சமீபத்திய செய்தி

2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின் தேவையின் 70 வீதத்தை மீள்பிறப்பாக்க சக்தி வள மூலங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் காரணமாக அனல் மின் மற்றும் பெற்றோலியம் போன்ற எரிபொருட்களை தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளும் மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை நாடி வருகின்றனர். நாட்டின் மின் தேவையின் வருடாந்த அதிகரிப்பு 6 வீதமாகும். அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதுடன் இணைந்ததாக மின்சக்தி வளத்திற்கான கேள்வி வேகமாக அதிகரிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமுறைக்கு பெறுபேறுகளை அனுபவிக்கக்கூடிய பேண்தகு அபிவிருத்திக்கு வழிவகுக்கும் வகையில் முடியுமானளவு மீள்பிறப்பாக்க சக்தி வளங்களை பயன்படுத்த வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சூரிய சக்திஇ காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

திட்டத்திற்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ள நிறுவனங்கள் சாத்தியவள அறிக்கைகளை தயாரிக்க வேண்டுமென்பதுடன்இ அனுமதியை விரைவாக வழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். ஏதேனும் ஒரு திட்டத்தி்ற்கு அனுமதி கோரப்படும்போது 14 நாட்களுக்குள் அதற்கு பதில் வழங்கப்படாவிட்டால்இ அது அனுமதியளிக்கப்பட்டதாக கருதுவதே பொருத்தமானதென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மீள்பிறப்பாக்க சக்திவள அபிவிருத்திக்கு அரசாங்கம் அதிகம் முன்னுரிமையளித்துள்ளது. அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

டென்டர் நடைமுறையின் ஊடாக தெரிவு செய்யப்படும் அனைத்து திட்டங்களும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படாவிட்டால்இ வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட உள்ள 5இ000 நீர்ப்பாசன திட்டங்களை அண்மித்ததாக சூரிய சக்தி தகடுகளை பொருத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். சூரியசக்தி திட்டங்களை குறித்த மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்களுக்கு மட்டுமே வழங்குவதும் அதன் நன்மையில் குறித்த வீதத்தை விவசாய சமூகங்களுக்கு வழங்குவதும் பொருத்தமானதாகுமென பெசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

பாடசாலைகள்இ தொழிற்சலைகள் மற்றும் அரசாங்க கட்டிடங்களின் கூரைகளில் சூரியசக்தி தகடுகளை பொருத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கிடைக்கும் நன்மையின் ஒரு பகுதியை குறித்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மன்னார்இ பூநகரி மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களில் காற்று மின் பிறப்பாக்கிகளை நிர்மாணித்துஇ தேசிய மின்சக்தி முறைமைக்கு குறிப்பிடத்தக்களவு மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை இணைப்பதுவும் ஒரு இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

காற்று அல்லது சூரிய சக்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தனியார் தொழில் முயற்சியாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்கி அரசாங்கம் அனைத்து ஊக்குவிப்புகளையும் செய்ய வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சர் டளஸ் அழகப்பெருமஇ இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரஇ அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள்இ மற்றும் சக்தி வளத்துறை தொழில் முயற்சியாளர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரச, தனியார் துறைகள் மற்றும் சிறியளவிலான பண்ணையாளர்களை இணைத்து குறுகிய மற்றும் நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

புல் வகைகளை வளர்த்தல், கறவை பசுக்களை இனப்பெருக்கம் செய்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் சேவைகளை மேம்படுத்தி விரைவாக இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் தேவையை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு,  பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் வருடாந்த பால் தேவையில் 40 வீதத்திற்கும் குறைவான அளவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. போசணையுள்ள சுத்தமான பசும்பாலை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இதன் காரணமாக மக்களுக்கு கிடைப்பதில்லை. அடுத்த பத்து ஆண்டுகளில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்திருந்தார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பொருத்தமான கறவை இனங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பசும்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு உயர் தரம்வாய்ந்த புல் வகைகளை வளர்த்தல் மற்றும் பசுக்களுக்கான உணவுகளை உற்பத்தி செய்வது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மொத்த பசும்பால் உற்பத்தியில் சுமார் 85 வீத உற்பத்தி சிறியளவிலான பால் பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களை வலுவூட்டி குறித்த விகிதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஒரு லீட்டர் பாலின் உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதனால் பண்ணையாளர்கள் ஊக்கமிழந்துள்ளனர். புற்கள் உள்ளிட்ட பசுக்களுக்கான உணவுகளை நிவாரண அடிப்படையில் பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டியதன் தேவையையும் பெசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார். அரச மற்றும் தனியார் துறைகளுக்கு தேவையான விலங்குணவு உற்பத்திக்கு பண்ணையாளர்களை ஊக்குவிப்பது நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டப்பட்டது.

