவிநுவர. @ மொனராகலை மாவட்டத்தில் புத்தள. @ முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு. @ நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுக வலப்பனை. @ பொலனறுவை மாவட்டத்தில் திம்புலாகல எலஹெர ஹிங்குரன்கொட @ புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் சிலாபம் @ @ இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை குருவிட்ட எம்பிலிப்பிட்டிய. @ திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா @ வவுனியா மாவட்டத்தில் வெங்கல செட்டிக்குளம் என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (09) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards" நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டில் கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, அனைவரும் சரியான வயதில் கல்வியை நிறைவு செய்து முன்னேறிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்கலைக்கழகக் கட்டமைப்பினுள் நவீன ஆராய்ச்சி கலாசாரத்தை நிறுவுவதற்கு வழங்கும் சிறப்பான தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்புக்காக இலங்கையின் உபவேந்தர்கள் மற்றும் பணிப் பாளர்கள் குழுவினால் பாராட்டப்பட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நான் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய காலம் இப்போது நினைவுக்கு வருகின்றது. அப்போது, சென்னையில் நடந்த லண்டன் உயர்தரப் பரீட்சையிலும் நான் சித்தி பெற வேண்டும் என்று என் தந்தை வலியுறுத்தினார். அதனால் நான் சென்னைக்குச் சென்று லண்டன் உயர்தரப் பரீட்சையையும் எழுதினேன்.

ஆனால், அதற்குள் நான் இலங்கையில் தோற்றிய உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளும் வெளியாகி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றிருந்தேன். எனவே அந்த நாட்களில் இது ஒரு எளிய செயல்முறையாக இருந்தது. இப்போது போல் புள்ளி வழங்கும் முறை இருக்கவில்லை. நான்கு பாடங்களில் சித்தி பெற்ற அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். பின்னர் மூன்று பாடங்களில் மற்றும் சித்தி பெற்றவர்களும் அனுமதிக்கப் பட்டனர்.

அதேநேரம், நான் லண்டன் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளையும் பெற்றிருந்தேன். அதனால் இலங்கையில் தங்குவதா அல்லது ஐக்கிய இராச் சியம் செல்வதா என்பதை நான் தீர் மானிக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் இலங்கையில் இருக்க முடிவு செய்தேன். எனது தாத்தாவுக்கு இருந்த தொடர்புகளின் அடிப்படையில் நான் பேராதனை பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும் என்று எனது அம்மா வற்புறுத்தினார். ஆனால் சட்டக் கல்வி யைத் தொடர கொழும்பு பல்கலைக்க ழகத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது.

பேராசிரியர் லீயின் மரணத்திற் குப் பிறகு, அப்போதைய பீடாதிபதி மற்றும் சட்டத்துறைப் பேராசிரியராக இருந்த நடராஜா, ரோமன் டச்சு சட்டத் தில் அதிக நிபுணத்துவம் பெற்றிருந் தார். மேலும் எங்களுக்கு பல விரிவு ரையாளர்கள் இருந்தனர். இளம் உதவி விரிவுரையாளராக ஜி.எல். பிரிஸ் அவர் களும் பணியாற்றினார். இலங்கையில் எனது பல்கலைக்கழகக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்தேன். இலங்கையில் எனது கல்வி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “அபிநந்தன விருது விழா” (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதிக்கு “அபிநந்தன விருது” வழங்கினார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று (12) ஆரம்பமான “இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய வருடாந்த மாநாடு – 2023″இற்கு இணைந்த வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 03 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

ஜூலியானா மார்கரெட் கொஸ்வத்த, வோல்டர் லெஸ்லி டி சில்வா, இரத்னசபாபதி ஆறுமுகம் ஜெகதீசன், ஜனாதிபதி சட்டத்தரணி உபாலி ஏ. குணரத்ன. கனகரத்னம் கணேஸயோகன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர், நீதியரசர் அசோக நிஹால் டி சில்வா, நீதியரசர் டி.ஜே.த.எஸ். பாலபடபெந்தி, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன உட்பட 26 சட்டத்தரணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், “அபிநந்தன” குழுவின் தலைவர் ஜனப்ரித் பெர்னாண்டோ, இணைப்பாளர் சமத் பெர்னாண்டோ, உள்ளிட்ட பிரதம அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நான் சிந்தித்தேன். இந்த மாணவ மாணவிகளின் மனங்களில் அவர்களது எதிர்காலம் பற்றி நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை காணப்படுகின்றதா?

சுதந்திர தின நிகழ்வுக்காக இலங்கைக்கு வந்த பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் அன்னையில் எமது நாட்டின் இளைஞர் குழுக்களுடன் கலந்துரையாடினார். அதன் போது பெரும்பாலான இளைஞர் யுவகள், நீண்ட காலமாக இடம்பெற்று வந்த விடயங்கள் காரணமாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையினை இழந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்கள். இந்த இளைஞர் யுவதிகளின் மனங்களில் எதிர்காலம் பற்றி நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை காணப்படுகின்றதா?

சுதந்திர தினத்துக்குப் பிந்திய தின ஞாயிறு சன்டே டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விசேட சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.

மதீசா உடவத்த இவ்வாறு கூறுகின்றார்.

While leaving the country is a constant resonating thought, there is still a
smallest spark inside me that’s holding me close to home. I intend not let it
die. I have not given up on my Sri Lanka yet.

“நாட்டை விட்டுச் செல்லும் எண்ணம் என் மனதில் அடிக்கடி உதித்த போதும் எதிர்பார்ப்பின் சியதோர் ஒளிவிளக்கு இன்னமும் என் மனதில் ஒளிர்விடுகிறது. அது இப் பூமிக்கு என்னை சமீபமாக்குகிறது. நான் இன்னமும் இலங்கையை கைவிடவில்லை.”

கிளிபேர்ட் பிரணாந்து இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றார்.
I won’t migrate but I sincerely hope here will be change in Sri Lanka. All our
attitudes need to change, better discipline is needed, pepole need to obey
rules and show more empathy towards each other – Clifford Fernando

“நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நான் எண்ணாத போதும் இலங்கையில மாற்றம் நிகழும் என நான் எதிர்பார்க்கின்றேன். நம் அனைவரதும் மனோபாவங்கள் மாற்றமடைதல் வேண்டும். நாம் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும். சட்டத்துக்கு கட்டுப்படுதல் வேண்டும். மற்றவர்கள் மீது அனுதாபம் காட்டுதல் வேண்டும்.”

சிலானி விஜேசிங்க இவ்வாறு கூறுகின்றார்.

I dont want to leave my country – I want to help it out of the situation it is in
currently. I also dont want the people leaving at a time the country needs
them the most,only to come back when higs are better. – Cilani Wijesinghe

”நான் எனது நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். தற்போது நாடு அடைந்துள்ள நிலைமையிலிருந்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேவை எனக்குள்ளது. இந்த நெருக்கடியான வேளையில், நாட்டுக்கு மனிதவளம் தெதியவசியமான வேளையில் நாட்டை விட்டுச் சென்று நிலைமை சீரான பின்னர் மீண்டும் வருபவர்கள் எனக்குத் தேவையில்லை.”
இக் கருத்துக்களை வாசிக்கின்ற போது அண்மையில் அநுராதபுரத்தில் என்னைச் சந்திப்பதற்கு வந்த இரட்டை சகோதரிகள் எனது ஞாபகத்துக்கு வருகிறது. பல்லேகம ஹேமரதன தேரர் அவர்களுக்கு நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வின் இறுதியில் இந்த இரண்டு சிறுமிகளும் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியில் தரம் 5 இல் கல்வி கற்கின்றார்கள். அவர்களின் பெயர் நமதி பெரேரா மற்றும் செனுதி பெரேரா. அவர்கள் பாடல் ஒன்றைப் பாடுகிறார்கள். அப்பாடலின் இறுவட்டு ஒன்றை எனக்குத் தந்தார்கள். பாடலின் தலைப்பு – நாட்டை விட்டுச் செல்ல மாட்டேன். எனது உரையின் பின்னர் அப் பாடலை ஒளிபரப்புமாறு நான் தொலைக்காட்சி ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த மாணவ மாணவிகள், இந்த இளைஞர் யுவதிகள் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினர் ஆவார்கள். நாட்டை விட்டுச் செல்லாது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பிரார்த்தனை செய்யும் எதிர்காள சந்ததியினர் ஆவார்கள். அவர்களுக்கு சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவது எமது அனைவரதும் பொறுப்பாகும். இந்த சபையில் உள்ள உங்களுடைய பொறுப்பும் அதுவாகும். அனைத்து இலங்கையர்ளதும் பொறுப்பு அதுவாகும்.

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, நான் கருத்துக்களை முன்வைத்த சந்தர்ப்பத்தில் நாடு இருந்த நிலைமை பற்றி உங்களுக்கு நினைவிருக்குமென நான் நம்புகிறேன். கடந்த வரவு செலவுத்திட்ட முன்மொழிவினை சமர்ப்பித்த வேளை நாடு இருந்த நிலைமையும், அதேபோல் ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலைமையும் உங்களுக்கு நினைவிருக்கும்.

பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. பரீட்சைகள் நடாத்த முடியாதிருந்தது. உரம் இன்றி விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டன. விவசாயிகள் நிர்க்கதியாகி இருந்தார்கள். சுற்றுலாக் கைத்தொழில் வீழ்ச்சியுற்றுக் காணப்பட்டது. பத்து பன்னிரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காணப்பட்டது. எரிவாயு அறவே இல்லாமல் இருந்தது. நகர்ப்புற வீடுகளில் குடியிருப்பவர்கள் உணவு சமைக்க முடியாத நிலையில் இருந்தார்கள். மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் வரிசைகளில் நாள் கணக்கில் அலைக்கழிய நேரிட்டது. களைப்புற்ற மக்கள் தமது உயிர்களை வரிசைகளில் நின்ற நிலையில் இழந்தார்கள். அழுத்தத்தை பொறுத்துக்கொள்ள இயலாமல் மக்கள் வீதிக்கு இறங்கினார்கள்.

ஆனாலும் இன்று நிலைமை மாற்றமடைந்துள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இத்தகைய அழுத்தங்களை மெது மெதுவாக குறைப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. பொருளாதாரம் தற்போது ஓரளவு ஸ்திரத்தன்மையினை அடைந்துள்ளது. மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளார்கள். அபாயகரமான தொங்கு பாலத்தில் இலங்கைத் தாயை வெகுதூரம் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு எம்மால் முடிந்துள்ளது. நாம் அவ்வாறு பயணித்த பாதை இலகுவானது அல்ல. ஆனாலும் பயணம் இன்னமும் முடிவடையவில்லை.

வீழ்வதற்கு நெருங்கியிருந்து அரச நிதி முறைமையைப் பாதுகாப்பதற்கு நாம் அர்ப்பணித்தோம். அரச செலவினங்களை மட்டுப்படுத்தினோம். வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் காரணமாக வரி வருமானம் வீழ்ச்சியடைந்ததனை நாம் அறிவோம். 2019 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் தொழில்முயற்சிகள், கம்பனிகள் மற்றும் தனிநபர்கள் 16 இலட்சம் பேர்கள் வரி செலுத்தினார்கள். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் வரி செலுத்தும் எண்ணிக்கையினர் 5 இலட்சம் பேர் வரை வரை வீழ்ச்சியடைந்தது. அரசின் வரி வருமானம் படுமோசமாக வீழ்ச்சியடைந்தது.

இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு விளையும் அழிவினைப் புரிந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீண்டும் 2019 ஆம் ஆண்டு காணப்பட்ட வரி முறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கம் 2022 ஏப்ரல் மாதம் பொருளாதார மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கான துரித முன்மொழிவுத்திட்டம் ஒன்றை முன்வைத்தது.

முன்மொழிவுத்திட்டத்தின் பிரிவு 3.3 இன் கீழ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

  • உழைக்கும் போதே வரி செலுத்தும் முறைமையினை மீண்டும் அறிமுகப்படுத்தல்.
  • அரச தொழில்முயற்சிகளில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்கொள்வோர் ஊடாக அன்றி தனிப்பட்ட ரீதியில் தமது சம்பளத்திலிருந்து வரி செலுத்தல்.
  • நிறுத்திவைக்கும் வரி முறைமையினை மீண்டும் அறிமுகப்படுத்தல்.
  • அனைத்து வரிவிடுதலைகளையும் இடைநிறுத்தல்.
  • வருமான வரி செலுத்த வேண்டிய வருமான மட்டம் மற்றும் பெறுமதி சேர் வரி செலுத்த வேண்டிய புரள்வு எல்லைகளை திருத்துதல்.

ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கமானது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்த முன்மொழிவினை சமர்ப்பித்தது. தற்போது நாம் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துகின்றோம்.

ஆனாலும் இவ்வாறான ஒரு வரிக்கொள்கை தேவை எனத் தெரிவித்தவர்கள் இன்று வரிக்கொள்கையினை விமர்சிக்கின்றார்கள். வரி அறவிடுவதற்கான புதியதொரு கொள்கையினை அறிமுகப்படுத்தல் அரசியல் ரீதியாக பிரபல்யம் மிக்கதொரு தீர்மானம் அல்ல. நினைவிற்கொள்ளுங்கள். எனக்குத் தேவை பிரபல்யமடைவதற்கு அல்ல. எனக்குத் தேவை இந்த நாடு அடைந்துள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆகும். ஆம். நான் நாட்டுக்கான பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுப்பேன். அத்தகைய தீர்மானங்களின் முக்கியத்துவத்தை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பெரும்பாலானோர் புரிந்துகொள்வார்கள்.

வரி செலுத்த வேண்டிய வருமான எல்லையினை ஒரு இலட்சம் ரூபாவிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க வேண்டுமென சிலர் கூறுகின்றார்கள். உழைக்கும் போதே வரி செலுத்தும் முறையை நீக்க வேண்டுமென மற்றும் சிலர் கூறுகிறார்கள். நாம் விருப்பத்துடன் இந்த வரிகளை விதிக்கவில்லை. ஆனாலும் எமக்கு விருப்பமானவற்றை செய்தவுடன் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. விரும்பாவிட்டாலும் சரியானதைச் செய்ய வேண்டும்.

உழைக்கும் போதே செலுத்தும் வரியை நீக்கினால் நாடு 100 பில்லியன் ரூபாவை இழக்கும். வரி எல்லையை இரண்டு இலட்சம் வரை அதிகரித்தால் நாடு 63 பில்லியன் ரூபாவை இழக்கும். இழக்கப்படும் மொத்த தொகை 163 பில்லியன் ரூபாவாகும். இவ்வளவு பாரியதொரு தொகையை இழக்கும் நிலையில் நாம் இல்லை.

தற்போது நலிவுற்ற பொருளாதாரத்திற்கு உரிமை கோருவதன் காரணமாக அனைவராலும் வரிச்சுமை பாரியளவில் உணரப்படுவதை நாம் அறிவோம். இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய காரணம் உள்ளது. தற்போது எமது நாட்டில் கூடுதான அளவு வரியினை பொதுமக்களே செலுத்துகின்றார்கள். நேரடியாக வரி செலுத்த வேண்டிய நபர்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் உரிய முறையில் வரி அறவிடப்படாமை காரணமாக அனைத்து இலங்கையர்களும் மறைமுக வரியாக பெருந்தொகைப் பணத்தை செலுத்துகின்றார்கள். வரி செலுத்துவதற்கு தேவை அற்ற பாரியளவு எண்ணிக்கையினர் தம்மை அறியாமலேயே வரி செலுத்துகின்றார்கள். அத்தகைய வரி மறைமுகவரி என அழைக்கப்படுகிறது.

உலகின் ஏனைய நாடுகளில் கூடுதலான அளவு வரி அறவிடப்படுவது வரி செலுத்த வேண்டிய நபர்களிடம் ஆகும். இந்தியா – நேரடி வரி 67 சதவீதம். மறைமுக வரி 33 சதவீதம். 2021 ல் பங்களாதேஷ் – நேரடி வரி 68 சதவீதம். மறைமுக வரி 32 சதவீதம். நேபாளம் – நேரடி வரி 69 சதவீதம். மறைமுக வரி 31 சதவீதம். 2021 ல் தாய்லாந்து – நேரடி வரி 63 சதவீதம். மறைமுக வரி 37 சதவீதம். 2020 ல் மலேசியா – நேரடி வரி 66 சதவீதம். மறைமுக வரி 34 சதவீதம். 2021 ல் இந்தோனேசியா – நேரடி வரி 60 சதவீதம். மறைமுக வரி 40 சதவீதம்.

ஆனாலும் எமது நாட்டில் நிலைமை அதற்கு மாற்றமானது ஆகும். 2021 ல் எமது நாட்டின் நேரடி வரி 21 சதவீதம். மறைமுக வரி 79 சதவீதம்.

ஆகவே இந்த வரி முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக நாம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அப்போது ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை குறைவடையும்.

பொருளாதார நெருக்கடி நிலைமையின் கீழ் பணவீக்கம் உயர்வடைகிறது. பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. தொழில்கள் அபாயத்தை எதிர்நோக்குகின்றன. தொழில்முயற்சிகள் வீழ்ச்சியடைகின்றன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் வாழ்க்கை நடாத்துவது கடினமானதாக உள்ளது. ஆனாலும் இன்னும் ஐந்து ஆறு மாத குறுகிய காலம் இக் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியுமாயின் எமக்கு தீர்வை நோக்கி செல்ல முடியும். இவ்வாறு முன்னோக்கிச் சென்றால் ஆண்டின் மூன்றாவது நான்காவது காலாண்டுகளில் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவினை செலுத்துவதற்கு எம்மால் முடியும். தனியார் துறைக்கு சலுகைகளை வழங்க முடியும். முழு நாட்டு மக்களதும் கைகளை இன்று உள்ளதை விடவும் வளமாக்க முடியும். தொழில் மூலமான வருமான மார்க்கத்தை அதிகரிக்க முடியும். வங்கி வட்டிவீதத்தைக் குறைக்க முடியும். மேலும் சுமார் மூன்று ஆண்டுகள் செல்லும் போது இன்று ஈட்டும் வருமானத்தை விட சுமார் 75 சதவீத வருமானத்தைப் பெற முடியும்.

தற்போது அனைத்து கஷ்டங்களுக்கும் மத்தியில் நலிவுற்ற பொருளாதாரம் காரணமாக அவதியுறும் வறுமையில் வாடும் குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். இதற்காக உலக வங்கி எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது.

ஆயினும் எமது நாட்டில் நிவாரண உதவிகள் வழங்கும் முறை உருச்சிதைவுற்றுக் காணப்படுகிறது. அதிக வருமானம் உழைக்கும் நபர்கள் கூட நிவாரண உதவிகளைப் பெறுகின்றார்கள். நாம் இந்த நிலைமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். உண்மையான வறுமை சமூகத்தை நாம் அடையாளம் காண்கின்றோம். நிவாரண வங்கிக் கணக்கின் ஊடாக அவர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை நாம் தயாரித்த வருகின்றோம்.

ஆனாலும் சில குழுக்கள் இந்த பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் வரி குறைக்கப்படும் – சம்பளம் அதிகரிக்கப்படும் போன்ற கற்பனைக் கதைகளைக் கூறுகின்றார்கள்.  பல்வேறு முட்டுக்கட்டை போடும் செயற்பாடுகளை ஏற்பாடு செய்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.


நான் ஒரு போதும் செய்ய முடியாதவற்றைக் கூற மாட்டேன். அதிகாரத்துக்காக பொய் கூற மாட்டேன். வரவு செலவுத்திட்ட உரையின் போதும் பாராளுமன்றத்தை திறந்துவைக்கும் போதும் நான் கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். அதன் மூலம் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு எம்மால் முடிந்துள்ளது.

மறைப் பொருளாதாரத்தில் இருந்து நேர்கணிய பொருளாதாரத்தை நோக்கி நாம் தற்போது பயணம் செய்து வருகின்றோம். 2023 ஆம் ஆண்டு இறுதியளவில் நேர்கணிய பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

நான் சனாதிபதியாக ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது நாட்டின் பணவீக்கம் 70% ஆகும். எமது செயற்பாடுகள் காரணமாக 20203 சனவரி மாதமளவில் அதனை 54% சதவீதமாக குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. 2023 ஆம் ஆண்டு சனவரி மாதமளவில் அதனை 54 சதவீதம் குறைப்பதற்கு எம்மால் முடிந்தது. அதனை தனி இலக்கத்திற்கு கொண்டு வருவதற்கு நாம் பாகின்றோம்.

2022 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு எம்மால் முடிந்தது. அதற்காக உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் பெருமளவு பாடுபட்டார்கள். அதே போல் இறக்குமதி செலவினத்தை 18 பில்லியன் டொலர்கள் வரை மட்டுப்படுத்த எமக்கு முடிந்தது. வெளிநாடுகளில் தொழில் புரியும் நபர்கள் இந்த இக்கட்டான நிலையில் தாய் நாட்டுக்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குகிறார்கள். 2022 ஆம் ஆண்டு இறுதியளவில் 4 பில்லியன் டொலர் வெளிநாட்டு அந்நிய செலாவணியை அவர்கள் எமக்கு வழங்கினார்கள்.

எமது தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள், அவர்களுக்கு பல்வேறு வகையான அழுத்தங்களைப் பிரயோகித்த ஒரு பின்னணியிலேயே இந்த அர்ப்பணிப்பினை நாட்டுக்காக மேற்கொண்டார்கள். ஆனாலும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்புவது நாட்டுக்காக அன்றி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிக்காக அல்ல என்பதனை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரையும் நாம் கௌரவிக்கின்றோம்.

பெரும்பாலும் பூச்சியத்துக்கு வீழ்ந்த எமது அந்நிய செலாவணி ஒதுக்கினை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு எமக்கு தற்பொழுது முடிந்துள்ளது.

சுற்றுலாக் கைத்தொழிலை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. வீதிகள் முழுவதும் குறுகிய அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட தடைகளுக்கு மத்தியில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தார்கள். உலகின் சிறந்த 10 சுற்றுலா இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டது. இந்த சனவரி மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளார்கள். அது ஒரு சாதனையான எண்ணிக்கையினர் ஆகும்.

இவ்வாறு அனைத்து துறைகளிலும் நாம் முன்னேற்றம் கண்டு வருகின்றோம்.

கிரேக்கம் சில காலங்களுக்கு முன்னர் எம்மைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. வங்கரோத்து நிலை அடைந்தது. நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதமாக குறைத்து வங்கரோத்து நிலையிலிருந்து மீண்டு மீண்டும் கடன்களைச் செலுத்தும் பலத்தினை ஏற்படுத்துவதற்கு அவர்களுக்கு 13 ஆண்டுகள் சென்றது. அக்கால எல்லைக்குள் மூன்று தடவைகள் ஐஎம்எப் அமைப்பின் உதவி ஒத்தாசைகள் பெறப்பட்டன.

ஆனாலும் நாம் பயணிக்கும் இந்த திட்டத்தின் பிரகாரம் முன்னோக்கிச் சென்றால் 2026 ஆம் ஆண்டளவில் வங்கரோத்து நிலையிலிருந்து எமக்கு மீளுவதற்கு முடியும். நான் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டவாறு நாட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்துக்கு இந்த பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், எமக்கு அதற்கு முன்னர் இந்த நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

தற்பொழுது நாம் கடன் மறுசீரமைப்புக்காக எமக்கு கடன் வழங்கிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். அதற்கு மேலதிகமாக ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ள முடியுமான மற்றைய ஒரேயொரு சர்வதேச நாணய திதியம் மாத்திரம் ஆகும். அவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் அடித்தளத்தின் பிரகாரம் எமக்கு மேற்கொண்டு முன்னோக்கி பயணிக்க முடியும். அது தவிர எமக்கு வேறு எந்தவொரு மார்க்கமும் இல்லை. வேறு மாற்று வழிகள் இருப்பின் அதனை இச்சபைக்கு அறியத் தருமாறு நாம் பயணிக்கும் இந்தப் பாதையினை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

தற்பொழுது நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம். கடந்த செப்டம்பர் மாதமளளவில் அடிப்படை இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எம்மால் முடிந்தது. கடன் பேண்தகு தன்மையினை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளது.

அதற்கு ஏற்புடைய வகையில் பரிஸ் சமூகத்துடன் நாம் இணக்கப்பாட்டுக்கு வந்தோம். பரிஸ் மாநாட்டில் அங்கத்துவம் வகிக்காத இந்தியா மற்றும் சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடினோம். இந்தியா எமது கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. ஒரு புறம் பரிஸ் மாநாட்டுடனும் இந்தியாவுடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகிறது. நாம் நேரடியாக சீனாவுடன் கலந்துரையாடல் மேற்கொள்கின்றோம். எமக்கு அனைத்து தரப்பினர்களிடமிருந்தும் சாதகமான பதில் கிடைக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளின் பிரவேசம் மற்றும் சீனாவின் பிரவேசம் ஆகியவற்றுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கொண்டு வருவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்த முயற்சியின் போது எமக்கு உதவி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் எமது நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சர்வதேசம் எமக்கு வழங்கும் ஒத்துழைப்பு பிரதிபலிப்பது என்னவெனில் நாம் செல்லும் பாதை சரியானது என்பதாகும். மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் குறைந்துள்ளமை எடுத்துக் காட்டுவது யாதெனில் இப்பாதை சரியானது என்பதாகும்.

2020 ஆம் ஆண்டு நாம் ஐஎம்எப் அமைப்பில் இருந்து விலகினோம். அவ்வாறான தொலைநோக்கற்ற தீர்மானங்கள் தற்போதைய நிலைமைக்கு காரணமாய் அமைந்துள்ளது. பங்களாதேஷ் தொடர்ந்தும் ஐஎம்எப் அமைப்புடன் இணைந்திருந்த காரணத்தால் அவர்களுக்கு அந்த அமைப்பில் இருந்து வேகமாக நிவாரணங்களை பெற முடிந்தது. எமக்கு அனைத்து தொடர்புகளையும் ஆரம்பத்திலிருந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கு நேர்ந்தது. எவ்வாறாயினும் நாம் கஷ்டத்துக்கு மத்தியில் ஆரம்பத்திலிருந்து பயணத்தை தொடர்ந்தோம்.

