சமீபத்திய செய்தி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி.பந்துல குணவர்தன நேற்று தனது கடமைகளை வெகுசன ஊடக அமைச்சில்  வைத்து  பொறுப்பேற்றார். இந்த அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக அமைச்சர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து  கொண்டனர். அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன  வெகுசன ஊடக அமைச்சர் பதவிக்காக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவர் இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 08 பேர் இன்று (23) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்த வகையில், புதிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 20 அமைச்சர்கள் தற்போது அங்கம் வகிக்கின்றனர்.

  1. டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி அமைச்சர்
  2. பந்துல குணவர்தன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வெகுசன ஊடக அமைச்சர்
  3. கெஹெலிய ரம்புக்வெல்ல - நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்
  4. மஹிந்த அமரவீர - விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர்
  5. ரமேஷ் பத்திரண - கைத்தொழில் அமைச்சர்
  6. விதுர விக்ரமநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
  7. அஹமட் நசீர் - சுற்றாடல் அமைச்சர்
  8. ரொஷான் ரணசிங்க - நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

சர்வகட்சி அரசாங்கத்தின் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று, (20) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

 

 

01. திரு.நிமல் சிறிபால டி சில்வா            -  துறைமுகங்கள், கப்பற்துறை   

                                                                             மற்றும் விமான       சேவைகள்  அமைச்சர்                                                                

02. கலாநிதி சுசில் பிரேமஜயந்த                - கல்வி அமைச்சர்

03. கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல       -  சுகாதார அமைச்சர்

04. கலாநிதி  விஜயதாச ராஜபக்ஷ            - நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர்

05. திரு.ஹரின் பெர்னாண்டோ               - சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்

06. திரு. ரமேஷ் பத்திரன               -            பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

07. திரு. மனுஷ நாணயக்கார                 -  தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

08. திரு. நலின் பெர்னாண்டோ               -  வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு  அமைச்சர்

09. திரு. டிரன் அலஸ்                                 -  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

 

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

20.05.2022

பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, இன்று (12) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடமிரருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

சமன் ஏக்கநாயக்க, இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். 2015 - 2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக கடமையாற்றிய அவர், நான்காவது தடவையாகவும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதல் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவராவார். இவர் தனது 30 வருடங்களுக்கும் அதிகமான நிர்வாக சேவையில், இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுக்களிலும், மலேசியா மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்களிலும் சேவையாற்றியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு 73 வயதாகும்.

இன்று (12) பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.

அந்த வகையில் அதிக தடவை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவராக ரணில் விக்ரமசிங்க விளங்குகின்றார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ஜனாதிபதி விடுத்துள்ள மேதினச் செய்தி வருமாறு,

 

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது.

நமது நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக தொழிலாளர் வர்க்கமே பாரிய சவாலுக்கு உள்ளாகியுள்ளது. அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதி பூண்டவர்களும் அவர்கள்தான். நாளுக்கு நாள் அவர்கள் மீதான அழுத்தங்கள் தற்போது அதிகமாக உள்ளன.  அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், நிலவுகின்ற சிக்கலான நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்நியச் செலாவணி இழப்பானது பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அவை அனைத்தையும் முகாமைத்துவம் செய்வதுதான் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியாகும்.

ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதை பின்தொடர்வதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் கவனம் செலுத்துவதுதான் இப்போது நாம் செய்ய வேண்டியது. அதற்கான மிகவும் பொருத்தமான மற்றும் செயற்திறன்மிக்க வேலைத்திட்டத்திற்கு மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.

இந்நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அரச தலைவர் என்ற வகையில் மக்கள் சார்பாக நான் அழைத்தேன். ஒவ்வொரு நொடியும் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதே எமது குறிக்கோள்.

இந்த தொழிலாளர் தினத்தில், அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ள மக்களுக்காக  ஒருமித்த கருத்துக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நான் மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன்.

உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுமாறும் உழைக்கும் மக்களிடம் கெளரவமாக கேட்டுக்கொள்கிறேன்.

 உலகளாவிய தொழிலாளர் சக்தியான தொழிலாளர் சகோதரத்துவத்தை உருவகப்படுத்தும் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்வது அந்த அபிலாஷைகளுடனேயே ஆகும். 

பிரதமரின் மே தினச் செய்தி

 

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு, பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்ட நீங்கள், தற்போது நாட்டில் உருவாகியிருக்கும் இப்பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது இரகசியமல்ல.

எதிர்பாராத விதமாக முகம் கொடுக்க நேரிட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், நிதானத்துடனும் செயல்பட்டு நீங்கள் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றீர்கள்.

தொழிலாளர் போராட்டத்துக்காக உங்களுடன் கைக்கோர்த்திருந்த நான், பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பத்திலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இதுவரை முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதுடன், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அதற்கான ஆதரவை பெற்று வருகிறது.