விலங்கு பண்ணைகளை அண்மித்த சூழல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தலையிட வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அதனை பண்ணையாளர்களுக்கு சுமையாக ஆக்கிவிடக் கூடாதென்று குறிப்பிட்டார்.

பாரம்பரியமாக நடத்திவரும் விலங்கு பண்ணைகளை மக்களின் முறைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு உரிய விசாரணைகள் இன்றி மூடிவிடக்கூடாதென பெசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.

பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக்கொண்டு 15 தோட்டக் கம்பனிகளின் பங்களிப்புடன் 15,000 கறவைப் பசுக்களை இனப்பெருக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே குறிப்பிட்டார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை விரிவுபடுத்தல் பாரியளவிலான உற்பத்தியாளர்களை ஏற்றுமதி சந்தையுடன் தொடர்புபடுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முட்டை, கோழி இறைச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2020ஆம் ஆண்டு 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக தனியார் துறை முதலீட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத், பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தனியார் தொழில் முயற்சியாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்காமைவாக அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 இராணுவ நிலையங்களில் திங்கள்கிழமை (14) கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது.

ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டமாகும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகள் வீதம் ஐந்து மாதங்களுக்குள் 50,000 பட்டதாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்பட்டு, முழுமையான ஆற்றல்மிக்க பணியாளர்களாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பயனுள்ள பங்களிப்பை உறுதி செய்வதற்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பில் ஏழு பாதுகாப்பு படை தலைமையகங்களின் ஒருங்கிணைப்பில் இராணுவ பயிற்சி பணிப்பகத்தினால் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு கட்டமும் 10,000 பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து, அரச துறையின் முழு திறனை ஒரே நேரத்தில் அடைவதற்கு 'தலைமைத்துவம் மற்றும் குழு செயற்பாட்டு பயிற்சி, முகாமைத்துவ பயிற்சி, தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவன பயிற்சி, திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. 'ஒத்திசைவு மற்றும் நெகிழ்வுத் தன்மை திறமையான பொதுத்துறை ஊழியரை வளர்ப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது. அதே வேளை மோசமான உற்பத்தித்திறனைக் குறைக்கும். இந்த பயிற்சியில் நிர்வாக திறன்கள், அரசாங்க பொறிமுறையின் குறிக்கோள்கள், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை, புதுமை, நெகிழ்வுத்தன்மை, காட்சிப்படுத்தல், சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள முடியும்.

மாவட்டங்களின் படி பங்கேற்கும் பட்டதாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். பங்கேற்பாளர்களுக்கு திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்படுவதன் ஊடாக அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

ஆட்சேர்ப்பு முதல் ஓய்வு பெறும் வரை அரசத்துறை ஊழியர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முக்கியமான தேவையை மையமாகக் கொண்டு இராணுவப் பயிற்சியின் ஊடாக நீண்ட கால மற்றும் குறுங்கால இலக்குகளில் திறம்பட மற்றும் விளைத்திறனாக பணியாற்றுவதற்கான தலைமைத்துவம், நிர்வாக திறன், இலக்கு மீதான கவனம், தன்நம்பிக்கை மற்றும் அரச பொறி முறையின் நோக்கங்களை புரிதல் என்பவற்றை வளர்த்துக் கொள்ள முடியும்.

