சமீபத்திய செய்தி

இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில்முறை மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் ‘அசிதிசி வெகுஜன ஊடக’ மற்றும் ‘அசிதிசி - தொழில்நுட்ப’ புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டங்கள் இம்முறையும் (2026) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, ‘அசிதிசி வெகுஜன ஊடக’ / ‘அசிதிசி - தொழில்நுட்ப’ புலமைப்பரிசில் திட்டங்கள் - 2026 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக்கூடிய இறுதித் திகதி 2026 ஜூலை மாதம் 10 ஆம் திகதியாகும்.

02 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள, நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதிநேர அடிப்படையில் பணியாற்றும் 18-55 வயதுக்கு இடைப்பட்ட ஊடகவியலாளர்கள் இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும், விண்ணப்பிக்கும் பாடநெறியானது ஊடகத்துறை சார்ந்த ஒரு பாடநெறியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், விண்ணப்பதாரர்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் 2025/2026 ஆம் ஆண்டுக்காக ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டையை பெற்றிருத்தல் வேண்டும்.

‘அசிதிசி வெகுஜன ஊடக’ புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம்: கலாநிதிப்  பட்டத்திற்கு  Ph.D. (Doctorate) ரூ. 700,000/-, தத்துவவியல் முதுகலை (Master of Philosophy). இளமாணிப; பட்ட Bachelor’s Degrees மற்றும் சாதாரண பட்டப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ. 350,000/, முதுகலை டிப்ளோமா, டிப்ளோமா, நீண்டகால மற்றும் குறுகியகால சான்றிதழ் பாடநெறிகளுக்கு: அதிகபட்சமாக ரூ. 200,000/- வரை நிதியுதவி வழங்கப்படும்.  மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் ஊடகவியலாளர்கள் ‘அசிதிசி - தொழில்நுட்ப’ ஊடக புலமைப்பரிசில் திட்டத்திற்கும் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இரண்டு திட்டங்களுக்குமான அதிகபட்ச நிதி எல்லை ரூ. 350,000/- ஆகும். (ஒரே பாடவிதானத்தை உள்ளடக்கும் இரண்டு பாடநெறிகளுக்காக இரு திட்டங்களின் மூலமும் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது).

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படும் தேர்வுக் குழுவொன்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டு புலமைப்பரிசிலுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதற்காக சமர்ப்பிக்கப்படும் ‘அசிதிசி வெகுஜன ஊடக’ புலமைப்பரிசில் விண்ணப்பங்களை பணிப்பாளர் (ஊடகம்) அவர்களுக்கும், ‘அசிதிசி - தொழில்நுட்ப’ புலமைப்பரிசில் விண்ணப்பங்களை பணிப்பாளர் (அபிவிருத்தி) அவர்களுக்கும் 2026.07.10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, , இல. 163, "அசிதிசி மெந்துர", கிருளப்பன மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05. அல்லது அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.media.gov.lk பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் QR குறியீட்டை (Scan) ஸ்கேன் செய்வதன் மூலமும் இணையவழியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

‘அசிதிசி வெகுஜன ஊடக’, ‘அசிதிசி - தொழில்நுட்ப’ புலமைப்பரிசில் - 2026 திட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்களை 011 2513 645 / திரு. சந்தன - 071 4 931 696 ஆகிய எண்களைத் தொடர்புகொள்வதன் மூலமும், மாதிரி விண்ணப்பப் படிவங்களை www.media.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கான உயர்தர தொழில்முறைத் தரங்களை அறிமுகப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியாகப் பேணுதல் ஆகிய நோக்கங்களுக்காக, "இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனம்" நிறுவனத்தை நிறுவுவதற்கான புதிய சட்டமூலம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கௌரவ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில், 2026 ஜூன் மாதம் 05 ஆம் திகதியிட்டு இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்நாட்டின் ஊடகத்துறையின் தரத்தை உயர்த்துதல்,  ஊடகவியலாளர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சட்டரீதியான கட்டமைப்பிற்குள் முறைப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து தேவையான சட்ட விதிகளுக்கு வழிவகை செய்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.

இலங்கை ஊடகத்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்துநிற்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பட்டய நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம், விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சீனாவில் நடைபெற்ற அரச நிர்வாகம் குறித்த விசேட நாடாளுமன்றப் செயலமர்வில்  பங்கேற்பதற்காக இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இத்தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ தலைவராக (Head of the Delegation) வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன செயற்பட்டார்.

