சமீபத்திய செய்தி

ரஷ்யாவில் நடைபெற்ற 18வது கசான் சர்வதேச முஸ்லிம் திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட "நியூஸ் பேப்பர்" திரைப்படத்திற்காக கிடைத்த விருதுகளுடன் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (15) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன் இணை தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன பங்களிப்பு வழங்கியுள்ளதுடன். இந்த விருது வழங்கும் விழாவில் குமார திரிமதுர மற்றும் சரத் கொத்தலாவல சிறந்த நடிகருக்கான இணை விருதை வென்றனர். இந்த படத்தின் இணை இயக்குனர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் என இந்த இருவரும் பங்களித்துள்ளனர்.

2022.09.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நிறுவுதல்

சமகால நெருக்கடியான பொருளாதார நிலைமையில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அதிக முன்னுரிமை வழங்கி மேற்கொள்ள வேண்டிய படிமுறைகள் தொடர்பாக துரிதமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, தேசிய பொருளாதார முகாமைத்துவப் பணிகளுக்குத் தேவையான மூலோபாய ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதற்காக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நிறுவுது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த குழுவானது, கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையிலும் மற்றும் கௌரவ பிரதமர் உள்ளிட்ட 05 அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. தேசிய இலக்கியக் கலைப் பெருவிழா நடாத்துதல்

இலக்கியம், கலை, அழகியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளை N;மம்படுத்துவதற்காக அரச இலக்கிய விருது விழா, தேசிய இலக்கிய விழா மற்றும் தேசிய இலக்கிய பெருவிழா வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்றது. தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் குறித்த விழாக்களை இவ்வாண்டில் நடாத்துவது உகந்ததாக அமையாததால், அதற்குப் பதிலாக, குறித்த இலக்கிய விழாவின் அனைத்து தனித்துவமான பண்புகளை உள்ளடக்கிய வகையில் 'தேசிய இலக்கிய கலைப் பெருவிழா' நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2022 ஒக்ரோபர் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டப வளாகத்தில் அரச துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து இவ்விழாவை நடாத்துவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.   

03. இலங்கை காலநிலை மாற்றங்கள் தொடர்பான மூன்றாவது தேசிய தொடர்பாடல்கள் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான வேலைச்சட்டக சமவாயத்திற்குச் சமர்ப்பித்தல்    

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான வேலைச்சட்டக சமவாயத்தின் பங்காள அரசாக இலங்கை சமகால காலநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாடல் அறிக்கையில் காலநிலை, பொருளாதார மற்றும் சமூகச் சூழல், தேசிய பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றம், குறைப்பு மற்றும் கடந்தகால போக்குகள் பற்றிய தகவல் பட்டியல், பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்கின்ற செயற்பாடுகள், காலநிலை மாற்றங்கள் தொடர்பான இடர்கள் மற்றும் அவற்றுக்கு இசைவாக்க நடவடிக்கைகள், கல்வி, பயிற்சி மற்றும் இயலளவு விருத்தி, தொழிநுட்ப பரிமாற்றங்கள், ஆய்வுகள் மற்றும் முறைசார்ந்த கண்காணிப்புக்கள் போன்றன உள்ளடக்கப்படல் வேண்டும்.

அதற்கமைய, காலநிலை மாற்றங்கள் தொடர்பாக நிபுணர் குழு மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொண்டு சுற்றாடல் அமைச்சால் இலங்கையில் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மூன்றாவது தேசிய தொடர்பாடல்கள் அறிக்கை – 2018-2021 தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான வேலைச்சட்டக சமவாயத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

04. சுகாதார அமைச்சுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ  உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நிதியிடல்

நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டத்தின் மூலம் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டத்தின் மூலம் 30 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ  உபகரணங்களைக் கொள்வனவுக்குப் பயன்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

05. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்;ப்பித்தல்

1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கீழ்க்காணும் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாட்டு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது :

  • அரச துறையின் இறக்குமதிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட துறைகளில் நடவடிக்கை ஒத்துழைப்புக்களை உறுதிப்படுத்துவதற்காக ஒருசில தொழிற்றுறைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் 2022.08.23 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்
  • நிலவுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு அந்நியச் செலாவணிப் பணத்திரவத்தன்மையை முகாமைத்துவம் செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி பரிந்துரைகளின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டுள்ள பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு 2022.08.23 திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.

06. அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல்

தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையால் சேவை யாப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைமுறை ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நேரிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளைக் கையாண்டும், அத்துடன் கடந்தகால அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரமும் அடிக்கடி பட்டதாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்கள் நேரடியாக அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையால், ஒட்டுமொத்தமாக அரச சேவை மிகையாக காணப்பட்டாலும் சேவைப் பிரிவுகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாக பதிவாகியுள்ளது.

அதேபோல், ஆட்சேர்ப்பின் போது பல்வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றமையால் ஏற்பட்;டுள்ள விளைவாக அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக பொருத்தமான படிமுறைகளை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, மேற்குறிப்பிட்ட விடயங்களை மீளாய்வு செய்து, அரச சேவையை மிகவும் வினைத்திறனாகவும், பயன்வாய்ந்ததாகவும் மேற்கொண்டு செல்வதற்காக மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக முன்னுரிமைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான கால அட்டவணையை அறிமுகப்படுத்தவும், தற்போது அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குப் பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று தபால் அமைச்சிலுள்ள தமது அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஊடகத்துறை அமைச்சின் செயலாளரும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவருமான அனுஷ பெல்பிட்ட உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம்.

பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96ஆவது வயதில் காலமானார்.

பிரிட்டனின் 70 ஆண்டு முடியாட்சியை மேற்கொண்ட மகாராணி இரண்டாம் எலிசபெத் ,நேற்று (08) காலமானார். இறக்கும் போது அவருக்கு 96 வயது.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்வியுற்றதும் அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்

இந்நிலையில் அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரிட்டன் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர் (Elizabeth Alexandra Mary Windsor), லண்டனில் உள்ள மேபயார் (Mayfair) நகரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்தார். 1952இல் அரியணைக்கு வந்த அவர், 70 ஆண்டுகளாக அரியாசனத்தில் இருந்தார்.

இவர் இங்கிலாந்திற்கு மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் உள்ளார். ராணி 2-ம் எலிசபெத்

இங்கிலாந்து பிரதமர் தேர்வில் முக்கிய பங்கு வகித்தார். ஒவ்வொரு முறை இங்கிலாந்திற்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்போது அதில் ராணி 2-ம் எலிசபெத்தின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்தார். பிலிப் - எலிசபெத் தம்பதிக்கு 3 மகன்கள் 1 மகள் என 4 பேர் உள்ளனர். ராணி 2-ம் எலிசபெத் நேற்று உயிரிழந்ததையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீண்டகாலம் ஆட்சி செய்த நபர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2-வது நபர் என்ற பெருமையை ராணி 2-ம் எலிசபெத் பெற்றுள்ளார். பிரான்ஸ் மன்னராக செயல்பட்ட 14-ம் லுயிஸ் உலகின் நீண்டகால மன்னராக செயல்பட்டார்.

1643 ஆண்டு மே 14 ஆம் திகதி முதல் 1715 செப்டம்பர் 1 ஆம் திகதி வரை 14-ம் லுயிஸ் மன்னராக ஆட்சி செய்தார். 72 ஆண்டுகள் 110 நாட்கள் ஆட்சி செய்த 14-ம் லுயிஸ் உலகின் நீண்ட நாட்கள் ஆட்சி செய்தவர்  என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. தினித் சிந்தக கருணாரத்ன (Dinith Chinthaka Karunaratne) அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (8) அரசாங்க தகவல் திணைக்களத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னணி பத்திரிக்கை ஆசிரிய  பீடத்தின் அங்கத்தவராகவும் பணியாற்றியதோடு, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விஜய பத்திரிகை நிறுவனத்தின் லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த திரு. தினித் சிந்தக கருணாரத்ன, வெகுசன ஊடகத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிக காலம் இணை செய்தி ஆசிரியர் உள்ளிட்ட பல பொறுப்புவாய்ந்த பதவிகளில் சிறந்த அனுபவங்களைக் கொண்ட ஊடகவியலாளராவர்.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவனாகிய புதிய பணிப்பாளர் நாயகம், உயிரியல் விஞ்ஞானப் பட்டதாரியாவதுடன், அமெரிக்காவின் கலிபோனியா சென்ரா மொனிகா பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் பற்றிய உயர்கல்வியையும் பெற்றுள்ளார். திரு. தினித் சிந்தக கருணாரத்ன உள்ளூரிலும் சர்வதேச ரீதியாகவும் பரந்தளவு அனுபவங்களைப் பெற்றுள்ளார்.

