சமீபத்திய செய்தி

இலங்கையின் ஊடகக் கல்வித் துறையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், MMC–ITN கல்வி வளாகம் நேற்று (7) கல்வித்துறை சிறப்பம்சம், மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பிற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி, வளர்ச்சியின் புதிய கட்டத்தை ஆரம்பித்திருந்தது.

நாட்டின் தொழில்முறை ஊடகக் கல்வியில் நீண்டகாலமாக நிலவி வந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்ட MMC–ITN கல்வி வளாகம், இலங்கையின் முன்னோடி மற்றும் முன்னணி அரச ஊடக நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் (ITN) வழிகாட்டலின் கீழ் இயங்குகிறது. தற்போது, இவ்வளாகமானது, ஐந்து சான்றிதழ் மட்டத்திலான பாடநெறிகளை வழங்கி வருவதுடன், இந்த ஆண்டு முதல் அவற்றை டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு (Degree) மட்டங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மூன்று புதிய டிப்ளோமா பாடநெறிகள் மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளன.

கோட்பாட்டு அறிவு மற்றும் விரிவான நடைமுறைப் பயிற்சிகள் இரண்டையும் வழங்கும் தனது நோக்கத்திற்கு இணங்க, MMC–ITN  கல்வி வளாகம் மாணவர்களுக்கு மிக உயர்ந்த தரத்திலான தொழில்சார் கல்வியை உறுதிப்படுத்துவதற்காக, ITN  நிறுவனத்தின் பரந்த உள்கட்டமைப்பு மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, நேரடி நடைமுறைப் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, MMC–ITN கல்வி வளாகம் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதுமையான மாணவர் பரிமாற்றத் திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், சீன மக்கள் குடியரசின் சென்யாங் சிட்டி பல்கலைக்கழகத்தின் (Shenyang City University) தூதுக்குழுவொன்று இன்று ITN வளாகத்திற்கு வருகை தந்தது. இந்தத் தூதுக்குழுவை ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ITN தலைவர் திரு. பிரியந்த வெதமுல்ல ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்கள், MMC–ITN வளாகத்திற்கும் சென்யாங் சிட்டி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பு, மாணவர் பரிமாற்ற வாய்ப்புகள் மற்றும் எதிர்கால கூட்டுத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தின. வருகை தந்த தூதுக்குழுவினர் MMC–ITN வளாகத்தினையும் அதன் வசதிகளையும் பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கு வழங்கப்படும் நடைமுறைப் பயிற்சிச் சூழலையும் அவதானித்தனர். மாணவர்களை உண்மையான ஊடகத் தயாரிப்பு செயல்முறைகளில் ஒருங்கிணைப்பது குறித்து தூதுக்குழுவினர் தமது விசேட பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை நடைமுறை முடிவுகளாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். MMC–ITN வளாகம் போன்ற நிறுவனங்கள் ஊடகக் கல்வியில் உலகளாவிய போக்குகளுடன் தேசிய அபிவிருத்தி இலக்குகளை சீரமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். கல்விச் சீர்திருத்தம் மற்றும் சர்வதேச ஈடுபாட்டிற்கான அரசாங்கத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இத்தகைய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

டிட்வா சூறாவளியுடன் ஏற்பட்ட பேரழிவு நிலை காரணமாக சேதமடைந்த வீடுகளை மீளமைப்பதற்காக வழங்கப்படும் ரூ. 50 இலட்சம் நிவாரணம், ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்துக்குள் வழங்க உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அவர் இதனை, ஜனவரி (06) அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

டிட்வா சூறாவளி காரணமாக பேரழிவுக்கு உள்ளான வீடுகளை சுத்தம் செய்ய வழங்கப்படும் ரூ. 25,000 நிவாரணம் இதுவரை 92 சதவீதத்திற்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 2026 ஜனவரி 05 நிலவரப்படி, வழங்க தகுதியான 452,658 வீட்டு அலகுகளில் 415,818 வீடுகளுக்கு இந்த நிவாரணம் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ரூ. 25,000 நிவாரணம் முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களிலும் அதிக சதவீதத்தில் வழங்கல்கள் நிறைவடைந்துள்ளன. வழங்கப்படாத 36,840 வீட்டு அலகுகளில் அதிகமானவை கொழும்பு மாவட்டத்தில் உள்ளதாகவும், உறுதிப்படுத்தல் பணிகளை நிறைவு செய்து விரைவில் வழங்கல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ரூ. 50,000 நிவாரணத்திற்காக 2026 ஜனவரி 05 வரை 146,475 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன், அவற்றில் 92,697 வீட்டு அலகுகளுக்கு நிவாரணம் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, நுவரெலியா, யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்த நிவாரணம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 53,000 வீட்டு அலகுகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது.

இடரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரூ. 15,000 நிவாரணத்திற்கு மேலதிகமாக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ. 10,000 மேலதிக நிவாரணமும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 2026 ஜனவரி 05 நிலவரப்படி இதற்காக 200,541 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 31ஆந் திகதியாகும் போது 113,581 குழந்தைகளுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பேரழிவால் உயிரிழப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், இறந்தவரின் நெருங்கிய உறவினருக்கோ அல்லது முழுமையான ஊனமுற்ற நிலைக்கு உள்ளான நபருக்கோ ரூ. 10 இலட்சம் நிவாரணம் வழங்கப்படுவதுடன், இது பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

முழுமையாக சேதமடைந்த 6,056 வீடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், முழுமையாக சேதமடையாத போதிலும் மீளமைக்க முடியாத வீடுகளையும் உள்ளடக்கி, பொதுவாக சுமார் 25,000 புதிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2026 புதிய ஆண்டின் வருகை, நாம் நாடாக முன்னேறிச் செல்ல வேண்டிய புதிய திசையை மீண்டும் மதிப்பீடு செய்து பார்ப்பதற்கும், பொறுப்பான முடிவுகளை எடுக்கும் புதிய யுகத்திற்குள் காலடி எடுப்பதற்கும் முக்கியமான வாய்ப்பாக இருப்பதாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் இன்று (01) வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்ற புதிய ஆண்டுக்கான  கடமை ஆரம்பிக்கும்  நிகழ்வை முன்னிட்டு உரையாற்றியபோது தெரிவித்தார்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட கடுமையான இயற்கை அனர்த்தங்கள், பொருளாதார மற்றும் சமூக சவால்களுக்கிடையிலும், அரசின் வருவாய் இலக்குகளை வெற்றிகரமாக அடைய அரசுத் துறை அதிகாரிகள் காட்டிய அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் சவால்களை அஞ்சாது எதிர்கொண்ட தைரியம் காரணமாக அது சாத்தியமாகியதாக அவர் நன்றியுடன் குறிப்பிட்டார். மேலும், அவர்களின் அர்ப்பணிப்பு, அரசின் புதிய கொள்கைகள், சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டை மீண்டும் உருவாக்கும் செயல்முறைக்கான வலுவான அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த மறுமலர்ச்சி பயணத்தில் வெகுஜன ஊடகத் துறைக்குரிய பங்கு மிக முக்கியமானது என்பதை அமைச்சர் வலியுறுத்தி, உண்மை, பொறுப்பு, தொழில்முறைநிலை மற்றும் பொதுநலன் ஆகிய மதிப்புகளின் அடிப்படையில் உருவாகும் ஊடக சூழல், நாட்டின் புதிய யுகத்திற்கு அத்தியாவசியமானது எனக் குறிப்பிட்டார். அதற்காக 2026 ஆம் ஆண்டில் வெகுஜனஊடகத் துறையில் சட்டரீதியான, நிறுவல் ரீதியான மற்றும் தொழில்முறை சீர்திருத்தங்களை மேலும் வலுப்படுத்தி, அரசின் புதிய கண்ணோட்டத்துடன் இணைந்த பொறுப்பான ஊடக அமைப்பை உருவாக்குவது வெகுஜனஊடக அமைச்சின் முக்கிய குறிக்கோள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இறுதியில், வெகுஜனஊடக அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் தங்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்விலும் வெற்றியும் நலனும் பெற்று, தங்கள் இலக்குகளை அடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