தற்போது மக்கள் படும் துயரம் அன்றை விடக் குறைவானது ஆகும். நாம் பயணிக்கும் இந்த மார்க்கம் சரியானதென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சுற்றுலாக் கைத்தொழில் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. வீழ்ச்சியடைந்த விவசாய மற்றும் பெருந்தோட்டத் துறை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. பெரும்போக அறுவடை அதிகரிக்குமென எதிர்கூறப்பட்டுள்ளது. இம்முறை அறுவடைகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 பில்லியன் ரூபாய் பெறுமதியான நெல் அறுவடைகளை அரசியாக மாற்றி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதாந்தம் 10 கிலோ வீதம் இரண்டு சந்தர்ப்பங்களில் இலவசமாக வழங்கப்படும். வரிசைகள் இல்லை. மின்சாரத் துண்டிப்பு குறைவடைந்துள்ளது. பாடசாலை நடவடிக்கைகள் வழமை நிலைக்கு வந்த வண்ணம் உள்ளது. மாணவ மாணவிகள் மீண்டும் கல்வி சுற்றுலாக்களை மேற்கொள்கிறார்கள். பரீட்சைகள் இடம் பெறுகின்றன. இதே பாதையில் தொடர்ந்தும் பயணித்து நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதா? அவ்வாறின்றி இந்த மார்க்கத்துக்கு முட்டுக்கட்டை போட்டு எதிர்ப்புக் கோஷங்களை முன்வைத்து அரசியல்வாதிகள் மீண்டும் நாட்டை அழிவடையச்செய்வதா என்ற தீர்மானம் இன்று எம் முன்னிலையில் உள்ளது.

குறுகிய அரசியல் நோக்கங்கள் இல்லாத நாட்டை நேசிக்கும் பெரும்பான்மை மக்களது தீர்மானம் இதேபோன்று முன்னோக்கி செல்வதென்பதை நாம் அறிவோம்

இன்று இலங்கை பொருளாதார ரீதியாக ஒரு கவலைக்கிடமான நோயாளியாக உள்ளது. உடனடியாக நோயை இனம் கண்டு அதற்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும் சிலர் இதுவரை சிகிச்சை வழங்கிய வைத்தியர்களின் குறைகளை கூறி வருகின்றார்கள். அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென அவர்கள் கூறுகின்றார்கள்.

ஆனாலும் ஆரம்பத்தில் நோயாளியை குணப்படுத்துவதற்கு நான் முயற்சி செய்து வருகின்றேன். நோயாளியை குணப்படுத்திய பின்னர் எமக்கு ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனாலும் நாம் நோயாளியை குணப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குதல் வேண்டும். நான் அதனையே தற்போது மேற்கொள்கின்றேன்.

ஆனாலும் நோயாளியை கவலைக்கிடமான நிலையில் இருந்து மீட்டெடுத்தவுடன் நாம் மற்றுமொரு நடவடிக்கையினை மேற்கொள்வோம். மீண்டும் இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற்படக்கூடிய அனைத்து வழிகளையும் தடைசெய்தல். இந்த நோக்கத்துக்காக நாம் ஊழல்களைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டுவருவோம். ஐஎம்எப் அமைப்புடன் ஏற்படுத்திய இணக்கப்பாட்டுக்கு அமைய உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து ‘திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் கண்டறியும் முயற்சியை’ இச் சட்டத்தில் உள்ளடக்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

ஐஎம்எப் அமைப்பின் இணக்கப்பாடு கிடைக்கப்பெற்ற பின்னர் எமக்கு பொருளாதாரத்தை ஓரளவு ஸ்திரத் தன்மைக்கு கொண்டு வர முடியும். ஆயினும் நோயை முற்று முழுதாக குணப்படுத்த வேண்டுமாயின் எமக்கு முன்னோக்கிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஐஎம்எம் அமைப்பின் உறுதிப்பாடு கிடைக்கப்பெற்றவுடன் உலக வங்கி, ஆசியா அபிவிருத்தி வங்கி போன்ற ஏனைய சர்வதேச நிறுவனங்களிடம் கடனுதவிகள் பெறல் தொடர்பில் எதிர்பார்ப்பு ஏற்படுதிக்கொள்ள முடியும். அதன் போது முதலீட்டாளர்களின் நம்பிக்கை உறுதி செய்யப்படும். அதன் காரணமாக அந்நிய செலாவணி நாட்டுக்கு பாய்ச்சப்படும் போக்கு ஏற்படும். நாம் அந்த உதவிகளை உரிய முகாமைத்துவத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துதல் வேண்டும்.

அத்துடன் சுற்றுலாக் கைத்தொழிலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எமக்குப் பெற்றுக் கொள்ள முடியும். இடைநடுவில் தடைப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திக் கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.

அதேபோல் எமது நாட்டுக்கு தேவையான பொருளாதார மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் வேண்டும். நீண்டகாலமாக குறுகிய அரசியல் தேவைப்பாடுகளுக்காக பொருளாதார மறுசீரமைப்புக்களை நாம் தாமதப்படுத்தினோம். நட்டம் உழைக்கும் அரச நிறுவனங்களின் சுமைகளை மக்கள் மீது சுமத்தினோம். கடந்த ஆண்டு தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் அரச நிறுவனங்களின் நட்டம் 800 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும். அந்த முழு நட்டத்தையும் மக்கள் செலுத்துகின்றார்கள். பல்லாண்டு காலமாக மக்கள் அந்த நட்டத்தை செலுத்தி வருகின்றார்கள். ஆனாலும் பெரும்பாலானவர்கள் தாம் இவ்வாறு நட்டம் உழைக்கும் அரச நிறுவனங்களின் சுமைகளைச் சுமப்பதை அறியவில்லை. kகவும் அப்பாவி ஏழைக்கும் இந்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு செலவுசெய்ய வேண்டியுள்ளது.

ஆகவே நாம் உடனடியாக பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இன்று நாளுக்கு நாள் முன்னோக்கி செல்கின்றது. அவ்வாறு இல்லாதுவிடின் எமக்கு பின்னோக்கிச் செல்ல நேரிடும்.

இந்த மறுசீரமைப்புகளின் போது அரசின் கடமைப் பொறுப்பினை நாம் சரியாக இனம் காணுதல் வேண்டும். பின்னணியில் இருந்து தனியார் துறையை நேரடியாக தொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துதல் அரசின் பிரவேசமாக அமைதல் வேண்டும். ஒழுங்குபடுத்தல் பணிகள், பொது வசதிகள் மற்றும் சட்டமும் ஒழுங்கையும் நிலைநாட்டல் போன்ற துறைகள் மீது மாத்திரம் அரசு தலையீட்டை மேற்கொள்ளுதல் வேண்டும். பொருளாதாரத்தின் உந்துசக்தியாக தனியார் துறையை யன்படுத்துதல் வேண்டும். அவ்வாறே வெளிநாட்டு பொருளாதார உறவுகளை வலுவடையச் செய்வதற்காக தனியார் தொழில் முயற்சியாண்மையினை பங்கேற்கச் செய்தல் வேண்டும்.

உற்பத்தியை அதிகரித்தல் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குதல் கைத்தொழில் மற்றும் விவசாய நவீனப்படுத்தல் ஆகியவற்றிற்காக உச்ச அளவில் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறே கடன்களை அடிப்படையாகக் கொண்ட கருத்திட்டங்கள் மதிப்பீட்டுச் செயன்முறையின் அடிப்படையில் மாத்திரம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். அரசியல் காரணங்களுக்காக அரச முதலீடுகளை வழிநடாத்தும் முறையினை இடைநிறுத்துதல் அத்தியாவசியமான ஒரு விடயமாகும்.

அண்மையில் வங்கி கடன்களை அறவிடுவதற்காக சலுகை சாலம் வழங்கப்பட்டதால் வங்கி முறைமை பலவீனமடைந்து காணப்பட்டது. தற்போது அந்த சலுகை காலம் முடிவடைந்துள்து, அதனால் வங்கிகள் மீண்டும் பலமடைந்துள்ளன.

அதே போல் இடர்கள் காரணமாக பலவீனமுற்ற தொழில்முயற்சிகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். பொருளாதார வளர்ச்சியுடன் அவர்களுக்கு மீண்டும் எழுந்து நிற்பதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

உற்பத்தியை அதிகரித்தல், பொருட்கள் சேவைகளை வழங்குதல், கைத்தொழில் மற்றும் விவசாய நவீனமயப்படுத்தலுக்காக உயர்ந்தபட்ச தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

தற்போது நாட்டின் வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 8.15 சதவீதம் ஆகும். இதனை 15 சதவீதமாக அதிகரிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

நிதி நெருக்கடியை தீர்த்தல் தொடர்பாக அனுபவமுள்ள சர்வதேச நிறுவனம் ஒன்று எமது நாடு தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Sri Lanka has a reputation for “kicking the can down the road”- this leads to
problems avoided rather than solved in the long term

நாம் பிரச்சனைகளை வழி விட்டோமே தவிர நீண்டகால தீர்வினை தேடவில்லை. அதன் விபரீதத்தை தான் நாம் அனைவரும் இன்று அனுபவிக்கின்றோம்.

நினைவில் கொள்ளவும். நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். இந்த யுத்தம் வடக்கு கிழக்கு யுத்தத்தை விட ஒரு தீர்க்கமான யுத்தமாகும். வடக்கு கிழக்கு மோதலில் இனங்கள் பிளவுபட்டன. ஆயினும் இந்த யுத்தத்தில் அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் வழி விடுவோமாயின் இப்பொருளாதார யுத்தத்தில் நாம் தோல்வியடைவோம். அவ்வாறு இடம்பெறுமாயின் சில அரசியல் கட்சிகள் கூறுவது போன்றதொரு கற்பனை உலகம் எமக்கு உரித்தாகாது. நாம் பொருளாதார காலணித்துவத்திற்கு உட்படுவோம். ஆகவே நாம் அனைவரதும் பொறுப்பு யாதெனில் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு இப் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல் ஆகும்.

பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்வதற்கும் அதன் பின்னர் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் ஒன்றை எமது நாட்டில் உருவாக்குவதற்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் சமாதானமும் முக்கியமானதாகும்.

திரு ஆர் சம்பந்தன் அவர்களும் நானும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவருக்கும் பொதுவான ஒரு கனவு உண்டு. நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிலைபேறான ஒரு தீர்வை வழங்குதல் ஆகும். அக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகின்றோம். முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரது ஒத்துழைப்பினையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

வடக்கு கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. பல பிரதேசங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தது. இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம்.

வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதனை நாம் அறிவோம். பளாளி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன. மேலும் ……….. ஏக்கர் காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. ஏனைய பாதுகாப்பு முகாம்களை அண்மித்த காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் காணிகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சனை காணப்படுகிறது. இதற்கு ……… ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் விமானப்படம் அடிப்படையாக கொள்ளப்பட்டது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளன. மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்கள்.

1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம் காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

தேசிய காணி சபை ஒன்றை தாபிப்பதற்கான வரைவு தயாரிக்கப்படும். தேசிய காணிக்கொள்கை வரைவு தயாரிக்கப்படும்.

மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறைவடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

சுகாதார துறை தொடர்பாகவும் இதே போல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரப் பகிர்வு செயன்முறையினை முறையாக மற்றும் உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்காக பின்வரும் சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும். 1992 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க அதிகாரப் பகிர்வு (பிரதேச செயலாளர்கள்) சட்டம், 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (இடைநேர் விளைவு ஏற்பாடுகள் சட்டம் மற்றும் 1990 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க மாகாண சபைகள் (திருத்த) சட்டம்

மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன முறையில் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையினை தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

இவ் அனைத்து சட்டங்கள் மற்றும் வரைவுகளை நாம் பாராளுமன்றத்தின் தேசிய சபைக்கு சமர்ப்பிப்போம். அது தொடர்பாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேசிய சபைக்கு வழங்கப்படும்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகள் தற்பொழுது மாகாண எல்லைகளின் பிரகாரம் காணப்படுவதில்லை. இதன் காரணமாக பிரயோக ரீதியான பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. ஆகவே மாகாணங்களின் பிரகாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவு எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் இடம் பெறமாட்டாது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமை சட்டத்தை பாரதூரமான முறையில் மீறுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதியரசர் திரு ஏ எச் எம் டீ நவாஸ் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதன் பரிந்துரைகள் பற்றி நாம் கவனம் செலுத்துவோம்.

யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கின் அபிவிருத்திக்காக புறம்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். மல்வத்துஓயா அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படும். கிழக்கு மாகாண நதிகள் மற்றும் நீரை முகாமை செய்தல், வடமாரச்சி குளம் மற்றும் களப்பு புனரமைப்பு, குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக அதன் மூலம் நீரை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மூலம் இப் பிரதேசங்களின் மின்சாரத் தேவைப்பாட்டை நிறைவு செய்வதற்காக பயன்படுத்தப்படும். சூரியசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் சக்தி இதற்காக பயன்படுத்தப்படும்.

சுற்றுலாக் கைத்தொழிலுக்காக கூடுதல் வய்ப்பு வழங்கப்படும். முலீட்டு வலயங்கள் அமைக்கப்படும். விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் வழங்கப்படும்.

காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம். இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

பெருந்தோட்டத் துறைக்காக பாரியளவு சேவையாற்றிய திரு செளியமூர்த்தி தொண்டமான் அவர்களும் நானும் ஒன்றாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டோம். நாம் இருவரும் பெருந்தோட்ட மக்களின் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட்டோம். தற்போது பெருந்தோட்ட மக்களின் சட்ட ரீதியான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்கியுள்ளோம். ஆனாலும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பெருந்தொட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். 200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்வதற்கு பாடுபடும் அவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்றப்பட வேண்டும்.

நான் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் எனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக திரு ஏ சீ எஸ் ஹமீட் தெரிவு செயற்பட்டார். இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விசேடமான நிலைமை பற்றி அவர் எனக்கு விளக்கம் அளித்துள்ளார். அடிக்கடி முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதனை நாம் அறிவோம். அது தொடர்பாகவும் நாம் முழு அவதானம் செலுத்துகின்றோம்.

சிங்கள சமூகமும் அவர்களுக்கென மட்டுப்படுத்தப்பட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அது பற்றியும் நாம் கவனம் செலுத்துகின்றோம். அmப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான ஒரு கலந்துரையாடல் தேவைப்படுகிறது. விசேடமாக சாதி வேறுபாடுகள் காரணமாக சமூகத்தில் ஓரம் காட்டப்பட்டள்ள சமூகங்கள் தொடர்பில் முழு அவதானம் செலுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறான அனைத்து விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தி ஒற்றையாட்சி அரசில் உயர்ந்தபட்ச அதிகாரத்தைப் பகிர்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனாலும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்திய ஒரு விடயத்தினை மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். நாட்டைப் பிரிப்பதற்கு அல்லது பிரிப்பதற்கு துணை போகும் எந்தவொரு நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ள மாட்டோம்.

எனக்கு இந்த பாராளுமன்றத்தில் குழுவொன்று கிடையாது. நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் காணப்படுகின்றார். ஆனாலும் நான் சனாதிபதி என்ற ரீதியில் அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. நான் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். இங்கு கட்சி அரசியல் எனக்கு இல்லை.

ஆகவே இவ் அனைத்து முன்மொழிவுகளையும் நான் பாராளுமன்றத்தின் தேசிய சபை ஊடாகவே நடைமுறைப்படுத்துவேன். அதற்கு மேலதிகமாக மக்கள் கருத்துப் பிரதிநிதிjதுவப் பணிக்காக நாம் ஜன சபைச் சட்டத்தை சட்டமாக்குவோம்.

நான் முன்னைய பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியவாறு புதிதாக சிந்தித்து புதியதொரு பயணத்தை மேற்கொள்வதற்குரிய காலம் தற்போது வந்துள்ளது. இதுவரை நாம் பின்பற்றிய சம்பிரதாய அரசியல் தொடர்ந்தும் செல்லுபடியாகாது. அரசியல் நன்மைகளுக்காக போலியாக மற்றும் மூடநம்பிக்கையின் மூலம் மேற்கொண்ட ஏமாற்றுதல்கள் எதிர்காலத்துக்கு பொருந்தாது.

முறைமை மாற்றம் தொடர்பாக பேசுகின்ற ஒருசில அரசியல் கட்சிகள் தன்னைத் தவிர ஏனைய நபர்களை மாற்றுமாறு யோசனை தெரிவிக்கின்றார்கள். இதுவும் சம்பிரதாய அரசியலில் ஒரு பகுதியாகும். நாம் வந்தால் நாம் மாற்றுவோம். அவ்வாறு தான் கூறுவார்கள். நாம் கோணலாக சென்று மற்றவர்களை மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றோம்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பேசியவர்கள் அதிகாரத்தின் முன்னே சுயாதீன ஆணைக்குழுக்கள் வேண்டாமென கூறுகின்றார்கள். நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமையினை நிராகரித்த நபர்கள், தாம் அதிகாரத்துக்கு வந்தால் அந்த அதிகாரங்களை பயன்படுத்தும் விதம் பற்றிக் கூறுகின்றார்கள். அதிகாரத்திற்காக கொள்கையினை மாற்றுகின்றார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை நாம் அனுபவித்தவைகள் இவைதான்.

இந்த நிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். இன்றேல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு நம் ஒருவருக்கும் முடியாது.

மாற்றத்தை எம்மில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நாம் எம்மில் இருந்து. நாம் அனைவரும் மாற்றமடைதல் வேண்டும். இந்த மாற்றம் நல்ல மாற்றமாக அமைதல் வேண்டும். அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நாம் நல்ல முறையில் மாற்றமடைதல் வேண்டும். அரசியல் கட்சிகள் மிகவும் நல்ல முறையில் மாற்றமடைதல் வேண்டும். பாராளுமன்றம் மிகவும் நல்ல முறையில் மாற்றமடைதல் வேண்டும். நிறைவேற்றுத் துறை மிகவும் நல்ல முறையில் மாற்றமடைதல் வேண்டும். நீதித்துறை மிகவும் நல்ல முறையில் மாற்றமடைதல் வேண்டும். அரச சேவை மிகவும் நல்ல முறையில் மாற்றமடைதல் வேண்டும்.

இந்த மாற்றத்துக்காக நாம் தற்போது பாராளுமன்ற மேற்பார்வை செயற்குழுவை முறையினை தாபித்துள்ளோம். ஆயினும் இன்னமும் மேற்பார்வை செயற்குழுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை. அதனைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு நான் பாராளுமன்றத்தை வினவுகின்றேன். மேற்பார்வை செயற்குழுக்கள் மூலம் உயர்ந்தபட்ச பயனை அடைந்துகொள்வதற்கான மனமாற்றத்தை ஏற்படுத்துவது இந்த சபையில் உள்ள உங்கள் அனைவரதும் பொறுப்பாகும்.

நாம் அத்துடன் நின்று விடப் போவதில்லை. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்தின் செயலூக்கமான பங்காளர்களாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

இதற்காக,

  • முழுமையான சுயாதீனமுள்ள பாராளுமன்ற வரவுசெலவு அலுவலகம் ஒன்று தாபிக்கப்படும்.
  • தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கவிழுமியம் தொடர்பில் காணப்படும் சட்டவிதிகள் போதுமானதாக இல்லை. ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கவிழுமியம் மற்றும் பாராளுமன்றத்தின் தரம் தொடர்பான ஒரு சட்டமூலம் தயாரிக்கப்படும்.
  • விருப்புவாக்கு முறைமை பல்வேறு ஊழல்களுக்கு ஏதுவாயமைவதாக நாம் தற்போது பிரயோக ரீதியில் இனம் கண்டுள்ளோம். ஆகவே மாற்றுத் தேர்தல் முறைமை ஒன்றின் தேவையினை முழுநாடும் உணர்ந்துள்ளது. பாராளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். புதிய தேர்தல் முறைமையில் புத்திஜீவிகள், இளைஞர் சமுதாயம் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டுமென நான் நம்புகின்றேன்.

இன்று இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அரசியல் கட்சிகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும். அரசியல் கட்சிகள் என்பதை விட தேர்தலுக்காகவே உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கங்கள் இன்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவற்றுள் பெரும்பாலானவை பணத்துக்காக விலைபோன அரசியல் கட்சிகள் ஆகும். புறக்கோட்டை நடைபாதை வியாபாரம் போன்று கட்சிகளையும் அதன் சின்னங்களையும் விற்பனை செய்கிறார்கள். ஒருசில விலை போகின்றன.

இலங்கையின் அரசியல் கட்சிகள் மற்றும் அவை செயற்பட வேண்டிய முறை பற்றிக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.

கட்சிகளைப் பதிவுசெய்தல், வெளிப்படைத் தன்மையுடன் செயற்படல், அங்கத்தவர்களின் உரிமைகள், நிதியம் மற்றும் வருமானம் ஈட்டுதல், தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்தல், ஊடகப் பயன்பாடு போன்ற விடயங்கள் தொடர்பில் ஆளமாக ஆராயும் பொறுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

இப் பணியின் போது கென்யா, ஜேர்மனி மற்றும் நோர்வே நாட்டு அரசியல் கட்சிகள் தொடர்பான சட்டம், ஐக்கிய இராச்சியத்தின் வாக்காளர் சட்டம், அரசின் பொறுப்புக்கூறல் தொடர்பான ஐரோப்பிய முறைமை, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் கருத்துக் கணிப்புச் சட்டம் ஆகிய சட்டங்களை அடிப்படையாக கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்தை மிகவும் சிறந்ததாக மாற்றியமைப்பதற்காக புதிய நிறுவனங்கள், புதிய சட்டவிதிகள் மற்றும் பல புதிய கருத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வரலாறு தொடர்பான நிறுவனம், பொருளாதார விஞ்ஞானம் மற்றும் வியாபார நிறுவனங்கள், மகளிர் மட்டும் ஆண் பெண் பாலினம் தொடர்பான நிறுவனங்களை நாம் புதிதாக தாபிப்போம். அதேபோல் நான்கு புதிய பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்படும். அரச மற்றும் அரச கொள்கைகள் தொடர்பான பல்கலைக்கழகம், விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டுத் துறை பல்கலைக்கழகம்.

புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  • பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுச் சட்டம்
  • ஆண் பெண் பாலின சமத்துவ சட்டம்
  • பெண்களை வலுவூட்டும் சட்டம்
  • சிறுவர் பாதுகாப்பு சட்டம்
  • இளைஞர் பாராளுமன்ற மறுசீரமைப்புச் சட்டம்
  • போதைப்பொருள் தடுப்பு கட்டளையிடும் தலைமையக சட்டம்
  • உண்மை மற்றும் நல்லிணக்க ஆஐணக்குழு
  • பயங்கரவாத தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம்
  • தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரசித்த நாட்டிய கட்டுப்பாட்டுச் சட்டம் இல்லாதொழிக்கப்படும். அரசியலமைப்பில் உள்ள கருத்து தெரிவிக்கும் உரிமையினை அடிப்படையாகக் கொண்டு கலைப் படைப்புக்களை வகைப்படுத்தும் சட்டம் தயாரிக்கப்படும்.

எமது நாடு காலநிலை மாற்றங்களுக்கு உட்படும் வலயத்தில் அமைந்துள்ளது. ஆகவே தான் நாம் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்பில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் எமக்கு பசுமை ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது.

அவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு நாம் இந்த சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

  • காலநலை மாற்றச் சட்டம
  • சமூக நீதிக்காக ஆணைக்குழுச் சட்டம்
  • மீள் காடு வளர்ப்பு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம்
  • உயிரோட்ட முறைமை சட்டம் – மகாவலி கங்கை, சிங்கராஜ வனம், சிவனொலிபாத பிரதேசம் மற்றும், வனச் சிகரம், ஹோட்டன் சமவெளி, நக்கில்ஸ், ஆதமின் பாலம் ஆகியன இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
  • கடல் வள ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ சட்டம்.
  • முத்துராஜவெல பாதுகாப்புச் சட்டம்.

பொருளாதாரம் தொடர்பாகவும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரச செலவு முகாமைத்துவத்துக்காக ஸீரோ பட்ஜட் அல்லது பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட வரவு செலவுச் செயன்முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

  • வருமான அதிகாரச் சட்டம்
  • வெளிநாட்டு கடன் முகாமைத்துவச் சட்டம்
  • உணவுப் பாதுகாப்புச் சட்டம்
  • அரச சொத்து முகாமைத்துவச் சட்டம்
  • பொருளாதார ஸ்திரத்தன்மை சட்டம்
  • தேசிய ஓய்வூதிய பங்களிப்புச் சட்டம்
  • புதிய மதுவரிச் சட்டம்
  • அந்நிய செலாவணிச் சட்ட திருத்தம்
  • புன்வத் சட்டம்
  • வெளிநாட்டு வியாபார மற்றும் முதலீட்டு சட்டம்
  • டிஜிட்டல் தொழில்நுட்ப சட்டம்
  • கறுவா அபிவிருத்தி திணைக்களச் சட்டம்
  • பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழான விவாகரத்துச் சட்டம்

இவ்வாறான பொருளாதார சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை வெற்றியடையச் செய்ய வேண்டுமாயின் சரியான விடையங்களின் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டுதல் ஓர் அத்தியாவசியமான விடயமாக காணப்படுகிறது. சமூகத்தை அறிவூட்டும் பிரதான வகிபாகம் ஊடகத்துக்கு உரியதாகும்

அதற்காக ஊடகவியலாளர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தரத்தில் பயிற்சி வழங்கப்படல் வேண்டும். 1993 இல் நான் பிரதமர் என்ற ரீதியில் ஊடக பயிற்சி நிறுவனம் ஒன்றை தாபித்தல் தொடர்பில் பரிந்துரை பெற்றுக்கொள்வதற்காக கலாநிதி காமினி கொரயா அவர்களின் தலைமையில் குழுவொன்றை நியமித்தேன். அந்த நிறுவனத்தை தாபிப்பதற்காக அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற போதும் 1994 பொதுத் தேர்தல் காரணமாக அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி வழங்குவதற்காக ஊடக நிறுவனம் முதல் பல்கலைக்கழகம் வரையிலான நிறுவன முறைமை ஒன்றை தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த பல தசாப்த காலத்தை ஆராய்கின்ற போது ஊடகங்களின் வகிபாகம் உரியவாறு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. ஆகவே ஊடக மறுசீரமைப்பு எமது நாட்டுக்கு தேவையாக உள்ளது. இதன் போது சம்பிரதாய ஊடகம் மற்றும் சமூக ஊடகம் ஆகிய இரண்டு துறைகள் பற்றியும் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். ஆகவே தான் ஊடகங்கள் தொடர்பிலும் தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட வேண்டியுள்ளது.

