சமீபத்திய செய்தி

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கையின் வெளிநாட்டுத்; தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதுவர்களுக்கும் இடையில் சுமூகமாக கலந்துரையாடப்பட்டது.

நவீன தொழிநுட்பத்துடன் கூடிய வினைத்திறனுள்ள மேம்பட்ட தபால் சேவையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பில் தற்போதுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் 25ஆம் திகதி நடைபெற்றது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சமகி ஜன பலவேக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் சேவைக் கட்சி  போன்ற அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல சுயாதீன தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

இங்கு பிரதானமாக பல விடயங்கள் பற்றி அவதானம் செலுத்தப்பட்டதுடன், தபால் மா அதிபர் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியதன் பின்னர் உரிய ஆட்சேர்ப்புகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

 

தனியார் தபால் சேவையின் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்கின்ற போது பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்காக ஒழுங்குபடுத்தும் நிறுவனமொன்றினை ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், தேவையான பத்திரங்களை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 

தபால் திணைக்களத்தின் வருவாயை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரதேச தபால் பிரிவிற்கும் ஒருவர் என்ற அடிப்படையில்,  புதிதாக  சேர்த்துக் கொள்ளப்பட்ட இணைத்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு சந்தைப்படுத்தல் பயிற்சியளித்து அதன் மூலம் தபால் சேவையின் வருவாயை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தபால் மா அதிபர் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

 

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ருவன் சத்குமார, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நெருக்கடியான காலங்களில் நாட்டிற்காக கொள்கை வகுப்பாளர்கள் மிகப்பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டும் என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மின்வெட்டு தொடர்பில் நேற்று வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் பேச்சுவார்த்தை மேசையில் எடுத்த தீர்மானங்கள் மற்றும் அமைச்சரவையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மின்வெட்டு மேலும் ஏற்படக்கூடாது என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும,

“மேற்படி விடயத்தில் நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பீக் ஹவர்ஸில் 25 வாட் மின்விளக்கை அணைத்து வைக்க முடியுமானால், அந்த ஐந்து மணி நேரத்தில் 140 மெகாவாட் சேமிக்க முடியும்.

அதாவது, பீக் ஹவர்ஸில் ஐந்து மணி நேரம் 25 வாட் மின்விளக்கை அணைத்து வைப்பது என்பது நாம் பெரிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது போல் ஆகும். ஆனால் அது மட்டும் செய்தால் போதாது. அந்த தியாகத்தை குடிமக்கள் மட்டும் செய்தால் போதாது. கொள்கை வகுப்பாளர்களாகிய நாம் இந்த தருணத்தில் மிகப்பெரிய தியாகத்தை செய்ய வேண்டியவர்கள். கொள்கை வகுப்பாளர்களாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அந்த அர்ப்பணிப்பை செய்து காட்ட வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். சில அரச அலுவலகங்களில் குளிரூட்டி இயந்திரங்களை  18 முதல் 19 டிகிரி செல்சியஸ் வரை குறைத்துள்ளனர்.  பொதுவாக குளிரூட்டியின் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருந்தால் போதுமானது என மின்சக்தி வல்லுனர்கள்  கூறுகின்றனர். ஏனென்றால் நாம் ஐஸ்லாந்தில் வசிக்கவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

 

இந்த நாட்டில் உள்ள கல்வி முறையும் பரீட்சை முறையும் நாட்டின் குழந்தைகளின் திறமைகளை அடையாளம் காணும் அளவுக்கு ஆக்கப்பூர்வமானதாக இல்லை என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். குழந்தைகளை தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர் என பிரிக்கும் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை மன்ற நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சிறுவர்களின் திறன்களை மதிப்பீடு செய்து விருதுகள் வழங்கும் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"எனது கதையில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன. முதல் அத்தியாயம் பெற்றோர்களுக்கு விடப்படுகின்ற கோரிக்கை, இரண்டாவது அத்தியாயம் தியவன்னா மத்தியில் இருந்து கொள்கைளை வகுப்பவர்களிடம் விடப்படுகின்ற கோரிக்கை, மூன்றாவது அத்தியாயம் எனது சகாக்கள் மற்றும் ஊடக  நிறுவனங்களிடம் விடப்படுகின்ற கோரிக்கை,