இலங்கை/பவுண்டேஷன் நிறுவனத்தின் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் செய்தி இதழ் நேற்று (01) வெகுஜன ஊடகம் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்தின அவர்களின் தலைமையில் இலங்கை /பவுண்டேஷன் நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை /பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் திருமதி. சீதா பண்டார, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தரமான மற்றும் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்துவதும், இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவதும் போன்ற சிறப்பு இலக்குகளுடன், இனம், மதம், கட்சி வேறுபாடுகள் இன்றி வலுவான இலங்கை அடையாளத்துடன் நாட்டை முன்னேற்றும் பொறுப்பு அரசு உட்பட முழு மக்களுக்கும் இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்டை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டு பிரதமர் இதை குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி வருமாறு:  கல்வித் துறையில் தரமான மற்றும் நிலைத்த மாற்றத்தை அடையாளப்படுத்தும் கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துதல், அரசு சேவையின் அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல், புதுமையான சிந்தனைகளுடன் கூடிய தொழில்முனைவோருக்கு, கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உலகளாவிய நிலைக்கு உயர வழிவகை செய்தல், போதைப்பொருள் இல்லாத, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குதல் போன்ற பல சிறப்பு இலக்குகளுடன், இனம்–மதம்–கட்சி வேறுபாடுகள் இன்றி வலுவான இலங்கை அடையாளத்துடன் இந்த நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசு உட்பட மொத்த மக்களிடமும் இருப்பதை இம்முயற்சியில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

2026 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் இச்சமயம், கடந்த 2025 ஆம் ஆண்டைப் பற்றி சிந்திப்பது காலோசிதமானது என்று நம்புகிறேன். ஜனநாயக அரசாக தீர்மானமான முன்னேற்றமான பல அடியெடுத்து வைக்க முடிந்த ஆண்டாக 2025 ஐ ஒருபுறம் பெருமையுடன் நினைக்க முடிகிறது.

புதிய அரசியல் பண்பாட்டின் கீழ், அரசியல் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தலும், ஊழல் அற்ற திறமையான அரசு சேவைக்கான அடித்தளத்தை அமைத்தலிலும் முன்னேற்றம் சாதிக்க முடிந்தது என்று நம்புகிறேன். பொருளாதார ஸ்திரத்தன்மை, உலகளவில் நம் நாட்டை நோக்கி உருவாகி வரும் நேர்மறையான கருத்துப்போக்குகள், வெளிப்படைத்தன்மையுள்ள ஆட்சி முறை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்தல் போன்ற பல முக்கிய அம்சங்கள் வழியாக 2025 ஆண்டைப் பற்றி திருப்தியுடன் நினைக்க முடிகிறது.

எனினும், 2025 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் நாம் எதிர்கொண்ட துரதிருஷ்டவசமான இயற்கை அனர்த்தம் நம் நாட்டிற்கு சவாலான காலமாக இருந்தது. அது அனைவரின் மனதையும் அதிர்ச்சியடையச் செய்தாலும், அத்தகைய தருணத்தில் இலங்கையர்களாகிய நீங்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், இரக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிசெய்த விதம் உலகம் முழுவதும் பேசப்படும் விஷயமாகியது. உருவான 2026 புதிய ஆண்டை நாம் அந்தச் சவால்களை சமாளித்த வலிமையுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மனங்களை ஆற்றுப்படுத்திவும், சேதமடைந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டு வர கடுமையான அர்பணிப்புடன் சந்திக்கின்றோம்.  கல்வித் துறையில் தரமான மற்றும் நிலைத்த மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வி மறுசீரமைப்பு, அரசு சேவையின் அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல், புதுமையான சிந்தனைகளுடன் கூடிய தொழில்முனைவோருக்கும், கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உலகளாவிய அளவில் உயர வழிவகை செய்தல், போதைப்பொருள் இல்லாத, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்குதல் போன்ற பல சிறப்பு இலக்குகளுடன், இனம்–மதம்–கட்சி வேறுபாடுகள் இன்றி வலுவான இலங்கை அடையாளத்துடன் இந்த நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு அரசு உட்பட அனைத்து மக்களிடமும் இருப்பது என்பதை இச்சமயம் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் நிரம்பிய வெற்றிகரமான புதிய ஆண்டாக அமையட்டும்!

கலாநிதி ஹரிணி அமரசூரிய,
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது. 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை , எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும்.

இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ‘ தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது.

அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சகோதர மக்களின் துயரத்தில் கைகோர்த்தார்கள்.இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.

புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன் மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2026 ஜனவரி 01 ஆம் திகதி

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

 

35,000-க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட சுனாமி பேரவலத்திற்கு இன்று (26) 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சுனாமி மற்றும் பல்வேறு பேரிடர்களால் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி இடம்பெறுகின்றது.  சுனாமியால் உயிரிழந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் நினைவுகூரும் “தேசிய பாதுகாப்பு தின” பிரதான நிகழ்ச்சி இன்று காலை காலி நகரில் உள்ள “பெரெலிய சுனாமி நினைவுச் சின்னம்” அருகில் நடைபெறும்.

மேலும் இந்த வருட “தேசிய பாதுகாப்பு தின” நிகழ்ச்சிகளை முன்னிட்டு, டிட்வா புயலால் நாட்டில் நிலவும் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட மட்டத்தில் அனைத்துத் மதங்களையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேரழிவில் 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதுடன், பில்லியன் கணக்கில் மதிப்பிடப்படும் சொத்துக்கள் சேதமானது.

இலங்கையில் சுனாமி அபாயம் ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தால், அதனை உறுதிப்படுத்துவதற்கு பேரிடர் முகாமைத்துவ மையம், வானிலையியல் திணைக்களம் அல்லது புவியியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பணியகங்களை விசாரிக்கலாம். பேரிடர் முகாமைத்துவ மையத்தின் அவசர உதவி எண் 117 மூலம் 24 மணிநேரமும் மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறே, சுனாமி காலத்தில் பாதிக்கப்பட்ட 3050 என்ற எண்ணைக் கொண்ட எஞ்சின் இணைந்த ரயிலை நினைவுகூர்ந்து, புகையிரதப் பொது முகாமையாளர் உட்பட உயர் அதிகாரிகள் குழு இன்று (26) காலை 9 மணிக்கு பெரெலிய ரயில் நிலையத்திற்கு வருகை தந்து நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.

டிசம்பர் மாதம் துவக்குதத்துடன் கிறிஸ்துவர்கள் ஆராதனையுடனும் ஆனந்தத்துடனும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாடத் தயார் ஆகின்றனர். அமைதியின் செய்தியுடன் உலகிற்கு வந்த பெத்லகேமில் பிறந்த இயேசு குழந்தையின் பிறப்பு செய்தி, ஆனந்தத்துடன் கொண்டாடுவது கிறிஸ்துவர்களின் விருப்பமாகும்.

ஆனால் இம்முறை டிசம்பர் மாதம் வழக்கம்போல மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்ததாக இல்லை. முழு நாட்டையே அதிரவைத்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நமது சகோதர சகோதரிகளின் துன்பமும் வருத்தங்களும் மத்தியில் இதை எதிர்கொள்கின்றோம்.

ஆனால் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தையும் இயேசு அவர்கள் காட்டிய பாதையையும் முன்வைத்துஇ நமது மக்களால் அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி ஒற்றுமையுடனும் கூட்டிணைப்புடனும் இருந்து, பேரிடரில் சிக்குண்ட தமது சகோதரர்களிற்காக அன்பும் இரக்கமும் காட்டி, ‘அடுத்தவரை நேசிக்கவும்’ என்ற இயேசுவின் உயர்ந்த போதனையை உலகிற்கு காட்டியுள்ளனர்.

நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர அனைவரும் ஒரே குறிக்கோளுடன், பொது பொறுப்புணர்வுடன், நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம். உண்மையான மாற்றத்தைக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை எந்தவிதத்திலும் சிதைக்காமல், அவர்கள் எதிர்பார்க்கும் “புதிய நாட்டை” கட்டியெழுப்பும் ஒன்றுபட்ட நோக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்து உழைக்கிறோம்.

மேலும் சிறந்த நாளை உருவாக்கும் கனவிற்காக, குடிமக்களாக நாம் அனைவரும் அன்புடனும் இரக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று இந்த கிறிஸ்துமஸ் நாளில் நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

டாக்டர் ஹரினி அமரசூரிய,

பிரதமர்,

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கை பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும்.

கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என்று நான் நம்புகிறேன்.

இருள் நீங்க வேண்டுமானால், ஒளியின் பிரகாசம் பரவ வேண்டும். பெத்லகேமில் ஒரு ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும், நம்பிக்கையுடனும், ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய நத்தார் பண்டிகையாக அமைய வேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன்.

அநுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2025 டிசம்பர் 25

உலகத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக இந்த உலகில் அவதரித்த அவரின் மனிதநேயக் கருணையின் போதனைகள், மனிதகுலத்தின் விடுதலைக்கான பாதையை உருவாக்கியதாக கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையாகும்.

இன்று (24) நள்ளிரவில் ஆரம்பமாகும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் பிரதான திருப்பலி, உஸ்வெட்டகெய்யாவிலுள்ள புனித மரியா தேவாலயத்தில் நடத்தப்படவுள்ளது.

கொழும்பு பேராயர், அதிமேன்மை மிக்க மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இந்த பிரதான திருப்பலி நடைபெற உள்ளது.

நள்ளிரவில் பாரம்பரிய வழிபாட்டு முறைகளின்படி, தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தில் இயேசு குழந்தையின் திருவுருவை நிறுவுதல் உள்ளிட்ட பாரம்பரியச் சடங்குகளுக்குப் பிறகு, அவரால் பிரதான திருப்பலி நடத்தப்படும்.

முந்தைய ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விழா மிகுந்த கொண்டாட்டத்துடன் அனுசரிக்கப்பட்டாலும், இந்த ஆண்டு பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கும் வகையில் கிறிஸ்துமஸை மிக எளிமையாகக் கொண்டாடுமாறு, பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை அனைத்து கிறிஸ்தவ விசுவாசிகளையும் கேட்டுக்கொண்டார்.

அதனைப் பின்பற்றி, இந்த ஆண்டு ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தின நினைவுகளை மிகவும் எளிமையாகக் கொண்டாட கிறிஸ்தவ விசுவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸை முன்னிட்டு, கொழும்பு நகரம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மற்றும் ஒளி அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை காணலாம்.

இன்று (24) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சில், இலங்கையின் வியட்நாம் தூதர் திருமதி ட்ரின் தி டாம் Le Van Huong) அவர்களுடன் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இலங்கை–வியட்நாம் இரு நாடுகளுக்கிடையிலான தற்போதைய இராஜதந்திர உறவுகள் மேலும் வலுப்படுத்திக் கொண்டு செல்வது குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதுடன், வியட்நாமின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வருங்காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் பற்றியும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையின் தற்போதைய சுகாதார சேவை செயல்பாடுகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவைகள், வேளாண்மை மற்றும் சுற்றுலாத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான விவகாரங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன. மேலும், இலங்கை–வியட்நாம் வருடாந்த இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஊடகம்ஃதொடர்பாடல் துறைகளில் வியட்நாமின் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்வது பற்றியும் தூதுவர் அவர்கள் கருத்துகளை வெளிப்படுத்தினார்.

பரஸ்பர நம்பிக்கையைவும் அபிவிருத்தி இலக்குகளைவும் அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை தூதுவர் அவர்கள் வலியுறுத்தியதுடன், தற்போதைய காலத்தில் இலங்கை அரசியல், கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து தனது மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்திற்கு சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, வியட்நாம் தூதரகத்தின் துணை செயல்பாட்டு தலைவர் லீ வான் ஹுவாங் (Le Van Huong), தூதுவரின் செயலாளர் ரம்யா நிளங்கனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுகாதார வல்லுநர்களின் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு இடையறாது சிறப்பு டிப்ளோமா பாடநெறிகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதய சிகிச்சை மற்றும் பராமரிப்பு துறைகளின் தொழில் தரநிலைகளை உயர்த்துவதற்கு இவ்வகை சிறப்பு உயர் டிப்ளோமா பாடநெறிகள் மிகுந்த உதவியாக இருப்பதுடன், இலங்கையின் இலவச சுகாதார சேவைகளின் கீழ் பணிபுரியும் இதய மின்னலைப் பதிவு நிபுணர்களின் அறிவு, அணுகுமுறை மேம்பாட்டுக்கும் புதுப்பிப்புக்கும் இத்திட்டங்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் மேலும் கூறினார்.

இதய தொழில்நுட்ப உயர் டிப்ளோமா (2025) பாடநெறியை வெற்றிகரமாக முடித்த இதய மின்னலைப் பதிவு நிபுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் (கொழும்பு மருத்துவ பீடத்தின் புதிய கட்டிட அரங்கில்) உரையாற்றும் போது அவர் இவை தெரிவித்தார்.