அரச மற்றும் ஊடக கைத்தொழில் ஆகியன ஒன்றிணைந்து கூட்டு சுய ஒழுங்குபடுத்தல் முறைமை ஒன்று பற்றி கவனம் செலுத்துவது முக்கியமானதென நான் கருதுகின்றேன். இணைய அவகாசத்தில் பொய்யான செய்திகள், வெறுப்பூட்டும் வெளியீடுகள், பிழையான தகவல்கள், சிறுவர் மற்றும் பெண்கள் துன்புறுத்தல்கள், தொந்தரவுகள் மாத்திரமன்றி மோசடிகள் மற்றும் ஊழல்களையும் நாம் அனுபவித்து வருகின்றோம். இது தொடர்பாக சமூக ஊடக வலையக் கம்பனிகள் உள்ளடங்களாக தெட்டத் தெளிவான ஒழுங்குபடுத்தல் முறைமை ஒன்று தேவைப்படுவதாக நாம் கருதுகின்றோம்.

நாம் இங்கு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான ஒரு விடயம் யாதெனில், கொள்கை தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது ஆகும்.

அரசாங்கங்கள் மாறுகின்ற போது மாற்றமடையாத தேசிய கொள்கை. அமைச்சர்கள் மாற்றமடையும் போது மாற்றமடையாத தேசிய கொள்கை. உலகத்தின் அபிவிருத்தியடைந்த அனைத்து நாடுகளும் நிலையான கொள்கைகளின் ஊடாக முன்னோக்கிச் சென்ற நாடுகளாக காணப்படுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு கொள்கைகள் இற்றைப்படுத்தப்படுகின்றன. ஆனாலும் அரசாங்கங்கள் மாற்றமடைகின்ற போது கொள்கைகள் தலைகீழாக மாற்றப்பட மாட்டாது.

இது முறைமை மாற்றத்துக்கான ஆரம்பம் மாத்திரம் ஆகும். மேலும் பல மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. இலங்கையர்களின், விசேடமாக இளைஞர் யுவதிகளின் கருத்துக்கு அமைய அந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் நாம் பின்பற்ற வேண்டிய கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான முன்மொழிவுகளை முன்வைக்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன். அந்த கோரிக்கையினை இந்த சபையில் உள்ள உங்களிடம் மாத்திரம் நான் முன்வைக்கவில்லை. ஒட்டுமொத்த இலங்கையர்களிடத்திலும் முன்வைக்கின்றேன். நீங்கள் இலங்கையில் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும் உங்களது கருத்துக்களை முன்வைக்கவும். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணையுங்கள்.

இன்று இந்த நாட்டில் உள்ள பலருக்கு இன்று நாடு அடைந்துள்ள நீளம் – அகலம் – ஆழம் புரிவதில்லை. அது நாம் அனைவரும் வாழ்நாளில் இவ்வாறான ஓர் அபாயத்தை மற்றும் பாரதூரமான நெருக்கடிக்கு முகம் கொடுக்காமையினால் ஆகும். இந்த நெருக்கடியிலிருந்து விரைவாக மீளுவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டுனெ நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், அறிஞர்கள், தொழில் வாண்மையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் போன்ற அனைத்து தரப்பினர்களும் ஒன்றாக இணைதல் வேண்டும். குறிப்பிட்ட சில காலம் ஒரே நோக்கத்தில் ஒரே கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவுகள் எட்டப்படல் வேண்டும். சமூக இணக்கப்பாடு ஏற்படுத்தப்படல் வேண்டும். நாட்டுக்காக நம் அனைவரதும் வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல் வேண்டும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்ட அனைத்துக் குழுக்களும் தற்போது தம்மை அர்ப்பணித்துள்ளார்கள். சுமைகளைத் தாங்குகின்றார்கள். இடர்களை எதிர்கொள்கின்றார்கள். ஆகவே நாம் பொருளாதாரத்தை மீண்டும் மேலுயர்த்திய பின்னர் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்குதல் வேண்டும். அவர்கள் பொருளாதார அபிவிருத்தியின் சிறந்த பெறுபேறுகளின் பங்குதாரர்களாக அமைதல் வேண்டும்.

இந்த சமூக நீதியை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் சமூக நீதிக்கான ஆணைக்குழுவை தாபிக்க எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கொள்கைச் சட்டகத்தை இந்த சமூக இணக்கப்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்குவோம். .

இறுதியாக எனக்கு மற்றுமொரு விடயத்தை ஞாபகப்படுத்த முடியும். அரசுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான வேறுபாட்டினை நாம் புரிந்து கொள்வோம். இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் கட்டுபட்டுள்ளோம். தேர்தல்களின் போது சனநாயக ரீதியில் அரசாங்கங்களை மாற்றியமைக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் உண்டு. ஆனாலும் இலங்கையை அராஜகமாக்குக்ம் உரிமை ஒருவருக்கும் இல்லை. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இல்லை. எந்தவொரு குழுவுக்கும் இல்லை.

எமது தாய்நாட்டை பொருளாதார அல்லது சமூக காலனித்துவமாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அராஜக நிலைக்கு இட்டுச்செல்ல இடமளிக்க முடியாது. நாட்டை உண்மையாக நேசிக்கும் எந்தவொரு நபரும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். நாம் அனைவரும் நாட்டை நேசிக்கும் தரப்பில் இருக்க வேண்டுமே தவிர நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்லும் தரப்புடன் அல்ல.

கடந்த ஞாயிறு சன்டே டைம்ஸ் பத்திரிகையில் இளைஞர் யுவதிகள் சிலர் முன்வைத்த சில கருத்துக்கள் பற்றி நாம் இதற்கு முன்னர் கவனம் செலுத்தினோம். எனது உரையை நிறைவு செய்வதற்கு முன்னர் கிளிபேர்ட் பிரணாந்து முன்வைத்த மற்றுமொரு கருத்து தொடர்பில் நான் உங்களுடைய அவதானத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.

“I hope the political leaders will get their act together – they have failed miserably. Leaders should have the ability to lead by example if they expect people to follow. Sri Lankans are very resilient and will buckle up and do what it takes to come out of the present crisis. If the leaders could act wisely, use some common sense and put their words to action, we will be able to manoeuvre through these challenging times”

”அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவார்களென நான் எதிர்பார்க்கின்றேன். அவர்கள் தற்போது துரதிஷ்டவசமாக தோல்வியடைந்துள்ளார்கள். மக்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்ப்பதாயின் அவர்கள் முன்மாதிரியாக செயற்படல் வேண்டும். நெகிழும் தன்மையுடைய இலங்கையர்களுக்கு தற்போதைய நெருக்கடியில் இருந்து மீளுவதற்கான தாங்கும் சக்தி உள்ளது. தலைவர்கள் அறிவுடைவர்களாக மற்றும் சுயபுத்தியுடன் தாம் கூறுகின்றவற்றை நடைமுறைப்படுத்தினால், தந்திரோபாய ரீதியாக இந்த சவால்மிக்க காலத்தை எம்மால் வெற்றிகொள்ள முடியும்.”

நாட்டைப் பற்றி எதிர்பார்ப்புடன் உள்ள நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எண்ணியுள்ள இந்த மாணவ மாணவிகளின், இந்த இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புக்களை வெற்றியடையச் செய்தல் இந்த சபையில் உள்ள நம் அனைவரதும் பொறுப்பு ஆகும்.

நீங்கள் அதற்குத் தயாரா?

இறந்தகால சிறைக் கைதிகளாக இல்லாமல் நாம் எதிர்காலம் பற்றிச் சிந்திப்போம். நாம் ஒன்றாக இணைவோம். பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவோம். சனநாயக கருத்துக்கள் ஊடாக முன்னோக்கிச் செல்வோம். நாடு அடைந்துள்ள கவலைக்கிடமான நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை வழங்குவோம். அரசியல் நோக்கங்கள் பற்றி சிந்திக்க வேண்டுமாயின் நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த பின்னர் அது பற்றி சிந்திப்போம்.

கௌதம புத்த பெருமான் இவ்வாறு போதித்தார்.

”நீங்கள் உங்களுக்கே விளக்காக இருங்கள்”

அந்த அறிவுரையினை ஏற்றுக்கொண்டு நாம் எமக்கே விளக்காக இருப்போம்.

அப்போது தான் முழு நாட்டையும் வெளிச்சமாக்க முடியும்.

நன்றி.

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01.          இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கான இலத்திரனியல் அனுமதிப்பத்திர (e-license)   முறைமையை அறிமுகப்படுத்தல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், பொதுவாக ஒரு வருடத்தில் 17,000 அனுமதிப்பத்திரங்களை வழங்குவதுடன், குறித்த செயன்முறை குறைந்தபட்ச தொழிநுட்பத்துடனும் அதிகபட்ச மனித வளத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வனுமதிப்பத்திரங்கள் வழங்குகின்ற செயன்முறையை மிகவும் வினைத்திறனாகவும், குறைந்தளவு மனித வளத்துடனும் நடைமுறைப்படுத்துவதற்காக தகவல் தொழிநுட்ப முறையைப் பயன்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இலங்கை முதலீட்டுச் சபை, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் இலங்கைக் கட்டளைகள் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின்  அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான செயன்முறைக்குக் குறித்த ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களின் பங்குபற்றலுடன் அச்செயன்முறையை தானியங்க முறையில் மேற்கொள்ளக் கூடியவாறு வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்புடைய தேச எல்லைகள் பாதுகாப்புப் பணியகம் (EXBS வேலைத்திட்டம்) இனால் நன்கொடையாக 280,000  அமெரிக்க டொலர்கள் பெறுமதியான STRATLINK தகவல் தொழிநுட்ப செயல்நிரலாக்கத்தின்  முழுமையான மொழி மூலக் குறியீட்டுடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் 'இ-அனுமதிப்பத்திரம்' நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாக மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.          தெற்காசிய வணிக மற்றும் சேவை வழங்கல் மையக் கருத்திட்டம்

இலங்கையின் பெரிய துறைமுகமான கொழும்புத் துறைமுகம் தெற்காசிய வலயத்தில் முக்கிய கேந்திரமயமான துறைமுகமாகும். கொழும்பு நகரை துறைமுக சேவைகள் வழங்கல் கேந்திர நிலையமாக மாற்றுதல் இலங்கை துறைமுக அதிகார சபையின் தேசிய துறைமுகங்கள் திட்டத்தின் அடிப்படை மூலோபாய நோக்கமாகும். கொழும்பு தெற்குத் துறைமுகத்திற்குச் சொந்தமான பட்டர்ன்பேர்க் பிரதேசம் மற்றும் ப்ளுமென்டல் பிரதேசம் போன்ற சேவை வழங்கும் பிரதேசங்களை அரச-தனியார் பங்குடமையின் கீழ் அபிவிருத்தி செய்யக்கூடிய பிரதேசங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 150 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்பு சர்வதேச கொள்கலன் முனைய  (CICT)  கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தை சைனா மேர்ச்சன்ட் போர்ட் (CM Port)   கம்பனி, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனைய (CICT) ) கம்பனி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் இடையில் அரச-தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.          குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு தினத்தை பிரகடனப்படுத்தல்

குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் உரிமைகளையும் உரித்துடமைகளையும் எடுத்துக் கூறுவதற்கும், அத்தகைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான அமைப்புமுறையொன்றை உருவாக்குவதற்காக 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கமைய, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபை தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அன்றாடம் அதிகரித்து வருகின்ற குற்றங்களால் பாதிக்கப்படுகின்ற பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நபர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பதற்காக சமூகத்தைத் விழிப்புணர்வூட்டும் நோக்கில் அதுதொடர்பாக அரசி நிறுவனங்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை கூருணர்வு மிக்கதாக்கும் நோக்கில் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு தினமொன்றைப் பிரகடனப்படுத்துதல் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட தினமான மார்ச் 07 ஆம் திகதி 'குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பு தினம்' ஆக பிரகடனப்படுத்துவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.          கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்திற்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பணங்களுக்காக அறவிடப்படும் விமானச் செலுத்தல்களுக்கான கட்டணத்தைத் திருத்தம் செய்தல்

கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்திற்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பயணங்களுக்காக அறவிடப்படும் விமானச் செலுத்தல்களுக்கான கட்டண அறவீடு வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனிகளால் மேற்கொள்ளப்படுவதுடன் குறித்த கட்டணம் 1985 ஆம் ஆண்டிற்குப் பின்னர் திருத்தம் செய்யப்படவில்லை. அதனால், கொழும்பு விமானப் பயணத் தகவல் வலயத்திற்கு மேலாக வான்பறப்பு செய்கின்ற சர்வதேச விமானப் பயணங்களுக்காக தற்போது அறிவிடப்படுகின்ற விமானச் செலுத்தல்களுக்கான கட்டணம் 2023.02.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.          முன் நிரப்பப்பட்ட எனொக்ஸபாரின் சோடியம் ஊசிமருந்து 4,000 IA+,  0.4 மில்லிலீற்றர் 800,000 சிறிஞ்சர்கள் வழங்கலுக்கான பெறுகை

இதய நோயாளர்களின் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 800,000 எனொக்ஸபாரின் சோடியம் ஊசிமருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்களிடம் வரையறுக்கப்பட்ட போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 4 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, பெறுகை மேன்முறையீட்டு சபை மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த பெறுகையை M/s Brawn Laboratories Ltd. . கம்பனிக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.          தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் கருமங்களை நிர்வகிப்பதற்கும் நிறைவேற்றுவதற்குமான பாராளுமன்ற சட்டத்தை அறிமுகப்படுத்தல்

அனைத்துப் பிரஜைகளுக்கும் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளில் சமமான வாய்ப்புக்களை உருவாக்கல், தனித்துவத்தைப் பேணல், பன்மைத்துவத்தைப் பாராட்டுகின்றதும் மதிப்பளிக்கின்றதமான சமூகத்தை உருவாக்குதல் மற்றும் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் சேர்ந்து வாழக்கூடிய சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம்  (ONUR)  தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த செயலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்துகையில், அதன் தொழிற்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கு சட்டமொன்றின் மூலம் குறித்த செயலகத்தை நிரந்தர நிறுவனமாக தாபிப்பது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07.          இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் சவூதி அரேபிய இராச்சியத்துக்கும் இடையிலான வருமானம் ஈட்டுகை அடிப்படையிலான இரட்டை வரிவிதிப்பைத் தவிர்த்தல் மற்றும் அரசின் நிதித்தடுத்தல் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கை

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் சவூதி அரேபிய இராச்சியத்துக்கும் இடையிலான வருமானம் ஈட்டுகை அடிப்படையிலான இரட்டை வரிவிதிப்பைத் தவிர்த்தல் மற்றும் அரசின் நிதித்தடுத்தல் தொடர்பிலான சர்வதேச உடன்படிக்கைக்கு அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் 75(3) ஆம் உறுப்புரையின் கீழ் குறித்த உடன்படிக்கை சரியான வகையில் பூரணப்படுத்தப்பட்டுள்ளமையை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், குறித்த உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு வெளிவிவகார அமைச்சு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த உடன்படிக்கையில் இராஜதந்திர மட்டத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னர் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 75(1) உறுப்புரையின் கீழ் குறித்த உடன்படிக்கையின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08.          வனப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள வனாந்தரங்கள் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வு

வனப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்பு பாதுகாப்புத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள வனாந்தரங்களில் நீண்டகாலமாக வசித்துவருகின்ற அல்லது விவசாய நடவடிக்கைகளுக்காக தொடர்ந்திருக்கின்ற மக்களுடைய பிரச்சினைகள் பல வருடங்களாக கலந்துரையாடப்பட்டு வருவதுடன், அதற்கான நிரந்தரத் தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை. குறித்த பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகளை வழங்கும் நோக்கில் கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய குறித்தொதுக்கிய காலப்பகுதியுடனான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைகள் இலங்கையில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுவாக நிலவுகின்ற பிரச்சினையாவதுடன், ஆரம்பக் கட்டமாக வனாந்தரங்கள் அதிகமாகக் காணப்படும் மற்றும் யுத்தம் நிலவிய பகுதிகளில் அதாவது, யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனறாகல போன்ற மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என சீனா எக்ஸிம் வங்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கான உத்தரவாதமாக சீனா வழங்கிய கடனை மறுசீரமைக்குமாறு கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கை விடுத்த கோரிக்கைக்கு எக்ஸிம் வங்கி பதிலளித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாடு நேற்று சர்வதேச நாணய நிதியத்திடம் IMF தெரிவிக்கப்பட இருந்தது. கடந்த வார முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த சீனாவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் Chen Zhou, கடனை மறுசீரமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் நல்ல செய்தியை அறிவிக்க தயாராகி வருவதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மறுசீரமைக்கத் தயார் என இந்தியா கடந்த 18ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்திருந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்ற கடன் வழங்கும் நாடுகளிடம் கேட்டிருந்தார். தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா பூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடனாளிகளின் பரீஸ் குழுக; கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இலங்கை எதிர்பார்க்கிறது மற்றும் கடன் மறுசீரமைக்கப்படும் என கடனாளிகள் வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் இந்த வசதியை வழங்குவது குறித்து உடன்பாடு எட்டப்பட உள்ளது.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்கும் நாடுகள் ஆகும்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் என்றும் சீனாவின் பதில் சாதகமாக இருக்கும் என்றும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் சாதகமான ஆதரவை வழங்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

IMF நிதி உதவிக்கு ஒப்புதல் பெற இலங்கை சந்திக்க வேண்டிய மற்றொரு முக்கிய அளவுகோலாக சர்வதேச நாணய நிதியம் (IMF)

ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான சமூக பாதுகாப்பு வலையமைப்பை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் ஏற்கனவே வறிய மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளதுடன், அவற்றை மதிப்பீட்டிற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், இறுதி அறிக்கை அடுத்த மாதத்திற்குள் கிடைக்கப்பெறும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை தொடங்குகிறது.

போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் கருத்திட்டத்தின்படி, சீதாவக்க பிரதேசம் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான வலயமாக மாற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “சீதாவக்க ஒடிஸி” சொகுசு சுற்றுலா ரயில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று (15) காலை பயணத்தை ஆரம்பித்தது. கொழும்பு கோட்டையில் இருந்து வக நோக்கி பயணிக்கும் இந்த ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் பிரதேசத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்காக மேல் மாகாண சுற்றுலா சபையுடன் இணைந்து வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இந்த ரயில் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.யாதமினி குணவர்தன, திரு.மதுர விதான, மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ரயில்வே பொது முகாமையாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவும் கலந்து கொண்டனர்.

 

அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத் துறையொன்றை உருவாக்கும் நோக்கில் வெகுசன ஊடக அமைச்சினால் வருடாந்தம் செயற்படுத்தப்படுகின்ற “அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்காக புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களின் தலைமையில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. வி.பி.கே. அனுஷ பல்பிட்ட அவர்களின் பங்கேற்புடன் 2022 டிசம்பர் மாதம் 21ஆந் திகதி புதன் கிழமை மு.ப. 09.00 மணிக்கு வெகுசன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள பயிற்சிப் பாடநெறிகள் மூலம் ஊடவியலாளர்கள் தங்களது தொழில்முறை திறன்களை வளர்த்துக் கொள்ளவதற்காக வேண்டி ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் சேவைக் காலத்தினைப் பூர்த்தி செய்த, முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் சேவையிலுள்ள 18-55 வயதிற்குற்பட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படுகின்ற ஊடகவியலாளர் அடையாள அட்டை பெற்றுள்ள ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் இணைய ஊடகவியலாளர்களுக்காக திருப்பிச் செலுத்தப்படாத அடிப்படையில் இப்புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது.

இளமானி மற்றும் முதுமானி பாடநெறிகளுக்காக ரூபா இரண்டு இலட்சம் (200,000.00) மற்றும், குறுகிய கால நெடுங்கால சான்றிதழ் பாடநெறி, டிப்ளோமா, உயர் டிப்ளோமா பாடநெறிகளுக்காக அதிகபட்சம் ரூபா ஒரு இலட்சம் (100,000.00) என்ற அடிப்படையில் இந்தப் புலமைப் பரிசில் தொகை வழங்கப்படுகின்றது.  இப்புலமைப் பரிசில்களை பெறுவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், உயர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடாத்தப்படும் ஊடகத் துறை தொடர்பான பாடநெறிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

எவ்வித கட்டணங்களும் அறவிடாமல் இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த புலமைப்பரிசில் திட்டம் மூலம் ஊடகவியலாளர்களுக்கு இருமுறை பயன்பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. முதற் சந்தர்ப்பத்தில் தகைமை பெற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னர் முதற் பாடநெறியினை முழுமையாக நிறைவு செய்த ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது தடவைக்காகவும் விண்ணப்பிக்க முடியும்.

புலமைப் பரிசில்களுக்காக தகுதிபெற்ற ஊடகவியலாளர்களுக்காக பாடநெறியின் தொடக்கத்தில் பாடநெறிக் கட்டணத்தில் 50%இனை முதற் தவணையாகவும், மீதமுள்ள 25%இனை பாடநெறியின் இரண்டாவது தவணையாகவும், மீதமுள்ள 25%இனை பாடநெறியினை நிறைவு செய்து சான்றிதழ் சமர்ப்பித்த பின்னரும் வழங்கப்படும்.

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளிரானல் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவினால் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இம்முறை புலமைப் பரிசில்களுக்காய் விண்ணப்பித்த அனைத்து ஊடகவியலாளர்களிலிருந்தும் தகைமையினை பூர்த்தி செய்த அனைவர்களுக்குமாக இப்புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  இதன்படி 45 ஊடகவியலாளர்களுக்கு இம்முறை புலமைப் பரிசில் வழங்கப் படவுள்ளது.

வரவு செலவுத்திட்ட உரை – 2023

இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

கௌரவ சபாநாயகர் அவர்களே,

 

கடந்தசிலமாதங்களாகநாம்மேற்கொண்டவிடாமுயற்சிகளினதும்கடுமையான நடவடிக்கைகளினதும் விளைவாக பொருளாதார வீழ்ச்சியிலிருந்து  மீண்டெழும்  நம்பிக்கை ஒளிக்கீற்று வீசுகின்றது.  நாட்கணக்கில் வரிசைகளில் நின்று, தங்கியிருந்து போராட்டம் செய்த யுகத்தைக் கடந்து, கவலையும் பிரச்சனைகளும் ஓரளவுக்கு நிறைவடைந்துள்ள  நிம்மதியான ஒரு யுகத்தை நாம் நெருங்கியுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்துடன்​ பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. படுகடன் மறுசீரமைப்பு பற்றி இந்தியாவுடனும் சீனாவுடனும் நாம்  பேச்சுவார்த்தை நடாத்துகின்றோம். இப்பேச்சுவார்த்தைகள்  சாதகமான பெறுபேறுகளுக்கு வழிவகுக்கும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பணவீக்கத்தை ஓரளவுக்குக்  கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்தது. அதேபோன்று ரூபாய் வலுவடைந்து வருகின்றது. இந்நிலைமையைத் தொடர்ந்தும் பேணி வருவது எமது எதிர்பார்ப்பாகும். தொடர்ந்தும்  இப்படிமுறையின் ஊடாக முன்னோக்கிச் செல்வதன் மூலம் அடுத்த வருடத்துக்குள் பொருளாதார   ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு எங்களால்  முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இருப்பினும்,  அதிலிருந்து திருப்திப்பட எங்களால் முடியாது. நாம் புதியதொரு பயணத்தை ஆரம்பித்தல் வேண்டும்.

கடந்த ஆகஸ்ட்  மாதத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து,  இதுவரை எமது நாட்டில் காணப்பட்ட பொருளாதார   முறையை மாற்றுவதற்காக  ஆரம்ப அடிப்படைகளை தயாரிப்பது இடைக்கால வரவுசெலவு முன்மொழிவுகளின் நோக்கமாகும் என்பதை நான்  குறிப்பிட்டேன்.  இன்று சமர்ப்பிக்கின்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட  முன்மொழிவினூடாக நவீன உலகுக்கு பொருத்தமான புதிய பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்பும் செயன்முறையை  ஆரம்பிப்பதாகவும் நான் அதில் குறிப்பிட்டேன். 

சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்கின்ற சந்தர்ப்பத்தில், எமது நாட்டுக்கு எற்பட்டுள்ள  நிலை  குறித்து  எம்மால் திருப்திப்பட முடியுமா?  நாம் எங்கே தவறு விட்டோம்?  எங்களுக்கு தவறிய இடம் எது?

நான் சுதந்திர இலங்கையில் பிறந்தவன். இலங்கைக்கு சுதந்திரம்  கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர். அவ்வேளையில் ஆசியாவின் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம்  யப்பானில்தான் இருந்தது.  இலங்கையர்களாகிய நாம்  இரண்டாம் இடத்தில் இருந்தோம் என்பது யாவரும் அறிந்ததே. இலங்கையின் தனிநபர் வருமானம் ஐ.அ.டொலர் 3,815 ஆனால் யப்பானின் தனிநபர் வருமானாம் ஐ. அ.டொலர் 39,285   ஆகும்.  