பிள்ளைகளை தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள்  என பிரிக்கும் கல்வி முறைக்கும் பரீட்சை முறைக்கும் பதிலாக பிள்ளைகளின் திறமைகளை மேம்படுத்தும் கல்வி முறையும் பரீட்சை முறையும் வகுக்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளை தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் என பிரிக்கும் ஆபத்தான முறையொன்று உலகில் உள்ளது.  ஒவ்வொரு குழந்தையும் தேர்ச்சி பெற்றவர்களே.  ஆனால் குழந்தை எத்துறையில் திறமையானவர் என்பதைக் கண்டறிய நமது தேர்வு முறையும் கல்வி முறையும் ஆக்கப்பூர்வமாக இல்லை. கணிதத்தில் தோல்வியடைந்தால் வாழ்க்கையிலே தோல்வியடைந்தவராகிறான்.  இவ்வாறுதான் எமது கல்வி முறை கட்டியெழுப்பப் பட்டுள்ளது.  சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 50 சதவீதம் கணிதத் தேர்வில் சித்தி பெறுவதில்லை. அப்படியென்றால் அந்த 50 சதவீதமும், வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களா?  கணிதத்தில் தேர்ச்சி பெறாதவன் அழகியற் துறையில் திறமையானவனாக இருப்பான்.  சித்திரம் வரைவதில் திறமையானவனாக இருப்பான்.  தொழில்நுட்பத்தில் திறமையானவனாக இருப்பான்.  ஆனால் எமது கல்வி முறை, எமது பரீட்சை முறை அதனைக் கண்டறிந்து கொள்வதற்கு திறன் வாய்ந்தாக இல்லை.  எனவே, குழந்தைகளை தேர்ச்சி பெற்றவன், தேர்ச்சி பெறாதவன் எனப் பிரிக்கும் இந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டும்.

உலகின் பல நாடுகளும் பின்பற்றும், பின்லாந்து மட்டுமின்றி எஸ்டோனியா போன்ற நாடுகள்  ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளிலே நினைவாற்றலுடன் தேர்வு எழுதத் தொடங்குகிறார்கள் என அமைச்சர் கூறினார்.

"எனது இரண்டாவது அத்தியாயம் நானும் உட்பட கொள்கை வகுப்பாளர்களிடம் விடுக்கப்படும் வேண்டுகோள்,  மேற்குலக சமூகம் 13 என்கின்ற இலக்கம் துரதிர்ஷ்டமானது என்று நம்புகின்றது.  இதற்கு விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் இல்லாதிருக்கலாம்.  அவ்வாறே 225 என்கின்ற இலக்கம் கூட துரதிர்ஷ்டமானது என இலங்கை மக்கள் சமூகமும் கருதுகின்றனர்.  இந்த வாதத்தினை கல்வியினால் மாத்திரமே மாற்ற முடியும். உலகில் வறுமை, தீவிரவாதம், பயங்கரவாதம் அனைத்தும் கல்வியின்மையால் எழுகின்றன. 

எனவே கட்சிகள், எதிர்க்கட்சிகள் என குழுக்களாகப் பிரிக்காமல், 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வி முறைக்கான நமது கருத்துகளை முன் வைக்க வேண்டும்.  இதற்காக இலங்கை தேசத்தவர்கள் என்ற வகையில் நாம் நமது சகோதர மொழிகளைக் கற்க வேண்டும். அவ்வாறே,  சர்வதேச மொழியாக குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும்.

தனது உரையின் மூன்றாம் அத்தியாயத்திற்கு விளக்கமளித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள்,  குழந்தைகள், ஊனமுற்ற குடிமக்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் அறிக்கைப் படுத்தும் போது ஊடகவியலாளர்கள் போன்றே ஊடக நிறுவனங்களும் உணர்வுபூர்வமாக செய்திகளை வெளியிட வேண்டும் என்றார்.

