சமீபத்திய செய்தி

வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவினால் அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இன்று (13) வெகுசன ஊடக அமைச்சில் அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளளார்.

பணிப்பாளர் சபையில், பேராசிரியர் சமிந்த ரத்னாயக, பேராசிரியர்  டி.எம். அஜித் திசாநாயக்க,சட்டத்தரணி  ரகித அபேகுணவர்த்தன ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுயாதீன தொலைக்காட்சி(ஐ.ரி.என்) ஊடக வலையமைப்பின் தலைவராக  கணக்காளர் கனக்க அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிப்பாளர் சபையில் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, விரிவுரையாளர் திருமதி. மஹேஸ்வரி மஹிமதாஸ்,  ரவிந்திர குருகே, இந்திக லியனஹேவகே, ஹசந்த ஹெட்டியாராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹட்சன் சமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிப்பாளர் சபையில் பேராசிரியர் வண. மாகம்மன பஞ்ஞானந்த தேரர், பிரியந்த கே. ரத்னாயக, ஜே. யோகராஜ், எம். சிசிர குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

  • சம்பந்தப்பட்ட அறிக்கைகளை மின்னஞ்சல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்ப நடவடிக்கை
  • இலத்திரனியல் பிரதிகள் பாராளுமன்ற இணையத்தளத்தில் விசேட போட்ரலில் (web portal ) பதிவேற்றம்
  • அறிக்கைகளின் அச்சுப் பிரதிகளின் அவசியத்தைக் கவனத்தில் கொண்டு குழுக்களில் பயன்படுத்தவும், சில பிரதிகளை நூலகத்தில் வைப்பதற்கும் நடவடிக்கை

எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வருடாந்த அறிக்கைகள், செயலாற்று அறிக்கைகள் உள்ளிட்ட ஏனைய அறிக்கைகளின் இலத்திரனியல் பிரதிகள் (Soft Copies) மூலம் வெளிப்படுத்துவதற்கு அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் அத்துடன் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை குறைப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், அச்சிடும் செயற்பாடுகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள், தற்பொழுது பயன்பாட்டிலுள்ள குறுந் தட்டுக்களைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் அவற்றுக்காக அதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளமை, அது மாத்திரமன்றி குறுந்தட்டுக்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் கையாழ்வதற்கு அதிகாரி ஒருவரை நியமித்து, குறிப்பிட்ட தினத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் இலத்திரனியல் பிரதிகளை (Soft Copies)  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்,  பாராளுமன்ற இணையதளத்தின் ஊடாக நாளாந்தம் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை மடிக்கணினிகள் மற்றும் டப் இயந்திரங்கள் அல்லது கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக  அணுகக் கூடிய வகையில் இலத்திரனியல் பிரதிகளை பாராளுமன்றத்தின் விசேட வெப் போட்ரலில் (web portal) உள்ளீடு  செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இது தொடர்பில் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தி இதற்கான வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்பொழுது தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதுடன், பொதுச் சேவையை டிஜிட்டல் மயப்படுத்தும் ஈ-அரச சேவையை உருவாக்குவது காலத்துக்குத் தேவையானது என்பதைக் கவனத்தில் கொண்டு இவற்றை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு குழு தீர்மானித்திருப்பதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

 

01.      1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சட்டத்தை திருத்தம் செய்தல்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்கு திறைசேரியின் பிரதிநிதி ஒருவரையும் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் அல்லது அவருடைய பிரதிநிதி ஒருவரையும் நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் ஏற்பாடுகளை உள்வாங்கி 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2021.01.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்;கும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.      1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தை திருத்தம் செய்தல்

அரச நிதிச் சுற்றறிக்கை 423 இன் ஏற்பாடுகளுக்கமைய, செயலிழந்துள்ள நியதிச்சட்ட நிதியங்களை முடிவுறுத்துவதற்குத் தேவையான சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இறப்பர் கட்டுப்பாட்டு நிதியம் மற்றும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இறப்பர் மீள்நடுகை நிதியத்தையும் முடிவுறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நிதியங்கள் தொடர்பாக ஏற்புடைய சட்டங்களின் ஏற்பாடுகள் தொடர்ந்தும் அவசியமற்றதென்பதால், குறித்த இரண்டு சட்டங்களும் திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கமைய, 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தை   திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.      1950 ஆம் ஆண்டின் 43ம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் 46 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்தல்