இவ்விழாவில் 351 இதய மின்னலைப் பதிவு நிபுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுகாதார மற்றும் வெகுசனஊடக அமைச்சின் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இப்பாடநெறியை ஒரு வருட கலவியாண்டைக் கொண்டதாக அமைத்து நடத்தியது. நாட்டின் பல அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 351 பேர் இதில் பங்கேற்றனர்.

ECG, உடற்பயிற்சி ECG, Holtor,  Tilt Table, Pace Maker,  pharmacological stress Test, Ambulatory Blood pressure Monitoring போன்ற பரிசோதனைகள் மூலம் இதய மின்னலைப் பதிவு நிபுணர்கள் நோயாளி பராமரிப்புக்கு தேவையான ஆதரவுகளை வழங்குகின்றனர். தற்போது சுமார் 500 இதய மின்னலைப் பதிவு நிபுணர்கள் நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள்.

சுகாதார அமைச்சு இடையறாது இவ்வகை டிப்ளோமா மற்றும் பயிற்சி திட்டங்களை நடத்தியதன் மூலம் சுகாதார சேவையின் தொழில்தரநிலைகள் மேம்படுவதற்கும் அறிவு–அணுகுமுறை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு சுகாதார துறையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக வல்லுநர்களை தொடர்ந்து அறிவால் வலுப்படுத்துவது சிறப்பான விஷயமாகும். இதன் மூலம் அவர்களின் தூரநோக்கு சிந்தனை, தலைமையுத்திறன் மற்றும் அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது. இப்பயிற்சி பாடநெறிகள் சர்வதேச தரநிலைகளுக்கிணங்க நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பல அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார அதிகாரிகள் இவ்வாறு அறிவால் ஆயத்தமாகும்போது, சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் சிறந்த, பயனுள்ள சேவைப் பெறுவார்கள். இந்த உயர் டிப்ளோமா அடுத்தகட்டத்தில் பட்டப்படிப்பு நிலைக்கு உயர்த்தப்பட வேண்டியும் அதன் மூலம் அவர்கள் துறைகளில் முன்னணி வல்லுநர்களாக உருவாக உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பயிற்சி திட்டத்தில் பாடம் கற்பித்த இதய நிபுணர்கள், விசேட நிபுணர்கள், பயிற்சி மேற்பார்வையாளர்கள், கல்விக் குழுக்கள் மற்றும் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் செய்த அர்ப்பணிப்பிற்காக அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுரங்க தோலமுள்ள, டாக்டர் சமந்த ரணசிங்க (பயிற்சி), இதய மின்னலைப் பதிவு பயிற்சி பள்ளி முதல்வர் நிலூபா சுபசிங்ஹ உள்ளிட்ட பல இதய நிபுணர்கள், மருத்துவர்கள், மூத்த ஆலோசகர்கள், பாடநெறி பயின்றவர்களின் குடும்பத்தினர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

பக்கம் 1 / 42

Latest News right

இலங்கையின் ஊடகக் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயம் சர்வதேச ஒத்துழைப்புடன் MMC–ITN கல்வி வளாகம் புதிய மைல்கல்லை எட்டியது

ஜன 08, 2026
இலங்கையின் ஊடகக் கல்வித் துறையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும்…

2026 புதிய ஆண்டை முன்னிட்டு வெகுஜன ஊடக பிரதி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
2026 புதிய ஆண்டின் வருகை, நாம் நாடாக முன்னேறிச் செல்ல வேண்டிய புதிய திசையை மீண்டும்…

இலங்கை /பவுண்டேஷன் நிறுவகம் (SLFI) புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியது

ஜன 01, 2026
இலங்கை/பவுண்டேஷன் நிறுவனத்தின் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம்…

இனம் – மதம் – கட்சி வேறுபாடுகள் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.

ஜன 01, 2026
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தரமான மற்றும் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்துவதும், இரக்கமுள்ள…

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல்…

தேசிய பாதுகாப்பு தினம்

டிச 26, 2025
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி…

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
டிசம்பர் மாதம் துவக்குதத்துடன் கிறிஸ்துவர்கள் ஆராதனையுடனும் ஆனந்தத்துடனும்…

நத்தார் வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று…

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் இன்று (24) நள்ளிரவில் ஆரம்பமாகிறது.

டிச 24, 2025
உலகத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக இந்த உலகில் அவதரித்த அவரின் மனிதநேயக் கருணையின்…