புதிய தகவல் பணிப்பாளர் நாயகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. அனூஷ பெல்பிட, முன்னாள் தகவல் பணிப்பாளர் நாயகம் திரு. மொஹான் சமரநாயக்க உள்ளிட்ட வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அதிகாரிகளும், வெகுசன ஊடக துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் 37 பேர் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட இராஜாங்க அமைச்சர்களின் பெயர் விபரங்கள்!
01- கௌரவ. ஜகத் புஷ்பகுமார- வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு
02- கௌரவ. ரஞ்சித் சியம்பலாபிட்டிய- நிதி
03- கௌரவ. லசந்த அலகியவண்ண- போக்குவரத்து
04- கௌரவ. திலும் அமுனுகம- முதலீட்டு ஊக்குவிப்பு
05- கௌரவ. கனக ஹேரத்- தொழில்நுட்பம்
06- கௌரவ. ஜனக்க வக்கும்புர- மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி
07- கௌரவ. ஷெஹான் சேமசிங்க- நிதி
08- கௌரவ. மொஹான் பிரியதர்சன டி சில்வா- விவசாயம்
09- கௌரவ. தேனுக விதானகமகே- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
10- கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன்- பாதுகாப்பு
11- கௌரவ. ரோஹண திசாநாயக்க- விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
12- கௌரவ. அருந்திக்க பெர்ணான்டோ- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
13- கௌரவ. விஜித்த பேருகொட- பிரிவேனா கல்வி
14- கௌரவ. லொஹான் ரத்வத்தை- பெருந்தோட்டக் கைத்தொழில்
15- கௌரவ. தராக்க பாலசூரிய- வெளிவிவகாரம்
16- கௌரவ. இந்திக்க அனுருத்த- மின்வலு, எரிசக்தி
17- கௌரவ. சனத் நிசாந்த- நீர் வழங்கல்
18- கௌரவ. சிறிபால கம்லத்- நெடுஞ்சாலைகள்
19- கௌரவ. சாந்த பண்டார- வெகுஜன ஊடகம்
20- கௌரவ. அநுராத ஜெயரத்ன- நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு
21- கௌரவ. எஸ்.வியாழேந்திரன்- வர்த்தகம்
22- கௌரவ. சிசிர ஜெயக்கொடி- சுதேச மருத்துவம்
23- கௌரவ. பியல் நிசாந்த டி சில்வா- மீன்பிடி
24- கௌரவ. பிரசன்ன ரணவீர- சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சி
25- கௌரவ. டீ.வி சானக்க- வனஜீவராசிகள், வனவளப் பாதுகாப்பு
26- கௌரவ. டீ.பி.ஹேரத்- கால்நடை அபிவிருத்தி
27- கௌரவ. சசீந்திர ராஜபக்-ஷ நீர்ப்பாசனம்
28- கௌரவ. மருத்துவர் சீதா அரம்பேபொல- சுகாதாரம்
29- கௌரவ. காதர் மஸ்தான்- கிராமிய பொருளாதாரம்
30- கௌரவ. அசோக்க பிரியந்த- உள்நாட்டலுவல்கள்
31- கௌரவ. அரவிந்த குமார்- கல்வி
32- கௌரவ. கீதா குமாரசிங்க- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
33- கௌரவ. சிவநேசத்துரை சந்திரகாந்தன்- கிராமிய வீதி அபிவிருத்தி
34- கௌரவ. கலாநிதி சுரேன் ராகவன்- உயர் கல்வி
35- கௌரவ. டயனா கமகே- சுற்றுலாத் துறை
36- கௌரவ. சாமர சம்பத் தஸநாயக்க- ஆரம்பக் கைத்தொழில்
37- கௌரவ. அனுப பியும் பஸ்குவால்- சமூக வலுவூட்டல்

