அமைச்சரவை பேச்சாளர் ஒருவரும் இணை அமைச்சரவை பேச்சாளர்கள் மூவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் அமைச்சரவை பேச்சாளராக வெகுசன ஊடக மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இணை அமைச்சரவை பேச்சாளர்களாக, விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த  அமரவீர, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணை அமைச்சரவை பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.