எனது இன்னுமொரு  தனிப்பட்ட அனுபவம் எனக்கு நினைவில் வருகின்றது. 1991ஆம் ஆண்டில்,  நான் கைத்தொழில் அமைச்சர் பதவிவகித்த கால கட்டத்தில் வியட்நாமின் கைத்தொழில் அமைச்சர் இலங்கைக்கு வந்தார். எமது திறந்த பொருளாதார முறை பற்றியும்​கைத்தொழில்மயமாக்க உபாயங்கள் பற்றியும்  ஆராயவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. நான் அவருக்கு விளக்கமளித்தேன்.பாரிய கொழும்பு  ஆணைக்குழு உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்.  1995 ஆண்டளவில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகளின் அளவு  ஐ.அ.டொலர் 2.1 பில்லியனாகும். வியட்நாமின் வெளிநாட்டு ஒதுக்களின்  அளவு ஐ.அ.டொலர் 1.3 பில்லியனாகும்.. வியட்நாம்  அமைச்சர் எமது முறைமைகளைக்  கற்றுக்கொண்டு  தனது நாட்டுக்குச் சென்றார்.  இன்றைய நிலை என்ன?  வியட்நாமின் வெளிநாட்டு ஒதுக்கின்  அளவு ஐ.அ.டொலர் 109.4 பில்லியனாகும் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கத்தின் அளவு  ஐ.அ.டொலர் 3.1 பில்லியனாகும்.

நாம் பின்னோக்கிப்  பார்ப்போம்.  வண்ண வண்ண அரசியல் கண்ணாடிகளை கழட்டி வைத்துவிட்டு பார்ப்போம்.  நாங்கள் ஏன் தவறு செய்தோம்? நாங்கள் எங்கே தவறு செய்தோம்?  எங்களுக்குத் தவறியதா? அப்படியில்லாவிட்டால் நாம்  தவறிழைத்துக் கொண்டோமா?

இன்று எமது நாட்டில் வருமானம் பெறுகின்ற  பல பிரதான  துறைகள் காணப்படுகின்றன. ஒன்று, பெருந்தோட்டப் பொருளாதாரம் அடுத்தது, சுதந்திர வர்த்தக வலயம். ஆடைக் கைத்தொழில், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. அவற்றை நோக்கும் போது  சுதந்திரத்தின் பின்னர் நாட்டுக்கு வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சில பிரதான வழிகளை மாத்திரம் எங்களால் நிர்மாணித்துக் கொள்ளக்கூடியதாக  இருந்துள்ளது.  அதற்கு அப்பால்,பாரியளவில்  வெளிநாட்டு வருமானங்ளை ஈட்டுகின்ற துறைகளை எங்களால் இதுரை  நிர்மாணித்துக் கொள்ள     முடியாதது ஏன்?  இதுவே,  நாம் கவனமாக சிந்தித்துப்  பார்க்க வேண்டிய ஒரு விடயமாகும்.

கடந்த காலங்கள் முழுவதும் நாம் உற்சாகம் அடைந்தது, சந்தோசமடைந்தது  எதிர்காலத்திற்குப்  பயனளிக்கக் கூடிய விடயங்களுக்காகவா அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களில் வெளியில் தென்படக்கூடிய விடயங்களுக்காகவா? வெற்றிகரமான தனியார் தொழில்களை தேசியமயப்படுத்தும் போது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  இலவசமாக அரிசி வழங்கும்போது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவ்வாறான தீர்மானத்தை எடுத்த அரசாங்கம் தற்காலிகமாக பிரபல்யமடைந்தது.

இதன் காரணமாக,  வீதி விளக்கொன்றினைப் பொருத்துவதன் மூலம்  நாம் திருப்தியடைந்தோம்.  ஆனால் மின்னுற்பத்தியை  அதிகரிப்பது குறித்து  நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவில்லை.

உண்மையில், நாட்டின்  நீண்ட கால அபிவிருத்திக்கு அடிப்படையாக இருப்பது பிரபல்யமான தீர்மானங்களா?  அவ்வாறின்றி சரியான தீர்மானங்களா? பல சந்தர்ப்பங்களில் எமது நாட்டில் சரியான தீர்மானங்களுக்கு பதிலாக பிரபல்யமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இன்றும்கூட பெரும்பாலானவர்கள் பிரபல்யமான தீர்மானங்களை எடுப்பதற்கே முயற்சிக்கின்றனர். 

இந்தப் பிரபல்யமான தீர்மான சம்பிரதாயத்தின் பிரதிபலனாக  அமைந்தது எது? நிவாரணப் பொருளாதாரம், நிவாரண  மனோநிலை நாடு பூராவும் குவிந்து கிடக்கின்றது. மக்கள் நிவாரணங்ளைப் பெற்றுக் கொள்வதற்கே  பழக்கப்பட்டு உள்ளனர். அரசாங்கம் செயற்படுவதும் மக்களுக்கு முன்னேறுவதற்கான  சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கல்ல. நிவாரணம் வழங்குவதற்கு மாத்திரமே.

ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளை நினைவுபடுத்தி  ஒரு முறை பின்வருமாரு லீக்வான்யூ    குறிப்பிட்டார் “சிங்கப்பூரில் நான்  கடினமான ஆனால் சரியான பாதையை  பின் பற்றினேன். இலங்கையின்  பண்டாரநாயக்க பிரபல்யமான வழியைப் பின்பற்றினார்”.

இந்த பிரபல்யமான பாதையில் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதன் மூலம் நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது.  எப்போதும் அடுத்தவர்களுக்கு   கடனாளியாகி நிவாரணம் வழங்குவதால் சுபிட்சம் எதுவும் ஏற்படாது. எனவே நாம் தற்போது இந்த நிலைமையிலிருந்து மீளுவோம். எமது  சிந்தனை வடிவங்களை மாற்றிக் கொள்வோம்.

அதனால்  நாம் புதிதாகச்  சிந்திப்போம்.  நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும்பொருட்டு புத்தாக்க  மிக்க அணுகுமுறைளை உருவாக்கிக் கொள்வோம்.

  1. 1977 அணுகுமுறை​
  • ஜே.ஆர். ஜயவர்த்தனவின்  அரசாங்கம் 1977 இல் அதுவரை காணப்பட்ட பொருளாதாரநோக்கினை மாற்றுவதற்கு சாதகமான  நடவடிக்கை ஒன்றை எடுத்தது. தோல்வியடைந்திருந்த மூடிய பொருளாதாரத்திற்குப்பதிலாக மாறுபட்ட  வழி ஒன்று தெரிவு செய்யப்பட்டது.  சலுகைகள் வழங்குவதற்குப் பதிலாக சந்தர்ப்பத்தை  வழங்குகின்ற பொருளாதாரம் ஒன்றை உருவாக்கியது.  இலவசமாக அரிசி வழங்குதல் போன்ற எண்ணக்கருக்களை முழுமையாக நீக்கியது. அதற்குப் பதிலாக ஆற்றல்களின் மூலம், திறமைகளின் மூலம் முன்னோக்கிச் செல்லக் கூடிய புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தது. பொருளாதாரம்  திறந்து விடப்பட்டது. நாடுசெழிப்படைந்தது. வறுமை குறைவடைந்தது. நடுத்தர வகுப்பினர் அதிகரித்தனர்.
  • இருப்பினும் 1977 இல் உருவாக்கிய பொருளாதார அடிப்படையை​ வேகமாக முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை. சிவில் போராட்டம் போன்ற வெளிவாரி காரணிகளால் அப்பயணம்  தடைப்பட்டது. காலத்திற்கு இணங்கியதாக தேவையான  மாற்றங்களும் மறுசீரமைப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.
  • அரசாங்கத்தின் வருமானத்தை  அதிகரித்தல், வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்தல் போன்ற  பணிகளுக்குப்  பதிலாக அரசாங்கத்தின் செலவினம் அதன் எல்லைகளை    தாண்டி அதிகரித்தது. நட்டமடைகின்ற  அரசாங்கத் தொழில்முயற்சிகளை பராமரிப்பதற்குப் பாரியளவு தொகை செலவிடப்பட்டது. அரசியல்  இலாபங்களுக்காக  தேவையற்ற செலவினங்களை மேற்கொள்ளப்பட்டது. உலகநாடுகளுக்கு   கடனாளியா வதன் மூலம் இது இடம்பெற்றது.
  • புத்தபெருமான்  “சாமஞ்ஞபல சூத்திர”இல் கடன் பெறுவது பற்றி இவ்வாறு போதனை செய்துள்ளார். “நுகர்வுக்காக அன்றி முதலீட்டுக்காகவே கடன் பெறுதல் வேண்டும்.“  இருப்பினும் நாம் என்ன செய்தோம்? உலகில்   ஏனைய நாடுகளில் உள்ள மக்கள் சிரமப்பட்டு சம்பாதிக்கின்ற பணத்தைக்  கடனாகப்பெற்று அவற்றை எமது நுகர்வுக்காக செலவுசெய்தோம். நாங்கள் நாளுக்கு நாள் சோம்பேறிகளானோம்.அனைத்தையும்  அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு மக்கள் பழகிக்கொண்டனர்.  அனைத்தையும்  மக்களுக்கு வழங்குவதற்கு  அரசாங்கம்  நடவடிக்கை எடுத்தது.  நாம் சிந்தித்தது எங்களால்  நாட்டுக்கு என்ன நடக்கவேண்டும் என்பதைப் பற்றியல்ல.  நாட்டிலிருந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டிய விடயங்களைப் பற்றி  மாத்திரம்  சிந்திக்கின்ற சமூகமொன்று  சிறிதுசிறிதாக உருவானது. நாம்     செய்தவை எல்லாம்  ஏனையோரிடமிருந்து கடன்பெற்று விருந்து உண்டது போன்றதாகும்.
  • இதனால் 1977 ஆம் ஆண்டின் பொருளாதார அடிப்படையின் திசை முழுமையாக மாற்றமடைந்தது.
  1. இளம் தலைமுறையி​னரின் அபிலாசைகள்
  • சுதந்திரம்​ பெற்று  75 ஆண்டுளாக தேசிய வளங்களைப் பாதுகாப்பது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்.  தேசிய வளங்களை பாதுகாப்பதற்கு போராட்டம் நடத்துகின்றோம்​, சண்டையிடுகின்றோம். உண்மையாகச் சொல்லப்போனால்,  நாம் எமது தேசிய வளங்களை பாதுகாக்கின்றோமா? உண்மையான தேசிய வளங்களுக்கென எதிர்காலமொன்றை உருவாக்கியுள்ளோமா?
  • எமது தேசத்தின்   உண்மையான தேசிய வளம் எமது  இளம்த​லைமுறையினரே. எமது இளம் த​லைமுறையினருக்கு கல்வி, சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இதுவரையிலும் நாம் செய்துள்ளதை பற்றி நாம் திருப்தியடைய முடியுமா? இளம்தலைமுறையினரைப் பாதுகாக்கும் முகமாக, நாம் முறையான பங்கொன்றை  வகித்து இருப்போமாயின், நாட்டை விட்டுசெல்வதற்கு அவர்கள் ஏன் வரிசைகளில் காத்திருக்கின்றனர்?
  • தேசிய வளங்கள் என்பது திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் குதங்கள் போன்ற பௌதீக வளங்கள்தான் என​ ​அநேகமானோர் எண்ணுகின்றனர். அவ்வாறு நினைத்து அவற்றை பயன்படுத்தாது அவை அழிந்துபோகும் வரை பாதுகாத்து வ​ருகின்றோம்.​   இச்சந்தர்ப்பத்தில் எமது 420அரச நிறுவனங்களையும் தொழில்முயற்சிகளையும்   பாராமரித்து வருகின்றோம். இவற்றில் 52 நிறுவனங்கள்  மூலம் ஆண்டுதோறும் ரூபா 86 பில்லியன் செலவு ஏற்படுகின்றது.  நான் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நிறுவனங்களின் பட்டியலை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்க்கின்றேன். இந் நிறுவனங்கள் மூலம் பல ஆண்டுகளாக நாடு அனுகூலமடைந்துள்ளதா? அல்லது பிரதிகூலமடைந்துள்ளதா?
  • தேசிய வளங்கள் எனக் கருதி இந்நிறுவனங்கள் மற்றும் தொழில்முயற்சிகள் மீது அவதானம்செலுத்துகின்றபோது, நாட்டின் உண்மையான தேசிய வளங்கள் மீதான எமது அவதானம்​  இல்லாதுபோயுள்ளது. இளைஞர் யுவதிகளின் எதிர்பார்கைகளும் கரைந்து செல்கின்றது. சிலர் நாட்டை விட்டு செல்கின்றனர்.
  •  இவ்விளைஞர் யுவதிகள் சிறந்த எதிர்காலத்தயே எதிர்பார்க்கின்றர். சுபிட்சமிக்க நாடொன்றையே எதிர்பார்க்கின்றர். எதிர்ப்பு ஊர்வலங்கள், போராட்டங்கள்,  பணிப்பகிஸ்கரிப்பு  போன்ற மரபுசார்ந்த அரசியல் வழிமுறைகளைத் தாண்டிய புதிய அணுகுமுறைகளை பயன்படுத்தி,  புதிய முறைமையொன்று  எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இன்று பார்வையாளர்  கலரியை நோக்கும்போது  குறிப்பிடத்தக்களவு  இளைஞர் யுவதிகள் வருகைத் தந்திருப்பது தென்படுகின்றது. சுபிட்சமிக்க எதிர்காலத்தையும்,  உயர்ந்த சமூகத்தையும் முறைமையில்  மாற்றம் ஏற்படுத்துவதையுமே அவர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
  • நாம் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவது இவ் இளைஞர் யுவதிகளுக்காகவேதான். அவர்களின் எதிர்காலத்திற்காகவேதான்.
  1. பொருளாதாரத்தின்  புதிய அடிப்படை
  • 1977 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொருளாதார அடிப்படை   இப்பொழுது உசிதமற்றது.அது தற்காலத்துக்குப் பொருத்தமானதுமல்ல.  அது இப்போது  முறிவடைந்துள்ளது.  எமது நாட்டில் சில காலம் தொழிற்பட்ட மூடிய பொருளாதாரத்தைப் போன்று 1977 இல் உருவாக்கப்பட்ட பொருளாதாரமும் தோல்வியடைந்தது.  அதனால் நாம் தற்காலம்  குறித்து  புதிதாக சிந்தித்தல் வேண்டும்.  சுகதபால த சில்வா “மராசாத்” எனும்  நாடகத்தில் காட்டுவதைப் போல, தலையணை   உறையைப் போன்று புறப்பக்கத்தைத் திருப்பி புதிய கண்ணால்  உலகத்தைப்  பார்க்க வேண்டும்.
  • தற்போதைய   உலகத்தின் போக்கு வேறுபட்டது.  உலகப் பொருளாதார சிந்தனை வேறுபட்டது.  உலகப் பொருளாதாரம்  நடந்துகொள்கின்ற விதம் வேறுபட்டது.  அதனால் அந்த புதிய போக்கிற்கு பொருந்தக் கூடிய விதத்தில் நாம் புதிய பொருளாதார அடிப்படையொன்றைத் தயாரித்துக்கொள்ளல் வேண்டும்.
  • அண்மையில்  சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக  வாசிக்கக்  கிடைத்த இரண்டு ஆக்கங்களின்  இரண்டு பகுதிகளை நான் எடுத்துக்காட்ட  விரும்புகிறேன்.  காமினி வியாங்கொட  என்பவர் இவ்வாறு  குறிப்பிடுகின்றார்.
  • “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான  சக்தி தனது கையிலிருக்கின்றது என பிரச்சனையின் வாலில்  பிடித்துக் கொண்டு  ஒருவர் சொல்லும்போது கவனமாக இருங்கள்.  தான் அதிகாரத்துக்கு  வந்தவுடன் கள்வர்களையும் ஊழல்காரர்களையும்  சிறையில் அடைப்பதாகக்  கூறும் போது அது பொய்யாகும். மோசடி மற்றும் வீண் விரயமற்ற நாட்டைத்  தான்  உருவாக்குவதாகக்  கூறுவதும்  அவ்வாறானதொரு பொய்யாகும்.  அந்த விடயங்கள்  அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கு  அத்தியாவசியமானதாக  இருந்த போதிலும் தற்போதைய இலங்கையைக் கட்டியெழுப்பும்  பிரச்சினைக்கு அதிலும்  பார்க்க  சிக்கலான மற்றும் கடினமான  வீச்சில்   பதில் இருக்கின்றது என்பதை இன்று  இல்லாவிட்டாலும்  நாளையாவது  நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும்”
  • சின்தன தர்மதாச இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“இதன் காரணமாக நாம் மீண்டும் சிந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. போராட்டம்  இருப்பது எங்களுக்கு  வெளியிலல்ல. எங்களுக்கு உள்ளேதான்  அது இருக்கின்றது.   இந்த பொருளாதாரப் போராட்டத்தை வெற்றி கொள்வதற்குஎங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டி உள்ளது.  எம்மால்  மீண்டும் மலரச் செய்கின்ற பொருளாதார   சக்தியின்மூலம்  மாத்திரமே தீவிர  வறுமையினால் இன்னல்படுகின்ற  மக்களை  கட்டியெழுப்ப முடியும்.  இத்தருணத்தில் உண்மையான  மக்கள் பொய் கூறுவதற்கான செயற்பணி  அங்குதான் இருக்கின்றது.

  •  அதனால் நாம்  இந்த நெருக்கடியின் சிரமத்தையும்  சிக்கலான தன்மையையும்  புரிந்து கொள்வோம். நெருக்கடியிலிருந்து  மீண்டு  வருவதற்காக பொருளாதாரத்தை மலரச் செய்கின்ற சக்தியொன்றை உருவாக்கிக் கொள்வோம்.
  • அந்த சக்தியை உருவாக்கக்கூடிய  இலங்கைக்கான பொருளாதாரத்தின்  புதிய  அடிப்படையைத்  தயாரிப்பதற்கு இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் நாம்  முயற்சிக்கின்றோம்.
  • இந்த இடத்தில் நாம்  கவனம் செலுத்துகின்ற அடிப்படை விடயங்கள்  பற்றி  எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.
  • அண்மைக்கால  வரலாற்றில் நாம்  முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக முழு நாடும்  பல சிரமங்களுக்கு முகங்கொடுத்தது. அன்றாடத் தேவைகளை  நிர்ணயம் செய்ய முடியவில்லை. தொழில்கள் ஆபத்தில் வீழ்ந்தது. வருமானத்தை  இழக்க நேரிட்டது. வியாபாரங்கள் வீழ்ச்சியடைந்தது.  இதுவரையில்  அந்த சகல சிரமங்களிலிருந்தும்  முழுமையாக  மீள முடியவில்லை.
  • நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும்  எதிர்பார்ப்பினை  மனதில் வைத்துக் கொண்டு  மக்கள் இவ்வாறான சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். நாட்டை மீண்டும்  கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நாம்  அனைவரும் அந்த அர்ப்பணிப்பை மேற்கொண்டோம். நாட்டுக்காக இவ்வாறு  அர்ப்பணம் செய்த அதேபோன்று அர்ப்பணம் செய்கின்ற சகலருக்கும் நாம் கட்டி எழுப்புகின்ற புதிய பொருளாதாரத்தின் நன்மைகள் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். சகலருக்கும் சமமான வாய்ப்புகள் உருவாக வேண்டும் அது சமூகத்தின் சிறிய குழுவை மாத்திரம் செல்வந்தர்களாக மாற்றுகின்ற பொருளாதார முறை  அன்றி ஒட்டுமொத்த சமூகத்தையும் உயர்த்தி வைக்கின்ற பொருளாதார முறை.
  • இலங்கை குறைந்த வருமானம் பெறும் பொருளாதாரமாக காணப்பட்ட காலத்தில் மக்கள் அனுபவித்த வாழ்க்கைத் தேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்பட்டன. இருப்பினும் நடுத்தர வருமான பொருளாதாரமாக உயரத்த பட்ட  போது வாழ்க்கைமுறையும் இயற்கையாக உயர்ந்து சென்றது. அவ்வாறு நிகழ்வது சாதாரண நிலையாகும். வீட்டிலும் அப்படித்தான். வீட்டின்  வருமான மட்டம் அதிகரித்துச் செல்லும்போது, வாழ்க்கைமுறையும் அதிகரிக்கின்றது.
  • புதிய பொருளாதார அடிப்படையை தயாரிக்கும்போது சமூகம் பழக்கப்பட்டிருக்கின்ற வாழ்க்கை முறை பற்றி நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த வாழ்க்கை முறை மீண்டும் கீழ் மட்டத்திற்கு விழாதவாறு, புதிய பயணத்தை நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
  • விசேடமாக உலகத்துடன் தொழில்நுட்ப அடிப்படையில் கையாளுகின்ற தற்போதைய இளைஞர் பரம்பரை நாளுக்கு நாள் தமது வாழ்க்கைமுறை அதிகரித்துச் செல்வதை எதிர்பார்க்கின்றனர். அதனால் புதிய பொருளாதார அடிப்படையின் ஊடாக நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற வாழ்க்கை முறை ஒன்றை தூண்டுகின்ற வழியினை உருவாக்க வேண்டியுள்ளது. 
  • அதனால் நாம் உருவாக்க வேண்டியது தற்போதைய தனிநபர் வருமானத்திற்கு பொருத்தமான வாழ்க்கை முறை அல்ல. இளைஞர் யுவதிகள் எதிர்பார்க்கின்ற வாழ்க்கை முறைக்கு பொருத்தமான மட்டத்திற்கு தனிநபர் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய முறையாகும்.
  • இந்த முறைமையில் வறுமை மற்றும் பாதிக்கப்படக்கூடிய வகுப்பினரை பாதுகாத்துக்கொள்வது பற்றி நாங்கள் முழுமையாக கவனம் செலுத்துகிறோம். அதேபோன்று தற்போது வழங்கப்படுகின்ற இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகள் அதேபோன்று ஏனைய நலன்புரிப் பணிகளின் ஊடாக சமூகத்தின் சகல பிரிவினருக்கும் நியாயமான நன்மைகள் கிடைக்கின்றதா என்பதை பற்றி நாம் ஆராய்தல் வேண்டும்.  அதேபோன்று இந்த சேவைகளை மிகவும் வினைத்திறன் உடையதாக்குதல் வேண்டும்.இதற்காக செலவிடுகின்ற  வளங்களிலிருந்து அதிகபட்ச நலன்களை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  • நாம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றோம் என்பதை மறந்தால் எமக்கு எதிர்காலப் பயணம் கிடையாது. தற்போதைய நிலைமையை நன்றாக புரிந்துகொண்டு எமது எதிர்கால பயணத்தை தயாரித்தல் வேண்டும். அதனால் இந்த நெருக்கடிக்கு மத்தியில் எமது நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்களை மிகவும் பயனுள்ளதாக நடைமுறைப்படுத்த வேண்டிய விதம் குறித்து விசேட கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.
  • இதற்கு இணையாக தனியார் துறையின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டியுள்ளது. எமது நாட்டின் தனியார் தொழில் முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 1950 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி வரையிலும் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து இருப்பினும் அவர்களின் தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டதுடன் இலங்கையின் தனியார்  தொழில் முயற்சிகள் முழுமையாக வீழ்ச்சி அடைந்தது. 77 ஆம் ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கையின் பிரதிபலனாக மீண்டும் தனியார் தொழில் முயற்சிகள் உருவான போதிலும் அவர்களுக்கு தேவையான வசதிகள் உரிய விதத்தில் வழங்கப்படவில்லை.
  • நாட்டில் பெரும்பாலானவர்கள் தொழில் முயற்சிகளை சிறந்த மனோபாவத்துடன் நோக்கி இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்குகின்ற தொழில் முயற்சியாளர்கள் வில்லன்களை போல் கருதப்பட்டனர். நாட்டில் தயாரிக்கப்படுகின்ற தொலைக்காட்சி நாடகங்களில் பெரும்பாலானவை கிராமத்தில் உள்ள கடை முதலாளியை சித்தரித்தது வில்லன் கதாபாத்திரம் போலவே ஆகும். கிராமத்தில் உள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களில் இருந்து பாரிய அளவிலான தொழில் முயற்சியாளர்கள் வரை எல்லோரும் சுரண்டி வாழ்கின்றவர்களைப் போல கருதக்கூடிய மனோநிலை கட்டி எழுப்பப்பட்டிருந்தது. 
  • நாம் இந்த நிலையை மாற்றுதல் வேண்டும் தனியார் தொழில்  முயற்சியாளர்களை  ஊக்குவித்தல் வேண்டும். புதிய தொழில் முயற்சியாளர்கள் உருவாக்குதல் வேண்டும். அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும்  செய்து கொடுத்தல் வேண்டும். அவர்களது பணிகளை மிகவும் உற்பத்தித் திறன் உடையதான விதத்தில் கொள்கை ரீதியான சூழல் ஒன்று  உருவாக்கப்பட வேண்டும்.
  • இதற்கு இணையாக தனியார் துறையின் தொழில் முயற்சியாளர்களை முன்னேற்ற வேண்டியுள்ளது. பொருளாதார நடவடிக்கை ஒழுங்குபடுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு, சந்தை தோல்விகளை திருத்திக் கொள்ளுதல் மற்றும் சட்டமும் ஒழுங்கும் ஆகியவற்றை பாதுகாப்பது சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
  • இவை அனைத்தையும் பின்னணியாகக் கொண்டு நாம் கட்டி எழுப்பப் போகின்ற பொருளாதாரத்தை‘சமூகப் பாதுகாப்பு திறந்த பொருளாதார முறை’ என வரைவிலக்கணப்படுத்த நான் விரும்புகிறேன்.
  • இப்புதிய பொருளாதாரத்தில் நாம்  மூன்று பிரதான விடயங்களை பற்றி  கவனத்தை செலுத்துகிறோம்.
  • ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிக்குரிய பொருளாதாரம்.
  • சூழல் நட்பான பசுமை மற்றும் நீல பொருளாதாரம்.
  • டிஜிட்டல் பொருளாதாரம்
  • இவ்வாறான புதிய பொருளாதார அடிப்படை ஒன்றை உருவாக்குவது சவால் மிக்க பணியாகும். வெறுமனே வரி முறையில் மாற்றங்களை செய்வதன் மூலம் மாத்திரம்  அவ்வாறான புதிய பொருளாதாரத்தை உருவாக்க முடியாது. புதிய வருமான வழிகளை கண்டறிதல் வேண்டும். புதிய துறைகளை கண்டறிதல் வேண்டும். பாரிய பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு என்பவற்றை மேற்கொள்ளுதல் வேண்டும்.
  • நாம் இங்கு விசேடமான இரண்டு விடயங்களை அடிப்படையாக கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்.
  • முதலாவது - பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் மீள்ஒழுங்குபடுத்தல் இரண்டாவது- பொருளாதார நவீனமயப்படுத்தல்.
  • துரித பொருளாதார வளர்ச்சி ஒன்றை நாம் அடைந்து கொள்ளுதல் வேண்டும் நாட்டின் ஒட்டுமொத்த வாய்ப்பும்  பயன்படுத்த வேண்டும். இங்கு நாட்டின் வளங்களின் அடிப்படை பற்றி மீளாராய்தல் செய்தல் அதேபோன்று அவற்றை மீளமைப்பதும் முக்கியமானதாகும். கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் சமுத்திர வளங்கள், கைத்தொழில், வியாபாரம் மற்றும் முதலீடு,  பாதுகாப்பு வெளிநாட்டு உறவுகள், போன்ற அனைத்தையும் நவீனமயப் படுத்தபடவேண்டும். நாம் இந்த சமூக பொருளாதார மாற்றத்தை உலகளாவிய  நிகழ்வுகளை கவனத்திற்கொண்டு மேற்கொள்ளுதல் வேண்டும். விசேடமாக காலநிலை மாற்றங்கள் குறித்து கூடுதலான கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.
  • பொருளாதார மாற்றத்திற்கு தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களை நாம் கூடிய விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்போம்.
  • இதன்போது நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்துடனும் அதேபோன்று கைத்தொழில் மற்றும் சமூக தொடர்புத் தொகுதியுடனும் இணைந்திருக்கின்ற பல்வேறு தரப்பினர்களுக்கு இடையில் பொதுவான சமூக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது அத்தியாவசியமான விடயமாகும். சட்டவாக்கத் துறை ,நிறைவேற்றுத்துறை, நீதித்துறை,  தொழிற்சார் குழுக்கள்,  ஊடகத்துறை, சமயக் குழுக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்கள் ஆகியவற்றை இதற்காக இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நீண்ட கால சமூக நல்லிணக்கத்தை  பேணி வருவதற்கும், துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி  மோதலின்றிய பயணிப்பதற்கு இந்த பொது உடன்பாடு மிகவும் முக்கியமானதாகும்.
  • நாம் உருவாக்குகின்ற சமூக சந்தை பொருளாதாரத்தினூடாக , அல்லது சமூக பாதுகாப்பு  திறந்த பொருளாதாரத்தினூடாக   இந்த இலக்குகளை முதலில் அடைந்து கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
  •    7-8 சதவீத பொருளாதார வளர்ச்சி
  •    சர்வதேச வர்த்தகத்தை மொ.உ.  உற்பத்தியின் 100 சதவீதமாக அதிகரித்தல்.
  • 2023-2032 வரை புதிய ஏற்றுமதி ஊடாக  ஐ. அ.டொலர் 3 பில்லியன் வருடாந்தம்  அதிகரிப்பு
  •    10 வருடங்கள் முழுவதும் வருடாந்தம் ஐ. அ.டொலர் 3 பில்லியன்​ நேரடி வெளிநாட்டு முதலீடு
  • எதிர்வரும் பத்து ஆண்டுகளினுள் உயர்தேர்ச்சிபெற்ற சர்வதேசளவில் ​போட்டிமிக்க தொழிற்படையை உருவாக்குதல்
    • இவ்விலக்குகளை அடைந்து கொள்வதற்கு, நாம் போட்டிக்குரிய உயர் செயலாற்றுகையை கொண்ட நவீன பொருளாதாரத்தை உருவாக்கிகொள்ள வேண்டும். தனியார் துறை முன்னிலையான ஏற்றுமதிக்கு சார்பான போட்டிக்குரிய  நவீன பொருளாதாரம்.  அதன் பயணத்தை இந்த வரவுசெலவுதிட்டத்துடன்  ஆரம்பிக்கின்றோம்.  சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடைகின்ற 2048 ஆம் ஆண்டு ஆகின்றபோது அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்​குவதற்கான புதிய நுழைவிற்கும் முறைமைக்குமான பின்னணி  2023 ஆம் ஆண்டு இவ்வரவுசெலவுதிட்டத்தின் மூலம் தயாராகின்றது.
    • ஆயினும்,  இவ்வரவுசெலவுதிட்ட முன்மொழிவானது மரபு ரீதியான வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகளிலிருந்து வேறுப்பட்டதாகும். நாம் வழக்கமாக கொண்டிருப்பது யாதெனில்,  வரவுசெலவுதிட்ட முன்மொழிவு ஊடாக பொருட்களின் விலையைக் குறைத்தல், சம்பள அதிகரிப்பு, மற்றும் நிவாரணம் போன்றவற்றை பெற்றுக்கொள்வதே ஆகும். உலக நாடுகளின் கடன் பெற்றோ அல்லது வெளித்தோற்றத்துக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாக காட்டிகொள்ளும் வரவுசெலவுதிட்ட முன்மொழிவை  முன்வைப்பதற்கு நாங்களும் விரும்புகின்றோம்.  அவ்வாறான பிரபல்யமிக்க தீர்மானத்த்தை எடுத்தமையினாலேயே நாம்   பாதை தவறிவிட்டோம். தற்போது தவறான பாதையில் சென்று எம்மை தொலைத்து நம்பிக்கை இழக்க முடியாது.
    • வெளிநாடுகளிலிருந்து  கடன்​பெற்று   விருந்து உண்பதற்கு இவ்வரவுசெலவுதிட்ட ஊடாக எதிர்பார்க்கவில்லை. இவ்வரவுசெலவுதிட்டம் மூலம் எங்களது ச​க்தியை கொண்டு நாம் எழுந்து நிற்க கூடிய  அடிப்படையொன்றை  உருவாக்குவதாகும். புதிய பொருளாதாரத்தை  உருவாக்குவதற்கான அணுகுமுறையை தோற்றுவிப்பதாகும்.
    • இவ்வரவுசெலவுதிட்டத்தின் ஊடாக நாம் உருவாக்கின்ற அடிப்படை மீது எதிர்காலத்தை கட்டியெழுப்புவோமானால், 2023 இன் இறுதியளவில் நாம்  மீட்சியடைகின்ற பொருளாதார நி​லைமையை  அனுபவிக்க இயலுமாக இருக்கும். பொருளாதாரத்தின் அத்தகைய பிரதிலாபங்கள் நாட்டில் பெருக்கெடுக்கும்.
    • இங்கு இன்னுமொரு விடயத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் கொண்டு வருகின்ற பொருளாதார மறுசீரமைப்பு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வந்த மறுசீரமைப்புக்கு வரையறுக்கப்பட்டதாக இருக்கப்போவதில்லை. சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்த பொருளாதார மறுசீரமைப்பு பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மாத்திரம் வரையறுக்கப்படுகின்றது.
    • நாம் இந்த மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு என்பவற்றை புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற் கொள்கின்றோம் அது நாட்டின் தேவைப்பாடு ஆகும். நீண்ட காலமாக நாட்டுக்குத் தேவையாக இருந்த ஒரு விடயமாகும்.
    • பெரும்பாலான அரசாங்கங்கள் பிரபல்யம் குறித்து சிந்தித்து நிறைவேற்றாத பணிகள்.  இது நாம் அந்த பொறுப்புக்களை நாட்டுக்காக நிறைவேற்றுகிறோம்.
    • அவ்வாறாயின், 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகளை  முன்வைக்க  தற்போது ​நான் விளைகின்றேன்.