2022.09.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
 
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)
01. கல்விப் பிரிவின் ஒத்துழைப்புக்கள் தொடர்பான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
 
கல்விப் பிரிவின் ஒத்துழைப்புக்களுக்கான ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி, இலங்கை சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் 'கீல்' பல்கலைக்கழகத்திற்கும் (University of Keele) இடையில் முத்தரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் (Department of External Resources), வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புக்களையும் உள்ளடக்கி முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு  அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
02. கற்கைத் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தம்
 
கற்கைத் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி மற்றும் சீனாவின் ரியன்ஜீன் பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலைப் பாடசாலைக்கும் (Tianjin University, School of Architecture) இடையில் வெளிவிவகார அமைச்சு, தேசிய வரவு செலவுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் (Department of External Resources)    ,  சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் உள்ளடங்கலாக, தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு  அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
03. பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2022 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டு இறுதி முன்னேற்றங்கள்
 
நிரல் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாரிய அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு இறுதி வரைக்குமான பௌதீக ரீதியான முன்னேற்றங்கள் மற்றும் குறித்த கருத்திட்டங்கள் தொடர்பாகக் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வைத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கமைய 5.8 ட்ரில்லியன் ரூபாய்களின் ஒட்டுமொத்த முதலீட்டுடன், 1,000 மில்லியன் ரூபாய்களுக்கு மேற்பட்ட 260 பாரியளவிலான கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
 
அவற்றில் 125 கருத்திட்டங்களுக்காக வெளிநாட்டு நிதியிடல் மூலங்களிலிருந்து நிதி வழங்கப்படுவதுடன், இக்கருத்திட்டங்கள் பூர்த்தியாக வேண்டிய காலம் 2030 வரை காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், நாட்டில் நிலவிய வெளிநாட்டு செலாவணி நெருக்கடிகளால் ஏற்பட்ட இறக்குமதி மட்டுப்பாடுகள், மூலப்பொருட்களின் பற்றாக்குறை, எரிபொருள் நெருக்கடி, மின்வெட்டு, பணவீக்கத்தால் விலை அதிகரிப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய ஒப்பந்த முகாமைத்துவப் பிரச்சினைகளால் குறித்த அபிவிருத்திக் கருத்திட்டங்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
 
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த தகவல்களைக் கருத்தில் கொண்டு மேற்படி கருத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதை உறுதிப்படுத்தவதற்காக குறித்த தரப்பினர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் நிலவுகின்ற பிரச்சினைகளைத் துரிதமாகத் தீர்வுகாண்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு அக்கருத்திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் அவர்களின் செயலாளர் தலைமையில் சிரேஷ்ட அலுவலர்களுடன் கூடிய அலுவலர் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 
 
04. அரச தொழில்முயற்சிகள் மீள்கட்டமைப்பு அலகொன்றை நிறுவுதல்
 
அரசுக்குச் சொந்தமான வணிக நடவடிக்கைகளின் செயலாற்றுகை நீண்டகாலமாக மகிழ்ச்சியடையக்கூடிய நிலைமையில் காணப்படாமையால், ஒருசில வர்த்தகங்கள் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குகின்றது. இந்நிலைமை திறைசேரிக்குப் பாரியளவிலான அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றமையால், அவ்வாறான வர்த்தகங்களை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொண்டு செல்வதற்கான மாற்றுப் பொறிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.
 