இத்தூதுக்குழுவில் பிரதி அமைச்சர் திரு. டி.பி. சரத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

*சீன அரச நிர்வாகக் கட்டமைப்பு குறித்த ஆய்வு*

சீன வர்த்தகத் திணைக்களம் மற்றும் ஐசிசி (ICC) நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த திறன்மிக்க செயலமர்வின் போது; சீனப் பண்புகளுடனான ஜனநாயகம் குறித்த ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் சிந்தனைஇ "முழுச் செயல்முறை மக்கள் ஜனநாயகம்" (Whole-Process People’s Democracy) அத்துடன் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு (CPPCC) மற்றும் "இரு அமர்வுகள்" (Two Sessions) ஆகியவற்றின் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, இலங்கைத் தூதுக்குழுவினருக்கு சீன தேசிய மக்கள் காங்கிரஸ் (National People’s Congress) உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய அரச நிறுவனங்களுக்கு நேரில் விஜயம் செய்துஇ அவற்றின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பதற்கான விசேட வாய்ப்பும் கிடைத்தது.

*சர்வதேச தேயிலை தினக் கொண்டாட்டத்திலும் பங்கேற்பு*

இந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இணைந்ததாக, சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச தேயிலை தின (International Tea Day) உத்தியோகபூர்வக் கொண்டாட்ட நிகழ்வும் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக (Chief Guest) பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன கலந்துகொண்டார்.

அத்துடன்இ இந்த மிக வெற்றிகரமான மற்றும் பயனுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்த ஐசிசி (ICC) நிறுவனம், சீன வர்த்தகத் திணைக்களம் மற்றும் இதற்கான தூதரக மட்டத்திலான ஒருங்கிணைப்புப் பணிகளை வழங்கிய இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் ஆகியவற்றுக்கு பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது விசேட நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

உலக சுற்றுச்சூழல் தினம் (05) இன்றாகும். தேசிய சுற்றுச்சூழல் தின விழா ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. “காலநிலை நடவடிக்கைகளுக்கான உலகளாவிய அழைப்பு என்பது இம்முறை சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இருப்பினும்இ “துளிர்க்க இடமளிப்போம் - காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாட இலங்கை தீர்மானித்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 05 (இன்று) வரை சுற்றுச்சூழல் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கமையஇ சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களினால் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதன்படி, இம்முறை சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரிடிகல காப்பகம், அலியாவெடுனு வெவ காப்பகம், புலேகல காப்பகம், கோன்கெட்டியாவ காப்பகம் மற்றும் கல்லஞ்சிய காடு  ஆகிய ஐந்து காடுகளும் பாதுகாக்கப்பட்ட காப்பகங்களாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளன. ‘குடா புபுல’ நீர்ஊற்று காப்பகமும் புதிய காப்பகமாக மாற்றப்பட்டது. இந்த ஐந்து காப்பகங்கள் உட்பட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட காப்பகங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன. இம்முறை காப்பகங்களாகப் பெயரிடப்பட்ட ஐந்து காடுகளும் அனுராதபுரம் மாவட்டத்திலேயே அமைந்துள்ளன என்பதுடன், இக்காப்பகங்கள் சுமார் 2169 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டதாகும்.

சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சினால் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காடழிப்பைத் தடுப்பதற்காக ‘வனப் பாதுகாப்பு’ என்ற பெயரில் புதிய திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டது. முப்படைகள், விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காடழிப்புத் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் உருவங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் ஊடாகத் தயாரிக்கப்பட்ட போலி வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி, பணம் மோசடி செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா (Sri Lanka CERT)  கணினி அவசர காலப் பதிலளிப்புத் ஒன்றியம் அமைப்பிற்குப் பல புகார்கள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பிரபல விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உருவங்களை மோசடியாகப் பயன்படுத்தி இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. Deep Fake  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வஞ்சகமாகத் தயாரிக்கப்பட்ட இந்த வீடியோக்கள் மூலம் பண மோசடி செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தப் புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை முதலீடு செய்து மாதாந்தம் லாபம் ஈட்டுமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கோரிக்கை விடுப்பது போன்று இந்த போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், இது குறித்து அவதானமாக இருக்குமாறு ஸ்ரீலங்கா சிஇஆர்டி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பான போலிச் செய்திகளாகவும் இவ்வாறான படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இந்த போலி வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் தோன்றும் இணைப்பிற்குள் (link) சென்று பணத்தை முதலீடு செய்து லாபம் பெற்றுக்கொள்ளுமாறு அந்தச் செய்திகள் மூலம் கோரப்படுவதாக 'சேர்ட்' (ஊநுசுவு) நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான இணைப்புகள் (link) ஊடாக இணையப் பயனாளர்களைப் போலி இணையத்தளங்களுக்கு திசைதிருப்பி, அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் பணத்தையும் திருடியுள்ள சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், இணையத்தில் உலா வரும் இதுபோன்ற போலி வீடியோக்கள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு 'சேர்ட்' நிறுவனம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த இணைப்புகளுக்குள் பிரவேசித்து உங்களது பெறுமதிமிக்க தரவுகளை மோசடிக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் எனவும், இவ்வாறான போலிச் செய்திகள் மற்றும் மோசடிகளுக்குப் பலியாக வேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா CERT நிறுவனம் பொதுமக்களுக்கு மேலும் அறிவித்துள்ளது.

