சமீபத்திய செய்தி

100 வருடங்கள் பழமையான திட்டத்தின்படி முழுமையாக புனரமைக்கப்பட்ட கொழும்பு பிளவர்  வீதியில் 'சிறிமதிபாய' பிரதமர் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதை ஒட்டி நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.

வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இந் நினைவு முத்திரை கையளிக்கப்பட்டது.

ஆல்பர்ட் இம்மானுவேல் டி சில்வாவினால் அவரது மகன் சர் ஆல்பர்ட் ஏர்னஸ்ட் டி சில்வாவிற்காக 1916 ஆம் ஆண்டு இரண்டு அடுக்கு மாளிகை கட்டப்பட்டதுடன் அவரது மரணத்திற்குப் பிறகு 1960 இல் அவரது குடும்ப உறுப்பினர்களால் இக்கட்டிடம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அக்காலத்தில் கல்வி மற்றும் வானொலி அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சு சிறிமதிபாயவில் நிறுவப்பட்டதுடன், 1978 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் சிறிமதிபாயவில் பிரதமர் அலுவலகத்தை நிறுவினார்.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்,ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பிரதமரின் முன்னாள் செயலாளர்கள், அரச அதிகாரிகள், அல்பேர்ட் ஏர்னஸ்ட் டி சில்வாவின் உறவினர்கள் ஆகியோர் இச்சந்தர்ப்பத்திற்கு கலந்துகொண்டனர்.

"ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சிறுவர்கள் எதிர்கொள்ளும் முதல் சவாலாகும். தொற்றுநோய் சூழ்நிலையில் பரீட்சைகளை தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். புலமைப்பரிசில் பரீட்சை 05 மாதங்களின் பின்னரே நடைபெறுகின்றது. ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த பரீட்சையே ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கடந்த 19ஆம் திகதி கொழும்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஊடகத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“நமது நாடு மிகவும் திறமையான குழந்தைகளைக் கொண்ட நாடு.  குழந்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள், அந்த நம்பிக்கையை கடந்த முறை காப்பாற்றியதால் அந்த வெற்றியை நாட்டுக்கு காட்டினோம். அதனால்தான் ஒவ்வொரு தாய் தந்தையரையும் தங்கள் குழந்தைகளை நம்புங்கள், பிள்ளைகளின் பலத்தில் நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். முழு நாட்டிலும் உள்ள மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூற்று எட்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். ” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

500 மில்லியன் டொலர் நேற்றைய தினம் பிணை முறிக்காக செலுத்த  முடிந்துள்ளமை அரசாங்கத்திற்கு ஒரு பாரிய வெற்றியாகும் என   ஊடக சந்திப்பில் பங்கேற்ற  ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். 

நவீன தொழில் நுட்ப அறிவுடனான உயர் ஊடகத் துறை போன்றே கௌரவமான ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கையில் முதன் முறையாக ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கை பட்டய ஊடகவியலாளர் பயிற்சி  நிறுவனத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட செயற்பாட்டுக் குழுக் கூட்டம் இன்று (13)  வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டளஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் வெகுசன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், தேவையான நிதி தொடர்பாகவும்  கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்கு அப்பால் சென்று உயர் மட்ட ஊடக கல்வியறிவு கொண்ட கௌரவமான ஊடக வல்லுனர்களை உருவாக்குவது,  ஊடகத்துறை தொடர்பாக உயர்தர கற்கை நெறிகளைக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாக தொழில்ரீதியிலான திறமையை இந்த நிறுவனம் எவ்வாறு வழங்குவது  குறித்து அமைச்சர் மற்றும் குழுவுடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டது. 

 

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் (ஊடகம்) மிலிந்த ராஜபக்ஷ மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2022 ஆம் ஆண்டினை முறையான ஆண்டாக உருவாக்குவதற்கான முதல் படிமுறையாக, மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் அனைத்து ஊடகவியலாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களுக்கு பதிலாக தரவு அடிப்படையிலான உண்மைத்தகவல்களை சமூகமயப்படுத்துவது ஊடகங்களின் கடமையாகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.  