இந்த குறுகிய கால முயற்சியின் குறிக்கோளானது தலைமைத்துவ திறன்கள் மற்றும் பண்புகள், குழு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் அனைத்து பொதுமக்களுக்கும் உயர்தர பொதுத்துறை சேவையை வழங்கக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க, இலக்கு சார், ஒழுக்கமான மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதாகும். நீண்டகால நோக்கங்களை ஐந்தாண்டுகளுக்குள் அடையக்கூடிய வகையில் பொதுத்துறை ஊழியர் படையை திறமையான வழிமுறைகள், அணுகுமுறைகள் சமூகத்திற்கு உழைக்கும் கலாச்சார வளர்ச்சி, பொதுத்துறை சேவை அங்கிகாரம், மதிப்பு, அடையாளம் செயல்பாட்டு அம்சங்களை மதிப்பீடு செய்தல் எனும் பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அதன்படி இராணுவப் பயிற்சித் திட்டம் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், வெளிக்கள பயிற்சி நடவடிக்கைகள், குழு கட்டமைத்தல் நடவடிக்கைகள், ஆய்வு சுற்றுப்பயணங்கள், திறன் ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் ஐந்து சுயாதீனமான ஒன்றோடொன்று தொடர்புடைய தொகுதிகளின் கீழ் தொடங்கப்படும், இது பொதுத்துறையின் பங்களிப்பை ஆற்றல்மிக்கதாக மாற்றும். வழி. இராணுவ பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் சில அரச நிறுவனங்கள் இத் திட்டத்திற்கா செயல்படவுள்ளன.

இந்த ஐந்து மாத முழுவதும் பட்டதாரி பயிற்சி திட்டத்தின் மூலோபாய கருத்துருவாக்கத்தினை ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் வழிகாட்டல்களில் இராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகம் முன்னெடுக்கின்றது.

  • 60 பில்லியன் ரூபா வருடாந்தம் சேமிப்பு...
  • ஹம்பாந்தோட்டையில் மருந்து முதலீட்டு வலயம் நிர்மாணிக்கப்படும்...
  • உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு மருந்து பொருள் நகரம்…
  • ஒவ்வொரு மாதமும் புதிய மருந்து ஒன்றை உற்பத்தி செய்ய நடவடிக்கை...

எதிர்வரும் மூன்று வருட காலப்பகுதியில் நாட்டின் மருந்து தேவையில் 50% வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொள்வதும் மக்களுக்கு தேவையான தரம் வாய்ந்த மருந்து பொருட்களை கட்டுப்படியான விலையில் வழங்குவதும் இதன் நோக்கமாகும். உலக சுகாதார தாபனத்தின் பரிந்துரை மற்றும் நியமங்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து உற்பத்திகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. நாட்டின் மருந்து தேவையில் 85% வீதம் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது. இதற்காக வருடாந்தம் 130 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. நாட்டின் மருந்து தேவையை உள்நாட்டிலேயே நிறைவேற்றிக்கொள்வதன் மூலம் வருடாந்தம் 60 பில்லியன் ரூபா நாட்டுக்கு மீதமாகும். குறித்த இலக்கை வெற்றிகொள்வதற்கு எமக்கு முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மருந்துப் பொருள் உற்பத்தி மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி  இதனை தெரிவித்தார்

தற்போது ஆசிய வலயத்தில் அதிக மருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு இலங்கையாகும். உடனடியாக இந்த நிலைமை மாற்றப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கு பங்களிப்பதற்கு பாரியளவில் சுதேச முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார்.

வெளிநாட்டு சந்தைகளை இலக்காக்கொண்ட மருந்து உற்பத்திக்காக 400 ஏக்கரில் முதலீட்டு வலயம் ஒன்று ஹம்பாந்தோட்டை கைத்தொழில் நகரில் தாபிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு உலகின் முன்னணி மருந்து பொருள் உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்காசிய வலயத்தில் மருந்து பொருட்களுக்கு அதிக கேள்வி உள்ளது. இந்த சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதும் இதன் ஒரு நோக்கமாகும்.

அரச துறையை முன்னேற்றும் அதேநேரம் தனியார் துறை தொழில் முயற்சியாளர்களையும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. மருந்து பொருட்கள் உற்பத்திக்காக முதலீட்டு முயற்சிகளில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மருந்து பொருள் உற்பத்தி இறக்குமதி நிறுவனங்களிடம் திறந்த அழைப்பொன்றை விடுத்தார்.

சுதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வலயம் ஒன்று அனுராதபுரம் ஒயாமடு பிரதேசத்தில் 100 ஏக்கர் நிலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட உள்ளது. 25  நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டை செய்வதற்கு தயாராக உள்ளனர். தற்போதைய அரசின் கீழ் நாட்டின் மருந்து உற்பத்தியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் புதிய மருந்து ஒன்றை நாட்டில் உற்பத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு புதிய மருந்தை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

மருந்து உற்பத்தியை பதிவு செய்வதற்கு சுமார் ஒரு வருட காலம் ஆகின்றது. அக்கால தாமதத்தை தவிர்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவையை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் சுதேச மருந்து பொருட்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தனியான பிரிவொன்றை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அரச மருந்துப் பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகளை பொது மக்களுக்கு கட்டுப்படியான விலையில் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சதோச மற்றும் கூட்டுறவு பல்பொருள் அங்காடி நிலையங்களில் 100 மருந்து விற்பனை நிலையங்களை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களினதும் துறைசார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் மருந்து பொருள் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் நேற்று (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார்.

நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பது அதில் ஒன்றாகும். தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றது. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி செய்யப்படும்.

பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்காக மாவட்ட கல்வி குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டனர். வலயக் கல்வி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்வி காரியலயங்களுக்கிடையில் தொடர்பை பலப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் தவிர்ந்த பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் பங்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. அது பொது நலனை நோக்கமாகக்கொண்டதே தவிர அரசியல் தலையீடு அல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பாடசாலைகளில் உள்ள அதிபர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக பதில் அதிபர்களை நியமிப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. ஆசிரியர் யாப்புக்கமைய ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பரீட்சைகளை நடாத்த வேண்டும். அதிபர்களின் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக அது முறையாக இடம்பெறாமையை குறிப்பிடலாம். பாடசாலைகளில் இருக்கின்ற திறமையான மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கு உள்ள வாய்ப்புக்களை கண்டறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மழை காலங்களில் நகரங்கள் நீரினால் நிரம்பும் பிரச்சினை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதுபற்றி தனது கருத்தை தெரிவித்த ஜனாதிபதிஇ 'சிறு மழைக்கும் கொழும்பு நீரினால் நிரம்புகின்றது. நாம் அதற்கு நிலையான தீர்வொன்றை அறிமுகப்படுத்தினோம். கடந்த ஐந்து வருடங்களில் அது செயற்படுத்தப்படவில்லை. பிரச்சினை தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. பொறுப்புக்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதும் தீர்வு வெற்றியடையாமைக்கு காரணமாகும்' என்று கூறிய ஜனாதிபதி அவ்வாறான பலவீனங்களை களைந்து பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

ஔடத துறை பற்றி கவனத்தை செலுத்திய ஜனாதிபதிஇ மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஔடத சட்டத்தை மறுசீரமைப்பது பற்றியும் கலந்துரையாடினர். மருந்து இறக்குமதியை முறைமை படுத்துவதற்கும் அதற்காக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. 'எமது நாட்டில் தேவைக்கு மாத்திரமன்றி வெளிநாட்டு சந்தையை இலக்காகக் கொண்டும் மருந்து உற்பத்தியை மேற்கொள்ள எமக்கு முடியும். அதற்காக முதலீட்டாளர்களும் தயாராக உள்ளனர். இந்த இலக்கை அடைந்துகொள்வது நாடு அடையும் பாரிய வெற்றியாக வரலாற்றில் பதியப்படும்' என்று பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

போதைப்பொருளை ஒழிப்பதற்காக சிவல் பாதுகாப்பு குழுவொன்றை ஸ்தாபித்து போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை மிகவும் செயற்திறனாக முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அரச சேவையின் செயற்திறனை அதிகரித்து அபிவிருத்தி செயற்பாட்டுக்காக தொடர்ச்சியான பங்களிப்பை பெற்றுக்கொள்வதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார். ஒரு சில அதிகாரிகள் தீர்மானங்களை எடுப்பதற்கு பயப்படுகின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும். அரச சேவையை செயற்திறன்மிக்கதாகவும் முறைமைப்படுத்துவதற்கும் அரசியல்வாதிகள்இ அரச அதிகாரிகள் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

இதுவரை செயற்படுத்தப்படாத 15,000 பிக்குமார்களை உள்ளடக்கும் வகையிலான 'புதுபுன் சுரக்ஷா சுகாதார காப்புறுதி திட்டம்' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று 2020.09.07 அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் அலரிமாளிகையில் நடைபெற்ற புத்தசாசன நிதியத்தின் 84 வது நிர்வாக சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டு நிதியத்தின் தலைவர் என்ற வகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