"குழந்தைகள் நீரைப் போன்றவர்கள்.  நீரின் வடிவம் என்ன?  நீர் ஊற்றும் பாத்திரத்தின் வடிவமே நீரின் வடிவமாகும்.  எனவே சிறுவர் துஷ்பிரயோகம் என்பது குடும்ப வன்முறையில் மட்டும் நின்றுவிடவில்லை. செய்தித்தாள் பக்கங்களுக்குள், கேமரா லென்ஸினுள் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படலாம். எனவே, ஊடகத்துறை அமைச்சராக அல்லாமல், ஒரு தொழில்முறை சக ஊழியராக, அறிக்கையிடுவதில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த காலத்தை குறை கூறுவதை விடுத்து, எதிர்காலத்தை நோக்கி விரல் நீட்டும் மக்கள் பிரதிநிதிகளாக ஒன்றிணைய வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 “கொள்கை அறிக்கை மீதான இன்றைய விவாதத்திற்கு மேலதிகமாக, கௌரவ சபாநாயகர் அவர்களே, நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற  பாராளுமன்றத்தின் தரம் தொடர்பாக, அதன் நடத்தை தொடர்பாக அறிக்கைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதற்கு இவ்வுரையில் ஒரு நிமிடத்தை நான் ஒதுக்க விரும்புகின்றேன்.  எமது அறிவு, எமது ஆய்வு தொடர்பாக பொதுமக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர் ஊடகங்களில் கூறிய கருத்து, அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த கொள்கைப் பிரகடன வெளியீட்டிற்கு மாத்திரம் இரண்டாவதாக பாரியதொரு இடம் கிடைத்துள்ளது.  இது தொடர்பாக அவதனாத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.

இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தியதற்காக கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கௌரவ சபாநாயகர் அவர்களே, இது ஒரு அரசாங்கம், ஒரு கட்சி, ஒரு தலைவர், ஒரு குழுவின் தவறு அல்ல. 1948ல் இருந்து நாம் செய்த பல மோசமான செயல்களின் இறுதி விளைவாக இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கௌரவ எதிர்க்கட்சி உறுப்பினர்களே, 13ம் எண் துரதிர்ஷ்டவசமானது என்ற அங்கீகாரம் உலகில் உள்ளது என்பதை நாம் மனதார ஒப்புக்கொள்ள வேண்டும். இது உண்மையாக இருக்காது, ஆனால் ஒரு பிரபலமான கருத்து உள்ளது. மேலும், 225 என்ற எண் குறித்து நம் நாட்டில் அவநம்பிக்கையான கருத்தும் உள்ளது. ஒரு தரப்பினர் மீது விரல் நீட்டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே எனது பரிந்துரை. எனவே இந்த சந்தர்ப்பத்தை நாம் கூட்டாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது உரையில் கோரிக்கை விடுத்தார். அரசியலமைப்பின் மூலம் மேலாதிக்கத்தை கூட்டாகக் கூறும் இந்த பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளாகிய நாம் அந்த மேலாதிக்கத்தை யதார்த்தமாக்குகிறோமா?

மாண்புமிகு தலைவர் அவர்களே, அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் கடந்த இரண்டு வருடங்களை ஆராயும் போது, அவரது கொள்கைப் பிரகடனமான "சௌபாக்கியத்தின் நோக்கு" ஒப்பிடுவது மிகவும் நியாயமானது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் ஜனாதிபதி வேட்பாளராக அவர் முன்வைத்த கொள்கை அறிக்கையை வைத்தே கொள்கை அறிக்கை உரையை மதிப்பிட வேண்டும். எனவே,  நாம் இந்த இரண்டு வருட நெருக்கடியை எதிர்கொண்டு பயணித்த இந்தப் பயணத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி பாராட்ட வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

நாங்கள் அனைவரும் தடுப்பூசி பற்றி பேசினோம். இன்று நாம் இந்த தடுப்பூசியின் அடிப்படையில் உலகின் மற்ற நாடுகளை விட ஒரு படி மேலே இருக்கிறோம், நம்மைப் போன்ற பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பைக் கொண்ட நாடுகளுடன் மட்டுமல்லாமல், நம்மை விட உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆரோக்கியமான ஓர் இனமாக முன்னோக்கிச் சென்றுள்ளோம். அதற்காக பெரும் தியாகம் செய்த ஓர் அணி உள்ளது. அந்த பெரிய குழுவிற்குள் முன்னுரிமையை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவதில் எம்மிடையே எவ்வித வாதங்களும் இல்லை.  நான்கு நாட்களுக்கு முன், உலக சுற்றுலா கவுன்சில், ஆசிய பிராந்தியத்தில் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடு இலங்கை என்று அறிவித்தது. இது வேறு எதனாலும் அல்ல, இந்த தடுப்பூசியில் நாம் அடைந்துள்ள சிறப்பின் காரணமாகவே எமக்கு அந்தச் சான்று கிடைக்கின்றது. எவ்வாறாயினும்,  தற்போது நாம் நெருக்கடியை எதிர்நோக்குகிறோம் என்பது மறைக்கக் கூடியதொன்றல்ல.