அதற்கமைய, திறைசேரி மீது சுமத்தப்பட்டுள்ள நிதிச்சுமையைக் குறைத்துக் கொள்வதற்கான முறைகளை அறிமுகப்படுத்துதல், அரசுக்குச் சொந்தமான வர்த்தகங்களின் முழுஅளவிலான செலாற்றுகையை அதிகரித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு அரச தொழில்முயற்சிகளை மீள்கட்டமைத்தல் தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரச தொழில் முயற்சிகள் மீள்கட்டமைப்பு அலகை நிறுவுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
05. அரச – தனியார் பங்குடமை தேசிய முகவர் நிறுவனத்தை தாபித்தல்
 
இலங்கையில் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர்கள் முகங்கொடுக்கின்ற சிரமங்கள் மற்றும் பிரச்சினைகளை அடையாளங் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்காக முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், அரச – தனியார் பங்குடமைக் கருத்திட்டங்களை அடையாளங்கண்டு குறித்த நிலையான காலப்பகுதியில் அக்கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் அரச – தனியார் பங்குடமை தேசிய முகவர் நிறுவனத்தைத் தாபிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
06. தேசிய போசாக்கு கொள்கை – 2021-2030
 
மக்கள் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதற்கு அவகாசம் வழங்குகின்ற பாதுகாப்பான உணவுச் சூழல் இருத்தல் உள்ளிட்ட மக்களுடைய போசாக்கு நிலைமையை ஆரோக்கியமாகப் பேணிச் செல்வதற்கு தாக்கம் செலுத்துகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளை வழங்கும் நோக்கில் 'தேசிய போசாக்கு கொள்கை 2021-2030' தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கையர்களுக்குமான உயர்வான போசாக்கு எனும் தூரநோக்கு மற்றும் அதனை செயற்படுத்துவதற்கான மூலோபாய சட்டகத்துடன் குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
07. பொதுச் சுகாதாரப் பராமரிப்புக்கள் தொடர்பான கொள்கை மற்றும் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு பிரதான திட்டம் 
 
வீட்டுமட்ட திண்மக்கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அத்துடன், நிறுவன ரீதியான, வணிக மற்றும் தொழிற்சாலைகளில் திண்மக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும், அவற்றைப் பாதுகாப்பாக சேகரித்தல், சுத்திகரித்தல், அகற்றல் மற்றும் அதுதொடர்பான சுகாதார நடைமுறைகள் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக்கள் எனக் கருதப்படும். ஐக்கிய நாடுகள் சபை அதன் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய நிகழ்ச்சிநிரலில் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்குதல் நாட்டின் அபிவிருத்தியில் முக்கியமான தேவையாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
 
அதற்கமைய, பொதுச் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்குவதற்கு ஏற்புடைய பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்துத் தரப்பினர்களும் ஒரு சட்டகத்திற்கு சரியான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை கூடிய நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்தும் வகையில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட ஏனைய தரப்பினர்களின் ஆலோசனைகளுடன் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் பொதுச் சுகாதாரப் பராமரிப்புக்கள் பற்றிய தேசிய கொள்கை மற்றும் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2030 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக குறித்த கொள்கை முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
08. ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் 'காபன் நடுநிலைப்படுத்தல்' திட்டத்தின் ஒருங்கிணைந்த பொறிமுறையை நடைமுறைப்படுத்தல்
 
இலங்கை 2016 செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஏற்று அங்கீகரித்துள்ள காலநிலை மாற்றங்கள் தொடர்பான பரிஸ் ஒப்பந்தத்திற்கமைய பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக எரிசக்தி, தொழிற்சாலைகள், போக்குவரத்து, திண்மக்கழிவு, வனங்கள் மற்றும் விவசாயத் துறைகளின் கீழ் தேசிய ரீதியாக நிச்சயிக்கப்பட்ட பங்களிப்புக்கள் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
 