தொழில் நியாய சபை நிறுவப்பட்ட காலம் தொடக்கம் சட்டத்தரணிகள் சமமான மட்டத்தில், தொழில் நியாய சபையில் தரப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜராவதற்கு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் மற்றும் சட்டத்தரணி அல்லாத பிரதிநிதிகளுக்கும் சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அண்மைக்காலம் தொடக்கம் சட்டத்தரணி அல்லாதவர்களுக்கு தொழில் நியாயசபையில் தரப்பினர்கள் சார்பாக ஆஜராவதற்குப் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இந்நிலைமையை தடுப்பதற்காக தொழில் ஆணையாளர் அல்லது அதிகாரம் பெற்ற அலுவலர் ஒருவர், மத்தியஸ்தர் ஒருவர், கைத்தொழில் நீதிமன்றத்தில் அல்லது தொழில் நியாயசபையில் ஆஜராவதற்கு குறித்த தரப்பினர்களால் அதிகாரம் வழங்கப்பட்ட பிரதிநிதி ஒருவருக்கு அத்தரப்பினர் சார்பாக ஆஜராவதற்கு இயலுமாகும் வகையில் 1950 ஆம் ஆண்டின் 43ம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2017.02.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்;கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.      2022/23 பெரும்போக நெற் செய்கைக்குத் தேவையான இரசாயன மற்றும் சேதன உரங்களுக்கான பெறுகைக் கோரல்

2022/23 பெரும்போகத்தில் 800,000 ஹெக்ரெயார் நெற் செய்கைக்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்குத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 2022/23 பெரும்போக நெற் செய்கைக்கு 150,000 மெட்ரிக்தொன் யூரியா உரம், 45,000 மெட்ரிக்தொன் மியுரேட் ஒஃப் பொஸ்பேற் (MOP)  உம், 36,000 மெட்ரிக்தொன் ட்ரிபல் சுப்பர் பொஸ்பேற் (TSP)  உம் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உரத் தொகையை வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.      கனடா உலகப் பல்கலைக்கழக சேவை (World University Service of Canada)நிறுவனத்துடன் தன்னார்வ ஒத்துழைப்பு வேலைத்திட்டம் 2020 – 2027 ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

கனடா உலகப் பல்கலைக்கழக சேவை (றுழசடன ருniஎநசளவைல ளுநசஎiஉந ழக ஊயயெனய) நிறுவனம், உலகளாவிய ரீதியில் குறைந்த சிறப்புரிமைகளைக் கொண்டுள்ள இளம் யுவதிகள் மற்றும் பெண்களுக்கான கல்வி, தொழில் மற்றும் வலுவூட்டல்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதில் தன்னார்வ ஒத்துழைப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறித்த வேலைத்திட்டங்கள் இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இருதரப்பினர்களுக்கிடையில் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 சூழலில் ஏற்பட்ட பயணத் தடைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குறித்த வேலைத்திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படாததுடன், அவ்வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் 10 இன் கீழ் 2.76 மில்லியன் கனடா டொலர்களை வழங்கி குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.      யூரியா உரம் பெறுகைக் கோரலுக்கான இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிலிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரைப் பெற்றுக்கொள்ளல்

2022/ 23 பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரப் பெறுகைக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரை இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியிடமிருந்து பெற்றுத் தருவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த ஒப்பந்தங்களில் கையொப்பிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07.      2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடினமான பொருளாதாரச் சூழ்நிலையால் 2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டின் நடுப்பகுதி தொடக்கம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்கு மேலதிகமாக வேறு அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு செலவிடுவதற்கு நேரிட்டமையாலும், 2022 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படும் போது காணப்பட்ட அமைச்சுக்களின் கட்டமைப்புக்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்துள்ளமையாலும், 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்திற்குப் பதிலாக திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

 
 
 
 
 
 

 