அதற்கமைய புதுபுன் சுரக்ஷா சுகாதார காப்புறுதி திட்டத்திற்கு ஆரம்பத்தில் புத்தசாசன நிதியத்திலிருந்து ரூபாய் 40 மில்லியன் நிதியை வழங்குவதற்கு பிரதமர் அறிவுறுத்தல் விடுத்தார். அதற்கு மேலதிகமாக இந்த நிதியத்திற்கு அரசாங்கத்தினால் ரூபாய் 50 மில்லியன் வழங்கப்படவுள்ளது. இந்த நிதியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது பிரதமரின் ஆலோசனைக்கமைய கீழ்காணும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1.இதுவரை 100 வயதிற்கு மேற்பட்ட பிக்குமார்கள் மாத்திரம் வழங்கப்பட்ட வைத்திய கொடுப்பனவு மற்றும் பராமரிப்பு முறைகளை 90 வயதாக குறைத்தல்.

2.மூன்று ஆண்டுகளுக்கு இளம் பிக்குமார்களுக்கு (சாமனேர ஹிமிவருன்) வழங்கப்படும் புலமைப்பரிசில் எண்ணிக்கையை 800 இலிருந்து 1500 வரை அதிகரிப்பதற்கும் 750 ரூபாவாக காணப்பட்ட அந்த புலமைப்பரிசில் தொகையை 1000 ரூபாவாக அதிகரித்தல்.

3.குறைந்த வசதிகளைக் கொண்ட விகாரைகளின் சுகாதார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் நிதியை கலாநிதி திவியாகஹ யசஸ்தி தேரரின் விசேட கோரிக்கைக்கு அமைய ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தல்.

4.நாடு முழுவதும் காணப்படும் 20 இளம் பிக்குமார் களுக்கான அமைப்புகளை மேம்படுத்துதல்

5.சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும், சீனமொழி பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்கு கொவிட-19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் நூறு பிக்குமார்களை ஈடுபடுத்துதல்

6.விகாரைகளை அண்மித்த பகுதிகளில் காணப்படும் ஓய்வு மண்டபங்களில் கட்டணங்கள் அறவிடப்படாமல், அங்கு தங்குபவர்களினால் வழங்கப்படும் தொகையை மாத்திரம் பெற்றுக் கொள்ளுதல்

7.பிக்குமார்களுக்கு மொழி கல்வியை (விசேடமாக தமிழ் மொழி) வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தல்

இத்தருணத்தின் போது நிர்வாக சபை உறுப்பினரான கலாநிதி. திவியாகஹ யசஸ்தி தேரர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, புத்தசாசன நிதியத்தின் செயலாளர் டப்ளிவ்.டி.எச்..ருசிர விதான, புத்தசாசன நிதியத்தின் பொது அறங்காவலர் சட்டத்தரணி ஜீ.கரவிட்ட ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை விரைவாக நீக்குவதற்காக மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறம் தள்ள அரசாங்கம் தயாரில்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டத்துறை சார்ந்தோர் இதற்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதற்கமைவாகவே இதற்கான திருத்த வரைவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை மன்றக் கல்லூரிக்கு அமைச்சர் இன்று (08) காலை விஜயம் செய்தார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,19 ஆவது அரசியலமைப்பு நீக்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இதற்காக மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை சமகால அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள். இதனை துரிதமாக நிறைவேற்ற முடியாவிட்டால் அது மக்களுக்கு எதிரான துரோகச் செயலாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

118778972 1023860018050210 3217540647865671143 o

118850265 1023860104716868 2082160708070606151 o

இளம் மருத்துவர்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு

  • பதவிக்காலத்திற்குள் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதாக உறுதி
  • கிராமிய மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்கு புதிய உத்திகள்

மத்திய சுகாதார சேவைக் கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை கொவிட் – 19 நோய்த் தொற்று எமக்கு கற்றுத் தந்துள்ளது. நாம் இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இலங்கையில் பல்வேறு வைத்தியசாலைகள் மாகாண சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் சுகாதார பிரச்சினைகளின் போது பயன்படுத்தக்கூடிய வகையில் நாடு முழுவதும் பல்வேறு வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. சுகாதார சேவை முழுமையாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் கொவிட் -19 நோய்த் தொற்றுக்கு இலங்கை முகங்கொடுக்கும் போது அதன் செயற்திறன் இதற்கு மாற்றமாக அமைந்திருக்கலாம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒரு சில நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுடன் இணைந்து பொறுப்பை செயற்படுத்தும் முக்கியத்துவம் எமது அண்மைக்கால அனுபவங்களின் மூலம் உறுதி செய்யப்படுவதோடு, கல்வி இதுபோன்ற இனங்காணக்கூடிய இன்னுமொரு துறையாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

களனி பொல்லேகல, மானெல்வத்த நாகானந்த சர்வதேச பௌத்த கல்வி நிலையத்தில் (05) “சிறந்த உள்வாரி வதிவிடவாளர்” (Good Intern Programme 2020) பயிற்சி பட்டறையில் ஆரம்ப உரை நிகழ்த்தும்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இக்கருத்துக்களை தெரிவித்தார்.