ஜப்பான் 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ள 'காபன் நடுநிலைப்படுத்தல்' ஒருங்கிணைந்த பொறிமுறை மூலம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் ஒருங்கிணைந்து, பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், அத்துடன் குறித்தளவில் குறைக்கப்பட்ட அளவை ஒப்பந்தங்களை மேற்கொண்ட நாடுகள் மற்றும் ஜப்பானுக்கும் இடையில் சதவீத அடிப்படையில் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த பொறிமுறையை இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நடைமுறைப்படுத்துவதற்காக இருநாடுகளுக்குமிடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல், தொழிலில் அமர்த்துதல் மற்றும் மீளவும் நாட்டுக்க அழைத்தல் தொடர்பாக மலேசியா அரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  
தொழிலாளர் ஆட்சேர்ப்பு, தொழிலில் அமர்த்துதல் மற்றும் மீளவும் நாட்டுக்க அழைத்தல் தொடர்பாக மலேசியா அரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று 2016 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்டுள்ளதுடன், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் 2021 திசம்பர் மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் புரிந்துணர்வ ஒப்பந்தத்தை நீடித்து புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக தொழில் உறவுகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல் 
 
நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்ட ஆளொருவரின் மேன்முறையீட்டைக் கருத்தில் கொள்ளும் போது அந்நபர் தடுப்புக் காவலில் இருந்த காலப்பகுதி அல்லது அதன் ஒரு பகுதியை அவரது தண்டனைக் காலத்தின் ஒருபகுதியாக கணிப்பிடுவதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட்டு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது மிகவும் பொருத்தமானதென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட அலகின் குற்றவியல் உபகுழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
அதற்கமைய 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 323(5) ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 11. சேவை மூப்பு பாதிக்காத வகையில் அரச ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்கல்
 
2022 யூன் மாதம் 13 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, சேவை மூப்புப் பாதிக்காத வகையில் அரச ஓய்வூதியதாரர்களுக்கு உள்ளூரில் விடுமுறை வழங்குவதற்கான பரிந்துரைகள் வழங்குவதற்காக சிரேஷ்ட அலுவலர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவால் உயர்ந்தபட்சம் 05 வருடகாலம் வரைக்கும் சம்பளமற்ற விடுமுறை வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
12. உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக பல்துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறை 
 
நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மிகவும் சவால்மிக்க விடயமாக உணவுப் பாதுகாப்பு அடையாளங் காணப்பட்;டுள்ளதுடன், உள்ளுர் விவசாய உற்பத்திகள் குறைவடைந்தமையாலும், சர்வதேச ரீதியில் விலையேற்றம் போன்ற இப்பிரச்சினை மேலும் தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலைமையின் கீழ் தொடர்ந்துவரும் காலங்களில் மோசமான உணவுப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தால் விலைஅதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதால், அது உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும். சமகால பொருளாதார நெருக்கடிகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தல் மற்றும் குடும்ப வருமானங்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கங்களால் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்கள் மேலும் மோசமடைந்துள்ளதுடன், உள்ளுர் பணஅலகில் ஏற்பட்ட வீழ்ச்சியடைந்துள்ளமையால் இறக்குமதி விநியோகங்களில் ஏற்பட்ட மட்டுப்பாடுகளால் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அதற்கமைய, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக துரித படிமுறைகளாக அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கான குறுகியகால தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்காக தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு சபை மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான பல்துறைசார் ஒருங்கிணைந்த பொறிமுறையை நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
13. தேசிய பாதுகாப்பு தொடர்பான முழுமையான சட்ட முறைமையை அறிமுகப்படுத்தல்
 
பயங்கரவாதம் மற்றும் வன்முறையான தீவிரவாதத்தின் புதிய வடிவங்கள் தொடர்பான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக தற்போது காணப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சடடங்களிலுள்ள பலவீனங்களை தவிர்ப்பதற்கும், அவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும், சட்ட வலுவாக்கம் செய்வதற்கும், விசாரணை மற்றும் புலனாய்வு செயற்கருவிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரிவான தேசிய பாதுகாப்பு சட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
 
அதற்கமைய, குறித்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச தரநியமங்கள்ஃபரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பாக முழுமையான சட்ட முறைமையொன்றுக்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள்: நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்: மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
 14. பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டலுக்காக சட்டமூல வரைபுக்கு அங்கீகாரம் பெறல்
 