விக்கும் லியனகே என அழைக்கப்படும் லெப்டினன் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு அவர்கள் புதன்கிழமை (1) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.இராணுவத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த அவருக்கு இராணுவ தலைமையக பிரிகேட் தளபதி பிரிகேடியர் இந்திக பெரேரா சம்பிரதாயபூர்வமாக வரவேற்றதைத் தொடர்ந்து, கஜபா படையணியின் படையினரால் இராணுவ மரபுகளின்படி இராணுவ பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பின்னர், அணிவகுப்பு மைதானத்தை வந்தடைந்த தளபதியை பிரதி இராணுவ பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் அன்புடன் வரவேற்று, விசேட மேடையில் இருந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண பொதோட்ட அவர்கள் அன்றைய தின பிரதம அதிதியை விசேட மேடைக்கு அழைத்துச் சென்றார்.அன்றைய நிகழ்வில் இராணுவ மரபுகளுக்கமைவாக அணிவகுப்புத் தளபதி கஜபா படையணியின் கெப்டன் எஸ்.ஆர்.வி.கே.எஸ். பண்டார அடையாள வாளை ஏந்தியவாறு 2 அதிகாரிகள் மற்றும் 48 சிப்பாய்களை கொண்ட அணிவகுப்பை அன்றைய பிரதம விருந்தினருக்கு மதிப்பாய்வு செய்ய அழைப்புவிடுத்தார்.

அனைத்து வண்ணமயமான படையணியின் கொடிகளும் பறக்கவிடப்பட்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன் அணிவகுப்பு தளபதியியுடன் இராணுவத் தளபதி அவர்கள் இராணுவ கௌரவிப்பினை மதிப்பாய்வு செய்ததனை தொடர்ந்து அணிவகுப்புப் குழுவினரால் இசைக்கப்பட்ட தேசபக்தி உணர்வுகளின் தாளங்கள் மற்றும் மெல்லிசைகள் அன்றைய கண்ணியமான நிகழ்வுக்கு பிரமாண்டத்தையும் முக்கியத்துவத்தையும் சேர்த்தது.சிறிது நேரத்திற்குப் பின்னர், இராணுவத் தலைமையகத்தில் தனது செயலகத்தின் நுழைவாயிலுக்கு வருகை தந்த தளபதியின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருந்த, தலைமை பதவிநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். தளபதியின் அலுவலகத்தை வந்தடைந்தவுடன், புதிய தளபதி புத்தருக்கு மலர் அர்ச்சனை செய்தார்.

சில நிமிடங்களின் பின்னர், கோட்டே ரஜமஹா விகாரையின் விகாராதிபதியான வண. கலாநிதி அலுத்நுவர சோரத தேரர், விஹாராதிகாரி, கங்காராமய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரர், மற்றும் மகா சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கு பாரம்பரியமான 'தெஹெத் வத்திய' (வெற்றிலைத் தட்டு) வழங்கப்பட்டதோடு, தளபதியின் அலுவலகம் மற்றும் நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சுருக்கமான சொற்பொழிவை (அனுசாசனம்) மிரிசவெட்டிய ரஜ மகா விகாரையின் பிரதம அதிதியான வென் ஈத்தலவெதுனுவெவே ஞானதிலக தேரர் அவர்கள் வழங்கினார்.

'செத்பிரித்' பராயாணம் ஓதப்பட்டதைத் தொடர்ந்து, புதிய இராணுவத் தளபதி தனது பதவியை ஏற்றுக்கொண்டமைக்கான முறையான ஆவணத்தில் கையெழுப்பமிட்ட நிகழ்வில், தளபதியின் பாரியாரான திருமதி ஜானகி லியனகே மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அனைத்து மதகுருமார்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதுடன், மகா சங்கத்தினர் மற்றும் பிற கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களுக்கு 'பிரிகார' தானம் மற்றும் பரிசுகள் வழங்கியதுடன் இந்நிகழ்வுகள் நிறைவடைந்தது.