 

இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் அதிகாரிகளின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடலொன்று நேற்று (03) நடைபெற்றது.

இதன்போது, அரச ஊழியர்களுக்காக மின்-கற்றல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துதல், டிஜிட்டல் எழுத்தறிவைக் கட்டாயமாக்குதல், சைபர் பாதுகாப்பு அறிவை வளர்த்தல் மற்றும் கைபேசிகள் ஊடாக 'மைக்ரோ லேர்னிங்'  முறையொன்றைச் செயல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அரச சேவையை நபர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பிலிருந்து, கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட நவீன சேவை வடிவமாக மாற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இவ்வேலைத்திட்டம் முப்பரிமாணத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ளதுடன், தற்போது சேவையிலுள்ள அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்தல், புதிய நியமனங்களுக்கு டிஜிட்டல் எழுத்தறிவைக் கட்டாயமாக்குதல் மற்றும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப மேம்படுத்துதல் என்பன இதன் முக்கிய நோக்கங்களாகும்.

இதன் முதற்கட்டமாக, சைபர் பாதுகாப்பு குறித்த அடிப்படை விழிப்புணர்வுப் பாடநெறிகள் மற்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் மற்றும் கூட்டுக் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறைப் பயிற்சிகளை அரச அதிகாரிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, அரச  நிர்வாக அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து இவ்வேலைத்திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதுடன், தொடர்புடைய தரப்பினருடன் மேலதிகமாகக் கலந்துரையாடி அறிவியல் ரீதியான திட்ட வரைபொன்றைத் தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

கிராமப்புற மக்களின் பன்முக வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ தேசிய வியாபாரத்தின் கீழ் செயல்படுத்தப்படும் “பிரஜா சக்தி – ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” நிகழ்ச்சித்திட்டம் இன்று (02) ஆரம்பமாகிறது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 25,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் ஆரம்பக் கட்டமாக நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் 1,000 திட்டங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விழாஇ கம்பஹா மாவட்டத்தின் மஹர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகஸ்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் பின்வல பகுதியில் கிராமிய அபிவிருத்திஇ சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேபோன்று நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்திலான பிரதான நிகழ்ச்சித்திட்டங்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த பிரதான திட்டத்தின்கீழ் பின்வல அணைக்கட்டு (அமுண) புனரமைப்பு மற்றும் அதன் பக்கச்சுவர்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் குறைந்தது 3 முதல் 5 திட்டங்களின் வேலைகளை ஆரம்பிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘பிரஜா சக்தி’ தேசிய வியாபாரத்தின் கீழ் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகளினால் அடையாளம் காணப்பட்ட உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் திட்டங்களுக்குத் தேவையான நிதிகள் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதுடன், கிராமப்புற மக்களின் பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்கு இதுவொரு முக்கியமான படியாக அமையும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

புத்தரின் திருவாழ்வின் மூன்று மகத்தான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் திருநாள், உலகெங்கும் வாழும் பௌத்த மக்களின் மிக உயரிய பண்டிகையாகும். பௌத்த பாரம்பரியங்களால் செழுமை பெற்ற வளமான பண்பாட்டை உடைய இலங்கை மக்கள், உலகளாவிய பௌத்தர்களுடன் ஒன்றிணைந்து இந்தப் புனிதத் திருவிழாவை ஆழ்ந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

புத்த தர்மம் என்பது, முழு உலகிற்கும் நடைமுறையில் பொருந்தக்கூடியதும், காலத்தால் அழியாததும் ஆகிய அமைதியின் செய்தியை எடுத்துச் செல்லும் உன்னதமான தத்துவப் போதனையாகும். கௌதம புத்தபகவான் உபதேசித்த முழு தர்ம போதனைகள்,  அன்பு, கருணை, காருண்யம், பெருந்தன்மை எனும் நான்கு பிரம்மவிஹாரங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது.

