தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள கடன் ஒப்பந்தம் அவ்வாறே செயற்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்னும் சில மாதங்களில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருபவர் யாராக இருந்தாலும், அரசாங்கம் யார் செய்தாலும், செய்து கொண்ட கடன் ஒப்பந்தம் மாறினால் 2025 வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க முடியாது என்றும் வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள தற்போதைய நிதியமைச்சரும் மற்றும் நிதி அமைச்சும் சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் படி 2025 ஆம் ஆண்டுக்குள் 5018 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு வள இடைவெளி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது என்றும் அதில் 663 மில்லியன் தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், 3855 மில்லியன் நிவாரணம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.