புதிய இராணுவத் தளபதியின் சுருக்கமான விவரம் இங்கே;

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் 2022 ஜூன் 01 முதல் லெப்டினன் ஜெனரல் பதவி உயர்வு கிடைக்கப் பெற்ற லெப்டினன் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு இலங்கை இராணுவத்தின் 24 வது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்,லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, புதிய நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியாக கடமையாற்றி வந்தார். தற்போது வெளியேறும் இராணுவ தளபதிக்கு அடுத்ததாக உள்ள இராணுவத்தின் மிக சிரேஷ்ட அதிகாரி இவர்.லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பயிளிவல் அதிகாரியாக 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி உள்வாங்கல் பாடநெறி – 26 இன் கீழ் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் இணைந்து கொண்டார். அதனையடுத்து தியத்தலாவ புகழ்பெற்ற இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியிலும் பின்னர் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியிலும் அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்ற இவர், இரண்டாம் லெப்டினன் அதிகாரவாணையுடன் கஜபா படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

அவரது புகழ்மிக்க 35 வருட இராணுவ சேவையில், குழு கட்டளை அதிகாரி, 4 வது கஜபா படையணியின் நிறைவேற்று அதிகாரி மற்றும் அணி கட்டளை அதிகாரி, 21 மற்றும் 55 வது படைப்பிரிவுகளின் புலனாய்வு அதிகாரி, 14 வது கஜபா படையணியின் 2 ஆம் கட்டளை அதிகாரி, சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி, கஜபா படையணியின் பதவி நிலை அதிகாரி – II (நிர்வாகம்) , 10 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, பணிநிலை கடமைகள் பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரி II, 8 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 225 மற்றும் 553 வது பிரிகேடிகளின் பதில் கடமை தளபதி, கொழும்பு நடவடிக்கை பிரிவின் தளபதி, 215, 542, 224, 221 மற்றும் 623 பிரிகேடுகளின் தளபதி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் கொள்கை மற்றும் பயிற்சி பணிப்பக பணிப்பாளர், நடவடிக்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிப்பகத்தின் பணிப்பாளர், அம்பாறை இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி, உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளர், 21 வது படைப்பிரிவு தளபதி, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் தளபதி, இலங்கை இராணுவ தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மற்றும் இராணுவ வுஷூ குழுவின் தலைவர் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பல்வேறு நியமனங்களை வகித்துள்ளார்.

225 வது மற்றும் 553 வது பிரிகேடிகளின் பதில் கடமை தளபதி, கொழும்பு நடவடிக்கை பிரிவின் தளபதி, 215, 542, 224, 221 வது மற்றும் 623 வது பிரிகேட்களின் தளபதி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் கொள்கை மற்றும் பயிற்சி பணிப்பக பணிப்பாளர், நடவடிக்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிப்பகத்தின் பணிப்பாளர், அம்பாறை இராணுவ பயிற்சி பாடசாலை தளபதி, உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளர், 21 வது படைப்பிரிவு தளபதி, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி, இலங்கை இராணுவ தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மற்றும் இராணுவ வுஷூ குழுவின் தலைவர் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பல்வேறு நியமனங்களை வகித்துள்ளார்.லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே வகித்த நியமனங்களின் போதான அனுபவங்களை கொண்டு அவரது பெரும் இலக்குகளையும் அடைந்துகொண்டுள்ளார். அதன்படி இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் (மாதுருஓயா) உள்ளகப் பாதுகாப்பு / புரட்சி எதிர் போர்ப் பாடநெறி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் வழிநடத்தல் தொடர்பிலான பாடநெறி, மின்னேரிய பீரங்கி பாடசாலை முன்னரங்க பராமரிப்பு தொடர்பிலான பாடநெறி, மின்னேரியா படையலகு உதவி ஆயுத பாடநெறி, மாதுரு ஓயா பாடசாலையி்ல் புத்தாக்கம் தொடர்பிலான பாடநெறி, இராணுவ தலைமையகத்தில் புத்தாக்க அணி கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி, இராணுவ புலனாய்வு படையணியில் படையலகு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பாடநெறி, சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு தொடர்பிலான பாடநெறி என்பவற்றையும் பின்பற்றியுள்ள அவர், (UNHCR) ஐநா அகதிகள் உயர் ஸ்தானிகத்தின் அடிப்படை மருத்துவ செயற்பாடுகள் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பிலான பாடநெறி மற்றும் 21 வது படைப்பிரிவின் பல்தேசிய படையலகு அப்பியாசம் -3 இலும் பங்குபற்றியுள்ளார்.