 

ஊடகவியலாளர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் முகமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

 

“இத்தகைய சந்தர்ப்பத்தை விளம்பரத்தை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யவில்லை. இந்நாட்டு மக்கள் கட்டுக்கதைகளை மையமாகக் கொண்டு மூன்றாவது தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதுவரை, ஐந்து மில்லியனுக்கும் குறைந்த மக்களே மூன்றாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக, எதிர்காலத்தில் அபாய நிலை ஏற்படலாம் என சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்கான பொறுப்பினை ஊடகங்கள் கொண்டுள்ளன. இந்த விடயத்திற்கு பொறுப்பான கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில், அறியாமை மற்றும் கட்டுக்கதைகளுக்கு எதிராக பொதுமக்களை விழிப்பூட்டுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்' என்றார். 

 

உலகில் மிகவும் முன்னேறிய சுகாதார கட்டமைப்பு மற்றும் பொருளாதார ரீதியில் சக்தியைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மில்லியனையும் கடந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள், இவ்விடயத்தில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார். 

 

எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்திருந்தாலும், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் தடுப்பூசி வேலைத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட விசேட தலைமைத்துவத்தை நாம் அனைவரும் மறந்துவிடக் கூடாது. இதன் காரணமாக, ஆரோக்கியமான ஒரு தேசமாக எழுந்து நிற்க எம்மால் முடிந்துள்ளது'  என மேலும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

 

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அனுஸ பெல்பிட்ட உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒழுக்கம் தவறிய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பைப் போன்ற பாதுகாப்பினை வழங்க முன்வருமாறு வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நூற்றாண்டில் நிராகரிக்கப்பட்ட 'சிறுவர்களை அடிக்காமல் உருவாக்க முடியாது' என்ற ஒழுக்கக்கேடான கொள்கையை மீண்டும் சமூகத்தில் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் என அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் இறுதியில் கடந்த ஒருசில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகிய சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அமைச்சர் தெரிவித்திருந்தார். உலகம் முழுவதுமுள்ள 2 - 17 வயதுக்கிடையிலான சிறுவர்கள் உடல், உள மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக உலக சுகாதார சபை அறிவித்துள்ளது. இத்தகைய துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், நீண்டகால பிரச்சினைகளும் ஏற்படலாம். இருப்பினும், இத்தகைய துன்புறுத்தல் நடவடிக்கைகளை நிறுத்த முடியும். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட கடமைகள் காணப்படுகின்றன.

வளரும் பருவத்திலுள்ள சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்பான செய்திகள் கடந்த வாரங்களில் நாடுமுழுவதும் பல்வேறு பிரதேசங்களில் பதிவாகியிருந்தன. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் ....... 

'முழுச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மூன்று செய்திகள் அண்மையில் அறியக் கிடைத்தன. நாட்டின் முன்னணி ஊடகங்கள் தமது செய்தி ஒளிபரப்பின் போது ஹட்டன் பிரதேசத்தில் இரு சிறுவர்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களை வெளிக்கொண்டு வந்திருந்தன. அதற்கு முந்தைய கிழமை, கம்பளை பிரதேசத்தில் தந்தையும், சித்தப்பாவும் சேர்ந்து ஆண் ஒருவருடன் மரத்தில் ஏறிய குற்றத்திற்காக தனது மகளை மனிதாபிமானமற்ற முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருந்த சம்பவத்தையும் நாம் செய்திகளில் பார்த்திருந்தோம். இன்று காலையும் கூட, கொட்டதெனியாவ பிரதேசத்தில் 14 வயதிற்கும் குறைவான பிள்ளைகள் இருவர் காணாமல் போயுள்ளதாகவும், 42 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை எதுவிதமான தகவல்களும் கிடைக்கப்படவில்லை என்ற செய்தியும் ஒளிபரப்பப்பட்டன. இந்த விடயம் ஊடகங்களுக்குள் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். அதனை நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 'சிறுவர்களை அடிக்காமல் உருவாக்க முடியாது' என்ற ஒழுக்கக்கேடான, பாரம்பரிய சித்தாந்தம் மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நூற்றாண்டு அதனை நிராகரித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாகரிகத்தில் முன்னோக்கி செல்லக்கூடிய தருணம் இதுவாகும். எனவே, இவ்வாறான செய்திகள் எவ்வாறு அறிக்கையிடப்படுகிறது. மேலும், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும். சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, துன்புறுத்தப்படாமல் சமூகக் கருத்துக்களை வழங்குவதில் முன்னோடியாக ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்' என தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களுக்கு நேற்று முதல் ஒவ்வொருமாதமும் ரூபா 5000 கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று (03) அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக நிதி அமைச்சர் பேசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக சமூர்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூபா 3500 க்கு மேலதிகமாக ரூபா 1000 மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படவிருப்பதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.