4. பேரண்ட  அரசிறைக் கட்டமைப்பு

அ. எமது அரசிறை நிலைநிறுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது  அரசாங்க வருமானத்தை 2021 இன் இறுதியிலுள்ளவாறான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8.3 சதவீதத்திலிருந்து  2025 இல் ஏறத்தாள மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றது.

ஆ.  2025 இல்  முதலாந்தர மிகையினை மொத்த உள்நாட்டு உற்பத்தியின்  2 சதவீதத்திற்குமேல்  அடைய அரசாங்கம் இலக்கனைக் கொண்டுள்ளதுடன் அதன் பின்னர் இம் மட்டத்தினை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது.

இ.   அரசாங்கத்துறை படுகடனை 2022 இன் இறுதியில் உள்ளவாறான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் 110 சதவீதத்திலிருந்து நடுத்தர காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதத்திற்கு மேற்படாதவாறு குறைப்பதற்கு நாம் திட்டமிடுகின்றோம்.

ஈ.    பணவீக்கமானது நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டமொன்றுக்கான கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் கொண்டுவரப்படும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

உ.   இவற்றுக்கு   இசைவாக, வட்டி வீதங்களும் படிப்படியாக மிதமான மட்டத்தினை சென்றடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊ.  வெளிநாட்டு நிதியிடல் ஊடாக பேண்டப்பொருளாதார நம்பிக்கை மீளவும் நிறுவப்பட்டு, வெளிநாட்டு செலாவணி  ஒதுக்குகள் நிறைவாக்கப்பட்டமையுடன் செலாவணி வீதம் மீதான பாதகமான அழுத்தமும் குறைவடையுமென எதிபார்க்கப்படுகின்றது.

ஊ.  தொடர்ச்சியான வளர்ச்சியை அதிகரிக்கின்ற கட்டமைப்புசார்ந்த மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சியானது நடுத்தர காலத்தில் 5 சதவீதத்தை  நோக்கி திரும்பலடையுமெனவும் அதன் பின்னர் உயர்வான மட்டமொன்றுக்கு துரிதமடையுமெனவும்  எதிர்பார்க்கப்படுகின்றது.  

வர்த்தகம் மற்றும் முதலீடு

5.  வெளிநாட்டு வர்த்தகம்  மற்றும் முதலீட்டு முகவராண்மை

5.1 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக   வெளிநாட்டு செலாவனி உட்பாய்ச்ச​ல் தொடர்பான​ செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஏற்றுமதி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் வகையில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் தனித்தனியாக செயற்படுவதனால் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள​ இ​டைவெளி ஏற்றுமதியாளர்களை மிகவும் பாதித்துள்ளது. அதே போன்று முதலீடு மற்றும் ஏற்றுமதியை  ஊக்குவிப்பதற்கான  பல நிகழ்ச்சித்திட்டங்கள் பல்வேறு அரசாங்க நிறுவனங்களினால்​ செயற்படுத்தப்படும். இதனால் வசதிகளை அதிகரிப்பது போன்று முதலீட்டு நட்பு சூழ​லொன்றினை உருவாக்குவதற்கு ஏற்றமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக மத்தியப்படுத்தப்பட்ட நிறுவனமொன்றினை தாபித்தல் அவசியமாகும். இதனடிப்படையில், தற்பொழுது செயற்பட்டு வருகின்ற ஏற்றுமதி அபிவிருத்திச் சபை,  முதலீட்டுச் சபை, இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுதாபனம், தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபை  ​போன்ற நிறுவனங்கள் அனைத்திற்கும் பதிலாக புதிய சட்டமொன்றினை உருவாக்கி ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கான விசேட நிறுவனமொன்றினை தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இந்த முன்மொழிவினை செயற்படுத்துவதற்கு ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

6. புதிய பொருளாதார வலயங்கள்

6.1 வெளிநாட்டு முதலீட்டினை கவருவதற்காக தற்பொழுது இனம் காணப்பட்டுள்ள மேல் மாகாணம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை  சூழலினை அண்டிய பொருளாதார வலயங்களை உருவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்காக  முதலீட்டாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை  அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று தற்போது பல்வேறு நிறுவனங்களின் கீழ் செயற்படுகின்ற முதலீட்டு  மற்றும் கைத்தொழில்  வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் விசேட புதிய சட்ட ஏற்பாடொன்றின் கீழ் இந்த பொருளாதார வலயங்கள் தாபிக்கப்படும்.  வரி சலுகை அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவருகின்ற செயற்பாடுகளுக்குப் பதிலாக மாற்று ​உபாயங்களையும் கவனத்தில் கொள்தல் வேண்டும்.  இதற்காக ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

7. தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவினைத் தாபித்தல்

7.1 கைத்தொழிற் துறைகளுடன் தொடர்பான இறக்குமதி வரி மற்றும் போட்டித் தன்மையுடன் தொடர்பான பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு முனைப்பழிவுள்ள மற்றும் தரமான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட   விசாரணை /ஆய்வுகளை  மேற்கொண்டு தொழில்துறைக்குப் பொருத்தமான விற்பனையினை சிபாரிசு செய்தல், கைத்தொழில்,  வாணிப மற்றும் வியாபார துறைகளுடன் தொடர்பான நுண்பொருளாதார கொள்கை தொடர்பாக அரசாங்கத்திற்கு  ஆலோசனை வழங்குதல்,   சமூக மற்றும் சுற்றாடல் பிணக்குகள் தொடர்பான தற்பொழுது காணப்படும் ஒழுங்கு விதிகளை மதிப்பாய்வு செய்து திருத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் சிபாரிசு செய்தல், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கும் இணங்குவதற்கு முடியாத காரணத்தினால் மூடப்படுகின்ற தொழிற்றுறைகளில் சேவையாற்றுகின்ற ஊழியர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு முடியுமான வகையில் அவர்களை பயிற்றுவித்து அவற்றில் ஈடுபடுத்துதல்,  அவ்வாறு அல்லாத சந்தர்ப்பங்களில் ஊழியல்களுக்கு  நட்டஈட்டு முறைமையினை முன்மொழிதல் போன்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுயாதீனமான நிறுவனமொன்றாக தேசிய உற்பத்தித்திறன்  ஆணைக்குழுவினை  தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.  இதன்போது தற்பொழுது செயற்பட்டு வருகின்ற தேசிய உற்பத்தித்திறன் செயலகத்திற்குப் பதிலாக அவற்றின் செயற்பாடுகளும் உத்தேச ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்படும். இந்த முன்மொழிவினை செயற்படுத்துவதற்கு ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

8. உலக சந்தைக்கான அடைவினை அதிரித்தல்

8.1 உள்நாட்டு வழங்கல் ஆற்றலினை அபிவிருத்திசெய்கின்ற  அதேவளை,இலங்கை  அதன் சந்தை அடைவுகளை விரிவாக்குவது அத்தியாவசியமானதாகும். உலக வர்த்தகமானது  இன்று ஆசியா போன்ற பிராந்திய மற்றும் உலக உற்பத்தி வலையமைப்புகளினால் மேற்கொள்ளப்படுவதுடன்  இலங்கை  அவற்றிலிருந்து முழுமையாக விலகியிருக்கின்றது. புத்தாக்கம், வினைத்திறன் மற்றும் தரம் என்பவற்றினூடாக உலகச் சந்தையில் போட்டியிடுவதற்கான இயலாமையினைக் கருத்திற் கொண்டு கொள்கை நவடிக்கைகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும்.

8.2 இதன் விளைவாக இலங்கை இந்தியா  மற்றும் சீனா போன்ற பிரதான சந்தைகளுடன் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இரண்டு நாடுகளுடனான வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் 2019 இலிருந்து தடைப்பட்டதுடன் தற்பொழுது நாம் பேச்சு வார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.  இலங்கை தாய்லாந்துடன்  வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் பிராந்திய​ விரிவான பொருளாதார பங்குடமை (Regional Comprehensive Economic Partnership- RCEP)போன்ற  இயக்கவாற்றல்மிக்க பிராந்திய வர்த்தக ஏற்பாடுகளில் ஈடுபடுவதற்கான படிக்கல்லாக  அமைகின்றது.

8.3 சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள்  அனைத்தையும் கையாள்வதற்கான  சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றினைத் தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இது ஆரம்பத்தில் நிதி அமைச்சின் கீழ் தாபிக்கப்படுவதுடன் அது மீள் கட்டமைப்புச் செய்யப்படுகின்றபொழுது இது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைக்கப்படுவதுடன், வெளிநாட்டு அலுவல்கள்   அமைச்சானது,  வெளிநாட்டு அலுவல்கள்மற்றும் சர்வதேச வர்த்தக  அமைச்சு என பெயர் மாற்றம் செய்யப்படும்.

9. ஏற்பாட்டுச் சேவை உட்கட்டமைப்பு  நிகழ்ச்சித் திட்டம்

9.1 ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மற்றுமொரு தடையாக ஏற்பாட்டுச் சேவைகள் உட்கட்டமைப்பு செயலாற்றுகை  காணப்படுகின்றது.  எனவே, முதல் 70 நாடுகளுக்கிடையில் இலங்கையின் ஏற்பாட்டுச் சேவை செயலாற்றுகையினை முன்னேற்றுவதை இலக்காகக் கொண்டு 2023 இலிருந்து 2027   வரையான காலப்பகுதியில் மூன்று வருட ஏற்பாட்டுச் சேவை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்ஒன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

10. முதலீட்டு நட்புச் சூழல்

10.1 மிக அதிகமான வியாபார நட்புச் சூழல் ஒன்றினை  உருவாக்குவதற்கு இலகுபடுத்தப்பட்ட மற்றும்  தற்பொழுது காணப்படுகின்ற ஏற்பாடுளை  வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான அவசியம்  ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஆரோக்கியமான  வியாபார சூழலொன்றினை உருவாக்குவதற்கு இயலுமான வகையில் செலவினம், நடபடி முறைகள் மற்றும் நேரத்தைக்  குறைத்தல் என்பதுடன் வெளிப்டைத் தன்மையினை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில் தேவையான மறுசீரமைப்புகளை அறிமுகஞ்     செய்வதற்கு முதலீட்டு  ஊக்குவிப்பு  அமைச்சுக்கு ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு  நான் முன்மொழிகின்றேன்.

11. புதிய தொழிற் கொள்கைகள்

11.1 உற்பத்தித்திறன் வாய்ந்த பொருளாதார நடவடிக்கைகளை  வினைத்திறனுடன்  கொண்டுநடாத்தும் விதத்தில் தொழிலாளர்,  தொழில்தருனர் ஆகிய இருவரும் பாதுகாக்கப்பட வேண்டிய  தொழிலாளர் துறையின்  மறுசீரமைப்புகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ளன. போட்டிமிக்க  ஏற்றுமதியை நோக்காகக்  கொண்ட பொருளாதாரமொன்றில் நாட்டின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதில் இருதரப்பினர்களும் உற்பத்தித்திறன்மிக்க விதத்தில் பங்கேற்க வேண்டும். துறையில் காணப்படுகின்ற  சட்டங்கள்,  கொள்கைகள் மற்றும் நிறுவனசார் ஏற்பாடுகள் என்பன தொழில்முயற்சியாளர் இயலுமைகளையும் வியாபார அபிவிருத்திகளையும் நிறுத்தக்கூடாது.  தனிப்பட்டவர்களின் ஆற்றல்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு அனைத்து  சூழலும் ஆக்கபூர்வமாக இருக்கவேண்டிய  அதேவேளை, தொழில்முயற்சியாளர்களின்   இடர்நேர்வை எடுத்துக்கொள்கின்ற நடத்தையும்கூட முறையாகவும் வெகுமதியளிக்கப்பட வேண்டும்.  நாட்டின் தொழிற் சட்டங்கள் காலம் கடந்துள்ளன என்பதுடன் கூறுகளாகஆக்கப்பட்டுள்ளமையினால்   தொழில்தருநர் – தொழிலாளர்  வகுப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் நன்மைபயக்கக்கும் விதத்தில் புதிய, இற்றைப்படுத்தப்பட்ட அத்துடன் ஒன்றுசேர்க்கப்பட்ட தொழிற்சட்டமொன்றை இயற்றுவதற்கு முன்மொழிகின்றேன்.

12. வேளாண்மை ஏற்றுமதிக்கான காணிகள்

12.1 பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அதாவது சட்டச் சிக்கல்கள், நிறுவனசார் முரண்பாடுகள், மூலதனம் போதாமை போன்ற காரணத்தினால் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் காணி மீட்டல் ஆணைக்குழு  ஆகியவற்றுக்கு உரித்தான பாரியளவிலான காணிகள் நீண்டகாலமாக பயிரிடப்படாது அல்லது உற்பத்தித்திறனற்றுக்காணப்படுகின்றன. அத்தகைய காணிகளை பொருளாதாரத்தின் நன்மைக்காக உற்பத்தித்திறனுடன்பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்  காணப்படுகின்றன. அதற்கமைய, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள்  இரண்டையும் அதிகரிக்கக்கூடிய விதத்தில் அவற்றை உற்பத்தித்திறன்மிக்கவாறு உபயோகிப்பதற்கு முதலீட்டாளர்களை இயலச்செய்கின்ற திட்டமொன்று உருவாக்கப்படும். ஆகையினால், பாரியளவிலான உபயோகப்படுத்தப்படாத /உற்பத்தித்திறனின்றி  பயன்படுத்தப்படுகின்ற காணிகள் ஏற்றுமதிப் பயிர்களை பயிரிடுவதற்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்படும். மேலும், முன்மொழியப்பட்ட வேளாண்மைக் காணி குத்தகை நிகழ்ச்சித்திட்டத்தை வசதிப்படுத்துவதற்கு புதிய சட்டமொன்றும் இச்சபைக்குச்  சமர்ப்பிக்கப்படும்.

13. அரச காணிகளை உரிமை மாற்றல்

13.1 அரச காணிகளை உரிமை மாற்றம் செய்வதுடன் தொடர்புடைய பூர்வாங்க நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்கள்,  உதவி அரசாங்க அதிபர் ஊடாக மாவட்டச்  செயலாளர் /அரசாங்க அதிபர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதன், பின்னர் விசேட சந்தர்ப்பங்களுக்காக நிறுவப்படுகின்ற இலங்கை மகாவலி அதிகார சபை மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் அப்பணி பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் காணி  குறித்தொதுக்குதல் தொடர்பிலான பூர்வாங்க நடவடிக்கைகள் பல்வேறு  முறைகளில் மேற்கொள்ளப்படுகின்ற காரணத்தினால்  முரண்பாடுகள்  மற்றும்  முறைகேடாக இடம்பெறுகின்றமை பதிவாகியுள்ளது. ஆகையினால், மேலே குறிப்பிடப்பட்ட விசேட தேவைகள் தற்போது மேற்கொள்ளப்படவேண்டி  ஏற்பட்டுள்ளமையினால் அவ்விரு நிறுவனங்கள் மூலமும் செய்யப்படுகின்ற அரச காணி கையுதிர்த்தல் உள்ளடங்களாக அனைத்து காணி கையுதிர்த்தலுடனும் தொடர்புடைய  பூர்வாங்க நடவடிக்கைகள் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாத்திரம் மேற்கொள்ளத் தேவையான ஒழுங்குமுறைமை எதிர்வரும் ஆண்டினுள் தயாரிக்கப்படும்.

14. டிஜிட்டல் தொழில்நுட்பம்

14.1 பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளிலும் சேவை வழங்கும் முறைமைகளிலும்டிஜிட்டல்   தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் நன்மையை நாடு அனுபவித்துவருகின்றது. மின்சக்தி எரிசக்தி அமைச்சினால் பெற்றோலிய விநியோகத்திற்கு கியூஆர்(QR) முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமையின்நன்மைபயக்கத்தக்க விளைவுகள் அண்மையில் அவதானிக்கப்பட்டன. எனவே, தேவையான கொள்கைச் சூழல், சட்டங்கள்,  நிறுவனசார்  ஆதரவு மற்றும் வசதிகள் உள்ளடங்களாக  டிஜிட்டல்   தொழில்நுட்பத்  துறையை மேலும் மேம்படுத்தத்தேவை பற்றி ஆராய்வதற்கும்  அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் தொழிற்துறையிலுள்ள நிபுணர்களையும் தொடர்புடைய அலுவலர்களையும்  ஈடுபடுத்தி குழுவொன்றினை நியமிப்பதற்கும்நான் முன்மொழிகின்றேன்.

