சமீபத்திய செய்தி

03.01.2022ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் ,தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

அரிசி தொடர்பான அறிவியல் மற்றும் அதுசார்ந்த கற்கைத் துறைகளுக்கு ஏற்புடைய திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் முறைக்குப் பொருத்தமான வகையிலான பாடநெறிகளை விருத்தி செய்தல், நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், ஒன்றிணைந்த ஆய்வுக் கருத்திட்டங்களை நடாத்துதல் மற்றும் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்துதல், ஆராய்ச்சிகள், வெளியீடுகள் மற்றும் ஏனைய தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 2017 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தை மேலும் 03 வருடங்களுக்கு நீடித்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக இருதரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
02. இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்தல்

இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 – 35 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2020 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முற்கூட்டிய தகைமைகளைக் கொண்ட 03 நிறுவனங்களிடமிருந்து போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. குறித்த விலைமுறிகளின் மதிப்பாய்வின் பின்னர் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய 32 ஆசனங்களைக் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் அசோக் லேலன்ட் கம்பனிக்கு வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கூட்டுறவு சதுக்க கட்டுமானக் கருத்திட்டத்தின் ஆலோசனை சேவைகள் ஒப்பந்தம் வழங்கல்

கூட்டுறவுச் சதுக்கம் எனும் பெயரிலான கூட்டுறவு வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக 2021 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளுக்குமான ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஆலோசனைச் சேவை நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமுறிக் கோரலின் கீழ் விருப்பம் தெரிவித்த 07 நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 06 நிறுவனங்கள் குறித்த விலைமுறிக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஆலோசனைச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை மிஹிந்து கீர்த்திரத்ன அசோசியேட்ஸ் கம்பனிக்கு வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
04. உட்சுற்றுப் பாவனைக்காக ஹியூமன் இம்மியூனோக்குளோபின் 75,000 பிபீ 5-6  கிராம் கொண்ட மருந்து விநியோகத்திற்கான பெறுகை

உயிராபத்து நோய்நிலைமைகளின் போது நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஹியூமன் இம்மியூனோக்குளோபின் 75,000 பிபீ 5-6 கிராம் மருந்துக் குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த விலைமனுக்கோரல் இந்தியாவின் ரிலயன்ஸ் லயிஃப் சயன்ஸ் தனியார் கம்பனிக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
05. மெரோபனம் ( Meropenem  ) ஊசிமருந்து 1 கிராம் கொண்ட 1,800,000 மருந்துக் குப்பிகள் விநியோகத்திற்கான பெறுகை
 
பக்ரீறியாக்கள் மூலம் ஏற்படும் சுவாச நோய்த்தொற்றுக்கள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மெரோபனம்  (Meropenem) ஊசிமருந்துகள் 1 கிராம் கொண்ட 1,800,000 மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய 03 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய மொத்த ஊசிமருந்துத் தேவைகளின் 25% வீதத்தை விநியோகிப்பதற்காக விபரமாகப் பதிலளித்துள்ள குறைந்த விலைமுறியான இந்தியாவின் வீனஸ் ரெமடீஸ் கம்பனிக்கு வழங்குவதற்கும் ஊசிமருந்தின் செயற்றிறன் தொடர்பான இறுதிப் பரிசோதனையின் பரிந்துரைகளின் அடிப்படையில் எஞ்சிய 75% வீதமான கொள்வனவை வழங்குவது தொடர்பாக தீர்மானிப்பதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
06. இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்கு 750 ஜீப் வண்டிகளைக் கொள்வனவு செய்தல்

பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு 150 ஜீப் வண்டிகள் உள்ளடங்கலாக இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 750 ஜீப் வண்டிகளை இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் ( Indian Line of Credit ) கீழ் கொள்வனவு செய்வதற்காக 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கம்பனிகளிடம் போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த விலைமனுக்கோரல் இந்தியாவின் மஹேந்திரா மற்றும் மஹேந்திரா கம்பனிக்கு வழங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
07. விசேட பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரிச் சட்டமூலம் மற்றும் 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச்சட்ட திருத்தத்திற்கான சட்டமூலம்