இந்தியாவில் அதிகாரிகளுக்கான உடல் பயிற்சி பாடநெறி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகளுக்கான பாடநெறி, இந்தியாவில் இளம் கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி, பங்களாதேஷில் படையலகு கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி, இந்தியாவில் சிரேஷ்ட தளபதிகளுக்கான பாடநெறி உட்பட பல வெளிநாட்டு பாடநெறிகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் தொழில்முறை தகைமைக்கான கருத்தரங்குகள் ஆகியவற்றையும் நிறைவு செய்துள்ள அவர், ஹவாயில் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் தொடர்பிலான பாடநெறி, இந்தோனேசிய லெம்ஹன்னாஸில் தேசிய கல்வித் திட்டம் ஆகியவற்றையும் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இந்தோனேசியாவின் லெம்ஹன்னாஸ் பல்கலைக்கழகத்தில் மூலோபாய மற்றும் பின்னடைவு ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும், ஹவாயில் உள்ள பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய-பசிபிக் மையத்தில் ‘இந்து-பசிபிக் பிராந்தியத்தில் உலகளாவிய பாதுகாப்பு’ என்ற பட்டமும் பெற்றுள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள இந்தூர் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மேலாண்மையில் டிப்ளோமாவினை பெற்றுள்ளார்.

இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் உச்சக்கட்டத்தின் போது, ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெற்றிபெற்ற 57 வது மற்றும் 56 வது படைப்பிரிவுகளின் 8 வது கஜபா படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல வெற்றிகளைப் பெற அவரால் முடிந்தது. அதற்கு மேல் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்குகொண்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் எதிரிகளை எதிர்கொள்வதில் தனிப்பட்ட அல்லது அதனுடன் இணைந்த துணிச்சலான செயல்களுக்காக ரண விக்கிரம பதக்கம (RWP) என்ற வீர விருதுகளால் அலங்கரிக்கப்பட்டவர். எதிரிகளின் எதிர்த்து சிறந்த நடத்தைக்காக அவர் ரண சூரா பதக்கம் (RSP) உடன் அலங்கரிக்கப்பட்டார். வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒரு முன்னோடியாக இருந்ததற்காக சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் மூன்று முறை மேலே பதக்கங்களை வழங்கினார். மேலும், அவர் பயங்கரவாத நடவடிக்கைகளின் போது காயமடைந்ததற்காக தேச புத்திர பதக்கத்தினையும் பெற்றவர். லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம, வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், ரிவிரேச பிரச்சார சேவை பதக்கம், 50 வது சுதந்திர ஆண்டு நினைவு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு நினைவு பதக்கம் போன்ற சேவை அலங்காரங்களையும் பெற்றுள்ளார். சேவை பதக்கம், சேவா அபிமானி பதக்கம் மற்றும் சேவை பதக்கம்.

இவர் தனது பாடசாலை பருவத்தில் தடகள மற்றும் ஹொக்கி போட்டிகளில் சிறந்த மாணவராக பிரகாசித்ததுடன், மாத்தளை விஜய கல்லூரியில் பல தடவைகள் பாராட்டுக்குரிய பாத்திரமாகியுள்ளார்.

அதேபோல் புத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி அமரபுர பீடத்தினால் ஜனமான்ய விபூத்திரத்னா’ என்ற கௌரவ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. திருமதி ஜானகி லியனகே அவர்களை மணம் முடித்துள்ள அவர் ஒரு மகள் மற்றும் ஒரு மகனினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளார்.

 

பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா நாளை (ஜூன் 01) முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று, (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் இந்த நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட ஷவேந்திர சில்வா, இன்று (31) இராணுவத் தளபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதியினால் விக்கும் லியனகேவிடம் இந்நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

 தற்போது இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே, நாளை (ஜூன் 01)  இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம், லெப்டினன் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.

 

மாத்தளை விஜய கல்லூரியில் கல்வி கற்ற விக்கும் லியனகே, 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்தார். விக்கும் லியனகே, தியத்தலாவ இலங்கை இராணுவ கல்விக் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ அகடமி ஆகியவற்றிலிருந்து தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்று, இரண்டாவது லுதினனாக கஜபா படைப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.