பால்நிலை அடிப்படையிலான சமத்துவமின்மையைக் குறைப்பதன் மூலம் பெண்களை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் சில சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டம் 'லிய சரணி' எனும் பெயரில் பெண்களுக்கான தேசிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
பெண்களுக்கான கொள்கை வகுப்புக்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் பற்றிய தேசிய பெண்கள் குழு மற்றும் பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான இலங்கை பெண்கள் பணியகம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தேசிய மட்டத்தில் சட்டபூர்வமாக இயங்காமை, பெண்கள் வலுவூட்டல் தொடர்பாக காணப்படுகின்ற பொறிமுறையில் முக்கிய பலவீனமாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கைப் பெண்களின் பால்நிலைச் சமத்துவமும், உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை உட்சேர்த்து 'பெண்கள் சமத்துவம் மற்றும் வலுவூட்டல் சட்டமூலத்தை' தயாரிப்பதற்கான அடிப்படைகளைக் கொண்டு அடிப்படைச் சட்டமூலத்தை தயாரிக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடம் கோருவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. 
 
 

156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் (03) பிற்பகல் விசேட நிகழ்வு பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதிக்கு, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜயந்த குணவர்தன சார்பில் 'ஜனாதிபதி பொலிஸ் வீர பதக்கம்" வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், பாராளுமன்றத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 30 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது. இந்த இரண்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தொடர்ந்தும் முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அன்றையதினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்திருந்தால் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்திருக்கும் என்பதுடன் சட்டத்தின் ஆட்சியும் மீறப்பட்டிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பொலிசார் சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பையும் பாதுகாத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முழு பொலிஸ் திணைக்களத்திற்கும் மரியாதை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் பொலிஸ் வெகுமதி நிதியத்திலிருந்து, விரைவில் ஸ்தாபிக்கப்படவுள்ள சட்ட நிவாரண நிதியத்துக்கு மாற்றீடு செய்யப்படவுள்ள 100 மில்லியன் ரூபாவிற்கான காசோலையை பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேற்கத்தேய இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் பொலிஸ் நாய் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன.

இலங்கையில் முதல் அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம்  2022 செப்டெம்பர் 01அன்று இலங்கை பாராளுமன்றத்தில் நினைவு அஞ்சல் அட்டையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளது.

1872 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கையின் முதலாவது தபால் அட்டையின் 150 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 1872 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் அட்டையின் புகைப்படத்துடன் கூடிய இந்தப் புதிய அஞ்சல் அட்டையை வெளியிடப்படவுள்ளது.

1872 ஆம் ஆண்டில், இந்த அஞ்சல் அட்டை 02 rjk; ngWkjpAld; விக்டோரியா மகாராணியின் மேல் உடலை சித்தரிக்கும் முத்திரை தலையுடன் வெளியிடப்பட்டது மற்றும் 20 ரூபாய் முகமதிப்புடன் புதிய அஞ்சல் அட்டை வெளியிடப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முத்திரை சேகரிப்பாளர்களுக்காக இந்த நினைவு அஞ்சல் அட்டையுடன் கூடிய சிறப்புப் பொதியை (கோப்புறை) குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகளில் வெளியிடவும் தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

 
 

 

அரசியல் நோக்கங்களை புறந்தள்ளிவிட்டு தேசிய இலக்குகளுக்காக மீண்டும் தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போதே தாயகத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்துடன் போட்டியிட்டு முன்னேறக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உருவாக்க வேண்டும்.

இல்லையென்றால் நாட்டை உலகிலிருந்து தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான தருணத்தில் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தேசத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அனைவரினதும் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டம் இதுவரையில் நாட்டில் நிலவும் பொருளாதார முறையை மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.

உலகிற்கு ஏற்ற தேசிய பொருளாதாரக் கொள்கையை அமைப்பதற்கான அடிப்படையும் இதுவே.