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மதுசாரம், சிகரட், தொலைத்தொடர்புகள், பந்தயம் மற்றும் சூதாட்டம் மற்றும் வாகனங்கள் மீதான வரி அறவீட்டு செயற்றிறனை விருத்தி செய்வதற்கு இயலுமான வகையில் பலதரப்பட்ட நியதிச்சட்டங்களின் கீழ் விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் அறவீடு செய்யும் ஒரு சில வரிகளுக்கு பதிலாக இணையவழியூடாக முகாமைத்துவப்படுத்தும் தனியானதொரு விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியை விதிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அவ்வாறே, 2022 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதிச் சேவைகளின் அடிப்படையில் பெறுமதிசேர் வரியை அதிகரிப்பதற்கும் மற்றும் பெருந்தொற்று அல்லது பொதுச்சுகாதார நிலைமையின் கீழ் அரச மருத்துவமனைகளுக்கு பரிசளிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள், கருவிகள் மற்றும் இரசாயனத் திரவியங்கள் போன்றவற்றுக்கான பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் குறித்த பணிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள விசேட பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான வரிச் சட்ட மூலத்திற்கும், பெறுமதிசேர் வரி (திருத்தப்பட்ட) சட்டமூலத்திற்கும் சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
08. அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான 03/2016 பொது நிர்வாக சுற்றறிக்கையை திருத்தம் செய்தல்

அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதிருந்த சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் குறித்த சம்பள முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது ஆசிரிய ஆலோசகர் சேவை நிறுவப்படாமையால், குறித்த சேவைக்கான சம்பளத்திட்டத்தை உள்ளடக்கி அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு இயலுமான 03/2016 வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை திருத்தம் செய்வதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
09. கூரையில் பொருத்தப்படும் சூரியமின் தொகுதிக்கான மின்கல மின்சக்தியை களஞ்சியப்படுத்தும் மின்கலத்தொகுதியை நிறுவுவதற்கு ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்
 
2030 ஆம் ஆண்டளவில் மின்சக்தித் தேவையின் 70% வீதத்தை மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதற்காகவும் 2050 ஆம் ஆண்டளவில் எரிசக்தி உற்பத்திகளிலிருந்து வெளியேறும் கரியமில காபன் வெளியீடுகளை இல்லாது செய்வதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. தற்போது நாட்டின் மின்சாரக் கட்டமைப்புக்கு கூரையில் பொருத்தப்பட்ட சூரியமின் தொகுதிகள் மூலம் 400 மெகாவாற்று இயலளவு கொண்ட மின் விநியோகிக்கப்படுகின்றது. இத்தொகுதிக்காக புதிய கட்டண முறை மூலம் தன்னார்வ நிதி முதலீடுகளின் பிரகாரம் மின்கலத்தொகுதியைப் பொருத்துவதற்கு ஊக்கமளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நம்பகரமான மின்சார விநியோகத்தை உருவாக்குவதற்கு இயலுமை கிட்டும். இந்நிலைமையின் கீழ் மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை அதிகளவில் தேசிய மின்கட்டமைப்புக்கு இணைக்கும் போது மேலெழக்கூடிய தொழிநுட்ப ரீதியான சவால்களை அடையாளங்கண்டு, பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அதிகாரிகள் குழு அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பாக தொடர்ந்தும் விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு 2021 நவம்பர் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவை உபகுழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
10. திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொகுதியின் அபிவிருத்திக் கருத்திட்டம்