ஊனமுற்ற படைவீரர்களுக்காகவும் இந்த ரூபா 5000 வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துளள்து.

இதற்கு மேலதிமாக அத்தியாவசிய அபாருட்கள் மீது விதிக்கப்பட்ட மேலதிக வரிகளையும் நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாதம் முதல், ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூ. 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 87 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)
ஓய்வூதியதாரர்களுக்கு இம்மாதம் முதல், ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூ. 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 40 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)
தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இதே மட்டத்திலான சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேச தொழில் அமைச்சுக்கு ஆலோசனை

சமூர்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூபா 3500 க்கு மேலதிகமாக ரூபா 1000 மேலதிக கொடுப்பனவு

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களும் அனைத்து வரிகளிலிருந்தும் நீக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ ரூ. 80 வீதம், மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மா
ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இம்மாதம் முதல் ரூ. 5,000 கொடுப்பனவு

விவசாயத்துறையை மேம்படுத்த, 20 பேர்ச் நிலத்திற்கு குறைவான வீட்டுத் தோட்டத்திற்கு ரூ. 5,000 கொடுப்பனவு; 20 - 01 ஏக்கர் நிலத்திற்கு ரூ. 10,000 கொடுப்பனவு

நெல்லின் கொள்வனவு உத்தரவாத விலை ரூ. 50 இலிருந்து ரூ. 75 ஆக அதிகரிப்பு

அதிபர்கள், ஆசிரியர்களுக்கான அதிகரித்த சம்பளத்தையும் இம்மாதம் வழங்க  அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

03.01.2022ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் ,தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

அரிசி தொடர்பான அறிவியல் மற்றும் அதுசார்ந்த கற்கைத் துறைகளுக்கு ஏற்புடைய திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் முறைக்குப் பொருத்தமான வகையிலான பாடநெறிகளை விருத்தி செய்தல், நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், ஒன்றிணைந்த ஆய்வுக் கருத்திட்டங்களை நடாத்துதல் மற்றும் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்துதல், ஆராய்ச்சிகள், வெளியீடுகள் மற்றும் ஏனைய தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 2017 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தை மேலும் 03 வருடங்களுக்கு நீடித்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக இருதரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
02. இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்தல்

இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 – 35 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2020 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முற்கூட்டிய தகைமைகளைக் கொண்ட 03 நிறுவனங்களிடமிருந்து போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. குறித்த விலைமுறிகளின் மதிப்பாய்வின் பின்னர் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய 32 ஆசனங்களைக் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் அசோக் லேலன்ட் கம்பனிக்கு வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கூட்டுறவு சதுக்க கட்டுமானக் கருத்திட்டத்தின் ஆலோசனை சேவைகள் ஒப்பந்தம் வழங்கல்