என்ன நெருக்கடி? இன்று உற்பத்தியை விட நுகர்வு முக்கியமானது எனக் கருதிய  ஒரு சமூகமாக நாம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அந்த நெருக்கடியின் வெளிப்பாடாகவே கோவிட் தொற்றுநோய் மாறியுள்ளது.

இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், அண்மைக் காலத்தில் அரசாங்கம் என்ற வகையில் நாம் எடுத்த சில சாதகமான நடவடிக்கைகள் குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். குறிப்பாக நமது கல்வி முறையில் நமது நாட்டின் குழந்தைப் பருவ வளர்ச்சி பற்றி. உலகின் எந்த நாட்டிலும் கல்வித் துறையில் ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சி ஒரு மையப் புள்ளியாக மாறி வருகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக ஆகக் குறைந்தது முழு நாட்டிற்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடநெறி, பாடத்திட்டம் மாகாண சபையிலிருந்து மாகாணசபை வரை வேறாக்கப்பட்ட வேலைத்திட்டம் எதுவும் எமது நாட்டில் இல்லை. அதை முறைப்படுத்த எடுத்த முடிவை நாம் பாராட்ட வேண்டும்.

மேலும் இந்த கொள்கை விளக்க விவாதத்தின் போது, ஜனாதிபதி அவர்கள் பாடங்கள் குறித்து பேசினார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காதது வரலாற்று ரீதியாக நாம் செய்த ஒரு தவறு. எனவே பல்கலைக்கழக அமைப்பு முறையில் நாம் கோட்டை புகையிரத நிலையம், லிப்டன் சுற்றுவட்டத்திற்குப் பொருந்தக் கூடிய பட்டதாரிகளை உருவாக்கினோம்.

இது நெருக்கடியின் ஆரம்பம். புதிய பல்கலைக்கழக அமைப்பில், என்.எஸ்.பி.எம். மையும் நான் முன்னின்று நடத்தினேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சைடம்; பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதன் வேலைவாய்ப்பு விகிதம் 96 சதவீதம். தளத்தின் 94 சதவீதம். அரச பல்கலைக்கழக அமைப்பு தோல்வியடைவதற்கு அதுவும் ஒரு காரணம். எனவே, கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களில் ஒன்று, ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலத்தை உள்ளடக்குவது. குறிப்பாக கலைப் பாடநெறிகளுக்குள் அத்தகைய வசதி இல்லை. இதற்காக பெருந்தொகையை ஒதுக்குவதும், பல்கலைக்கழக அமைப்பிலும், ஒவ்வொரு பட்டப் படிப்பிலும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலமும் சேர்க்கப்படுவது முக்கியம். பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு 13வது திருத்தச் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என நண்பர் எம்.பி.சித்தார்த்தன் தெரிவித்த கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. உதாரணமாக வட மாகாணத்தில் 22 தேசிய பாடசாலைகளே இருந்தன. வடமாகாணத்தில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தேசிய பாடசாலை ஒன்று கூட இருக்கவில்லை. எனவே நான் கல்வி அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்தேன். குறைந்தபட்சம் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு தேசிய பாடசாலை இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன். ஏனெனில் வடக்கில் கல்வியில் பாரிய பிரச்சினை உள்ளது. வடமாகாணத்தில் உள்ள ஆரம்பக் கல்வி ஆசிரியர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் பயிற்சி பெறாத ஆசிரியர்களாக உள்ளனர். எனவே எதிர்காலத்தில் ஒரு நாள் நாம் ஏன் ஆயுதம் ஏந்துவதில்லை என்று குழந்தைகளிடம் கேட்போம். நாட்டின் உள்ளது 25 சதவீதம். வடக்கில் இது 53 சதவீதமாக உள்ளது. எனவே, 13வது திருத்தச் சட்டத்தை மீறிய செயலாக இதனைக் கருத வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக டிஜிட்டல் மயமாக்கல் பற்றி பேசினோம். இப்போது, வெகுஜன ஊடக அமைச்சு என்ற வகையில், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழு தீவையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனலாக் தொழில்நுட்பம் நம் நாட்டிற்கு வந்து 42 வருடங்கள் ஆகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் 2000 ஆம் ஆண்டு உலகிற்கு வந்தது. தாமரை கோபுரத்தை அடிப்படையாகக் கொண்ட 16 துணை கோபுரங்களுடன் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை இதனை நிறைவு செய்யும். 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி பார்வையாளர்களும் தங்கள் திரைகளில் மிகத் தெளிவான காட்சிகளைப் பார்க்கக் கூடியதாகவும் மற்றும் மலிவு விலையில் தொலைக்காட்சிகளை  நிறுவனங்களும்  மற்றும் தொடர்பாளர்களும் பெறுவார்கள் என்றுவாறு  நாங்கள் முடிவு செய்கிறோம்

