கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோருடன் ஆயிரக்கணக்கான மக்கள் பெரஹராவைக் காணச் சென்றனர். ஸ்ரீ தலதா மாளிகையில் இந்திரராஜா ஹஸ்திய சதாடுக கலசத்தை சமர்பிக்கும் போது ஜனாதிபதி மற்றும் திருமதி விக்கிரமசிங்க அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.