அதன்படி, 25 ஆண்டுகளுக்கு தேசிய பொருளாதாரக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் கொண்டிருக்கும்.

புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விரிவான கொள்கை அடுத்த வருட வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் முன்வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

இலங்கையில் 100வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், அவை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் புதிய முன் மொழிவுகளை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

2021இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% ஆக உள்ள அரசாங்க வருமானத்தை 2025க்குள் 15%ஆக உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.

25 ஆண்டுக்கான தேசிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்படும்.

அக்டோபர் முதலாம் திகதி முதல் பெருமதி சேர்க்கப்ட்ட வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல வரித் திட்டங்கள் அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்பு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக குறைக்கப்படும். தற்போது பணியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெற வேண்டும்.

இலத்திரனியல் மின்சார வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும்.

வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் 2023 வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படும்.

அரச வளங்களின் அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பு மூலோபாய விடயங்களில் மறுசீரமைப்புக்கு முன்மொழிவு

அரசு நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் கழிவுப்பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் கண்காணிக்க அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்படும்

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மானியம் தொடர்ந்து வழங்கப்படும்

தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகம் உறுதிசெய்யப்படும். இதற்காக 25 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

மண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மானியம்.

முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு 5,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை உதவித்தொகை வங்கப்படும். பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக பல திருத்த சட்ட மூலங்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்டும்.

விவசாய அபிவிருத்திக்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், இளைஞர்களை விவசாயத்தில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கை.

வேலையற்று இருக்கும் குழுக்களுக்கு 20 ஏக்கர் நிலம் வழங்க நடவடிக்கை.

கர்ப்பிணி பெண்களுக்காக தற்போது வழங்கப்படும் 20 000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருள் பொதிக்கு மேலதிகமாக 2500 ரூபாய் வழங்கப்படும்.

சமுர்த்தி பயனாளிகள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் 5,000 ரூபாவில் இருந்து 7,500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

தேசிய கடன் முகாமைத்து நிறுவனம் நிறுவப்படும். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

வெளிளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் கிளைகளை திறப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கும் மத விழாக்களில் கலந்துகொள்வதற்குமாக இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

அரச வங்கிகளின் 20% பங்குகள் அதன் ஊழியர்கள் மற்றும் வைப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.

மின்சார மோட்டார் சைக்கிளை தயாரிப்பதறகு தேவையான பாகங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக புலம்பெயர் அலுவலகம் மற்றும் நிதியம் ஒன்று நிறுவப்பபடும்

ஊழலை ஒழிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் மற்றும் பொறிமுறை அறிமுகப்படுத்தப்படும்.

களனி ரயில் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களிடம் இருந்து பெறுகைகள் கோரப்படவுள்ளது.

சிறு விவசாயிகள் மே மாதம் வரை அரசு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதற்காக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 680 மில்லியன் ரூபாய் திறைசேரியால் செலுத்தப்படும் என பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தார்.

கொழும்பு – யாழ். ரயிலில் நேற்று மதியம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் ரயில் நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை - கொழும்பு ரயில் சேவையை மேம்படுத்துவது, மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது அமைச்சர் இரவு தபால் சேவையின் மீள் ஆரம்பம் பற்றியும் அறிவியல் நகர் மற்றும் சாவகச்சேரி ரயில் நிலையங்களில் உத்தரதேவி ரயில் தரித்து நிற்குமெனவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

 

 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆரம்பச் செயற்திட்டமான பஸ் பயணிகளுக்கான முற்கொடுப்பனவு பயண அட்டையை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டவையிலுள்ள மாக்கும்புர போக்குவரத்து நிலையத்திலிருந்து காலி நோக்கி பயணிக்கும் பஸ் பயணிகளிடம் அறிமுகம் செய்து வைப்பதனை படத்தில் காணலாம்.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆரம்பச் செயற்திட்டத்தினூடாக அடையாளம் காணப்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறும் அமைச்சர் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இச்சந்தர்ப்பத்தில் அறிவுறுத்தல் விடுத்தார்.

 

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…