100 வருடங்கள் பழமையான திட்டத்தின்படி முழுமையாக புனரமைக்கப்பட்ட கொழும்பு பிளவர்  வீதியில் 'சிறிமதிபாய' பிரதமர் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதை ஒட்டி நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.

வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இந் நினைவு முத்திரை கையளிக்கப்பட்டது.

ஆல்பர்ட் இம்மானுவேல் டி சில்வாவினால் அவரது மகன் சர் ஆல்பர்ட் ஏர்னஸ்ட் டி சில்வாவிற்காக 1916 ஆம் ஆண்டு இரண்டு அடுக்கு மாளிகை கட்டப்பட்டதுடன் அவரது மரணத்திற்குப் பிறகு 1960 இல் அவரது குடும்ப உறுப்பினர்களால் இக்கட்டிடம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அக்காலத்தில் கல்வி மற்றும் வானொலி அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் வீடமைப்பு அமைச்சு சிறிமதிபாயவில் நிறுவப்பட்டதுடன், 1978 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்கள் சிறிமதிபாயவில் பிரதமர் அலுவலகத்தை நிறுவினார்.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்,ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பிரதமரின் முன்னாள் செயலாளர்கள், அரச அதிகாரிகள், அல்பேர்ட் ஏர்னஸ்ட் டி சில்வாவின் உறவினர்கள் ஆகியோர் இச்சந்தர்ப்பத்திற்கு கலந்துகொண்டனர்.

"ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சிறுவர்கள் எதிர்கொள்ளும் முதல் சவாலாகும். தொற்றுநோய் சூழ்நிலையில் பரீட்சைகளை தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். புலமைப்பரிசில் பரீட்சை 05 மாதங்களின் பின்னரே நடைபெறுகின்றது. ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த பரீட்சையே ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகின்றது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கடந்த 19ஆம் திகதி கொழும்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஊடகத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“நமது நாடு மிகவும் திறமையான குழந்தைகளைக் கொண்ட நாடு.  குழந்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள், அந்த நம்பிக்கையை கடந்த முறை காப்பாற்றியதால் அந்த வெற்றியை நாட்டுக்கு காட்டினோம். அதனால்தான் ஒவ்வொரு தாய் தந்தையரையும் தங்கள் குழந்தைகளை நம்புங்கள், பிள்ளைகளின் பலத்தில் நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். முழு நாட்டிலும் உள்ள மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூற்று எட்டு மாணவச் செல்வங்களை வாழ்த்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். ” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

500 மில்லியன் டொலர் நேற்றைய தினம் பிணை முறிக்காக செலுத்த  முடிந்துள்ளமை அரசாங்கத்திற்கு ஒரு பாரிய வெற்றியாகும் என   ஊடக சந்திப்பில் பங்கேற்ற  ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். 

நவீன தொழில் நுட்ப அறிவுடனான உயர் ஊடகத் துறை போன்றே கௌரவமான ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கையில் முதன் முறையாக ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கை பட்டய ஊடகவியலாளர் பயிற்சி  நிறுவனத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் நியமிக்கப்பட்ட செயற்பாட்டுக் குழுக் கூட்டம் இன்று (13)  வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டளஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் வெகுசன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்த நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், தேவையான நிதி தொடர்பாகவும்  கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்கு அப்பால் சென்று உயர் மட்ட ஊடக கல்வியறிவு கொண்ட கௌரவமான ஊடக வல்லுனர்களை உருவாக்குவது,  ஊடகத்துறை தொடர்பாக உயர்தர கற்கை நெறிகளைக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாக தொழில்ரீதியிலான திறமையை இந்த நிறுவனம் எவ்வாறு வழங்குவது  குறித்து அமைச்சர் மற்றும் குழுவுடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டது. 

