சமீபத்திய செய்தி

தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற் கொண்டு அரசாங்கத்தினால் பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

வரி நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று இரவு முதல் டின் மீன் (பெரியது) 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும்.

இந்த அத்தியாவசிய பொருட்கள் உட்பட 500 ரூபாவுக்கு மேல் பெறுமதியான பொருட்களை சதொச நிறுவனத்தில் கொள்வனவு செய்யும் போது ஒரு கிலோ பருப்பை 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தெங்கு அபிவிருத்தி சபை, குருணாகல் பெருந்தோட்ட கம்பனி மற்றும் சிலாபம் பெருந்தோட்ட கம்பனி என்பன கொழும்பு நகரத்திற்கான தேங்காய் வழங்களை அதிகரித்துள்ளன. எனவே நுகர்வோருக்கு சதோச விற்பனை நிலையங்களில் நியாயமான விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும் இடையிலான மெய்நிகர் இருதரப்பு கலந்துரையாடல்

மெய்நிகர் கலந்துரையாடல் தொடர்பான இலங்கை - இந்திய இணைந்த ஊடக அறிக்கை

மித்ராத்வ மக்க - நட்பின் பாதை: வளர்ச்சி மற்றும் செழிப்பை நோக்கி

Two PMPM 01

Two PMPM 02

Two PmPm 03

 

  • பல்கலைக்கழக பாடவிதானம் தொழிற்சந்தையை நோக்கமாகக்கொள்ள வேண்டும்.
  • தொழிநுட்ப விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழிநுட்ப பாடங்களுக்கு கூடிய அவதானம்.

எதிர்கால உலகிற்கு ஏற்ற பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜையை உருவாக்குகின்ற கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.

பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும் அதன்மூலம் பயனை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். நடைமுறை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, புதிய பாடவிதானங்களை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அவர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (24) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பல வருடங்களாக நாட்டுக்குப் பொருத்தமான கல்வி மறுசீரமைப்பொன்று இடம்பெறாமை தற்போதைய தொழில் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஆனாலும் அதற்கு அவசியமான மனித வளத்தை கல்வி முறைமை மூலம் உருவாக்க வில்லை.

'நாட்டின் எதிர்கால சமூகம் பயனுள்ள பிரஜைகளாக உருவாகுவதற்கு அவர்கள் புதிய அறிவு திறமைகள் மற்றும் திறன்களை விருத்தி செய்வது அவசியமாகும். இளைஞர், யுவதிகள் கல்வித்துறையில் கைவிடப்படாமல் இருப்பதற்கு முன்பள்ளி கல்வி முதல் உயர் கல்வியை நிறைவு செய்யும் வரை தெளிவான வழிகாட்டல்களை திட்டமிட வேண்டும். அதன் மூலம் தொழிநுட்ப கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் கல்வி பொறிமுறையில் தொழிநுட்ப பாவனையை விரிவுப்படுத்தவும் முடியும். கல்விசார் அனைத்து நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் காரணம் இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கேயாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

சாதி, மத பேதங்களின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவது கட்டாயமாகும் என்றும் நாட்டுக்குப் பொருத்தமான பயனுள்ள பிரஜையை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகுமென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

கல்வியை தொடர முடியாத பிள்ளைகளுக்கு வயதெல்லைகள் இன்றி மீண்டும் எதிர்பார்க்கும் கல்வி இலக்கை அடைந்து கொள்வதற்கு புதிய மறுசீரமைப்பின் மூலம் அதற்கான பின்புலம் தயாரிக்கப்பட வேண்டும். பரீட்சையை மையப்படுத்திய கல்விக்கு மாற்றமாக மாணவர் மையக் கல்வி முறையொன்றை நடைமுறை ரீதியாக செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத, தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் எண்ணிக்கை 31,000 த்திலிருந்து 41,000 வரை அதிகரிக்கப்படும். திறந்த பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக 10,000 பேர் உள்வாங்கப்படுவர். தகவல் தொழிநுட்ப பட்டத்தை பயிலுவதற்காக 10.000 பேரை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவுசெய்யும்போது அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றும் பல்கலைக்கழகங்களுக்கே உரிய முறைமையை தயாரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக கருத்தாடலுக்கு உட்படுத்தி செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

  • வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவருவதற்கு பிரச்சார நிகழ்ச்சித்திட்டம்...
  • உள்நாட்டு வர்த்தகர்கள் சர்வதேச சந்தைக்கு..
  • வீழ்ச்சியடைந்துள்ள நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நிவாரணம்...
  • பங்குச் சந்தையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை...

முதலீட்டாளர்களை இனங்கண்டு நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக திட்டமிடப்பட்டுள்ள புத்தாக்க உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பிரதிபலனாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு புத்தாக்க உற்பத்திகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் அதிகமான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும், புத்தாக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

நிதி மற்றும் மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி சீர்திருத்த இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (23) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

வட்டி வீதம்இ நிதிப் பிரிவு மற்றும் பங்குச்சந்தை நிலை மகிழ்ச்சிகரமானதாக உள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், 10 முதன்மையான விடயங்களை இனங்கண்டு துரித பொருளாதார அபிவிருத்திக்கு வழியேற்படுத்துதல் தனது அமைச்சின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது முதலீட்டாளர்களை கவரக்கூடிய பின்புலம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. உரிய பிரச்சார உத்திகளைக் கையாள்வதின் மூலமும் தூதுவர்களின் ஒத்துழைப்புடன் முதலீட்டாளர்களை வரவழைக்க திட்டமிட வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

முதலீட்டு வாய்ப்புக்களை இனங்கண்டு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவையான அனுமதிகளை தயார்படுத்துவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

சர்வதேச வர்த்தகர்களுக்காக கொழும்பு நகரை மையப்படுத்திய வகையில் அலுவலகம் ஒன்றை தாபித்தல் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.

அரச நிறுவனங்கள் கிராமங்களுக்கு செல்வதன் முக்கியத்துவத்தையும், வங்கிகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் துரித பொருளாதார அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சீமெந்து மற்றும் இரும்பின் விலைகளை குறைப்பதற்குள்ள இயலுமை தொடர்பாக கண்டறிவதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள் அதன் மூலம் நிர்மாணத் துறையின் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

2015 க்கு முன்னர் நாட்டில் இருந்த அபிவிருத்தி சூழலை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தென்னந்தோட்டங்களை துண்டாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பாரிய அளவிலான 289 திட்டங்கள் நாட்டில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை உடனடியாக நிறைவு செய்யுமாறு கூறிய பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் பாதைகள்இ நீர் வழங்கல் திட்டங்கள், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைகளை தாமதிக்காது நிறைவு செய்வதன் மூலம் நிர்மாணத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.

இளைஞர் சமுதாயம் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களை திட்டமிடுவதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சிங்கள மொழி பயன்பாட்டின் மூலமும் உரிய தெளிவுபடுத்தல்கள் மூலமும் உள்நாட்டு வர்த்தகர்களை இலகுவாக பங்குச்சந்தையை நோக்கி வரச்செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

வீழ்ச்சியடைந்துள்ள தனியார் நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு இயன்றளவு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி குறித்த நிறுவனங்களின் சொத்துக்களை இனங்கண்டு வைப்பாளர்களுக்கு நீதியை வழங்குமாறும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, அமைச்சு மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள்இ துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

  • ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்பு...
  • சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மீளாய்வு...
  • தேசிய வர்த்தக கொள்கை புதுப்பிப்பு...

ஏற்றுமதி அபிவிருத்தி சபை 28 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையில் ஒன்றுகூடியது.