அதேபோல், அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்த உன்னதமான பாடத்தை புத்தபகவான் உள்ளிட்ட அனைத்து மகான்களும் போதித்த தர்மம் எடுத்துரைக்கிறது. வெளி உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முன், மனிதனின் உள்ளார்ந்த ஆன்மீக அமைதி உறுதியாக வேண்டும் என்பதைக் புத்த தர்மம் வலியுறுத்துகிறது. பொதுநல நோக்குகளுக்காக சமூகம் ஒன்றிணைவதற்கு புத்த தர்மம் காட்டும் இந்த உள்ளார்ந்த அமைதியான அணுகுமுறை, இதுவரை இல்லாத அளவிற்கு இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானது என்பதை நாம் உணர வேண்டும். சமீபத்தில் இலங்கையில் பாதயாத்திரை மேற்கொண்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பஞ்ஞாகர ஸ்வாமிகள் கொண்டு வந்த செய்தியும் இதுவே என நான் நம்புகிறேன்.

மேலும், வெசாக் கொண்டாட்டம் ஒரு மத விழாவாக மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கையின் அடையாளம், சமூக ஒற்றுமை மற்றும் கலைச்சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு மகத்தான பண்பாட்டு திருவிழாவாகவும் விளங்குகிறது. வெசாக் காலத்தில், கொள்கைப் பூஜைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடத்தப்படும் தானம், சீலம், தியானம்இ தர்ம போதனை நிகழ்ச்சிகள் மட்டுமன்றிஇ ஆமிச பூஜைகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகள், பௌத்த பக்திப் பாடல்கள், அழகிய விளக்குக் கூண்டுகள், கண்கவர் தோரணங்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவை, பௌத்தர்கள் மட்டுமல்லாது அனைத்து மதங்களையும் சேர்ந்த இலங்கையர்களின் ஒன்றுபட்ட பங்கேற்பால் மேலும் சிறப்புபெறுகின்றன. இதன் மூலம், அனைத்து இனங்களுக்கிடையேயான பரஸ்பர புரிதல்இ ஒற்றுமை மற்றும் இணைந்து வாழ்தல் வளர்க்கப்படும் இந்த வெசாக் திருவிழா, ஒற்றுமையின் ஒரு சின்னமாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அஹிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிர்களிடமும் பரந்து விரிந்த மைத்ரியை முன்னிறுத்தும் புத்த தர்மத்தின் சாரங்களை எங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் இணைத்துக்கொள்ள அனைவரையும் அழைத்து, தர்மத்தின் குளிர்ச்சியில் அனைத்து உள்ளங்களும் அமைதியடைந்து மகிழும் ஒரு பாக்கியமிக்க வெசாக் திருநாள் அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக அறிவித்து, நேற்று (28) ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ்,  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், எரிபொருள், பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு வழங்கல் அல்லது விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள், அதேபோல் அரசாங்க அச்சகம் உட்பட அரச ஊடகங்கள் அனைத்தும் இதில் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பிந்தைய அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை சீராக நடத்த அத்தியாவசியமானதாகவும், அவற்றுக்கு இடையூறு அல்லது தடங்கல் ஏற்படக்கூடும் என்பதையும் கவனத்தில் கொண்டு, கீழே குறிப்பிடப்பட்ட சேவைகள் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் உத்தரவின்படி, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க அவர்களின் கையொப்பத்துடன் நேற்று (28) இரவு இந்த அத்தியாவசிய சேவை வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் பின்வருமாறு:

1.         மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.

2.         பெட்ரோலியப் பொருட்கள், எரிவாயு உட்பட எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம்.

3.         மருத்துவமனைகள், நர்சிங் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் அதனுடன் ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, சேர்த்தல்,                               பாதுகாப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகள், பணிகள் மற்றும் தொழில்கள்.

4.         பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள்.

5.         நெடுஞ்சாலைகள், பாலங்கள், கழிவகற்றும் கான்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகள் உட்பட, சாலை, ரயில்                     மற்றும் விமான போக்குவரத்து சேவைகள், சுற்றுலா வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.