  • ஆபரண உற்பத்தியாளர்களுக்கு  4% வீத வட்டிக்கு ஒரு மில்லியன் ரூபா கடன்

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணக் கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14% வீத வருமான வரி மற்றும் 15% வீத தங்க இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

இரத்தினக்கல்‌, தங்க ஆபரணங்கள்‌ மற்றும்‌ கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.

1971ஆம் ஆண்டு முதல் தங்கம் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச் சலுகை 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையில் நீக்கப்பட்டது. தங்கம் மற்றும் ஆபரண ஏற்றுமதியில் ஈட்டப்படும் உண்மையான வருமானம் இதன் மூலம் வெளிக்கொணரப்படாத நிலை தோன்றியது.

2018ஆம் ஆண்டு தங்க இறக்குமதிக்கு 15% வீத வரி விதிக்கப்பட்டது. தங்க நகைகளின் விலை உயர்வடைவதற்கு இவ்வரி காரணமாக அமைந்தது. குறித்த வரியை உடனடியாக நீக்கி, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கைத்தொழிலின் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலகச் சந்தையில் இலங்கை இரத்தினக்கல்லின் கேந்திர நிலையமாக மாறுவதற்கு முடியாமல் போனமை, அவை சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த முன்வைத்த 14 ஆலோசனைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நாட்டில் கண்டெடுக்கப்படாத உலகின் ஏனைய நாடுகளுக்குரிய விலை கூடிய இரத்தினக்கற்களை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் மற்றும் இரத்தினக்கல் கையிருப்பை பாதுகாத்து வருவதன் முக்கியத்துவம் பற்றியும் லொஹான் ரத்வத்த சுட்டிக்காட்டினார்.

இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும்போது இடம்பெறுகின்ற தாமதங்களை தடுப்பதற்காக உரிய அனைத்து நிறுவனங்களையும் ஒரே இடத்தில் ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் சம்பிரதாய ரீதியாக தங்க நகைகளை உற்பத்தி செய்பவர்களுக்கு தங்கத்தை கொள்வனவு செய்வதற்காக அரச வங்கிகளினால் 4% வீத சலுகை வட்டி அடிப்படையி்ல் 10 இலட்சம் ரூபா கடன் வழங்குமாறு ஜனாதிபதி அரச வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய இரத்தினக்கல் படிவுகளைக்கொண்ட பயிரிடப்படாத காணிகளை இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு வழங்குவதற்கு தடையாக உள்ள விடயங்களை நீக்கி அகழ்வுக்காக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இரத்தினபுரி தெமுவாவத்தையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இரத்தினக்கல் விற்பனை சந்தைத்தொகுதி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினக்கல் பரவலாக உள்ள பிரதேசங்களில் அனுமதி இன்றி இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாரியளவில் இடம்பெற்று வருகின்றன. இயந்திரங்களை பயன்படுத்தி சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் இடம்பெற்று வருகின்ற இரத்தினக்கல் அகழ்வுகளை உடனடியாக நிறுத்துவதற்கும் சம்பிரதாயமாக இரத்தினக்கல் அகழ்வுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்து வருகின்ற தடைகளை நீக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் இரத்தினக்கல் ஆய்வு கூடத்தை சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்துதல் உட்பட இத்துறையின் மேம்பாட்டிற்கான பல கருத்துக்கள் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.

அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஆகியோருடன் துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் இரத்தினக்கல், ஆபரணக் கைத்தொழிலாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

SHA0563

  • பொது மக்களுக்கான நீர் வழங்கும் திட்டங்கள் உயர் தரத்துடன்...
  • வீதிகளை நிர்மாணித்தல் நீர்வழங்கல் அமைச்சுடன் ஒன்றிணைந்து...