இந்த அனைத்து முயற்சிகளினதும் இறுதி நோக்கம் ஒரு சிறந்த நாட்டை நிர்மாணிப்பதாகும். அதற்காக உழைக்கும் மக்களின் மகத்தான அர்ப்பணிப்பை சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகிறேன்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முதற் கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி திருமதி சியோ கெண்டா (Chiyo Kanda) தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே திருமதி சியோ கெண்டா இதனைத் தெரிவித்தார்.

மருந்து மற்றும் சுகாதார தேவைகள், சமூக பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்ய இந்நிதி பயன்படுத்தப்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் உலக வங்கி பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக வங்கியின் இந்நாட்டு ஆலோசகர் ஹூசாம் அபுதாகா (Husam Abudagga), மனித அபிவிருத்தித் தலைவர் ரெனே சோலானோ (Rene Solano), நிதி அமைச்சர் அலி சப்ரி, வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, தொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.டி.யு.கே மாபா பத்திரன, திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.டபிள்யூ.ஏ.குமாரசிறி ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வெகுசன ஊடக அமைச்சராக நேற்று (18) பதவியேற்றுக் கொண்ட கலாநிதி நாலக கொடஹேவா இன்று (19) மாலை தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் பணியாளர்கள் புதிய அமைச்சரை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

17 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் இன்று (18) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதில் டக்ளஸ் தேவானந்தா, அவர் ஏற்கனவே வகித்த மீன்பிடி அமைச்சராக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்த நிலையில், மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்த அலி சப்ரி, ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெனாண்டோ ஆகியோரில், ஜோன்ஸ்டன் பெனாண்டோ வகித்த அமைச்சு பதவி கனக ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்திற்கு பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ள நிலையில், அவர்களது அமைச்சுகளில் மாற்றங்கள் இல்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது பிரதமர் உள்ளிட்ட 20 பேர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

01. திரு. தினேஷ் குணவர்தன            - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி               

02. திரு. டக்ளஸ் தேவானந்தா                             - கடற்றொழில் அமைச்சு

03. திரு. ரமேஷ் பத்திரன                                       - கல்வி, பெருந்தோட்டக் கைத்தொழில்

04. திரு. பிரசன்ன ரணதுங்க                                 - பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுலா

05. திரு.திலும் அமுனுகம                                       - போக்குவரத்து, கைத்தொழில்

06. திரு கனக ஹேரத்                                              -  நெடுஞ்சாலைகள்

07. திரு.விதுர விக்கிரமநாயக்க                           - தொழில் அமைச்சு

08. திரு.ஜானக வக்கும்புர                                       - விவசாயம், நீர்ப்பாசனம்

09. திரு.ஷெஹான் சேமசிங்க                               - வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி

10. திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா    - நீர் வழங்கல்

11. திரு. விமலவீர திஸாநாயக்க                           - வனவிலங்கு மற்றும் வன வளப் பாதுகாப்பு

12. திரு. காஞ்சன விஜேசேகர                                 - வலுசக்தி, மின்சக்தி

13. திரு. தேனுக விதானகமகே                               - இளைஞர் மற்றும் விளையாட்டு

14. திரு. நாலக கொடஹேவா                                - வெகுசன ஊடக அமைச்சு

15. திரு. சன்ன ஜெயசுமன                                     - சுகாதாரம்

16. திரு. நசீர் அஹமட்                                             - சுற்றுச்சூழல்

17. திரு. பிரமித பண்டார தென்னகோன்           - துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை

தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலையில், வரலாற்றில் மிகப் பெரிய சவாலை இலங்கையர்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் நாம் அதனை வெற்றிகொள்ள வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம். எமது அரசாங்கத்தின் மூலம் தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மக்களின் இயல்பு வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

எவ்வாறாயினும் சிங்கள, தமிழ் புத்தாண்டுப் பிறப்பை புதிய எதிர்பார்ப்புகளுடன் வரவேற்பது பழங்காலத்திலிருந்தே இடம்பெறும் நமது பாரம்பரியம் ஆகும். இந்த ஆண்டும் அந்த எதிர்பார்ப்புகளுடனும், புதிய நம்பிக்கைகளுடனும் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறோம்.

புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு. குழந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியைப் பாதுகாத்துக் கொடுப்பதில் நீங்கள் அதிக அக்கறை செலுத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

அதேபோன்று, புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுபவிப்பதற்காக தமது பிள்ளைகளுடன் இணைவதற்கான வாய்ப்பை இழந்த, விசேட கடமைகளில் ஈடுபட்டு இருப்பவர்களைப் போன்று, வெளிநாடுகளில் இருக்கும் அனைவரினதும் அர்ப்பணிப்பை நினைவுகூருகிறேன்.

மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். 

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…