 

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் (ஊடகம்) மிலிந்த ராஜபக்ஷ மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2022 ஆம் ஆண்டினை முறையான ஆண்டாக உருவாக்குவதற்கான முதல் படிமுறையாக, மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் அனைத்து ஊடகவியலாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களுக்கு பதிலாக தரவு அடிப்படையிலான உண்மைத்தகவல்களை சமூகமயப்படுத்துவது ஊடகங்களின் கடமையாகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.  

 

ஊடகவியலாளர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் முகமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

 

“இத்தகைய சந்தர்ப்பத்தை விளம்பரத்தை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யவில்லை. இந்நாட்டு மக்கள் கட்டுக்கதைகளை மையமாகக் கொண்டு மூன்றாவது தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதுவரை, ஐந்து மில்லியனுக்கும் குறைந்த மக்களே மூன்றாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக, எதிர்காலத்தில் அபாய நிலை ஏற்படலாம் என சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதற்கான பொறுப்பினை ஊடகங்கள் கொண்டுள்ளன. இந்த விடயத்திற்கு பொறுப்பான கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில், அறியாமை மற்றும் கட்டுக்கதைகளுக்கு எதிராக பொதுமக்களை விழிப்பூட்டுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்' என்றார். 

 

உலகில் மிகவும் முன்னேறிய சுகாதார கட்டமைப்பு மற்றும் பொருளாதார ரீதியில் சக்தியைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மில்லியனையும் கடந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள், இவ்விடயத்தில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார். 

 

எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்திருந்தாலும், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் தடுப்பூசி வேலைத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட விசேட தலைமைத்துவத்தை நாம் அனைவரும் மறந்துவிடக் கூடாது. இதன் காரணமாக, ஆரோக்கியமான ஒரு தேசமாக எழுந்து நிற்க எம்மால் முடிந்துள்ளது'  என மேலும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

 

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அனுஸ பெல்பிட்ட உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒழுக்கம் தவறிய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பைப் போன்ற பாதுகாப்பினை வழங்க முன்வருமாறு வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நூற்றாண்டில் நிராகரிக்கப்பட்ட 'சிறுவர்களை அடிக்காமல் உருவாக்க முடியாது' என்ற ஒழுக்கக்கேடான கொள்கையை மீண்டும் சமூகத்தில் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் என அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் இறுதியில் கடந்த ஒருசில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகிய சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அமைச்சர் தெரிவித்திருந்தார். உலகம் முழுவதுமுள்ள 2 - 17 வயதுக்கிடையிலான சிறுவர்கள் உடல், உள மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக உலக சுகாதார சபை அறிவித்துள்ளது. இத்தகைய துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், நீண்டகால பிரச்சினைகளும் ஏற்படலாம். இருப்பினும், இத்தகைய துன்புறுத்தல் நடவடிக்கைகளை நிறுத்த முடியும். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட கடமைகள் காணப்படுகின்றன.

வளரும் பருவத்திலுள்ள சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்பான செய்திகள் கடந்த வாரங்களில் நாடுமுழுவதும் பல்வேறு பிரதேசங்களில் பதிவாகியிருந்தன. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் ....... 