15. இலங்கையின் கனிய வளங்களை தேசிய அபிவிருத்திக்குப் பயன்படுத்தல்

15.1 இலங்கையில் காணப்படும் பெரும்பாலான கனிய வளங்கள் தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்பதற்காக பயன்படுத்தப்படுவது குறைந்த மட்டத்திலாகும். எனவே, அனைத்து கனிய வளங்களும் தேசிய அபிவிருத்திக்கு வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்துவதற்கு முடியுமான பொருத்தமான கொள்கையொன்றினை உருவாக்கி  செயற்படுத்துவதற்கு கைத்தொழில் அமைச்சு,  சுற்றாடல் அமைச்சு, புவிச்சரிதவியல்  மற்றும்  சுரங்கப் பணியகம், அரச தனியார் பங்களிப்பு தொடர்பான தேசிய முகவராண்மை  (NAPP)  மற்றும் உரிய நிறுவனங்களை உள்ளடக்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு முன்மொழிகின்றேன். இக்குழுவின் அறிக்கையானது மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

16.கருவா தொழிற்றுறைக்கான புதிய திணைக்களம்

16.1 கருவா உற்பத்தி ஏற்றுமதியானது பாரம்பரியமாக முதலிடம் வகிப்பதன் காரணமாக இத்துறையின் முன்னேற்றம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். இலங்கையின் கருவா உற்பத்திக்கு வெ​ளிநாட்டு சந்தையில் விசேட அடையாளமொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்ற வகையில் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை ஏற்றுமதி​ செய்வதனை மேலும் ஊக்குவித்​தல் வேண்டும். இதனால்  ​ கருவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிப்பதற்காக திணைக்களமொன்றினை கருவாச் செய்கை அதிகளவு இடம்பெறுகின்ற கரந்தெனிய பிரதேசத்தில் தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்காக ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

17. புதிய கருத்திட்டங்கள் / நி​கழ்ச்சித்திட்டங்களை மதிப்பீடுசெய்தல் திட்டம்

17.1 கடந்தகாலங்களில் இடம்பெற்ற பெரும்பாலான அபிவிருத்திக்கருத்திட்டங்கள் உரிய வகையில் இனம் காணல் மற்றும் ஒழுங்குமுறையில் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படாததினால்  பெரும்பாலான கருத்திட்டங்கள்/ நிகழ்ச்சித்திட்டங்களின் எதிர்பார்க்கப்பட்ட விளைவினை  அடைந்துகொள்ள முடியாது போனது. இதன் காரணமாக பல்வேறு கருத்திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு பெறப்பட்ட கடன் நிதியினை மீள் செலுத்துகையில் கருத்திட்டங்களினால் உரிய வருமானத்தினை  ஈட்ட முடியாமை காரணமாக  அரசாங்கம் வரியாக அறவிடுகின்ற வருமானத்திலிருந்து அதற்கான கொடுப்பனவினை செலுத்த வேண்டியுள்ளது. இது பொருளாதாரத்தினால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்குச்  சென்றதன் காரணமாக கடன் முகாமைத்துவ நெருக்கடிகளுக்கும் தேசிய மட்டத்தில் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

17.2 இதனால், எதிர்காலத்தில் ஆரம்பிக்கபடும் அனைத்து கருத்திட்டங்களும்/ நிகழ்ச்சித்திட்டங்களும்  உரிய பொறிமுறையொன்றின் கீழ், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியில்  பொருத்தமானவை என சாத்தியவள ஆய்வொன்றின்  மூலம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அவ்வாறு இனங்காணப்பட்ட கருத்திட்டம் / நிகழ்ச்சித்திட்டம் மாத்திரம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மதிப்பீட்டாய்வுக்குட்பட்டு, தேசிய  அபிவிருத்தி குழுவுக்கு (National Development Committee) சமர்பித்தல் வேண்டும். தேசிய  அபிவிருத்தி குழுவானது அரச மற்றும் தனியார்  துறையினைச் சேர்ந்த  ஐந்து ​விசேட நிபுணர்களைக் கொணடிருக்கும்​. இக்குழுவின் மூலம் அனைத்து கருத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இனங்காணப்பட்டு அவற்றை மீண்டும் சாத்தியவள ஆய்விற்குட்படுத்தி பொருளாதார ரீதியில் வினைத்திறன் மிக்கது என உறுதிப்படுத்தியதன் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்துவதற்கு பொருத்தமான கருத்திட்டங்கள் மாத்திரம் அரசாங்கத்திற்கு  சிபாரிசு செய்யப்படும்.

சுற்றுலாத்துறை

18. கடல்சார்  சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல்

18.1 சுற்றுலா பயணிகளை கவருவதை அதிகரிப்பதற்காக உலகில் அனேகமான நாடுகளின் பல்வேறு துறைகளின் புதிய நிகழ்ச்சித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.  எனினும், இலங்கையின் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு கடல்சார் சுற்றுலா  நிகழ்ச்சித்திட்டத்திற்காக இன்னும் போதுமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படவில்லை.  ஆகையினால்,  முதற் கட்டத்தில் கிழக்கு மாகாணம், தென் மாகாணம்  மற்றும்  மேல் மாகாணங்களில் கடலுடன்  தொடர்புபட்ட மூன்று  பிராந்தியங்களை இணங்கண்டு அப் பிராந்தியம்  தொடர்பில் செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இதன்கீழ்  தெரிவு செய்யப்பட்ட வலயங்களில்  ஆழமற்ற  கடல்களில் கடல்சார்  செயற்பாடுகளுடன் தொடர்புற்ற சுற்றுலாபயணிகளுக்குபாதுகாப்பான  வலயங்களை இனங்கண்டு அவற்றுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி  செய்தல், அனைத்து சிறிய  படகுகளை எடுத்து வருவதற்கும்அவற்றை நிறுத்துவதற்கும், சுழியோடுவதற்கான  உட்கட்டமைப்பு வசதிகளையும்  நிவர்த்தி  செய்தல், சுற்றுலா  பயணிகளுக்காக கடற்கரைகளை அண்மித்து சுகாதாரமான உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள்  போன்றவற்றை வழங்குதல்.

18.2 இச்செயற்பாடுகளுக்கு தேவையான நிதி சுற்றுலா  அபிவிருத்தி நிதியத்தின் மூலம்  வழங்கப்பட வேண்டும்.  இச்செயன்முறையினை  ஆரம்பிப்பதற்கு 2023 வரவுசெலவுத்திட்டத்திலிருந்து ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்.

பொதுக் கல்வி

19. பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை வழங்குதல்

19.1 நாட்டில் 10,155 பாடசாலைகளில் 1/3 பகுதி மாத்திரமே  போதுமான அணுகுவழி மற்றும் வேகத்துடன் கூடிய இணைய வசதிகளைக் கொண்டுள்ளன. பிந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய கல்விமுறை முன்னேற்றத்திற்காக  பாடசாலை முறைமைக்கு இணைய வசதிகளை வழங்குவது தவிர்க்க முடியாததாகும். குறிப்பாக, கிராமியப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை வழங்குவதற்கு அப்பிரதேசங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு தடைக் காரணியாக விளங்குகின்றது. ஆகையினால், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பங்களிப்புடன் இணைய வசதிகளையும் வழங்குகின்ற தனியார் நிறுவனங்களின் சமூகப்பொறுப்பு எண்ணக்கருவுடன் ஒருங்கிணைத்து தூரப்பிரதேசங்களில் அமைந்துள்ள 1000 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு இலவசமாக இணைய வசதிகளை வழங்குகின்ற சாத்தியப்பாடு ஆராயப்படும்.

20. கிராமிய பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்தல்

20.1 கிராமிய பாடசாலைகளில் காணப்படுகின்ற சுகாதார மற்றும்  துப்பரவேற்பாட்டு வசதிகள் போதுமானதாக இல்லை என்பது எமக்கு அறியக் கிடைத்துள்ளது.அதன் கீழ் அவ்வாறான சிறுவர்கள் கல்வி கற்கின்ற 139 மாகாணப் பாடசாலைகளும் 23 தேசிய பாடசலைகளையும் போன்று மிகக் குறைந்த வசதிகளைக் கொண்ட கிராமியப் பாடசாலைகளில் துப்பரவேற்பாட்டு வசதிகளை  விசேடமாக முறையான நீர் வசதிகளைக் கொண்ட மலசலகூடங்களை  நிர்மாணிப்பதற்காக அல்லது தற்போது  காணப்படுகின்ற மலசலகூடங்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்குநிதி ரூபா 200 மில்லியன் ஏற்பாட்டை வழங்குகிறேன்.

உயர் கல்வி

21. அரச பல்கலைக்கழக அனுமதியை திறமை அடிப்படையில் அதிகரித்தல்

21.1 அரச பல்லைக்கழகங்களுக்கு  மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் போது  கலைத் துறைக்காக மாத்திரம் தீவு முழுவதற்குமான மட்டத்தில் திறமை அடிப்படையில் அனைத்து  மாணவர்களினதும்  தெரிவு இடம் பெறுகின்றது.  இருந்தும் வணிக, தொழில்நுட்ப,  விஞ்ஞான  மற்றும் கணித  பாடத்துறைகளுக்கான  மாணவர்களை உட்சேர்க்கின்ற போது  திறமை அடிப்படையில்  சேர்த்துக்  கொள்கின்றவர்களின் தொகை 40 சதவீதம்  மாத்திரமே ஆகும்.  இந்நிலைமையில், அதிக திறமையினைக் காண்பித்த  ஏறாளமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கான சந்தர்ப்பம் கிடைக்காததனால், அவர்கள்  கடுமையான இன்னல்களுக்கும் அநீதிக்கும் உட்படுகின்ற அதேவேளை, பொருளாதார அபிவிருத்திக்காக அவர்களிடமிருந்து  கிடைக்க வேண்டிய பங்களிப்பு   இல்லாமல் போகின்றது.  ஆகையினால், இந்நிலைமையினை சீரமைப்பதற்கு முறையான செயன்முறை ஒன்றினை அறிமுகப்படுத்துவது அவசியமாகியுள்ளது.  அதற்கமைய, 2023/2024 தொடக்கம் மூன்று  வருட  காலப்பகுதியினுள் தற்போது  திறமை அடிப்படையில் அரச பல்கலைக் கழகங்களுக்கு சேர்த்துக்  கொள்ளப்படுகின்ற  மாணவர்களின் சதவீதத்தை 40 சதவீதத்திலிருந்து  50சதவீதம்வரை படிப்படியாக அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றேன். கல்வி அமைச்சின் மூலம் அரச பல்கலைக்கழகத்திற்கு  சேர்த்துக் கொள்ளப்படும் முறைமையினைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.  மூன்று வருடங்களின் பின்னர், இம்முறைமை மீளாய்வு  செய்யப்படுதல் வேண்டும்.

22. வைத்தியர்களுக்கான பட்டப்பின்படிப்பு வசதிகள்

22.1 கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பட்டப்பின் படிப்பு  கற்கை செயற்பாடுகளை  அதிகளவான வைத்தியர்களுக்கு  விரிவுபடுத்தும் வகையில் பயிற்சியினை வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்படல்வேண்டும். பேராதனை,  உருகுனை,  யாழ்ப்பாணம்  போன்ற   பல்கலைக்கழகங்களில்பட்டப்பின்படிப்பு  நிறுவனங்களை தாபிப்பதற்குமுன்மொழிகின்றேன். அதற்கான  சட்டரீதியான ஏற்பாடு மற்றும்  நடைமுறைகளைத்  தயாரிப்பதற்கு  இந்தபல்லைக்கழகங்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதற்கமைய,இத்திட்டத்தினைச் செயற்படுத்துவதற்காக ரூபா60 மில்லியனை ஒதுக்கீடு  செய்கின்றேன். அதேபோன்று,வைத்தியர்களுக்கு பட்டப்பின்படிப்பு கற்கைகளை உள்நாட்டிலேயே அறிமுகப்படுத்தும் பொருட்டு அதற்கானதேசிய  கொள்கைஒன்றினை தயாரிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

23. தர உத்தரவாத மற்றும் சான்றுப்படுத்தல் சபை

23.1 பல்கலைக்கழகங்களில் காணப்படும் பட்டப்படிப்பு கற்கைகளின் தரம் மற்றும் அங்கீகாரம் தொடர்பில்கண்டறிவதற்கு நிலைமை சான்றிதல் மற்றும் தரஉத்தரவாத மற்றும் அங்கீகார சபையினை (Quality Assurance and Accreditation Board)தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன்.  இதன்கீழ்  அனைத்து  பட்டப்படிப்பு கற்கை நெறிகளையும் சான்றுப்படுத்துவதற்கு  எதிர்பார்க்கப்படுகின்றது.  அதற்கமைய  தேவையான சட்ட ஏற்பாடுகளை  தயாரிப்பதற்கு  உயர்கல்விக்கு  பொறுப்பான அமைச்சு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நோக்கத்திற்காக ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றேன்.

24. உயர்தர  தகைமை​பெற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்கள்

24.1 இலங்கை சுதந்திரம்பெற்று 75 வருடங்கள் பூர்த்தியினைக் குறிக்கும் முகமாக  2022 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட 75 மாணவர்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட துறைகளில் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு 75 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அதற்கமைய​, தொடர்புடைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தெரிவுசெய்தல். அவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுதல், மாணவர்களைத் தெரிவு செய்தல், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் போன்ற விடயங்கள் மீது அவதானம் செலுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்   தயாரிக்கப்பட  வேண்டும்.  இதற்காக ஏற்படும் செலவினம் சனாதிபதி நிதியத்தினால் மேற்கொள்ளப்படவேண்டுமென முன்மொழிகின்றேன்.

24.2 இதற்கு மேலதிகமாக, அரசாங்க பல்கலைக்கழகங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடநெறிகளில் சிறந்த செயலாற்றுகை யினைக் கொண்ட 75  பட்டதாரிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பு கற்கைகளை தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட  இளைஞர்கள் தமது பட்டப்பின் படிப்புக் கற்கை களை  நிறைவுசெய்ததன்  பின்னர் நாட்டின் அபிவிருத்திக்கு  பங்களிப்புச்செய்தல் வேண்டும். 

25. புதிய மருத்துவ பீடத்தினை தாபித்தல்

25.1 தற்போது இலங்கையின்   11 பல்கலைக்கழகங்கள் மருத்துவ பீடங்களைக் கொண்​டுள்ள அதேவேளை அப்பீடங்களுக்காக  2020 – 2021 கல்வி ஆண்டுகளுக்காக 2001 மருத்துவ மாணவர்கள்  சேர்த்துக்  கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இந்த எண்ணிக்கையினை அதிகரிப்பதற்குஊவ வெல்லஸ்ஸ  பல்கலையில்  மருத்துவ பீடத்தினை புதிதாக நிறுவுவதற்கு முன்மொழிகின்றேன். இந்த மருத்துவ பீடத்தினை நிறுவுவதற்காக ரூபா 200 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

26. இலங்கை வரலாற்றைக் கற்பதற்கு தனியான நிறுவனத்தினை தாபித்தல்

26.1 இலங்கையின் வரலாறு தொடர்பில் ஆய்வுநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிறுவனமொன்றினை நிறுவுவதற்கு முன்மொழிகின்றேன். இதற்காக  ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

மறுசீரமைத்தல்

27. அரசாங்க சேவையை மறுசீரமைத்தல்

27.1 தற்பொழுது பல்வேறு  அரசாங்க நிறுவனங்களில்  1,450,000 அரச ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்த  வகையில் அவர்களது  சம்பளங்கள் மற்றும்  வேதனங்களுக்காக அரசாங்க வருமானத்தில்  பெரும்பகுதி  செலவிடப்படுகின்றது. எனவே,  அபிவிருத்தி  நோக்கங்கள் உள்ளடங்களாக ஏனைய  பொது நோக்கங்களுக்கு  அரச  வளங்களை ஒதுக்கீடு செய்வது சவாலான ஒரு  விடயமாக  மாறியுள்ளது. எனவே,  தற்பொழுது  காணப்படும்  தேவை உள்ளடங்களாக  அரசாங்க சேவையின்  அனைத்து  விதமான நோக்கங்களையும் மீளாய்வு செய்வதுடன் தேவையான  மறுசீரமைப்புகள்  உள்ளடங்களாக  பரிந்துரைகளை வழங்குவதற்கும் சனாதிபதி  ஆணைக்குழுவொன்றினை நியமிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.

28. வரி விதிப்பனவு மீதான சனாதிபதி  ஆணைக்குழு

28.1 ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அரச வருவாயாக வரியூடாக ஈட்டப்படும் வருமானம் மிகவும் குறைவான வீதத்தில் அறவிடப்படுவதனால்  சுகாதாரம். கல்வி மற்றும் வேறு முக்கிய துறைகளுக்காக மூலவளங்களை ஒதுக்கீடு  செய்வது  இன்னல்களுக்குள்ளாகியுள்ளது.  அதற்கமைய  எதிர்வரவுள்ள சில ஆண்டுகளில் அரச வருவாயை படிப்படியாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது.  அதற்கமைய தற்போது  அரசாங்க வருவாயினை சேகரிக்கின்ற  நிறுவனங்கள் மத்தியில் செயலாற்றுகை, ஒருங்கிணைத்தல் மற்றும்  வரிக்கட்டமைப்பு என்பவற்றில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து  பரிந்துறைகளைப்  பெற்றுக்கொடுப்பதற்கு  வரி விதிப்பு தொடர்பான சனாதிபதி  ஆணைக்குழுவினை தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன்.ஆணைக்குழுவானது அரசாங்க வருமானத்தை முகாமைசெய்வதற்கான மத்திய நிறுவனமொன்றினை உருவாக்குவதற்கான தேவையினை பரிசீலனைசெய்யும்.

29. இலத்திரனியல் கொடுப்பனவுமுறைமை

29.1 அரசாங்க  சேவை நிறுவனங்களினூடாக சேவைகளை வழங்குகின்ற போது சேவையைப்  பெற்றுக் கொள்பவர்கள்  மூலம்  கொடுப்பனவுகளை  மேற்கொள்ள வேண்டி ஏற்படுமாயின்  அத்தகைய அனைத்து  கொடுப்பனவுகளையும்,  பயன்பெறுநர்களுக்கு  நிதியை மாற்றல் செய்யும்போது  இலத்திரனியல் ஊடாக அத்தகைய கொடுப்பனவுகளை மேற்கொள்வதை  2024.03.01 ஆந் திகதி தொடக்கம்   கட்டாயமாக்குவதற்கு  முன்மொழிகின்றேன். அதற்கமைய சகல அரச நிறுவனங்கள் மூலமும்  இணையவழி மூலமாக  அத்தகைய சேவைகளைப்  பெற்றுக் கொள்வதற்கும் முறைமையொன்றினை தயாரிப்பதற்கும், தேவையான சட்ட  மற்றும்  ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்துவதற்கும்  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.  இந்நோக்கில் தற்போது அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில்  சேவை ஆற்றுகின்ற  தகவல்  தொழில்நுட்ப அலுவலர்களின்  சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு  நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும்.  இக் கொள்கையினை செயற்படுத்துவதற்காக ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்கின்றேன்.

30. தரவுப்பாதுகாப்பு அதிகார சபையினை  உருவாக்குதல்

30.1 எமது டிஜிட்டல் பொருளாதாரத்தினை நாம்  அபிவிருத்தி செய்கின்றோம்  என்ற வகையில் டிஜிட்டல் மயப்படுத்தலின் மோசமான தாக்கத்திலிருந்து எமது மக்களின் தனிப்பட்ட விடயங்களைப்  பாதுகாக்கும்  வகையில் தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்துவதனை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத் தேவை காணப்படுகின்றது.  அரசாங்கம் 2022 இன் 09 ஆம் இலக்க தரவுப் பாதுகாப்புச் சட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு  கடமைப்பட்டு உள்ளதுடன் 2023 இல் தரவுப் பாதுகாப்பு  அதிகாரசபை ஒன்றினை தாபிப்பதற்கு  நடவடிக்கை  எடுக்கப்படும். தனிப்பட்ட தரவுகளின் முறையான முகாமையினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி, பிணையங்கள் மற்றும்  பரிவர்த்தனை ஆணைக்குழு, இலங்கைத் தொலைத் தொடர்பு  ஒழுங்குபடுத்தல்  ஆணைக்குழு  மற்றும் பொருளாதாரத்தின் ஏனைய  துறைகள் என்பவற்றுடன் இணைந்து புதிய ஒழுங்குபடுத்துநர்  நிறுவனம் செயற்படும்.

தனியார்துறை ஊழியர்களுக்கான காப்புறுதித்திட்டம்

31. தனியார்துறை ஊழியர்களுக்கு காப்புறுதி  காப்பீடைப்  பெற்றுக் கொடுத்தல்

 31.1 தனியார் துறையில் தொழில் புரிந்து பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தொழிலினை இழக்கின்றவர்களின்  எண்ணிக்கை  அதிகரிக்கின்ற போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.     தற்போது நிலவுகின்ற  பொருளாதார நெருக்கடிகளுடன் இது மிகவும் மோசமான சமூகப் பிரச்சினையொன்றாக உருவெடுத்துள்ளதனால் தொழிலினை இழந்து மீண்டும்  தொழில் ஒன்றுக்கு செல்லும் வரையான  காலப்பகுதிக்கு   உயர்ந்த பட்சம்  மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு மாதாந்தக் கொடுப்பனவு ஒன்றினைப்  பெற்றுக்கொடுக்க  இயலுமான   விதத்தில்    காப்புறுதி  காப்பீட்டினை  பெற்றுக் கொடுப்பதற்கும் அதற்கென  காப்புறுதி   நிதியமொன்றினை நிறுவுவதற்கும் முன்மொழிகின்றேன்.

31.2 அதேபோன்று, அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படுகின்ற அக்ரஹார மருத்துவ காப்புறுதித் திட்டத்தின் கீழ்  அதிகமானோர் நன்மை அடைகின்ற அதேவேளை  தனியார் துறையில் வேலைசெய்கின்ற ஊழியர்களுக்கும்  சுகாதார மருத்துவக் காப்புறுதியினைப்பெற்றுக் கொடுப்பதற்கும் முன்மொழிகின்றேன்.

31.3 தனியார் துறை ஊழியர்களுக்காக தொழில்தருநர்கள் ஊழியர்  நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கு  பங்களிப்பு  வழங்குகின்றனர்  ஆதலினால்  ஊழியர் நம்பிக்கைப்  பொறுப்பு நிதியத்தினால்  எவையேனும் நிவாரணங்களைப்  பெற்றுக்கொடுப்பது  கட்டாயமான பொறுப்புமாகும்.   அதற்கமைய  ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினரால்  முன்மொழியப்பட்ட சுகாதார மருத்துவ மற்றும் காப்பீட்டுக்கு  ஒதுக்கீடொன்றினை  மேற்​கொள்வது உசிதமானதாகும்.

31.4 அதற்கமைய ஊழியர் நம்பிக்கைப்  பொறுப்பு நிதியத்தின் கீழ்  இப் புதிய  முறைகள் இரண்டையும் உள்ளடக்கும்  ஊழியர் பொறுப்பு நிதிய சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும்.

உணவுப் பாதுகாப்பு

32. உணவுப் பாதுகாப்புக்கான இலத்திரனியல்  முறைமை

32.1 உணவுப் பாதுகாப்புடன்  தொடர்புடைய நடவடிக்கைகளை  திட்டமிடுவதற்கும்   நடைமுறைப்படுத்துவதற்கும்  இற்றைப்படுத்தப்பட்ட தரவு முறைமையினை  பேணுவது அத்தியவசியமாகும்.  அதற்கமைய வீட்டு அலகுகளுடன்  தொடர்புடைய விவசாய மற்றும்  உற்பத்தி  பற்றிய தகவல்களை இணையவழி ஊடாகப்  பெற்றுக் கொண்டு  அதற்கேற்றவாறு தேசிய உணவு பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம்   திட்டமிடப்பட வேண்டும்.  இந்நிகழ்ச்சித்திட்டமானது   உணவுப்  பாதுகாப்பு  மற்றும்  ஊட்டச்சத்து    தொடர்பான பிரிவினூடாக   செயற்படுத்தப்படுதல்வேண்டும். 

33. உள்நாட்டு மீன்பிடித் துறையினை விருத்திசெய்தல்

33.1 பொது மக்களின் ஊட்டச்சத்து அளவினை மேம்படுத்தும் பொருட்டு  அதிகரித்த மீன் உற்பத்தியினை  பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை  விரிவுபடுத்தல்  வேண்டும்.   இதன் கீழ் உள் நாட்டு நீர் நிலைகளில் நன்னீர்  நீர் உற்பத்திக்காக வசதிப்படுத்துவதன் கீழ் தற்போது கிடைக்கப்பெறுகின்ற மீன் குஞ்சி உற்பத்தி நிலையங்களின் இயலளவினை விருத்தி செய்வதற்காக ரூபா 100 மில்லியன் ஒதுக்கீடு செய்கின்றேன்.

அரசாங்க வருமானத்தினை  அதிகரித்தல்

34. வரிக் கொள்கை  முன்னெடுப்புகள்

34.1 அரசாங்கத்தின்  வருமானப் பற்றாக்குறை காரணமாக இன்று நாம் பல்வேறு சவால்களை  எதிர்கொள்கின்றோம் என்ற வகையில், அரசாங்க வருமானத்தினை அதிகரிக்க வேண்டிய அவசியத்தினை  தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்காது.  2021 இல் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 சதவீதமாக குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. இது உலகில்  ஆகக் குறைந்த வருமானங்களில் ஒன்றாகும். 2019 இன்  இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி விலக்களிப்புகளை திருத்துகின்ற அதேவேளை, இன்று காணப்படும் நிலைமையினை  சீர்படுத்தும் வகையில் 2022 மே 30 ஆந் திகதி, 2022 ஆகஸ்ட் 30 ஆந் திகதி மற்றும் 2022 ஒக்டோபரில் உள்நாட்டு  இறைவரிச் சட்டமூலம்  சமர்ப்பிக்கப்பட்டபோது ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் அரசாங்கம் வருமான முன்னெடுப்புகளை  அறிமுகப்படுத்தியது. வருமான முன்மொழிவானது, வரிக் கொள்கை  இடைவெளி மற்றும்    வரிச் சலுகைகளைக்  குறைத்தல் என்பவற்றை ஒழுங்குபடுத்தும்  அதேவேளை வருமானவரி மற்றும் பெறுமதிசேர் வரி என்பனவற்றில் முக்கிய  மாற்றங்களையும் உள்ளடக்கியுள்ளது.

34.2 இந்த வரி மறுசீரமைப்பினை செயற்படுத்தலானது, 2023 இல் வருமானத்தினை அதிகரிப்பதற்கு உதவுவதுடன் எதிர்காலத்தில் அரசாங்கச் செலவினத்தினை அதிகளவு குறைக்கும் வகையில் செலவு மிக்க நாணய நிதியளிப்பு (பணம் அச்சிடுதல்) என்பதிலிருந்து அப்பால் நகர்த்த முடியுமாக  இருக்கும். அத்துடன் அரசாங்க செலவிடல் மற்றும் ஊழலுக்கு எதிரானசெயற்பாடுகளில் வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம்  வரிக்கொள்கை நடவடிக்கைகளை அரசாங்கம்  முன்னெடுத்துள்ளது.