திருகோணமலை எண்ணெய்த்தாங்கி தொகுதிக்குரிய தற்போது இந்திய அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியான கலந்துரையாடல் மூலம் மீளாய்வு செய்து கூட்டிணைந்த அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருநாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 24 எண்ணெய்த் தாங்கிகளை ஒதுக்குவதற்கும், லங்கா ஐ.ஓ.சி கம்பனியால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கீழ் எண்ணெய்த் தாங்கித் தொகுதியில் 14 தாங்கிகளை குறித்த கம்பனியின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்குவதற்கும், எஞ்சிய 61 எண்ணெய்த் தாங்கிகளில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 51% வீதமும், லங்கா ஐ.ஓ.சி கம்பனிக்கு 49% வீதமான பங்குரிமை கிடைக்கும் வகையில் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (பிரைவெட்) லிமிட்டட் எனும் பெயரில் நிறுவப்பட்டுள்ள கம்பனியால் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
11. 2022 ஆம் ஆண்டு பொருளாதாரம் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டங்கள்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2022 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன்மூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை அடைவதற்காக இலங்கைப் பொருளாதார எதிர்காலக் கண்ணோட்டங்கள் ( External Outlook  ) தொடர்பாக கீழ்வரும் தகவல்கள் விபரமாக நிதி அமைச்சர் அவர்களால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

• வெளிநாட்டுக் கடன் செலுத்தல் மற்றும் எதிர்பார்க்கப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகள் இறக்குமதிக்கான செலவு உள்ளிட்ட 2022 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து வெளிச்செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ள அந்நிய செலாவணி தொடர்பான தகவல்கள்

• ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை மூலமான வருமானம், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம், நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட 2022 ஆம் ஆண்டில் அந்நிய செலாவணி விபரம்

• எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான குறுகிய மற்றும் நீண்டகால படிமுறை முன்மொழிவுகள்

• நிலவுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்புக் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள சலுகைகள் கீழ்வருமாறு:

(i) அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5,000/- ரூபா வீதம் மாதாந்தக் கொடுப்பனவை ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கல்

(ii) தனியார் துறையின் தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடி குறித்த சலுகையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்

(iii) 3,500/- ரூபா மாதாந்தக் கொடுப்பனவாகப் பெறும் சமுர்த்திப் பயனாளிகளுக்கு மேலதிகமாக 1,000/- கொடுப்பனவை வழங்கல், குறித்த கொடுப்பனவை ஏனைய சமுர்த்திப் பயனாளிகளுக்கும் வழங்கல்

(iv) எதிர்வரும் போகத்தில் நெல் அறுவடையில் ஏதேனும் விளைச்சல் குறையுமாயின், தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு செலுத்தப்படும் 50/- ரூபா உத்தரவாத விலையை ஒரு கிலோவுக்கு 25/- ரூபாவால் அதிகரித்து வழங்கல்

(v) சந்தையில் அரிசி விலையில் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வாறு செலுத்தப்படும் மேலதிக தொகை அரசாங்கத்தால் பொறுப்பேற்றல்

(vi) தமது நுகர்வுக்குத் தேவையான மரக்கறிகள் மற்றும் பழவகைச் செய்கையை ஊக்குவிப்பதற்காக வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும், அதற்குத் தேவையான நிலத்தைப் பண்படுத்துதல், விதைகளை கொள்வனவு செய்தல் போன்ற இடுபொருட்களுக்காக காணியின் அளவுக்கு ஏற்ப ஒரு ஏக்கர் வரைக்கும் உயர்ந்தபட்சம் 10,000/- ஊக்குவிப்புத் தொகையை வழங்கல்

(vii) தோட்டத்தொழிலாளர் குடும்பமொன்றுக்கு ஒரு கிலோக்கிராம் கோதுமை மா 80/- ரூபாவுக்கு 15 கிலோ கிராம் கோதுமை மாவு வழங்கல்
(viii) தேவையான சந்தர்ப்பங்களில் உள்ளூர் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்காக முழுமையான வரிவிலக்கு செய்தல்

நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த மேற்படி யோசனைகள் அடங்கிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
 
 