1979ஆம் ஆண்டில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டது. ஏற்றுமதியாளர்களை வலுவூட்டி அத்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது அதன் நோக்கமாகும். கொள்கைகளை வகுத்தல்இ அங்கீகரித்தல் மற்றும் பரிந்துரைகளை செய்தல் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிகளாகும். அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தையை வெற்றிகொண்டு மக்கள்மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை விரைவுபடுத்துவது இச்சபையின் விடயப்பரப்புக்கு உட்பட்டதாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையை மீள செயற்படுத்திஇ முதலாவது சந்திப்பு நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சட்டத்தின் பிரகாரம் இதன் தலைவர் பதவி ஜனாதிபதி அவர்களுக்கு உரியதாகும். துறையின் பிரச்சினைகளை தீர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மாதத்திற்கு ஒரு தடவை ஒன்றுகூட வேண்டுமென முன்மொழியப்பட்டது.

ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை விளக்கிய ஜனாதிபதி அவர்கள்இ அந்தந்த நாடுகளுக்கு தேவையான வகையில் ஏற்றுமதித்துறையில் பல்வகைத்தன்மையை கொண்டிருப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கைச்சாத்திடப்பட்டுள்ள பல சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் நாட்டுக்கு அனுகூலமானவையல்ல. நாட்டுக்கு அனுகூலமான அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடிய வகையில் இந்த உடன்படிக்கைகளை விரைவாக மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஏற்றுமதித் துறையில் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் அதன் முன்னேற்றத்திற்காக தேசிய வர்த்தக கொள்கையை விரைவாக மீளாய்வு செய்து புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் ஆரம்ப உற்பத்திகளை ஏற்றுமதி சந்தைகளுக்கு பொருத்தமான வகையில் மேம்படுத்துவதற்காக ஏற்றுமதி உற்பத்தி கிராமங்களை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

ஏற்றுமதி காரணமாக கடந்த காலங்களில் ஏற்றுமதி துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பாரியதாகும். விவசாயிகளினதும் உற்பத்தியாளர்களினதும் நாட்டுக்கே உரிய உயர் தரத்துடன் கூடிய உயர்தரம் வாய்ந்த பயிர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது உயர் தரத்துடனும் சிறந்த கண்காணிப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உலக சந்தையில் சுதேச உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும். ஊக்கத்துடன் செயற்படுமாறு தான் தனிப்பட்ட முறையில் தூதுவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அடைந்துகொள்ள வேண்டியுள்ள இலக்குகளை அனைவருக்கும் நிர்ணயிக்க உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள்இ தூதரக அலுவலகங்களில் உள்ள வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரிகளின் வினைத்திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

விமான நிலைய வசதிகளை விரிவுபடுத்தி வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் சிறந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதியாளர்களை அதைரியப்படுத்தும் தேவையற்ற சட்டதிட்டங்களை நீக்க வேண்டுமென பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அழுதகமகே, ரமேஷ் பத்திரன, ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பிரசன்ன ரணவீர, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

முதலாவது சந்திப்பு ஹல்துமுல்லையில் : பிரச்சினைகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு

மக்கள் மத்தியில் சென்று அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளை தான் நேரடியாகக் கண்டு அவர்களின் கவலைகளை கேட்டு சரியான தெளிவொன்றை பெற்று நிவாரணங்களை வழங்குவது அவரின் எதிர்பார்ப்பாகும்.

முதல் விஜயமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு ஹப்புத்தளை 100 ஏக்கர் கிராமத்தில், குமாரதென்ன பாடசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

கிராமிய மக்கள், நீண்டகாலமாக தீர்த்து வைக்கப்படாத பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளினால் அல்லல்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் மேற்கொண்ட விஜயங்களின்போது அது தெளிவாகியதாகவும் குறிப்பிட்டார். வாழ்வாதார பிரச்சினை, காணி மற்றும் வீடின்மை, காணிகளுக்கு உறுதிகள் இல்லாதிருத்தல், சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகள் போதுமானதாக இல்லாமை, பிள்ளைகளின் கல்வி பிரச்சினைகள் மற்றும் பாடசாலையின் குறைபாடுகள், விவசாய மற்றும் குடிநீருக்கான நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினை, காட்டு யானைகள் ஊருக்குள் வருதல், விவசாய உற்பத்திகளை விற்க முடியாமை அவ்வாறு இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் முதன்மையானவையாகும்.