கூட்டுறவுச் சதுக்கம் எனும் பெயரிலான கூட்டுறவு வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக 2021 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளுக்குமான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஆலோசனைச் சேவை நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரலின் கீழ் விருப்பம் தெரிவித்த 07 நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 06 நிறுவனங்கள் குறித்த விலைமுறிக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஆலோசனைச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை மிஹிந்து கீர்த்திரத்ன அசோசியேட்ஸ் கம்பனிக்கு வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
04. உட்சுற்றுப் பாவனைக்காக ஹியூமன் இம்மியூனோக்குளோபின் 75,000 பிபீ 5-6  கிராம் கொண்ட மருந்து விநியோகத்திற்கான பெறுகை

உயிராபத்து நோய்நிலைமைகளின் போது நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஹியூமன் இம்மியூனோக்குளோபின் 75,000 பிபீ 5-6 கிராம் மருந்துக் குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த விலைமனுக்கோரல் இந்தியாவின் ரிலயன்ஸ் லயிஃப் சயன்ஸ் தனியார் கம்பனிக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
05. மெரோபனம் ( Meropenem  ) ஊசிமருந்து 1 கிராம் கொண்ட 1,800,000 மருந்துக் குப்பிகள் விநியோகத்திற்கான பெறுகை
 
பக்ரீறியாக்கள் மூலம் ஏற்படும் சுவாச நோய்த்தொற்றுக்கள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மெரோபனம்  (Meropenem) ஊசிமருந்துகள் 1 கிராம் கொண்ட 1,800,000 மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய 03 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய மொத்த ஊசிமருந்துத் தேவைகளின் 25% வீதத்தை விநியோகிப்பதற்காக விபரமாகப் பதிலளித்துள்ள குறைந்த விலைமுறியான இந்தியாவின் வீனஸ் ரெமடீஸ் கம்பனிக்கு வழங்குவதற்கும் ஊசிமருந்தின் செயற்றிறன் தொடர்பான இறுதிப் பரிசோதனையின் பரிந்துரைகளின் அடிப்படையில் எஞ்சிய 75% வீதமான கொள்வனவை வழங்குவது தொடர்பாக தீர்மானிப்பதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
06. இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்கு 750 ஜீப் வண்டிகளைக் கொள்வனவு செய்தல்

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு 150 ஜீப் வண்டிகள் உள்ளடங்கலாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 750 ஜீப் வண்டிகளை இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் ( Indian Line of Credit ) கீழ் கொள்வனவு செய்வதற்காக 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கம்பனிகளிடம் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த விலைமனுக்கோரல் இந்தியாவின் மஹேந்திரா மற்றும் மஹேந்திரா கம்பனிக்கு வழங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
07. விசேட பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரிச் சட்டமூலம் மற்றும் 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச்சட்ட திருத்தத்திற்கான சட்டமூலம்

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மதுசாரம், சிகரட், தொலைத்தொடர்புகள், பந்தயம் மற்றும் சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீதான வரி அறவீட்டு செயற்றிறனை விருத்தி செய்வதற்கு இயலுமான வகையில் பலதரப்பட்ட நியதிச்சட்டங்களின் கீழ் விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் அறவீடு செய்யும் ஒரு சில வரிகளுக்கு பதிலாக இணையவழியூடாக முகாமைத்துவப்படுத்தும் தனியானதொரு விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியை விதிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அவ்வாறே, 2022 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதிச் சேவைகளின் அடிப்படையில் பெறுமதிசேர் வரியை அதிகரிப்பதற்கும் மற்றும் பெருந்தொற்று அல்லது பொதுச்சுகாதார நிலைமையின் கீழ் அரச மருத்துவமனைகளுக்கு பரிசளிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள், கருவிகள் மற்றும் இரசாயனத் திரவியங்கள் போன்றவற்றுக்கான பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் குறித்த பணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள விசேட பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரிச் சட்ட மூலத்திற்கும், பெறுமதிசேர் வரி (திருத்தப்பட்ட) சட்டமூலத்திற்கும் சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
08. அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான 03/2016 பொது நிர்வாக சுற்றறிக்கையை திருத்தம் செய்தல்

அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதிருந்த சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் குறித்த சம்பள முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது ஆசிரிய ஆலோசகர் சேவை நிறுவப்படாமையால், குறித்த சேவைக்கான சம்பளத்திட்டத்தை உள்ளடக்கி அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு இயலுமான 03/2016 வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை திருத்தம் செய்வதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. கூரையில் பொருத்தப்படும் சூரியமின் தொகுதிக்கான மின்கல மின்சக்தியை களஞ்சியப்படுத்தும் மின்கலத்தொகுதியை நிறுவுவதற்கு ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்
 
2030 ஆம் ஆண்டளவில் மின்சக்தித் தேவையின் 70% வீதத்தை மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதற்காகவும் 2050 ஆம் ஆண்டளவில் எரிசக்தி உற்பத்திகளிலிருந்து வெளியேறும் கரியமில காபன் வெளியீடுகளை இல்லாது செய்வதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. தற்போது நாட்டின் மின்சாரக் கட்டமைப்புக்கு கூரையில் பொருத்தப்பட்ட சூரியமின் தொகுதிகள் மூலம் 400 மெகாவாற்று இயலளவு கொண்ட மின் விநியோகிக்கப்படுகின்றது. இத்தொகுதிக்காக புதிய கட்டண முறை மூலம் தன்னார்வ நிதி முதலீடுகளின் பிரகாரம் மின்கலத்தொகுதியைப் பொருத்துவதற்கு ஊக்கமளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நம்பகரமான மின்சார விநியோகத்தை உருவாக்குவதற்கு இயலுமை கிட்டும். இந்நிலைமையின் கீழ் மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை அதிகளவில் தேசிய மின்கட்டமைப்புக்கு இணைக்கும் போது மேலெழக்கூடிய தொழிநுட்ப ரீதியான சவால்களை அடையாளங்கண்டு, பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அதிகாரிகள் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பாக தொடர்ந்தும் விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு 2021 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவை உபகுழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10. திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொகுதியின் அபிவிருத்திக் கருத்திட்டம்

திருகோணமலை எண்ணெய்த்தாங்கி தொகுதிக்குரிய தற்போது இந்திய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல் மூலம் மீளாய்வு செய்து கூட்டிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருநாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 24 எண்ணெய்த் தாங்கிகளை ஒதுக்குவதற்கும், லங்கா ஐ.ஓ.சி கம்பனியால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கீழ் எண்ணெய்த் தாங்கித் தொகுதியில் 14 தாங்கிகளை குறித்த கம்பனியின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்குவதற்கும், எஞ்சிய 61 எண்ணெய்த் தாங்கிகளில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 51% வீதமும், லங்கா ஐ.ஓ.சி கம்பனிக்கு 49% வீதமான பங்குரிமை கிடைக்கும் வகையில் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (பிரைவெட்) லிமிட்டட் எனும் பெயரில் நிறுவப்பட்டுள்ள கம்பனியால் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11. 2022 ஆம் ஆண்டு பொருளாதாரம் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டங்கள்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2022 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன்மூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை அடைவதற்காக இலங்கைப் பொருளாதார எதிர்காலக் கண்ணோட்டங்கள் ( External Outlook  ) தொடர்பாக கீழ்வரும் தகவல்கள் விபரமாக நிதி அமைச்சர் அவர்களால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

• வெளிநாட்டுக் கடன் செலுத்தல் மற்றும் எதிர்பார்க்கப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகள் இறக்குமதிக்கான செலவு உள்ளிட்ட 2022 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வெளிச்செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ள அந்நிய செலாவணி தொடர்பான தகவல்கள்

• ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை மூலமான வருமானம், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம், நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட 2022 ஆம் ஆண்டில் அந்நிய செலாவணி விபரம்

• எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான குறுகிய மற்றும் நீண்டகால படிமுறை முன்மொழிவுகள்

• நிலவுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்புக் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள சலுகைகள் கீழ்வருமாறு:

(i) அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5,000/- ரூபா வீதம் மாதாந்தக் கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல்

(ii) தனியார் துறையின் தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடி குறித்த சலுகையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்