வெகுஜன ஊடக அமைச்சிக்கு புதிதாக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனுஸ பெல்பிட இன்று (03)  வெகுஜன ஊடக அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கணக்காய்வு திணைக்களத்தின் கணக்காய்வாளராக அரச சேவையில் இணைந்துக்கொண்ட இவர் ,இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றினார். நிறுவாக சேவை காலப்பகுதியில் ஒன்றிணைந்த உதவி பணிப்பாளராகவும் ஜனாதிபதியின் உதவி செயலாளராகவும், ஜனாதிபதி நிதியத்தின் கணக்காளராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேபோன்று தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளராகவும், பதில் கணக்காளராகவும் பணியாற்றியதுடன், இலங்கை ரூபவாஹினி கூடுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாவும், அரச தகவல் திணைக்களத்தில் பிரதி பபணிப்பாளராகவும், பணிப்பாளர் மற்றும் முதலாவது பணிப்பாளர் நாயகமாவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தானத்தின் தலைவராகவும், லங்க புவத் நிறுவனத்தின் தலைவராகவும், செலசினே நிறுவனத்தின் உயர் அதிகாரியகவும் பதவி வகுத்துள்ளார்.

இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த திரு அனுஸ பெல்பிட ஸ்ரீ ஜெயவர்தன புர பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரியுமாவார்.

2003, 2004 ஆம் ஆண்டுகளில் அவுஸ்ட்ரேலியா விக்டோரியா பல்கலைக்கழகத்தின் தொழில் ரீதியிலான கணக்காய்வு முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சின் செயலாளராக நியமிகக்ப்பட்டதுடன் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக பதவி வகுப்பதற்கு முன்னர் பொருளாதார கொள்கை மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளராகும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெகுஜன ஊடக அமைச்சியின் புதிய செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட இந்த நிகழ்வில்  ,வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் S.R.W.M.R.P . சத்குமார ,மேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) எச். ஹெவகே ,அரச தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இலங்கை வானொலி இன்றுடன் 96 வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது. பழங்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை வானொலி இன்றும் முன்னணியில் செயற்படுகிறது. தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி சமய வேலைத் திட்டங்களின் ஊடாக நாட்டின் கலாசாரத்திற்கு முன்னுரிமை வழங்கி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. இலங்கை வானொலியின் 96 வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று சமய நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது. 96 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று விசேட தான தர்ம நிகழ்ச்சி கூட்டுத்தாபன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, 96 வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் உள்ள தலைமை காரியாலயம் உட்பட பிராந்திய சேவைகளில்; பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, மலையக சேவை ஏற்பாடு செய்த முதலாவது நிகழ்ச்சி கலகெதர – மெதகொட ஸ்ரீ சித்தார்த்தோய பிரிவென் விஹாரையில் நேற்று நடைபெற்றது. கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரபால லியனகேயின் தலைமையில் இது இடம்பெற்றது. இதன் போது ஊடக செயலமர்வும், சிறுவர்களுக்கான குரல் தேர்வும் நடைபெற்றன. இதில் 400 சிறுவர்கள் பங்கேற்றனர். சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகளுக்கு வாய்ப்பளித்து, சகல மக்களையும் உள்ளடக்கும் வகையில், மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிறுவனமாக இலங்கை வானொலி திகழ்கிறதென இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரபால லியனகே இதன் போது கூறினார்.

இலங்கையில் 2023ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வித் திட்டத்தில் சட்ட பாடவிதானம் உள்ளடக்கப்படவுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இது அமுற்படுத்தப்படும் வகையில் கல்வி பாடவிதானத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இது விடயம் குறித்து தகவல்கள் மற்றும் கருத்துக் களைச் சேரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தேசிய கல்வி நிறுவகத்தோடு இணைந்து இதுவிடயம் குறித்து ஆராயும் என, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி உபாலி எம்.சேதர தெரிவித்தார். ஐந்தாம் ஆண்டில் இருந்து 11ஆம் ஆண்டுவரை உள்ள பாடத்திடடத்திலும் பொருத்தமான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சௌபாக்கியத்தின் நோக்கினை யதார்த்தமாக்குவதன் மூலம் இலங்கையின் வெகுசன ஊடகத் தொழிலாளர்களின் அலுவல்களுக்குத் தேவையான சுதந்திரமான மற்றும் தெளிவான சூழலை உருவாக்குவதில், அரசாங்க பொறுப்புக்களின் ஒரு அங்கமாக ஆரோக்கியமான ஊடகவியலாளரை உருவாக்குவதனை நோக்காய்க் கொண்டு வெகுசன ஊடக அமைச்சினால் எசிதிசி அவசர விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதித் திட்ட முறை செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