6.         குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் தொடர்பான அனைத்து சேவைகள்.

7.         உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல், பாதுகாப்பு மற்றும் விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.

8.         அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், விவசாயம் ஆராய்ச்சி                           உதவியாளர்கள், சமூக வலுவூட்டல் அதிகாரிகள், “க்ளீன் ஸ்ரீ லங்கா” மத்திய குழு அதிகாரிகள் உட்பட, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின்              கள மட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய அல்லது மேற்கொள்ளத் தேவையான அனைத்து சேவைகள், பணிகள் மற்றும் தொழில்கள்.

9.         ஆம்புலன்ஸ் (கிலன் ரத) சேவைகள்.

10.        இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்பீட்டு சேவைகள்.

11.        குடிநீர், மின்சாரம், கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை அமைப்புகள், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் (மலக்கழிவு அகற்றல்                         உட்பட), கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றல் தொடர்பாக உள்;ராட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் அனைத்து பணிகள் மற்றும் சேவைகள்.

12.        நீர்ப்பாசனத் துறையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.

13.        தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.

14.        தாழ்நில நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான அனைத்து சேவைகள்.

15.        விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சேவைகளுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் ஈதுல் அல்ஹா (ஹஜ்) திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நம்பிக்கையின்படி, அல்லாஹ்வின் மீது நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி மற்றும் அளவற்ற தியாகத்தைச் சின்னமாகக் காட்டும் இந்த ஹஜ் நினைவு, இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படை கடமைகளில் ஐந்தாவதாகக் கருதப்படும் மக்கா ஹஜ் யாத்திரையுடன் தொடர்புடையதனால் சிறப்புமிக்கதாகும்.

குழப்பமும் கலவரமும் நிறைந்த இன்றைய உலகில், மனிதர்களிடையே நிலைநிறுத்தப்பட வேண்டிய பரஸ்பர பிணைப்பின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் விரிந்த ஒரு முன்னுதாரணமாகவும் ஹஜ் திருநாள் விளங்குகிறது. இனம், சமூக அந்தஸ்து என்பவற்றை புறக்கணித்து, உலகின் பல திசைகளிலிருந்தும் வந்த இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து மதச்சடங்குகளை நிறைவேற்றும் இந்தத் தருணம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் உன்னதமான ஒரு முன்மாதிரியை உலகிற்கு வழங்குகிறது என நான் நம்புகிறேன்.

மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையால் உலகம் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு மத்தியிலும், மக்கா ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து நினைவுகூருவது, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வாழ்வில் காட்டிய அளவிலாத தியாகமும் அர்ப்பணிப்பும்தான்.

சுயநலத்தை விடப் பிரர் நலமே மேலோங்கும், அமைதி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர கருணையால் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் அரசின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தை கற்பிக்கும் ஹஜ் நினைவின் வழிகாட்டுதல்களை மேலும் மேலும் எங்கள் வாழ்க்கைக்கு நெருக்கமாக்கிக் கொள்வோம் என நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆன்மீக மதிப்புகளால் இலங்கை சமூகத்தை மேலும் மேலும் வளப்படுத்தி, அனைவருக்கும் பயன் அளிக்கும் ஒரு மேம்பட்ட நாட்டை உருவாக்க சகோதரத்துவத்துடன் முன்னேற அனைவரையும் அழைக்கின்றேன். இதனூடாக, இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் உன்னதமான

 ஈதுல் அல்ஹா திருநாள் அமைய வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

ஈத் முபாரக்!

அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

 

புத்தரின் திருமுகத்தன்மையை நினைவுகூர்ந்து நடைபெறும் 2026 அரச வெசாக் மகோற்சவம், மாத்தறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நாளை (27) ஆரம்பமாகிறது. அரச வெசாக் விழாவின் பிரதான நிகழ்ச்சி மிதெல்லவல பண்டைய விகாரையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த அரச வெசாக் மகோற்சவத்துடன் இணைந்து, மே 27 முதல் ஜூன் 02 வரையான காலப்பகுதி “வெசாக் வாரம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் வாரத்தின் போது, நாடு முழுவதும் மத, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி,

