மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், ஆலய பிக்குகள் மற்றும் துறவிகள் தலைமையிலான மகாசங்கத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்தனர்.