விக்கும் லியனகே, தனது 35 வருட புகழ்பெற்ற இராணுவப் பணியின் போது, 4ஆவது கஜபா படைப்பிரிவின் ​​கட்டளை அதிகாரி, படையணி கட்டளை அதிகாரி, கட்டளை அதிகாரி, பலசேனா, சேனாங்க, பாதுகாப்புப் படை கட்டளை பதவி உள்ளிட்ட பதவி நிலை பதவிகள் மற்றும் பல்வேறு ஆலோசகர் பதவிகளையும் வகித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் தொழில் பயிற்சி பாடநெறிகளைத் தொடர்ந்துள்ளார்.

லியனகே மனிதாபிமான நடவடிக்கையின் போது 57 மற்றும் 56ஆவது படையணிகளின் 8ஆவது கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்ததோடு, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ரணவிக்ரம, ரணசூர பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார். 

 

 

இன்று, நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல.  அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன.  19வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த விடயங்களில் ஒன்றாகும்.  இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் என்ற வகையில் தற்போது 21ஆவது திருத்தச் சட்டத்தை தயாரித்து வருகின்றோம்.

இரண்டாவது விடயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சியாகும்.  அதற்கான நேரம் மற்றும் வழிமுறைகள் கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.  நிறைவேற்றதிகாரத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

பொருளாதார நெருக்கடியை தடுக்கும் வகையில் பாராளுமன்றம் செயற்படவில்லை என்பதே இன்றைய பிரதான குற்றச்சாட்டு.  பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் பாராளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் எப்போதும் பார்க்க வேண்டியதில்லை, ஆனால் நாம் பின்பற்றக்கூடிய உதாரணங்கள் சில உள்ளன.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1931 முதல் 1947 வரை அரசியலமைப்பு சபை இருந்தது . அந்த சபையானது குழு முறையைப் பின்பற்றிச் செயற்பட்டது.  ஒவ்வொரு விடயமும் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டது.  குழுக்களின் தலைவர்கள் அமைச்சர்கள் ஆனார்கள்.  ஏழு அமைச்சர்கள் ஒரு அமைச்சரவையை அமைத்தனர்.  மேலும், ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரிகள் இருந்தனர்.

மேலும், பொதுப் பணத்தைக் கட்டுப்படுத்த கணக்குக் குழுவும் இருந்தது.  அந்த நேரத்தில் இந்த வழிமுறையை வெற்றிகரமாக செயல்படுத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

தற்போது, பாராளுமன்றத்தின் கட்டமைப்பை மாற்றி, தற்போதுள்ள பாராளுமன்ற முறை அல்லது வெஸ்ட்மின்ஸ்டர் முறை மற்றும் அரசயலமைப்பு முறை ஆகியவற்றை இணைத்து புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.  அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் நாட்டை ஆள்வதில் பங்கேற்கலாம்.

முதலாவதாக, நாணய அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்களை வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாங்கள் வலுவான மற்றும் சக்திவாய்ந்த சட்டத்தை முன்மொழிகிறோம்.

தற்போது அரசாங்க நிதி தொடர்பாக மூன்று குழுக்கள் உள்ளன.  பொது நிதிக் குழு, கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு ஆகிய மூன்று குழுக்கள் ஆகும்.  இந்த மூன்று குழுக்களின் அதிகாரங்களை பலப்படுத்துவதற்காக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன பல யோசனைகளை முன்வைத்துள்ளார்.

மேலதிகமாக அஅதற்கு. , நாங்களும் பரிந்துரைகளை முன்வைக்கிறோம். பண விவகாரங்கள் தொடர்பாக இரண்டு புதிய குழுக்களை அமைக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சட்ட மற்றும் வழிமுறைக் குழுவை நியமிப்போம்.

இரண்டாவதாக, நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி நிலை.  பலவீனமான பிரச்சினைகள் பல இதில் உள்ளன. 

எங்களின் நிலையியற் கட்டளை 111ன் கீழ் நாம் மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க முடியும்.  இதற்கு முன் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை.  எனவே, பத்து மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க நாங்கள் முன்மொழிகிறோம்.  அதற்கு பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஐந்து நிதிக் குழுக்கள் மற்றும் பத்து மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்கள் பின்வரிசை உறுப்பினர்களால் நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அவர்கள் அமைச்சர்களால் நியமிக்கப்படுவதில்லை.