(iii) 3,500/- ரூபா மாதாந்தக் கொடுப்பனவாகப் பெறும் சமுர்த்திப் பயனாளிகளுக்கு மேலதிகமாக 1,000/- கொடுப்பனவை வழங்கல், குறித்த கொடுப்பனவை ஏனைய சமுர்த்திப் பயனாளிகளுக்கும் வழங்கல்

(iv) எதிர்வரும் போகத்தில் நெல் அறுவடையில் ஏதேனும் விளைச்சல் குறையுமாயின், தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு செலுத்தப்படும் 50/- ரூபா உத்தரவாத விலையை ஒரு கிலோவுக்கு 25/- ரூபாவால் அதிகரித்து வழங்கல்

(v) சந்தையில் அரிசி விலையில் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வாறு செலுத்தப்படும் மேலதிக தொகை அரசாங்கத்தால் பொறுப்பேற்றல்

(vi) தமது நுகர்வுக்குத் தேவையான மரக்கறிகள் மற்றும் பழவகைச் செய்கையை ஊக்குவிப்பதற்காக வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், அதற்குத் தேவையான நிலத்தைப் பண்படுத்துதல், விதைகளை கொள்வனவு செய்தல் போன்ற இடுபொருட்களுக்காக காணியின் அளவுக்கு ஏற்ப ஒரு ஏக்கர் வரைக்கும் உயர்ந்தபட்சம் 10,000/- ஊக்குவிப்புத் தொகையை வழங்கல்

(vii) தோட்டத்தொழிலாளர் குடும்பமொன்றுக்கு ஒரு கிலோக்கிராம் கோதுமை மா 80/- ரூபாவுக்கு 15 கிலோ கிராம் கோதுமை மாவு வழங்கல்
(viii) தேவையான சந்தர்ப்பங்களில் உள்ளூர் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்காக முழுமையான வரிவிலக்கு செய்தல்

நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த மேற்படி யோசனைகள் அடங்கிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
 
 

வெகுஜன ஊடக அமைச்சிக்கு புதிதாக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனுஸ பெல்பிட இன்று (03)  வெகுஜன ஊடக அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கணக்காய்வு திணைக்களத்தின் கணக்காய்வாளராக அரச சேவையில் இணைந்துக்கொண்ட இவர் ,இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றினார். நிறுவாக சேவை காலப்பகுதியில் ஒன்றிணைந்த உதவி பணிப்பாளராகவும் ஜனாதிபதியின் உதவி செயலாளராகவும், ஜனாதிபதி நிதியத்தின் கணக்காளராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேபோன்று தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளராகவும், பதில் கணக்காளராகவும் பணியாற்றியதுடன், இலங்கை ரூபவாஹினி கூடுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாவும், அரச தகவல் திணைக்களத்தில் பிரதி பபணிப்பாளராகவும், பணிப்பாளர் மற்றும் முதலாவது பணிப்பாளர் நாயகமாவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தானத்தின் தலைவராகவும், லங்க புவத் நிறுவனத்தின் தலைவராகவும், செலசினே நிறுவனத்தின் உயர் அதிகாரியகவும் பதவி வகுத்துள்ளார்.

இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த திரு அனுஸ பெல்பிட ஸ்ரீ ஜெயவர்தன புர பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரியுமாவார்.

