போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தார்.

கொழும்பு – யாழ். ரயிலில் நேற்று மதியம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் ரயில் நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை - கொழும்பு ரயில் சேவையை மேம்படுத்துவது, மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது அமைச்சர் இரவு தபால் சேவையின் மீள் ஆரம்பம் பற்றியும் அறிவியல் நகர் மற்றும் சாவகச்சேரி ரயில் நிலையங்களில் உத்தரதேவி ரயில் தரித்து நிற்குமெனவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.