34.3 மின்சாரம், போக்குவரத்து மற்றும் எரிபொருள் உள்ளடங்களாக பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்ட பெறுமதிசேர் வரி விலக்களிப்பு  காரணமாக இழக்கப்பட்ட வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கு அதிகமானது என மதிப்பீடு  செய்யப்பட்டுள்ளது.  இந்த வகையில் மீளாய்வின் பின்னர் சில விலக்களிப்புகளை நீக்குவதற்கு முன்மொழியப்படுகின்றது.  சில விலக்களிப்பு களை  நீக்குவதற்கு  2023 ஏப்பரல் 01 ஆந் திகதியிலிருந்து   பெறுமதிசேர் வரிச்  சட்டத்திற்கான திருத்தம் மேற்கொள்ளப்படும்.

34.4 சில அரச தொழில்முயற்சிகள் தமது ஊழியர்களது  உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE)  மற்றும் முன்கூட்டிய தனியாள் வருமான வரி (APIT)  பொறுப்புக்களை தொடர்ந்து  செலுத்தி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் பொது தொழில் முயற்சிகள் குழுவிலும் அதேபோன்று கணக்காய்வாளர் நாயகத்தினாலும் கேள்விக்குட்படுத்தப்பட்டது. இந்தவகையில் அத்தகைய வரியானது,நிறுவனத்தின் செலவினமாக இருக்க முடியாது என்பதுடன் தனிப்பட்ட வேதனாதிகள் கூட்டு  உடன்படிக்கைகளின் கீழ் செலுத்தப்பட்டுள்ளன  என்ற  வகையில் 2023 சனவரி  01 முதல் அத்தகைய கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

34.5 பீடி மீதான வரி

அ. பீடி  தொழிற்றுறையினைஒழுங்குபடுத்துவதற்கும்   பீடி  பாவனையிலிருந்து  மக்களை தூரமாக்குவதற்கும், பீடி ஒன்றுக்கு  2 ரூபாவினை வரியாக விதிப்பதற்கு  நான் முன்மொழிகின்றேன்.  இதற்கு மேலதிகமாக சான்றிதழ்  மற்றும் உரிமங்களை  பெறுவதற்கான ஏனைய செலுத்தவேண்டிய கட்டணங்களும் அதிகரிக்கப்படும்.

34.6 துணைத் தீர்வைகளை  (Para tariffs) இல்லாதொழித்தல் 

அ. தயாரிப்பு  தொழிற்றுறையினை ஊக்குவிப்பதற்கும் சர்வதேச வர்த்தகத்தில் காணப்படும்  தடைகளை நீக்குவதற்கும் விவசாயம்  உட்பட உள்நாட்டுக் கைத்தொழில்கள் மற்றும் கருத்திட்டங்களுக்குத் தேவையான ஊக்கிவிப்பு மற்றும் வசதிகளை வழங்குவதற்கு, முலப்பொருட்கள் இடைநிலைப் பொருட்கள், சில  விவசாய அடிப்படைப்  பொருட்கள் தவிர்ந்த மூலதனப்  பொருட்களுக்கு ஏற்புடைய செஸ் வரியானது  2023 சனவரி 01 இலிருந்து மூன்று (03) வருடங்களில் நீக்கப்படும். துறைமுகம் மற்றும்  விமான நிலைய அபிவிருத்தி அறவீடு  5 வருட தவணை அடிப்படையில் கட்டம் கட்டமாக இல்லாதாக்கப்படும். அதற்கமைய  முன் மொழியப்பட்ட வரியினை நீக்குவது கட்டம் கட்டமாக சரி செய்யப்படுவதற்காக  2023 சனவரி 01 இலிருந்து தற்போது அறவிடப்படும் சுங்கத் தீர்வைவீதமான 0%,   10% மற்றும் 15% ஆகிய தீர்வை வீதங்களை 0%,  15% மற்றும்   20%ஆக திருத்தம்  செய்கின்றேன்.  இதற்கு சமாந்தரமாக  வர்த்தக சரிப்படுத்தல் நிகழ்ச்சித்திட்ட (Trade adjustment programs)அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆ. எவ்வாறாயினும்,  விவசாயத்தின்  அடிப்படையில்  கொண்ட  பெறுமதி சேர்த்தல்களின் அடிப்படையிலான கைத்தொழிலாளர்களுக்கு  தொடர்புடைய செஸ்  வரிகளுக்கு தடைகள் இல்லாத விதத்தில்   வரிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

35வரியல்லா வருமானம்

35.1      அரசிறை திரட்சிப்படுத்தல்  செயன்முறையில் வரியல்லா வருவாயின் அதிகரிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகையினால், கட்டணங்கள் மற்றும் அறவீடுகளை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு  நான் முன்மொழிகின்றேன்.  எனினும், 2020,  2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் மற்றும்  அறவீடுகள் இம்முன்மொழிவு மூலம் திருத்தம் செய்யப்படாது.

35.2இதே தொணியில், கடவுச்சீட்டு,  வீசா மற்றும் ஏனைய அறவீடுகள் மீது  குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

35.3      அரசாங்க நிறுவனங்களினால் அறவிடப்படுகின்ற மற்றும் சேகரிக்கப்படுகின்ற உரிமத்தொகை, வாடகை மற்றும் ஏனைய வரியல்லா வருவாய்கள் பற்றி  ஆராய்ந்து பொதுத் திறைசேரிக்கு  பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு குழுவொன்றினை நியமிப்பதற்கு நான் மேலும் முன்மொழிகின்றேன்.

35.4      வருவாய் சேகரிப்பை திரட்டு நிதியத்திற்கு அனுப்புவதில் தாமதம்  காரணமாக ஏற்படும் கணிசமான நிதிச் செலவினைக்  குறைப்பதற்கான 2023 சனவரி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சுக்கள் திணைக்களங்கள் மூலமான அனைத்து  வருவாய் மற்றும் கிடைப்பனவு சேகரிப்புகளை பொதுத் திறைசேரிக்கு  நேரடியாக நாளாந்தம்  மாற்றல் செய்வதற்கு முன்மொழிகின்றேன். இது தொடர்பில், பொதுத் திறைசேரியானது காலக்கிரமத்தில் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கும்.

36. வரி நிர்வாகம்

36.1 வரிக் கொள்கை வழிமுறைகள் பற்றிய அண்மைய அறிவிப்புகளானவை பரந்த வரித்தளம்,  சிறந்த இணங்குவிப்பு மற்றும் கடுமையான அமுலாக்கம் என்பனவூடாக வரி நிர்வாக வழிமுறைகளுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்லவேண்டும்.  அதற்கமைய, தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள் ஒழுங்குமுறைப்படுத்தல்கள், செயன்முறை மேம்படுத்தல்கள் மற்றும் இறைவரித் திணைக்களம், இலங்கைச் சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பன தொடர்புபட்ட மனித வளங்களில் முதலிடுதல்  என்பனவூடாக வரி நிர்வாக வழிமுறைகள் மேம்படுத்தப்படும்.

36.2 ஒவ்வொரு18 வயதுக்கு மேற்பட்டவரும் வரிக் கோவையொன்றினை ஆரம்பிப்பது  முதற்படியொன்றாக இருக்கின்ற  அதேவேளை  கோவைகளை ஆரம்பித்தவர்களில் பலர்  வரியற்ற அடிப்படைஅளவுக்கு கீழே இருப்பர். ஆகையினால், உயர் வருமானம் உழைக்கின்றவர்களை குறிப்பாக இனங்கண்டு  அவர்களை வரி செலுத்தச் செய்கின்ற வழிமுறைகளை  அறிமுகப்படுத்துவது முக்கியமானதாகும்.  இது தொடர்பில் வரி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கு இணைப்புVIஇல் முன்மொழிவுகளை ஆக்குகின்றேன்.

செலவின முகாமைத்துவம்

37. செலவினத்தை வினைத்திறன்மிக்கதாக முகாமைசெய்வதற்கான பொறுப்பு

37.1 அரசிறை திரட்சிப்படுத்தல் செயன்முறையை வலுப்படுத்துவதற்கு முறையான செலவின முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டி அவசியமில்லை.  அது வருவாயினை அதிகரிப்பதற்கான முயற்சிகளுடனும் இசைந்ததாக இருக்க வேண்டும்.

37.2 இடைக்கால வரவுசெலவுத் திட்டமானது பிணிக்கின்ற அரசிறை விதிகளையும் அத்துடன் செலவினங்களை பரிசோதனை செய்வதற்கான பரிசோதனை நாயகம் ஒருவரின்  நியமனத்தையும் கூட்டிணைக்கின்ற புதிய அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டத்தை அறிமுகப்படுத்தல் உள்ளடங்கலாக பல முன்மொழிவுகளை அறிமுகப்படுத்தியது,  இது அண்மைய எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.இதற்கு மேலதிகமாக, அரசாங்கச் செலவினத்தின் கண்டிப்பான கட்டுப்பாட்டினை உறுதிசெய்வதற்கு பல எண்ணிக்கையான சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

38. தேசிய தொழிற்பாடுகள் நிலையமொன்றினைத் தாபித்தல்

38.1 நாட்டின் அனைத்து அபிவிருத்தி தலையீடுகள் பற்றிய நடைமுறைப்படுத்தல் பிரச்சனைகளை கண்டறிந்து, தோன்றுகின்ற பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்ப்பதற்காக நிதி அமைச்சின் கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்பு திணைக்களத்தின் கீழ் தேசிய தொழிற்பாடுகள் நிலையம் ஒன்றினைத் தாபிப்பதற்கு இது பொருத்தமான நேரமாகும்.

38.2 தேசிய தொழிற்பாடுகள் நிலையத்தின்  வினைத்திறன​மிக்க மற்றும் செயற்றிறன்வாய்ந்த தொழிற்பாட்டுக்கு ஆதரவளிப்பதில் தீர்மானம் மேற்கொள்வதற்காக இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களையும் தரவுகளையும் பெற்றுக்கொள்வதற்கு துணையளிக்கும் கருவியாக தேசிய தொழிற்பாடுகள் நிலையத்தினுள் அனைத்தையும் உள்ளடக்கிய  இணையத்தளம் அடிப்படையிலமைந்த தேசிய அபிவிருத்தித் தகவல் முறைமையொன்றினை தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

39. ஆயுதப்படை ஆளணி முன்கூட்டியே ஓய்வுபெறுவதற்கு அனுமதித்தல்

39.1 அவ்வாறு செய்வதற்கு  அவர்கள் விரும்புவார்களாயின், விசேட வகை தவிர்ந்த  ஆயுதப்படை ஆளணியை  18 வருட சேவையின் பின்னர்  ஓய்வுபெற அனுமதிப்பதற்கு முன்மொழிகின்றேன். உற்பத்தித்திறன் வாய்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களை இயலச்செய்யும் விதத்தில் தேவையான பயிற்சியை அவர்களுக்கு வழங்குவதற்கு  வழிமுறைகள் எடுக்கப்படும்.

40. அரச ஊழியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள்

40.1 அதிகரித்த போக்குவரத்துச் செலவு,  மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்கள் அத்துடன் உயர்வான  பணவீக்கம் என்பன காரணமாக மாதாந்தக் கொடுப்பனவு மீதான தமது செலவினத்தை முகாமைசெய்வதற்கு அரசாங்க ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும்  இக்கட்டான நிலைமையில் இருக்கின்றனர் என்பதை நான் நன்கு அறிவேன். 

40.2      மேலும்,  அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வழிமுறைகளின் விளைவாக பொருளாதார மீட்சி காரணமாக சுமார்  ஒரு வருடத்தில் அரசாங்க வருவாய் அதிகரிக்குமென  எதிர்பார்க்கின்றேன்.  அதே சந்தர்ப்பத்தில்  அரசாங்க துறையினை உகப்பான மட்டத்திற்கு மறுசீரமைப்பதற்கான  முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமாகவிருக்கும்

அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சி மறுசீரமைப்புகள்

41. அரச தொழில்முயற்சிகளை மீள்கட்டமைத்தல்

41.1 நிதியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த  அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளை மறுசீரமைப்பதற்கான அவசியம் கடந்த 6 மாத காலப்பகுதியில் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டன. இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் பொறுப்புளிக்கப்பட்டவாறு அரசக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை மறுசீரமைக்கின்ற  குறிப்பான பணியுடன் நிதி அமைச்சில் தற்போது பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது.

41.2 தொடக்கத்தில், ஶ்ரீ லங்கன் எயாலைன்ஸ், ஶ்ரீ லங்கா ரெலிகொம்,  கொழும்பு ஹில்டன்,  வோட்டேர்ஸ் எட்ஜ்  மற்றும் அதன் துண​நிறுவனங்களுடன் சேர்த்து  இலங்கை காப்புறுதிக்  கூட்டுத்தாபனம்  என்பவற்றை உரிமமாற்றம் செய்வதற்கு வழிமறைகள் எடுக்கப்படும்.  இதன் பெறுகைகள் நாட்டின்  வெளிநாட்டு செலாவணி ஒதுக்குகளை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

41.3      அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளில் தொழில் அளவுசார்  ஆதாயத்தையும் தொழில் பன்முகப்படுத்தல் வினைத்திறனையும் அத்துடன் ஏனைய நிதியிடல் நன்மைகளையும் அடைந்துகொள்ளும் எதிர்பார்க்கையுடன் உபாய ரீதியான தலையீடுகள் மேற்கொள்ளப்படும். ஆகையினால் பின்னோக்கிய, முன்னோக்கிய அல்லது கிடையான ஒருங்கிணைப்பின் வாயிலாக ஒரேதன்மையுள்ள  வியாபாரங்களை ஒருநோக்காக நிரைப்படுத்த முன்மொழிகின்றேன். 

41.4 பாரிய ஏற்றுமதி வருவாய்களை கொண்டுவருகின்ற இரத்தினக்கல் தொடர்புபட்ட கைவினைஞர்களுக்கு சிறந்த தரத்திலான சேவைகளையும் வினைத்திறனையும் வழங்கும் பொருட்டு இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் ஒன்றிணைக்கப்படும். தொழிற்றுறை பங்குபற்றுநர்களின் நன்மைக்காக இரத்தினக்கல் விற்பனைநிலையம் (Gem Zone) ஒன்றினை உருவாக்குவதற்கான சாத்தியப்பாடுகளை அரசாங்கம் ஆராயும்.

படுகடன் முகாமைத்துவம்

42. தெரிவுசெய்யப்பட்ட அரசதொழில்முயற்சி படுகடனை அரசாங்க ஐந்தொகைக்கு எடுத்துச்  செல்லல்

42.1 தெரிவுசெய்யப்பட்ட அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளின் ஐந்தொகைகளை வலுப்படுத்துவதன் பாகமாக, இலங்கை மின்சார  சபை இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமான சேவைகள் (ஶ்ரீ லங்கா கம்பனி)  என்பவற்றின் படுகடன்களாக முன்னர் வகைப்படுத்தப்பட்டிருந்த அரசாங்கத்திற்கான சீன எக்சிம்  வங்கியிடமிருந்து கிடைத்த கடன்கள் 2022 டிசெம்பர் இறுதியளவில் மத்திய அரசாங்க படுகடன்களாக இனங்காணப்படும். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்  உத்தரவாதம் அளிக்கப்பட்ட வெளிநாட்டுச்  செலாவணி படுகடனும் 2022 டிசெம்பர் இறுதியளவில் மத்திய அரசாங்கப் படுகடனாக இனங்காணப்படும்.

நிதியியல் துறை

43. புதிய நிதியியல் சொத்து முகாமைத்துவ கம்பனிகள் சட்டம்

43.1 வங்கிகளும் நிதிக் கம்பனிகளும் அவற்றின் செயலாற்றமற்ற பெறுமதியிழந்த சொத்துக்களை வேறுபடுத்தி,  சொல்லப்பட்ட சட்டத்தின் கீழ் நிறுவப்படுகின்ற சொத்து முகாமைத்துவ கம்பனியொன்றுக்கு கைமாற்றுவதற்கு அவற்றை இயலச்செய்வதற்கு நிதியியல் சொத்து முகாமைத்துவ கம்பனிகள் சட்டத்தின்கீழ் புதிய சட்டவாக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். இது  பாதிக்கப்பட்ட நிறுவனமொன்றிலிருந்து வராக்கடன்களின் விரைவான அகற்றலினை உருவாக்குவதன் மூலம் நிதியியல் நிறுவனங்களின் தீர்மானச் செயன்முறையினை சுமூகமாக்கும்.

44. நுண்நிதி, கொடுகடன் ஒழுங்குபடுத்தல்  அதிகாரசபையினைத்தாபித்தல்

44.1 முறைசாரா பணம் கடன் வழங்குநர்கள்,  இலங்கையில் உள்ள ஏதேனும் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபையினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுதோ அல்லது மேற்பார்வேசெய்யப்படுவதோ அல்ல. ஆகையால்,  நிதி அமைச்சிடமிருந்தும் இலங்கை மத்திய வங்கிகளிலிருந்தும்  பதவிவழி பிரதிநிதித்துவத்துடன் நுண்பாகநிதி மற்றும் கொடுகடன் ஒழுங்குமுறைப்படுத்தல் அதிகாரசபைஒன்றைத் தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன். முன்மொழியப்பட்ட அதிகாரசபையானது முன்பாகநிதி வாடிக்கையாளர்களினதும் பணம் கடன் வழங்கல்  தொழில்களினதும்  பாதுகாப்பை உறுதி செய்கின்ற அதேவேளை ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களின் மூலம் இலங்கை  கொடுகடன் தகவல் பணியகத்திற்கு அறிக்கையிடும் தேவைப்பாட்டை  அவசியப்படுத்தும். 

45. நீல மற்றும் பசுமை நிதியிடல் இடவசதி

45.1 கௌரவ சபாநாயகர் அவர்களே, சுற்றாடல் நட்புமிக்க பல சொத்துக்களை கடந்த காலத்தில் நாடு உருவாக்கியுள்ளதுடன் வளர்ச்சியடைகின்ற நீல மற்றும் பசுமை நிதியிடல் வசதிக்கான பெறுவழிக்கு சட்ட ரீதியான பெறுமதியினை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. இலங்கை, பல எண்ணிக்கையான சர்வதேச உடன்படிக்கைகளில் கையொப்பமிட்ட நாடொன்றாக இருப்பதுடன்  30 அளவில் 30 என்ற முன்முயற்சியின் பாகம் ஒன்றாக இருப்பதற்கும் இணங்கியுள்ளது. இந்நோக்கில் நீல, பசுமை  மற்றும் நிலைபேறான நிதியிடல் உள்ளடங்கலாக நிலைபேறான முதலீடுகளை கவருகின்ற அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான அதன் நிகழ்ச்சித்திட்டத்தின் மீது நாடு முன்னேறுவதற்கும் வழியமைக்கின்ற கடல் இடம்சார் திட்டம் மீதான பணியைத் தொடங்குவதற்கு பிரத்தியேகமான பொருளாதார வலயங்களை இனங்கண்டு பிரகடனப்படுத்துவதற்கும் முன்மொழிகின்றேன்.

சமூகப் பாதுகாப்பு

46. நலன்புரி அனுகூலங்கள் கொள்கை

46.1 கௌரவ சபாநாயகர் அவர்களே, என்னால் சமர்ப்பிக்கப்பட்ட 2021 இன் 30  ஆம் இலக்க ஒதுக்கீட்டுத் (திருத்தம்) சட்டத்தின் திருத்தத்தின் வரவுசெலவுத்திட்ட உரையின் 19 ஆம் பந்தியின்பால் உங்களது கவனத்தை ஈர்க்கின்றேன். 2002 இன் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் பிரகாரம் சமூகப் பதிவகத்தைத் தயாரித்தல் நலன்புரி  அனுகூலச் சபையினால் ஏற்கனவே  தொடங்கப்பட்டுள்ளது.  அதற்கமைய, பயன்பெறுநர்  விண்ணப்பங்கள்  செயன்முறைப்படுத்தப்பட்டு  தரவு முறைமைகள் செயன்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  சரிபார்க்கத்தக்க தகைமைப் பிரமாணத்தின் அடிப்படையில் பயன்பெறுநர்களை இனங்காண்பதற்கான  சட்டரீதியான ஒழுங்குவிதிகள் 2022 ஒக்ரோபர் 20 அன்று  ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 

46.2      இச்செயன்முறையின் அடுத்த கட்டமாக அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சட்டத்திற்கமைவாக அதனுடன் தொடர்புடைய பிரகடனத்தினைப் பெற்றுக்கொள்வதற்கும் அவர்களது  தகைமையினைச் சரிபார்ப்பதற்கு ஏற்கனவே பதிவுசெய்துள்ள விண்ணப்பதாரிகளின் இல்லங்களுக்குச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  அதற்கமைய, புதிய தகைமைப் பிரமாணத்தைப் பயன்படுத்தி பயன்பெறுநர்களைத் தெரிவுசெய்யும் செயன்முறை 2023 சனவரியில் தொடங்கும் என்பதுடன் தகைமையுடையோர் அட்டவணை வெளியிடப்படும். 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலச் சட்டத்திற்கமைவாக அனைத்து நலன்புரி அனுகூலங்கள் கொடுப்பனவுத் திட்டங்களும் அச்சமூகப் பதிவக முறைமையின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.

46.3 நலன்புரி அனுகூலச் சபையானது அனைத்து நலன்புரி அனுகூலங்களையும்  கொடுப்பனவுகளையும் ஒருங்கிணைக்கும். அதன் கீழ் கட்டமைக்கப்படும் இச்சமூகப் பதிவகத்தின் கீழ் அனுகூலங்களின் இலத்திரனியல் கொடுப்பனவுகளும் அனைத்து நலன்புரி அனுகூலக் கொடுப்பனவுத்திட்டங்களும் தகைமையுடைய பயன்பெறுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வசதிப்படுத்தப்படுகின்றது. புதிய நலன்புரி அனுகூல கொடுப்பனவு  திட்டங்களின் கீழான கொடுப்பனவு 2023 ஏப்ரல் அளவில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.  அதுவரை ஏற்கனவே காணப்படுகின்ற நலன்புரி அனுகூலத்திட்டங்கள் பேணப்படும்.

47. சமூர்தி, முதியோர்,அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர் உதவி வழங்கப்படுகின்ற பயனாளிகளின் கொடுப்பனவுகளை மேலும் அதிகரித்தல்

47.1 கௌரவ சபாநாயகர் அவர்களே, தற்போது தொழிற்படுகின்ற சமூர்தி, முதியோர் அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர் உதவியை  எதிர்பார்த்து குறிப்பிடத்தக்க  அளவினர் காத்திருப்பு பட்டுயல்களில் தங்கியுள்ளனர்.அவர்கள் உண்மையில் நிவாரணம் பெற வேண்டியவர்களாக இருக்கின்ற படியினால் ,அவர்களுக்கும் ​ கொடுப்பனவுகள் கிடைக்கக்கூடியவாறு வரவசெலவு திட்டத்தின் மூலம்    ஏற்பாடுகளை ஒதுக்குமாறு திறைசேரிக்கு ஆலோசனை  வழங்கினேன்.அதற்கு அமைவாக இது வரை சமூர்தி, முதியோர் அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர் உதவியை  பெறும் எதிர்பார்ப்புடன் நீண்ட காலமாக காத்திருப்பு பட்டியலில் இருக்கின்ற அத்தியவசியமாக பயன்களை பெறவேண்டியவர்களுக்கு அந்த நன்மைகளை 2023 ஆம் ஆண்டு முழுவதும் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே வரவசெலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

47.2 தற்போதைய பொருளாதார நெருக்கடியுன் காரணமாக ஆபத்திற்கு உள்ளாக கூடிய மக்கள் முகங்கொடுக்கின்ற சிரமங்களை குறைப்பதற்கு​ அரசாங்கம் அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.அதன் கீழ் ஏற்கனவே  சமூர்தி, முதியோர் அங்கவீனர் மற்றும் சிறுநீரக நோயாளர் உதவி வழங்கப்படுகின்ற பயனாளிகளுக்கும் பொருளாதார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள 726,000 குடும்பங்களை சேர்ந்த 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவசெலவுத் திட்டத்தின் மூலம் இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவை   அதிகரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அவ்வாறு அதிகரிக்கப்பட்ட நிவாரணத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

47.3 இவை அனைத்திறகும் தற்போது வரவுசெலவு மதிப்பீட்டின் மூலம் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு  மேலதிகமாக மேலும் ரூபா 43 பில்லியன் மேலதிக நிதி ஏற்பாட்டை வழங்குகிறேன்.

48. முதியோர் / மாற்றுத் திறனாளிகள் ​/ விதவைகள் / வீட்டலகு தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்தல் 

48.1      முதியோர்/மாற்றுத்திறனாளிகள்/குறைந்த வருமானம்பெறுவோர்/ விதவைகள்,  பொருளாதார ரீதியாக அதிக கவனம்செலுத்தப்படுகின்ற வகுப்பினராவர். அவர்களது திறன்கள் மற்றும் ஊழியம் என்பவற்றைப் பயன்படுத்துவதன் வாயிலாக இச்சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கு சாத்தியம் காணப்படுவதுடன், இதனூடாக தேசிய  பொருளாதார  அபிவிருத்திக்கு அவர்களது  பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.   இந்நோக்கில், மகளிர் விவகார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு மூலம் ஒவ்வொன்றுமி​ணைந்த  ஒத்துழைப்பு வாயிலாக நிகழ்ச்சித்திட்டமொன்று ஏற்பாடுசெய்யப்பட வேண்டுமென்று முன்மொழிகின்றேன்.  இது தொடர்பில்,  2023 ஆம் ஆண்டுக்காக ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். மேலும்,  சந்தையில்  அவ்வாறான உற்பத்திகளை ஊக்குவித்து விளம்பரப்படுத்துவதற்கு அரசாங்க – தனியார் பங்குடமையின் கீழ் தனியார் துறையின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

49. சிறுவர்போஷாக்கினை மேம்படுத்தல்

49.1 தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 5 வயதுக்குக்  குறைந்த பிள்ளைகளின் அதிகூடிய மந்தபோசனை நிலைமைஅதிகரிப்பினைஅவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதன் விளைவாக ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகளை குறைப்பதற்காக தற்போது செயற்படுத்தப்படுகின்ற மேலதிக ஊட்டச்சத்து நிகழ்ச்சி திட்டங்களை மேலும் வலுவூட்டுவதற்கு ரூபா 500 மில்லியனை வழங்குவதற்கு முன்மொழிகின்றேன்.