'முழுச் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மூன்று செய்திகள் அண்மையில் அறியக் கிடைத்தன. நாட்டின் முன்னணி ஊடகங்கள் தமது செய்தி ஒளிபரப்பின் போது ஹட்டன் பிரதேசத்தில் இரு சிறுவர்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களை வெளிக்கொண்டு வந்திருந்தன. அதற்கு முந்தைய கிழமை, கம்பளை பிரதேசத்தில் தந்தையும், சித்தப்பாவும் சேர்ந்து ஆண் ஒருவருடன் மரத்தில் ஏறிய குற்றத்திற்காக தனது மகளை மனிதாபிமானமற்ற முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருந்த சம்பவத்தையும் நாம் செய்திகளில் பார்த்திருந்தோம். இன்று காலையும் கூட, கொட்டதெனியாவ பிரதேசத்தில் 14 வயதிற்கும் குறைவான பிள்ளைகள் இருவர் காணாமல் போயுள்ளதாகவும், 42 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை எதுவிதமான தகவல்களும் கிடைக்கப்படவில்லை என்ற செய்தியும் ஒளிபரப்பப்பட்டன. இந்த விடயம் ஊடகங்களுக்குள் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். அதனை நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 'சிறுவர்களை அடிக்காமல் உருவாக்க முடியாது' என்ற ஒழுக்கக்கேடான, பாரம்பரிய சித்தாந்தம் மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நூற்றாண்டு அதனை நிராகரித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாகரிகத்தில் முன்னோக்கி செல்லக்கூடிய தருணம் இதுவாகும். எனவே, இவ்வாறான செய்திகள் எவ்வாறு அறிக்கையிடப்படுகிறது. மேலும், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும். சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, துன்புறுத்தப்படாமல் சமூகக் கருத்துக்களை வழங்குவதில் முன்னோடியாக ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்' என தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்களுக்கு நேற்று முதல் ஒவ்வொருமாதமும் ரூபா 5000 கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று (03) அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக நிதி அமைச்சர் பேசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக சமூர்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூபா 3500 க்கு மேலதிகமாக ரூபா 1000 மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படவிருப்பதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.

ஊனமுற்ற படைவீரர்களுக்காகவும் இந்த ரூபா 5000 வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துளள்து.

இதற்கு மேலதிமாக அத்தியாவசிய அபாருட்கள் மீது விதிக்கப்பட்ட மேலதிக வரிகளையும் நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாதம் முதல், ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூ. 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 87 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)
ஓய்வூதியதாரர்களுக்கு இம்மாதம் முதல், ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூ. 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 40 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)
தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இதே மட்டத்திலான சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேச தொழில் அமைச்சுக்கு ஆலோசனை

சமூர்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூபா 3500 க்கு மேலதிகமாக ரூபா 1000 மேலதிக கொடுப்பனவு

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களும் அனைத்து வரிகளிலிருந்தும் நீக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ ரூ. 80 வீதம், மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மா
ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இம்மாதம் முதல் ரூ. 5,000 கொடுப்பனவு

விவசாயத்துறையை மேம்படுத்த, 20 பேர்ச் நிலத்திற்கு குறைவான வீட்டுத் தோட்டத்திற்கு ரூ. 5,000 கொடுப்பனவு; 20 - 01 ஏக்கர் நிலத்திற்கு ரூ. 10,000 கொடுப்பனவு

நெல்லின் கொள்வனவு உத்தரவாத விலை ரூ. 50 இலிருந்து ரூ. 75 ஆக அதிகரிப்பு

அதிபர்கள், ஆசிரியர்களுக்கான அதிகரித்த சம்பளத்தையும் இம்மாதம் வழங்க  அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Latest News right

இலங்கையின் ஊடகக் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயம் சர்வதேச ஒத்துழைப்புடன் MMC–ITN கல்வி வளாகம் புதிய மைல்கல்லை எட்டியது

ஜன 08, 2026
இலங்கையின் ஊடகக் கல்வித் துறையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும்…

2026 புதிய ஆண்டை முன்னிட்டு வெகுஜன ஊடக பிரதி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
2026 புதிய ஆண்டின் வருகை, நாம் நாடாக முன்னேறிச் செல்ல வேண்டிய புதிய திசையை மீண்டும்…

இலங்கை /பவுண்டேஷன் நிறுவகம் (SLFI) புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியது

ஜன 01, 2026
இலங்கை/பவுண்டேஷன் நிறுவனத்தின் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம்…

இனம் – மதம் – கட்சி வேறுபாடுகள் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.

ஜன 01, 2026
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தரமான மற்றும் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்துவதும், இரக்கமுள்ள…

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல்…

தேசிய பாதுகாப்பு தினம்

டிச 26, 2025
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி…

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
டிசம்பர் மாதம் துவக்குதத்துடன் கிறிஸ்துவர்கள் ஆராதனையுடனும் ஆனந்தத்துடனும்…

நத்தார் வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று…

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் இன்று (24) நள்ளிரவில் ஆரம்பமாகிறது.

டிச 24, 2025
உலகத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக இந்த உலகில் அவதரித்த அவரின் மனிதநேயக் கருணையின்…