எனவே, அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து சுயாதீனமான மற்றும் அமைச்சர் மற்றும் பாராளுமன்றம் ஆகிய இருவருடனும் இணைந்து செயல்படும் ஒரு வழிமுறையை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

தற்போதுள்ள அமைப்பை மாற்ற வேண்டும் என இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.  அவர்கள் தற்போதைய பிரச்சினைகளையும் அறிய விரும்புகிறார்கள்.  எனவே, இந்த 15 குழுக்களுக்கும் தலா நான்கு இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க நான் முன்மொழிகிறேன். 

அவர்களில் ஒருவர் இளைஞர் பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுவார்.  மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.  இந்நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.

அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம்.  இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்சனைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும்.  அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்.

தேசிய கவுன்சிலையும் நாங்கள் முன்மொழிகிறோம்.  சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு தேசிய கவுன்சில் என்று அழைக்கப்படுகிறது.

தேசிய சபை மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும்.  நாட்டின் கொள்கைகள் குறித்து இதில் பேசலாம்.  அமைச்சரவையின் முடிவுகள் குறித்தும் பேசலாம்.  இந்நாட்டின் பாராளுமன்ற மறுசீரமைப்பு குறித்தும் பேசலாம்.  அப்படியானால், அதை அரசியல் அமைப்பு என்று சொல்லலாம்.

அமைச்சர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்களை அழைக்க தேசிய கவுன்சிலுக்கு உரிமை உண்டு.

நாம் முன்வைத்துள்ள புதிய முறைமையின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்.  அமைச்சர்களின் அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்.  தேசிய கவுன்சிலும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்.  பதினைந்து குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அமைச்சரவை மூலம் அரசாங்கத்தை கட்டுப்படுத்தவும், ஜனாதிபதியின் பணிகளை ஆராயவும், தேசிய சபையின் மூலம் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடவும், மற்ற பதினைந்து குழுக்களின் நிதி விவகாரங்கள் மற்றும் பிற விஷயங்களை மேற்பார்வையிடவும் ஒரு அமைப்பு உள்ளது. வேறு பல அமைப்புகளும் இதே போன்ற திட்டங்களை முன்வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்.

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.

 
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இதில் கலந்துகொண்டார். 

 

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக மீண்டும் நியமனம் பெற்றுள்ள  நிருவாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அனுஷ பெல்பிட்ட இன்று (25) வெகுசன ஊடக அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவரது நியமனக் கடிதம் நேற்று (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதற்கு முன்னரும் இவர் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக பதவி வகித்தமை குறிப்பிடதக்கது.

 

 

தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷ சார்பு அரசாங்கமென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தான் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெறுவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமென்கின்றபோதிலும் இதற்கான தீர்வை காண்பதற்குரிய மாற்று யோசனையை முன்வைக்க எவராலும் முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கின்றது. உலக சந்தையில் நிலவும் விலையை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. அத்துடன் போதுமானளவு டொலரும் எமது கையிருப்பில் இல்லை. எனவே மக்கள் பெரும் அழுத்தத்துக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். மக்கள் முகம் கொடுத்துவரும் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவையும் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 
அரசியலமைப்பின் 21 வது திருத்தச் சட்டமூலம் திங்கட்கிழமையன்று (23) அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்சி தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இத்திருத்தச் சட்டமூலத்தின் நகல்களை பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) ஆராயப்படவுள்ளது. இதனை தொடர்ந்து திருத்தச் சட்டமூலத்தின் இறுதி தீர்மானத்தை பெற்றுக்கொள்வதற்காக அதனை மீண்டும் அமைச்சரவையிடம் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

அமைச்சரவை பேச்சாளர் ஒருவரும் இணை அமைச்சரவை பேச்சாளர்கள் மூவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அமைச்சரவை பேச்சாளராக வெகுசன ஊடக மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இணை அமைச்சரவை பேச்சாளர்களாக, விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த  அமரவீர, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணை அமைச்சரவை பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…