2003, 2004 ஆம் ஆண்டுகளில் அவுஸ்ட்ரேலியா விக்டோரியா பல்கலைக்கழகத்தின் தொழில் ரீதியிலான கணக்காய்வு முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சின் செயலாளராக நியமிகக்ப்பட்டதுடன் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக பதவி வகுப்பதற்கு முன்னர் பொருளாதார கொள்கை மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளராகும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெகுஜன ஊடக அமைச்சியின் புதிய செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இந்த நிகழ்வில்  ,வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் S.R.W.M.R.P . சத்குமார ,மேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) எச். ஹெவகே ,அரச தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இலங்கை வானொலி இன்றுடன் 96 வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது. பழங்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை வானொலி இன்றும் முன்னணியில் செயற்படுகிறது. தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி சமய வேலைத் திட்டங்களின் ஊடாக நாட்டின் கலாசாரத்திற்கு முன்னுரிமை வழங்கி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. இலங்கை வானொலியின் 96 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று சமய நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது. 96 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று விசேட தான தர்ம நிகழ்ச்சி கூட்டுத்தாபன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, 96 வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் உள்ள தலைமை காரியாலயம் உட்பட பிராந்திய சேவைகளில்; பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, மலையக சேவை ஏற்பாடு செய்த முதலாவது நிகழ்ச்சி கலகெதர – மெதகொட ஸ்ரீ சித்தார்த்தோய பிரிவென் விஹாரையில் நேற்று நடைபெற்றது. கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரபால லியனகேயின் தலைமையில் இது இடம்பெற்றது. இதன் போது ஊடக செயலமர்வும், சிறுவர்களுக்கான குரல் தேர்வும் நடைபெற்றன. இதில் 400 சிறுவர்கள் பங்கேற்றனர். சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகளுக்கு வாய்ப்பளித்து, சகல மக்களையும் உள்ளடக்கும் வகையில், மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிறுவனமாக இலங்கை வானொலி திகழ்கிறதென இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரபால லியனகே இதன் போது கூறினார்.

இலங்கையில் 2023ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வித் திட்டத்தில் சட்ட பாடவிதானம் உள்ளடக்கப்படவுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இது அமுற்படுத்தப்படும் வகையில் கல்வி பாடவிதானத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இது விடயம் குறித்து தகவல்கள் மற்றும் கருத்துக் களைச் சேரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தேசிய கல்வி நிறுவகத்தோடு இணைந்து இதுவிடயம் குறித்து ஆராயும் என, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி உபாலி எம்.சேதர தெரிவித்தார். ஐந்தாம் ஆண்டில் இருந்து 11ஆம் ஆண்டுவரை உள்ள பாடத்திடடத்திலும் பொருத்தமான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சௌபாக்கியத்தின் நோக்கினை யதார்த்தமாக்குவதன் மூலம் இலங்கையின் வெகுசன ஊடகத் தொழிலாளர்களின் அலுவல்களுக்குத் தேவையான சுதந்திரமான மற்றும் தெளிவான சூழலை உருவாக்குவதில், அரசாங்க பொறுப்புக்களின் ஒரு அங்கமாக ஆரோக்கியமான ஊடகவியலாளரை உருவாக்குவதனை நோக்காய்க் கொண்டு வெகுசன ஊடக அமைச்சினால் எசிதிசி அவசர விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதித் திட்ட முறை செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

பொறுப்பு வாய்ந்த ஊடகக் துறையினை நோக்காய்க் கொண்டு இலங்கையில் முதன் முறையாக தொழில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்காக வேண்டி “சௌபாக்கியத்தின் ஊடகவியலாளர் பாதுகாப்பு” எனும் பெயரில் வெகுசன ஊடக அமைச்சின் தலைமையில் வழங்குகின்ற “எசிதிசி அவசர விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதித் திட்டம்” அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் மற்றும் கௌரவப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையிலும், கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் பங்கேற்புடனும் 2021 டிசம்பர் 02ஆந் திகதி மு.ப. 10.00 மணிக்கு பிரதமர் அலுவலத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இலவச காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள், தங்கியிருந்து மருத்துவம் செய்தவற்கான இயலுமை, வெளி மருத்துவ வசதி, தீவிர நோய்க் காப்பீடு, செவிப்புலன் கருவிகள் மற்றும் கண்ணாடி வசதி, தனிநபர் திடீர் விபத்துக் காப்பீடு மற்றும் கோவிட் 19 காப்பீட்டு வசதி போன்ற பல நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

வெகுசன ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் சுமார் 3000 ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 98 ஊடகவியலாளர்களுக்கு இதன் போது காப்பீட்டு உரிமம் வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி. விஜேவீர மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…