2025 நிறைவடைவதற்கு முன்னர் 24 மணி நேரமும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தின் எதிர்கால முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.

ஆறுகள்இ நீர்நிலைகள் மற்றும் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதேசங்களை சுத்தம் செய்து புனர்நிர்மாணம் செய்வதற்கு விசேட கவனத்தை செலுத்திஇ இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

'அனைவருக்கும் நீர்' சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு முன்வைக்கப்பட்ட மிக முக்கிய வாக்குறுதியாகும்.

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் 47 இலட்சம் குடும்பங்களுக்கு நீரை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளின் மூலம் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதோடுஇ அதற்காக 40இ000 கிலோமீற்றர்கள் நீர் குழாய்கள் புதிதாக பதிக்கப்படவுள்ளது. இதுவரை நீர்வழங்கலுக்கு செலவிடப்பட்ட செலவினங்களில் அரைவாசி நிதியை பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. நீரோடைகள்இ நீரூற்றுக்களை இனங்காணல் அவற்றை அபிவிருத்தி செய்தல் இவ்வேலைத்திட்டத்தின் படிமுறைகளாகும். நீரூற்றுக்களை பாதுகாப்பதற்காக மரங்களை நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் முழு நீர் வழங்கலில் 45மூ வீதம் நீர்க் கசிவின் மூலம் வீணாக்கப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களில் புதிதாக நீர்க்குழாய்களை பொருத்துவதன் மூலம் அதனை 15மூ வீதம் வரை குறைக்க முடிந்துள்ளது. நீரை பாதுகாப்பதற்காக நீர்க் கசிவுள்ள இடங்களை இனங்கண்டு புதிதாக நீர்க்குழாய்களை பொருத்தும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் உயர் தரத்தில் சுத்திகரிக்கப்பட்டு வீடுகளுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி தனது அவதானத்தை செலுத்தினார்.

நீர்க்குழாய்களை பொருத்தும்போது பாதைகளுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் அதன் மூலம் தேசிய சொத்து அழிவடைவதை தடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்வழங்கல் சபை ஒன்றிணைந்து அபிவிருத்தித்திட்டங்களை செயற்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்கு அவசியமான செலவினத்தை 30மூ வீதம் வரை இதன் மூலம் குறைத்துக்கொள்ள முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

மழை நீரை சேகரித்தல் மற்றும் நாட்டில் உள்ள குளங்கள்இ நீர்த் தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல்இ புதிதாக குளங்கள் மற்றும் நீரை தேக்கி வைக்கக்கூடிய கட்டமைப்புகளை நிர்மாணிப்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. நீர்ப்பற்றாக்குறை உள்ள பிரதேசங்களுக்கு நீரை கொண்டு செல்வதற்கு புதிய கால்வாய்கள் மற்றும் குழாய்களை கொண்டமைந்த திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் புதிய நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரஇ இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தஇ பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷஇ ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரஇ அமைச்சுஇ இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள்இ துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோருடன் பொது மக்கள் நீர் வழங்கல் செயற்திட்டத்தின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மற்றும் நிருவாக நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

மாவட்ட செயலத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டத்திற்கு அவசியமாகவும் அவசரமாகவும் நிறைவேற்றப்படவேண்டிய வேலைகளை தொடர்பாக விரிவாக விளக்கமளித்ததுடன் கோரிக்கைகளையும் முன்மொழிந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் நீர்தட்டுப்பட்டை நீக்குவதற்கு கித்துள் உறுகாமம் இரண்டு குளங்களையும் இணைப்புசெய்து அதன் நீர்மட்டத்தினை 90 எம்.சி.எம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், ஏற்கனவே 55 எம்.சி.எம் உயரத்தில் உள்ள அணைக்கட்டுகளை உலக வங்கியின் நிதியில் 58 எம்.சி.எம் வரைதான் உயர்த்துவதாக தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை 90 எம்.சி.எம் மாக உயர்த்துவதாயின் மாத்திரம் இத்திட்டத்தினை முன்னெடுக்கும்படி விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் உள்ளன. எனவே இதனை உடனடியாக முன்னெடுக்கும்போது மாவட்டத்தில் ஏற்படுகின்ற நீர்த்தட்டுபாட்டையும் வெள்ள அனர்தத்தையும் கட்டுப்படுத்தலாம் என்ற ஆலோசனையினையும் முன்வைத்தார்.

கழுதாவளைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை செயல்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பலருக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதுடன் விவசாயிகளின் விவசாய உற்ப்பத்திகளுக்கு நியாய விலையினையும் பெற்றுக்கொடுக்கமுடியும் என மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையானது கிழக்கு மாகாணத்திற்கான ஒரேயொரு பெரியவைத்திய சாலையானதாகும். இங்கு நிலவுகின்ற குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள புற்நோய் சிகிச்சைப் பிரிவானது எல்லா வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தும் அதனை இயக்குவதில் பெரிய இழுத்தடிப்பு இடம்பெற்றுவருவது தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் இங்கு சீ.ரி. இஸ்கேன் இயந்திரம் பழுதடைந்த நிலையில் உள்ளதுடன், எம்.ஆர்.ஐ. இயந்திரம் இல்லாமலும் காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் அம்பாறை மற்றும் கண்டி, கொழும்பு போன்ற இடங்களுக்கு இப்பரிசோதனைகளுக்கான மாற்றப்படுகின்றனர். எனவே இவற்றுக்காக புதிய நவீனரக இயந்திரங்களையும் அதற்கான பயிற்றப்பட்ட நிரந்தர விசேட நிபுனர்களையும் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன் எடுக்கப்படவேண்டும் எனவும் கோரப்பட்டது.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபன கிளையை (ஒசுசல) மட்டக்களப்பு நகரத்தில் அமைப்பதற்கு பலதடவைகள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டும் அது கைகூடவில்லை. அது போன்று சதொச விற்பனை நிலையம் மட்டக்களப்பு நகருக்கு அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதனுடாக எமது மக்கள் நியாய விலையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய ஏதுவாக அமையும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

உன்னிச்சை குளத்தில் இருக்கின்ற நீர் மட்டக்களப்பு நகர்ப்பகுதி மற்று ஏனை புறநகருக்கெல்லாம் வழங்கப்படுகின்ற நிலையில் உன்னிச்சையை அன்மித்த பல பகுதிகளுக்கும் நீர் தட்டுப்பாடுள்ள பகுதிகளுக்கும் கிடைக்காமல் இருப்பது பாரியகுறையாகவே கானப்படுகின்றது என்பது அவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமானது தனியார் காணிகளிலும் பாடசாலை கட்டிடத்திலும் அமைந்துள்ளன. இராணுவ முகாம் அமைப்பதற்கான காணிகள் புன்னக்குடாவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு மீள் குடியேற்ற அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்தியக்காரியாலையம் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதேச காரியாலையம் ஒன்றை மட்டக்களப்பில் அமைப்பதன் ஊடாக மட்டக்களப்பு விவசாயிகள் தங்களின் நெல்லை வழங்குவதற்கு வசதியாக அமையும் எனவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இக்குறைபாடுகளை உரிய அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு மிக விரைவில் இவற்றுக்கான தீர்வுகளை மக்களுக்காக முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

6986cf9ad43446411c85715627bcb4c8 XL

இந்நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் பாரபட்சமற்ற சேவைகளை பெற்றுக் கொடுப்பதே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் எதிர்பார்ப்பாகும். இந்த வகையில் பாகுபாடற்ற சமமான சேவையை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும் என்று தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

நேற்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தபால் திணைக்களத்தின் விசேட நிகழ்வில் சிறப்புரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

இன்று இன,மத வேறுபாடுகள் இன்றி சுமார் 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

சில தினங்களில் வறுமையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த க.பொ.த.சாதாரண சித்தி பெறாத இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச ஏற்பாடுகளை செய்துள்ளார் என்றார்.

மலையகப் பகுதி மக்கள் தொழில் நேர்முகப் பரீட்சைகளின் கடிதங்கள் மற்றும் அவசர தபால் சார்ந்த கடிதங்களை பெற்றுக் கொள்ள எதிர்நோக்கும் கடும் அசௌகரியங்களை போக்க விரைவில் அப்பிரதேசத்துக்கு கள விஜயம் மேற்கொண்டு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

NW07

Latest News right

“அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் – 2023” விண்ணப்பம் கோரல்

செப் 10, 2023
Default Image
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் வருடாந்தம்…

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

மே 23, 2023
Cabinet Decisions on 22.05.2023 Tamil page 0001
2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…