பொறுப்பு வாய்ந்த ஊடகக் துறையினை நோக்காய்க் கொண்டு இலங்கையில் முதன் முறையாக தொழில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்காக வேண்டி “சௌபாக்கியத்தின் ஊடகவியலாளர் பாதுகாப்பு” எனும் பெயரில் வெகுசன ஊடக அமைச்சின் தலைமையில் வழங்குகின்ற “எசிதிசி அவசர விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதித் திட்டம்” அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் மற்றும் கௌரவப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையிலும், கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் பங்கேற்புடனும் 2021 டிசம்பர் 02ஆந் திகதி மு.ப. 10.00 மணிக்கு பிரதமர் அலுவலத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இலவச காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள், தங்கியிருந்து மருத்துவம் செய்தவற்கான இயலுமை, வெளி மருத்துவ வசதி, தீவிர நோய்க் காப்பீடு, செவிப்புலன் கருவிகள் மற்றும் கண்ணாடி வசதி, தனிநபர் திடீர் விபத்துக் காப்பீடு மற்றும் கோவிட் 19 காப்பீட்டு வசதி போன்ற பல நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

வெகுசன ஊடக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் சுமார் 3000 ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 98 ஊடகவியலாளர்களுக்கு இதன் போது காப்பீட்டு உரிமம் வழங்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி. விஜேவீர மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

தற்போதைய நிலைமையில் இன்றும் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால். நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படலாம் என கூறப்படுகின்ற போதிலும், அதுபற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை என மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார். நிர்வாகத்திற்கு இது தொடர்பில் அறிவிக்காததால் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோர் சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் என கருதப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மின்துண்டிப்பு எந்தவகையிலும் இடம்பெறாது என அவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கை அனர்த்தம் காரணமாக மின்துண்டிப்பு இடம்பெற்றாலும் அதனை சீர்செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அரசாங்கத்திடம் சம்பளம் பெறும் நிறுவனம் என்ற வகையில், எந்த விதத்திலும் நாட்டை இருளில் ஆழ்த்தாமல் இருக்க வேண்டும் என்பதே மொத்த ஊழியர்களினதும் நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இன்று தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்றாலும், ஒருபோதும் மின்துண்டிப்பு இடம்பெறாதென மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார விநியோகத்திற்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்பட மாட்டாதென உறுதி அளிப்பதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டணி உறுதி அளித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதிய அனல் மின்நிலையங்களை ஏற்படுத்துவதில்லை என்று சர்வதேச வலுசக்தி இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் முக்கிய உறுப்பினராக செயற்படுகின்றமை பற்றி இலங்கை மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளாஸ்கோ நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றினார். உலகின் இருப்பிற்காக சகல அரச தலைவர்களும் புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியமாகும். இரசாயன உரப் பாவனையை வரையறுத்து ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை நிலையான பசுமைப் பொருளாதாரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக அச்சம் இன்றி, நடவடிக்கைகளை எடுக்கும் அபிவிருததியடைந்து வரும் நாடுகளுக்கு சர்வதேச ஒத்துழைப்புக்களும் கிடைப்பது அவசியமாகும். புத்தபெருமானின் கற்பித்தல்கள் இலங்கையின் சுற்றாடல்களைப் பாதுகாக்க உயர்ந்த பட்ச ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டிலுள்ள, 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். காய்ச்சல் தடிமன் சளி போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சேதனப் பசளைப் பயன்பாட்டுடன் முன்னோக்கிச் சென்று விவசாயிகளை வலுப்படுத்துவது சகலரதும் பொறுப்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரியான விடயத்தை மேற்கொள்வது சவால்மிக்கது. எனினும் அவற்றை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்வது வெற்றியைத் தரும் என்றும் அவர் கூறினார். கமநல சேவை அதிகாரிகளுடன் நேற்று மாலை ‘வீடியோ’ தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்தார். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அது தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தப் பேச்சுவார்;த்தையின் போது சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