  • மே 28 அன்று சுகாதார நிகழ்ச்சிகள்,
  • 29 அன்று நெறிமுறை மேம்பாட்டு நிகழ்ச்சிகள்,
  • 30 அன்று சீலம் மற்றும் தியானப் புண்ணிய நிகழ்வுகள்,
  • 31 அன்று பிக்குகள் மற்றும் சீல்மாதாக்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகள்,
  • ஜூன் 01 அன்று ஆன்மிக விருத்தி நிகழ்ச்சிகள்,
  • ஜூன் 02 அன்று “க்ளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்துடன் இணைந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இவ்வாண்டு வெசாக் காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தீவெங்கும் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. வெசாக் வலயங்கள், தோரணங்கள் மற்றும் பக்தி கீதக் கச்சேரிகள் நடைபெறும் பகுதிகளில் பெரும் மக்கள் திரள்வார்கள் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் 79-வது உலக சுகாதார பேரவையில் பங்கேற்று வரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள், ஜப்பானின் நிப்போன் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவா அவர்களை சந்தித்து, சிறப்பு இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த கலந்துரையாடலின் போது, நிப்போன் அறக்கட்டளை நிதியளித்து இலங்கையில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து, குறிப்பாக மருத்துவமனை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக, விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பொது மக்கள் சுகாதாரம், கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகள், அதேபோல் நாட்டின் அபிவிருத்தி திட்டத்தில் முக்கிய முன்னுரிமையாக உள்ள கிராமப்புற வறுமையை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படக்கூடிய விசேட திட்டங்கள் பற்றியும் இங்கு விவாதிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார பேரவையின் தலைவர் என்ற வகையில், கௌரவ அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள், அந்தப் பிராந்தியத்தின் முன்னணி நாடுகளில் நடைமுறையில் உள்ள முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் மற்றும் முறைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடலை நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

நிப்போன் அறக்கட்டளை என்பது சமூக நலன், உலகளாவிய கடல் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக செயல்படும், ஜப்பானில் அமைந்துள்ள உலகின் முன்னணி தனியார் அறக்கட்டளைகளில் ஒன்றாகும். குஷ்டநோய் ஒழிப்பு, மாற்றுத்திறனாளி சமூகத்துக்கு ஆதரவு, உலகளாவிய கல்வி மற்றும் விவசாயத் திட்டங்கள் உள்ளிட்ட மனிதாபிமான மற்றும் சமூக நலச் சேவைகளை நிப்போன் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் 79-வது உலக சுகாதார பேரவையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றுள்ள சுகாதார மற்றும்  வெகுஜன ஊடக அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிப்போன் அறக்கட்டளையின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பக்கம் 1 / 44

Latest News right

"அசிதிசி வெகுஜன ஊடகம்" / "அசிதிசி - தொழில்நுட்ப" புலமைப் பரிசில் - 2026 நிகழ்ச்சித் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

ஜூன் 08, 2026
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில்முறை மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்,…

இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிப்பு

ஜூன் 07, 2026
இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கான உயர்தர தொழில்முறைத் தரங்களை அறிமுகப்படுத்துதல்,…

தேசிய சுற்றுச்சூழல் தின விழா இன்று அலரி மாளிகையில்

ஜூன் 05, 2026
உலக சுற்றுச்சூழல் தினம் (05) இன்றாகும். தேசிய சுற்றுச்சூழல் தின விழா ஜனாதிபதி அநுர குமார…

AI வீடியோக்கள் மூலம் நிதி மோசடிகள் தொடர்பான பல புகார்கள்

ஜூன் 05, 2026
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் உருவங்களைப்…

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள்

ஜூன் 04, 2026
இலங்கையை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் தேசிய வேலைத்திட்டத்திற்கு…

‘ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்’ இன்று ஆரம்பம்

ஜூன் 02, 2026
கிராமப்புற மக்களின் பன்முக வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ தேசிய…

வெசாக் வாழ்த்துச் செய்தி

மே 30, 2026
புத்தரின் திருவாழ்வின் மூன்று மகத்தான நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் திருநாள், உலகெங்கும்…

அரசாங்க அச்சகம் – அரச ஊடகங்கள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

மே 29, 2026
பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக அறிவித்து, நேற்று (28) ஒரு அதிவிசேட வர்த்தமானி…

ஹஜ் தின வாழ்த்துச் செய்தி

மே 28, 2026
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் ஈதுல் அல்ஹா (ஹஜ்)…

logo20190228 1

163, அஸிதிஸி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன் கொடை, கொழும்பு – 05, இலங்கை.

011-2513 459, 011-2513 460,
011-2512 321, 011-2513 498

info@media.gov.lk
secretary@media.gov.lk


facebook twitter

முக்கிய இணைப்புக்கள்