விவசாயம்

50. தெங்குப் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்தல்

50.1 தெங்கு மற்றும் அது சார்ந்த  உற்பத்திகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம் உருவாக்கப்படவிருக்கும் அந்நிய செலாவனியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றபடியினால் ​தெங்கின் பெறுமதி சேர் ஏற்றுமதிகளை மென்மேலும் ஊக்குவிப்பதற்காக வசதிகள் வழங்கப்பட வேண்டும். அண்மைக் காலங்களில் தெங்குக் காணிகள் துண்டு துண்டாக  ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை உண்மையானதாகும். எனவே, தற்போதைய தென்னங் காணிகளை பாதுகாப்பதற்கும், அதேபோன்று தென்னை மரங்களை மீள்நடுகை செய்வதை ஊக்குவிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

50.2 வருடாந்தம் தெங்கு உற்பத்தியின் மீது கடுமையாக தாக்கம் செலுத்தியுள்ள பல செழிப்பான தென்னங்காணிகளை துண்டாக்கம் செய்வதன் விளைவாக 4 ஹெக்ரேயருக்கு குறைவான தென்னங் காணிகளை  துண்டாக்குவதற்கு தற்போதைய சட்ட ஏற்பாடுகள் அனுமதியளிக்கிறது.எனவே தற்போதிருக்கும் சட்ட ஏற்பாடுகளை திருத்துவதற்கும் ஒரு ஏக்கருக்கும் குறைவான  விஸ்தீரணத்தைக் கொண்ட தென்னங் காணிகளை துண்டாடுவதை வரையறுப்பதற்கும் நான் முன்மொழிகிறேன்.

51. பத்து விவசாய தொழில்முயற்சியாண்மை  கிராமங்களை நிறுவுதல்

51.1 விவசாயக் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை விவசாய தொழில்முயற்சியாளர்களாக மாறுதலடையச் செய்வதற்கும் அதனூடாக தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்நோக்கத்திற்காக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுடன் கூடிய ஏற்றுமதியை நோக்காகக்  கொண்ட உற்பத்திகளை ஊக்குவிக்கும் பொருட்டு, 10 விவசாய தொழில்முயற்சியாண்மைக் கிராமங்களை நிறுவுவதற்கு முன்மொழிகின்றேன். இந்நோக்கத்திற்காக ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன். 

52. தைலோக விஜேபத்ர பயிரை ஏற்றுமதிக்காக மாத்திரம் உற்பத்தி

52.1 தைலோக விஜேபத்ர பயிரை ஏற்றுமதிக்காக மாத்திரம் உற்பத்தி ஏற்றுமதி செய்வதற்கான ஆற்றல்களை தேடிப்பார்த்தல் வேண்டுமென நான் முன்மொழிகின்றேன்.  இதற்காக நிபுணத்துவ குழுவொன்றினை நியமிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

53. அறுவடைக்குப் பிந்திய இழப்புகளைக் குறைத்தலும் களஞ்சியப்படுத்தலை மேம்படுத்தலும்

53.1 வேளாண்மை உற்பத்தியினை அதிகரிப்பதற்கு நாம் கடுமையாக உழைத்தாலும்கூட, முறையற்ற களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகள் போன்ற பல பிரச்சினைகளின் காரணமாக எமது உற்பத்தியில் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவை இழக்கப்படுகின்றது.  ஆகையினால், அத்தகைய அறுவடைக்குப் பிந்திய சேதங்களை குறைப்பதற்கு தேவையான அறிவு, தொழில்  நுட்பம்  மற்றும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை  விருத்திசெய்வதற்கு அடுத்த ஆண்டின்  வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 150 மில்லியன் ஒதுக்கீடுசெய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.

நீர்ப்பாசனம்

54. வெள்ளப்பாதுகாப்பு முறைமையினை மேம்படுத்தல்

54.1 மா ஓயா, அத்தனகலு ஓயா மற்றும் பெந்தர கங்கையினைஅடிப்படையாகக் கொண்ட நீர்ப்பாசன அமைப்புகளுக்கு 500மில்லியன் வழங்குவதற்கு நான் முன்மொழிகிறேன்.

பாற்பொருட் துறை

55. திரவப் பால் உற்பத்தியினைஅதிகரித்தல்

55.1 குண்டசாலை செயற்கை சினைப்படுத்தும் நிலையத்தினை விருத்திசெய்து புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் வாயிலாக திரவப் பால் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு  முன்மொழிகின்றேன்.   இந்நோக்கத்திற்காக 2023 இல் ரூபா 100 மில்லியன் வழங்குவதற்கு முன்மொழிகின்றேன்.

சுற்றாடல்

56. காலநிலை மாற்றங்கள் தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழகம்

56.1 அண்மைக் காலங்களில்  நிலவுகின்ற காலநிலை மாற்றங்களின் காரணமாக உயிர் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தங்களை கருத்திற் கொள்கின்ற போது,  அது தொடர்பான  ஆய்வுகளை மேற்கொள்வது  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதனை எமது அரசாங்கம் இனங்கண்டுள்ளது.இதன் அடிப்படையில் பூகோள மற்றும்  பிராந்திய தேவையொன்று வகையில் காலநிலை மாற்றல்கள் தொடர்பான ஆய்வுகள், பயிற்சி, அறிவுப் பரிமாற்றல் மற்றும்  காலநிலை ஆபத்துக்களை குறைப்பதற்கான ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகளுக்காக சர்வதேச உதவியைப் பெற்று பல்கலைக்கழகமொன்றினை உருவாக்குவதற்கு முன்மொழிகின்றேன்.  இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

57. அபிவிருத்திக்கான பசுமை ஹைட்ரஜன் (Green Hydrogen) தொழில்நுட்பம்

57.1 உலகில் உயிர்ச்சுவட்டு  எரிபொருள் பாவனையின் காரணமாக சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வலுசக்தி வகை என்ற வகையில் மீள்புதுப்பிக்கக் கூடிய வலுசக்தியினை பயன்படுத்துவது தொடர்பில் கூடிய கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. அதேவேளை,  பசுமை ஹைட்ரஜனினை  வலுசக்தி மூலமாக பயன்படுத்துவது தொடர்பில் பெரும்பாலான  நாடுகள்  பல்வேறு  ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.   அதே போன்று இந்த வலு சக்தியினைப் பயன்படுத்தி உரம் தயாரிப்பதற்கு முடியுமென்பதும் மற்றுமொரு சாதகமாகும். இலங்கையில் காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளுக்குள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக (சூரிய சக்தி அல்லது காற்று என்பவற்றுடன்  நீரினைப் பயன்படுத்தி) மிகவும் சிறந்த சூழல் காணப்படுவதனால் பசுமை ஹைட்ரஜனினை வர்த்தக நோக்கத்தில்  தயாரிப்பது தொடர்பிலான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி  செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்க மற்றும் தனியார்துறையின்  ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்த கருத்திட்டமொன்றினை  ஆரம்பிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். அதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் வரையிலான கடற்கரைப் பிரதேசத்தினை பொருத்தமானதாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

58. வனப்பரம்பலினை அதிகரிப்பதற்கான சமுதாயப் பங்களிப்பு ​​

58.1 பூகோள வெப்பமாதல் அதிகரித்துச் செல்லும் போக்குடன் வனப் பரம்பலினை அதிகரிப்பதற்கான முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்பொழுது  அழிவடைந்து காணப்படுகின்ற  வனப் பிரதேசத்தில்  50,000 ஏக்கர் பரப்பளவினை 2027 ஆகும்  போது  மீண்டும்  உருவாக்குகின்ற திட்டம் தொடர்பான செயற்பாடுகளை  துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.  இதற்கு மேலதிகமாக வனப் பகுதிகளுக்குப் புறம்பாக  புற்றரைகளை அதிகரிப்பதற்கு பொது இடங்கள், குளக்கட்டுகள்,  நீரேந்து   பிரதேசங்களை தெரிவு செய்து பொருத்தமான வேலைத் திட்டங்களை செயற்படுத்துதல் வேண்டும்.  இதற்காக ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றேன்.

ஆராய்ச்சி  மற்றும்  ஆய்வுகூட  வசதிகள்

59. மதுவரித் திணைக்களத்தின் கீழ் புதிய ஆய்வுகூடத்தினை நிறுவுதல்

59.1 மதுசார உற்பத்தியின் தரத்தினை பரிசோதித்தல் மற்றும் தர நியமத்தினை தயாரிப்பதற்கான நிறுவனமொன்று காணப்படாமையினால், மனித நுகர்வுக்கு  பொருத்தமற்ற மதுசார  தயாரிப்பினை அடையாளம் காணல் மற்றும் அது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல் என்பன சிரமமாக மாறியுள்ளது. அதற்கமைய, மதுசார  உற்பத்திகளுடன்  தொடர்பான ஆராய்ச்சி  செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக மதுவரித் திணைக்களத்தின் கீழ்  ஆய்வுகூடமொன்றைத் தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன். இதன்படி, ஆய்வு கூடத்தை நிறுவுவதற்காக ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு  செய்கின்றேன். 

போக்குவரத்து

60. வீதிப் பராமரிப்பு நிதியமொன்றினை நிறுவுதல்

60.1 நாட்டின் வீதி முறைமையொன்றினைப் பராமரிப்பது  செலவுமிக்கதாக இருக்கின்ற அதேவேளை இந்நோக்கத்திற்காக வருடாந்த வரவுசெலவுத்திட்டத்திலிருந்து ஒதுக்கீடுசெய்யப்படக் கூடிய நிதி ஏற்பாடுகளின் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது வாகனமொன்றுக்கு ரூபா 100 இற்கு குறையாத வருடாந்தக் கட்டணத்தை அறவிடுவதன் மூலம் வீதிப் பராமரிப்பு நிதியத்தை தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.  அனைத்து வகையான வீதிகளையும் ஆண்டுதோறும் பராமரிப்பதற்காக இந்நிதி வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்நிதியத்தினை உருவாக்குவதற்கு ரூபா 100 மில்லியன் கொண்ட தொகை 2023  வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடுசெய்வதற்கு முன்மொழிகின்றேன். இந்நோக்கத்திற்காக பொறிமுறையொன்றினை நிறுவுவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சை நான் கோருகின்றேன்.

61. பாதைகள் மற்றும் பாலங்கள் புனரமைப்பு மற்றும் வேலைகளை நிறைவுசெய்தல்

61.1  வெள்ளத்தின் காரணமாக சேதத்திற்குள்ளான  பாதைகளின் காரணமாக மக்கள்  முகங் கொடுக்கின்ற  சிரமங்களை  குறைப்பதற்காக  வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு  2023 ஆம் ஆண்டுக்காக  ரூபா 2,000 மில்லியனை  ஒதுக்கீடு  செய்வதற்கு முன்மொழிகிறேன்.  களனி கங்கைக்கு குறுக்காக  கறா கொட  பாலத்தைப்  பழுதுபார்ப்பதற்கும்  பதுளை ரஜ மாவத்தையில் எஞ்சியுள்ள வேலைகளை  நிறைவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.  காலி  மாவட்டச்  செயலகத்தில் நிறைவடையாமல் இருக்கின்ற வேலைகளை நிறைவு  செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சூரிய மின் சக்திமின்சார கார்கள்

62. சூரிய மின் சக்திமின்சார கார்கள் உற்பத்திக்கான வசதிகள்

 62.1 மீள்புதிப்பிக்கத்தக்க சக்தியினை உபயோகித்து மின்சார உற்பத்தியினை  ஊக்குவிக்கும்  பொருட்டு, அதனுடன்  தொடர்புடைய  அதற்குரிய சூரிய பலகங்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக,  சூரிய மின் சக்தியினை உற்பத்தி செய்வதற்கான பலகம்  (solar panels)  ஒன்றினணக்கப்பட்டு வகைப்படுத்தல்  குறியீடு  8541.10  மற்றும் ஒன்றிணைந்து  மின்நிலை மாற்றல்  (Invertor) குறியீட்டு இலக்கம் 8504.40  இறக்குமதி செய்கின்ற  போது  தற்போது  விதிக்கப்படுகின்ற  துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு  மற்றும்  சமூகப் பாதுகாப்பு பொறுப்பு வரி   என்பவற்றை 2023.01.01 தொடக்கம்  நடை முறைக்கு வரும் வரையில் அதனை அகற்றுவதற்கு முன் மொழிகின்றேன்.

62.2 மேலும்  மின்சார மோட்டார்  கார்களை ஒன்றிணைப்பதற்கும் தேசிய அளவில்  பயன்பாட்டை  பிரபல்யப்படுத்தலிடுவதற்கும்  தேவையான ஊக்குவிப்புக்கள் மேற்கொள்ளப்படும்.  அதற்கமைய மோர்வாகனங்கள்  ஒன்றிணைக்கும் நிறுவனங்கள் மூலம்  குறைந்த பட்பம்  25 சதவீதம்  உள்நாட்டு  பெறுமதிசேர்த்தலை  மேற்கொள்கின்ற அவற்றுக்கு  தேவையான உரிதிப்பாகங்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு வரியினை  அகற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும். 

62.3 இதில் தேசிய  மின்சார பாகங்களை  உற்பத்திக்   கைத்தொழிலினை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு  பெறுமதி  சேர்த்தலுக்கான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்    வாகன  பாகங்கள்  பயன்படுத்தப்படுகின்றவை என்பதை  சான்றுப்படுத்தலுக்கு  அனைத்து மின்சார  மோட்டார்களை உற்பத்தி  செய்கின்ற  பதிவு செய்கின்ற தயாரிப்பாளர்கள் மற்றும்  அனுமதிக்கப்பட்ட   மின்சார  மோட்டார்   வாகனங்களை ஒன்றிணைக்கின்ற  உள்நாட்டு  நிறுவனங்கள் என்பவற்றை ஒருங்கிணைப்பதற்காக கைத் தொழில்   அமைச்சில்  தகவல்  மற்றும்  தொடர்பாடல் முறைமை யொன்றினை  நிறுவுவதற்கு  முன் மொழிகின்றேன்.

62.4 முன்மொழியப்பட்ட தகவல் முறைமையின் கீழ் தீர்வை சலுகைக்காக  அனைத்து  மின்சார மோட்டார் வாகனங்கள்    உள்நாட்டில்  பெற்றுக்கொள்ளப்படும்  பாகங்களின் பெறுமதி   மற்றும் ஒன்றினணக்கப்பட்ட வாகனங்கள் மீதான  உள்நாட்டு   பெறுமதி சேர்த்தல்ன்  சத வீதத்தை தானியக்கமாக சான்றுப்படுத்தல்    முறைமை தயாரிக்கப்பட வேண்டும்.  இக்கணனி  தகவல் பரிமாற்றம்  செயன்முறையானது  கைத் தொழில்   அமைச்சினால் விருத்தி  செய்யப்பட்டு  நிவர்த்தி செய்யப்படவேண்டும்.

63.  சமய தளங்களுக்கான சூரிய சக்திபெனல்கள்

63.1 வெளிநாட்டு மூலங்கள் மற்றும்  அரசாங்கத்தின் உதவியைக் கொண்டு சமய தளங்களுக்கான சூரிய சக்தி பெனல்களை வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும்.   

இளைஞர் ஈடுபாட்டை  ஊக்குவித்தல் 

64. விவசாயத் தொழிற்றுறையில்  இளையோரைத் தக்கவைத்தல்

64.1 நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் விவசாய தொழிற்றுறையில்  இளம் சமுதாயத்தை தக்கவைப்பது  அதீத முக்கியத்துவம் மிக்கதாகும். அதற்காக தற்காலத்திற்கு பொருந்துகின்ற விதத்தில் விவசாயமும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும்.  இந்நோக்கத்திற்காக தீவின் ஒவ்வொரு மாவட்டத்தையும்  பிரதிநிதித் துவப்படுத்தி தற்போது தொழிலற்ற 240 இளையோரை தெரிவுசெய்வதற்கும் விவசாய தொழில்முயற்சியாளர்களாக அவர்களை வலுவூட்டுவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.  இந்நோக்கத்திற்காக ரூபா 120 மில்லியன் ஒதுக்கீடுசெய்யப்படும்.

65. இளம் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்க சலுகைக் கடன் திட்டம்

65.1 தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் தொழிற்படுகின்ற சிறிய மற்றும் நடுதர அளவு கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சி சலுகைக் கடன் திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படாத மலர்ச்செய்கை, தையல் கைப்பணி, மீன்பிடிக் கைத்தொழில், மரக்கறி மற்றும் பழச்செய்கை மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் போன்ற முறைசாரா வீட்டை அண்டிய தொழில்களில் ஈடுபடுகின்ற இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கடன் திட்டம் ஒன்றை  நடைமுறைப் படுத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.

65.2 இந்த திட்டத்தின்கீழ்  இளம் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு அதிக பட்சமாக ரூபா 250,000.00 தொகையைப் பெற்றுக்கொள்ளக் கூடிய அதே வேளையில்  இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில்  குறைந்த பட்சம் 2,000  இளம்பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்த நிகழ்ச்சித் திட்டத்தை  சகல மாவட்டங்களையும்  உள்ளடக்கக் கூடிய விதமாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற  அதேவேளையில் அதன்  முதல் கட்டமாக ரூபா 500 மில்லியன் ஏற்பாட்டினை வழங்குகிறேன்.

66. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவித்தல்

66.1 வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு 2023 ஆம் ஆண்டில் ரூபா 50 மில்லியன்களை ஒதுக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

 சுகாதார மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள்

67. குடிநீர் போத்தல் பாதுகாப்பு முத்திரைகளை (Sticker) அறிமுகப்படுத்தல்

67.1 குடிநீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துவது சடுதியாக அதிகரித்ததனால்  சுகாதாரப் பாதுகாப்புடன் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு  பாதுகாப்பு வழிமுறையொன்றுபின்பற்றப்படுதல் வேண்டும். அதற்கமைய குடிநீர்ப் போத்தல்கள்  தயாரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலேயே  அதற்காக பாதுகாப்பு முத்திரையினை (Sticker)ஒட்டுவதை  இயலச் செய்யும் வகையில் தேவையான வழிமுறையினை அறிமுகப்படுத்தல் மற்றும் பின்னூட்டல் நடவடிக்கைஎடுத்தல்  என்பன சுகாதார அமைச்சினால்  மேற்கொள்ளப்பட வேண்டும்.

68. சிறைக்கைதிகளுக்கான துப்பரவேற்பாடு 

68.1 தற்போது சிறைச்சாலைத் திணைக்களத்தின் கீழ் வருகின்ற சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட முடியுமான கைதிகளின் எண்ணிக்கை 13,241 ஆகும். இருந்த போதிலும், தற்போதிருக்கின்ற சிறைக் கைதிகளின் எண்ணிக்கை சந்தேக நபர்கள் உள்ளடங்களாக  25,162 ஆகும்.  அதற்கமைய தற்போது கிடைக்கப் பெறுகின்ற துப்பரவேற்பாட்டு வசதிகள் போதுமன அளவு இல்லை என்பதனால் அத்தகைய வசதிகளைமேம்படுத்துவதற்கு போதுமான வசதிகளை  புதிதாக உருவாக்க வேண்டிய  தேவை காணப்படுகின்றது. அதற்காக ரூபா 300 மில்லினைஒதுக்கீடு  செய்கின்றேன்.  இப் பணியினை  முன்னுரிமை பணியொன்றாக   கொண்டு  சிறைச்சாலைகள் திணைக்களம்நடவடிக்கை எடுத்தல் வேண்டும். 

69. வைத்தியசாலைகளை தரமுயர்த்தல்

69.1 பதுளை, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளை போதனா வைத்தியசாலைகளாக தரமுயர்த்துவதற்கு முன்மொழிகின்றேன்.

70. அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் விடுதி வசதி 

70.1 அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்துகின்ற விடுதிகள் முறைமையினை மீள நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழிகின்றேன். முதற் கட்டமாக இம்முறைமை தேசிய மற்றும் தள வைத்தியசாலைகளில் தாபிக்கப்படும்.

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை கண்காணித்தல்

71. வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை கண்காணிப்பதற்கான சனாதிபதி செயலணி

71.1 வரவு செலவுத்திட்ட  முன்மொழிவுகளை   பின்னர்  அவை நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியினுள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்கின்ற  போதிலும்  நடைமுறைப்படுத்தப்படும் போது  அபாசகம் எதிர்கொள்ளப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, சகல வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளையும்  துரிதமாக  செயற்படுத்தி  எதிர்பார்க்கின்ற நன்மையினை  அடைந்து கொள்வதற்கு  பதிலாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  சனாதிபதி  செயலணி ஒன்றினை நிறுவுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

72.வரவு செலவுத்திட்டத்தின் பொழிப்பு பின்னிணைப்பு 1 இல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் பிணையங்களில் புத்தக /காசு பெறுமதிக்கான சீராக்கத்தின் மூலம்  2023 ஆம் நிதி ஆண்டுக்கான கடன் பெறும் எல்லையை அதிகரிப்பதற்கு  ஒதுக்கீட்டுச் சட்ட  வரைபுக்கு ஏற்புடையதான திருத்தம் பின்னிணைப்பு 11 மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முடிவுறை

இவ்வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகள் மீது நாட்டின் சாதகமான வேறுபாட்டினை உருவாக்கு​கின்ற பயணத்தில்  கைகோர்க்குமாறும், உறுதுணையைளிக்குமாறும் நான் உங்கள்  அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன். நாம்  இம்முன்மொழிவுகளை  பின்னணியாக்கி கொண்டு, புதிய பொருளாதார அடிப்படை ஒன்றினை தயார்படுத்துவோம். அதற்கென தேசிய  பொருளாதார கொள்கை கட்டமைப்பை  உருவாக்கிக் கொள்வோம்.அடுத்து வரும் 25 ஆண்டுகள் முழுவதும் அக்கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைபடுத்துவோம்.

ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒருமுறை எமக்கு இந்த கொள்கையை மீளாய்வு செய்ய முடியும்.   எமது இலக்கை நோக்கி பயணிக்கின்ற பயணத்தை வெற்றிகொள்ள கூடிய கொள்கைகளை அவ்வாறான மீளாய்வு ஒன்றினூடாக மேலும் மேம்படுத்திகொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது .

இந்த பயணத்திற்கு பங்களிப்பு வழங்குவதற்கு தேவையான பின்னணியை  இப்போது நான்  இந்த பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்.  ஒரு பக்கத்தில் பாராளுமன்றத்தின் துறைசார் செயற் குழுக்கள்,  மறுபக்கத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என்ற மக்கள் சபை,  அதற்கு மேலதிகமாக  அரச நிதி மற்றும் அரச நிதி சேவை  பற்றிய செயற் குழுக்கள் பலவற்றை நாம் முன்மொழிந்துள்ளோம். நான் அண்மையில் சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தது போன்று,  இந்த செயற்குழு இதுவரையிலும் இந்த பாராளுமன்றத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை

விசேடமாக நான் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்ட முன்மொழிவு அரச உத்தியோகத்தர்களின் மூலம் அரச  பொறிமுறைகளினூடாக நடைமுறைப் படுத்தும் போது துறைசார் செயற்குழுக்களுக்கு பாரியளவு வேலைகளை நிறைவேற்ற முடியும்.  அரசாங்க செலவினத்தை குறைத்துக்கொள்ளும்  முயற்சிக்கும் நிதி பற்றிய செயற்குழுக்களுக்கு பயன்மிக்க விதத்தில் தலையீடு செய்யவும் முடியும்.

அதனால், அந்த சகல செயற்குழுக்களையும் துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு நான் இந்த பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கின்றேன்.  அப்போது புதிய பயணத்திற்கு, புதிய தோற்றத்தின் முயற்சிக்கான  சந்தர்ப்பத்தை எமக்கு உருவாக்கிக் கொள்ள முடியும்.

அந்த சந்தர்ப்பத்திலிருந்து அதிகபட்ச பயனைப்பெற்று நாம் எமது  உண்மையான தேசிய வளங்களுக்கு, எமது இளைஞர்  பரம்பரைக்கு சிறந்த எதிர்காலமொன்றை  உருவாக்கிக்கொடுப்பதற்கு  முயற்சிப்போம்.

 அதற்கமைவாக புதிய பொருளாதார அடிப்படையினூடாக நாட்டை மீண்டும் உயர்த்தி வைக்கும்  முயற்சிக்கு செயல் வடிவிலான மற்றும் செயல் ரீதியான பங்களிப்பை வழங்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி

2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (17) லண்டனில் நடந்த வைபவத்தில் இப்பரிசை ஷெஹான் கருணாதிலக்க பெற்றுக்கொண்டார். இலங்கையில் பல தசாப்தங்களாக நடந்த யுத்தம் தொடர்பாக அவர் எழுதிய "The Seven Moons of Maali Almeida "(‘மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்’ ) எனும் நாவலுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது

இலங்கையின் நற்புகழை சர்வதேச மட்டத்தில் மீண்டும் அறிமுகம் செய்துள்ள ஷெஹான் கருணாதிலக்க நாட்டுக்கு நற்பெயரை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி தனது Twitter செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஷெஹான் கருணாதிலக்க எழுத்துத்துறையில் மென்மேலும் சிறந்து விளங்குவதற்கு அவசியமான தைரியமும் சக்தியும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, எழுத்தாளர் என்ற வகையில் அவருடைய எதிர்கால முயற்சிகள் வெற்றியடையவும் ஜனாதிபதி தனது வாழ்த்துப் பதிவில் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 40

Latest News right

“அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் – 2023” விண்ணப்பம் கோரல்

செப் 10, 2023
Default Image
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் வருடாந்தம்…

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

மே 23, 2023
Cabinet Decisions on 22.05.2023 Tamil page 0001
2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…