அரச நிறுவனங்களின் செயற்றிறனை மேம்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் அவசியம் என அவர் கூறினார். இதற்காக அரச ஊழியர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க மற்றும் ஒருங்கிணைந்த தொழிற்சங்கப் பிரநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலாம் கட்ட சம்பளத்தை அதிகரிக்க முடியும். அடுத்த இரண்டு பகுதிகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான ஒரு சந்திப்பு நேற்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயல்படுவதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தீர்வை வழங்கி இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அங்கு குறிப்பிட்டார்.

இதேவேளை முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய (13) தினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள்” என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுத்தினார்.

“கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், பொதுமக்களுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன” என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.Sagara 3832“உலகிலுள்ள இராணுவத்தினர் யுத்தத்துக்கு மாத்திரமன்றி, தேசத்தைக் கட்டியெழுப்பவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

Sagara 3887எமது நாட்டின் முப்படையினர், தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற சுகாதாரத் தரப்பினரின் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, கொவிட் ஒழிப்புக்காகச் செயற்பட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும், ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.Sagara 3927இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியையொட்டி, இன்றைய தினம் (10) அநுராதபுரம் – சாலியபுர கஜபா ரெஜிமென்ட்

Sagara 0236தலைமையகத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Sagara 0305இலங்கை இராணுவமானது, 1949ஆம் ஆண்டு 17ஆம் இலக்க இராணுவச் சட்டத்துக்கிணங்க ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காகப் பெரும் பங்கு வகித்த இராணுவம், காலாட்படை, ஆதரவு மற்றும் சேவை என, 25 ரெஜிமென்ட்களை உள்ளடக்கியுள்ளது.

Sagara 0311சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், சாலியபுர கஜபா ரெஜிமென்ட் முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அணிவகுப்பு மைதானத்தைத் திறந்து வைத்து, இராணுவத்தினரிடம் கையளித்தார். அதன் பின்னர், அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.

Latest News right

இலங்கையின் ஊடகக் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயம் சர்வதேச ஒத்துழைப்புடன் MMC–ITN கல்வி வளாகம் புதிய மைல்கல்லை எட்டியது

ஜன 08, 2026
இலங்கையின் ஊடகக் கல்வித் துறையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும்…

2026 புதிய ஆண்டை முன்னிட்டு வெகுஜன ஊடக பிரதி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
2026 புதிய ஆண்டின் வருகை, நாம் நாடாக முன்னேறிச் செல்ல வேண்டிய புதிய திசையை மீண்டும்…

இலங்கை /பவுண்டேஷன் நிறுவகம் (SLFI) புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியது

ஜன 01, 2026
இலங்கை/பவுண்டேஷன் நிறுவனத்தின் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம்…

இனம் – மதம் – கட்சி வேறுபாடுகள் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.

ஜன 01, 2026
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தரமான மற்றும் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்துவதும், இரக்கமுள்ள…

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல்…

தேசிய பாதுகாப்பு தினம்

டிச 26, 2025
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி…

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
டிசம்பர் மாதம் துவக்குதத்துடன் கிறிஸ்துவர்கள் ஆராதனையுடனும் ஆனந்தத்துடனும்…

நத்தார் வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று…

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் இன்று (24) நள்ளிரவில் ஆரம்பமாகிறது.

டிச 24, 2025
உலகத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக இந்த உலகில் அவதரித்த அவரின் மனிதநேயக் கருணையின்…