கிராமிய மக்களுக்கு உள்ள கஷ்டங்களை புரிந்துகொண்டு, அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அரச நிறுவனங்களின் ஊதாசீனம் மற்றும் செயற்திறனின்மை போன்றவை பிரிதொரு பிரச்சினையாகும்.

ஜனாதிபதி அவர்கள் மிக முக்கிய கிராமங்களில் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும்போது மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். செலவழிக்கப்படும் பணம் குறைத்துக்கொள்ளப்படும். கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதேச அதிகாரிகள் மாத்திரம் பங்குபற்றுவர். மக்கள் சந்திப்புக்கு வருகை தந்து, தமக்குள்ள பிரச்சினைகளை அறியத்தருமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு முடியுமான வகையில் உடனடியாக தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும். தீர்ப்பதற்கு காலம் எடுக்கக்கூடிய பிரச்சினைகள் மாத்திரம் பின்னர் தீர்த்து வைப்பதற்காக குறித்துக்கொள்ளப்படும்.

வேள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பது ஹல்துமுல்லை பிரதேச செயலக பிரிவின் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளாகும். அதில் 222 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது. நெல், மிளகு மற்றும் கறுவா பயிர்ச் செய்கையுடன்கூடிய கலப்பு விவசாயம் ஆகும். மக்கள் சந்திப்பு இடம்பெறும் குமாரதென்ன பாடசாலையில் 17 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இலங்கையில் பொது நீர்நிலை முகாமைத்துவ அணுகுமுறையை செயல்படுத்துவதற்கு ஒரு மூலோபாய பொறிமுறையை வகுப்பதற்கான குழுவொன்றை நியமிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான சந்திப்பொன்று பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் 2020.09.21 இடம்பெற்றது.

நீர்வழங்கல் துறை அமைச்சு, நீர்ப்பாசனத்துறை அமைச்சு, கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு, மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட 15 நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பான நீர் தேவையை பூர்த்திசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இக்குழு எதிர்வரும் வாரமளவில் நியமிக்கப்படவுள்ளது.

திறமையான மற்றும் நியாயமான தேசிய நீர்வள பாதுகாப்பு மற்றும் ஒதுக்கீடுகளின் மூலம் சமூகத்தினது மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதே இக்குழுவை நியமிப்பதன் முதன்மையான நோக்கமாகும்.

நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள கொள்கையை மீள்பரிசீலனை செய்தல், முக்கிய வரி நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்குதல், எல்லாவற்றிற்கும் மேலாக போதுமான தரமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல், தற்போதுள்ள நீர்வள மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் நீர்நிலை முகாமைத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களை பலப்படுத்துதல், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு மற்றும் நிர்வாகத்தை ஊக்குவித்தல் என்பன இதன் பிற நோக்கங்களாகும்.

மேலும், நிலவும் நீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொறுப்புள்ள மற்றும் அதிகாரம் கொண்ட பொது பொறிமுறையொன்றை நிறுவுதல், நீர் வளங்களை பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் முரண்பாடுகளை தணித்தல் மற்றும் நீருடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு பதிலளித்தல், நீர் வழங்கல் முகாமைத்துவ பிரச்சினைகளை வெற்றிகரமாக கையாள்வதற்கு பொறிமுறையொன்றை நிறுவுதல், தேசிய நீர் வளங்கள் முகாமைத்துவ செயலாளர் அலுவலகமொன்றை உருவாக்குதல், நீர்நிலைகள் உள்ள பிரதேசங்களை பாதுகாத்தல், நிலத்தடி நீர் முகாமைத்துவம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துதல், குழாய் கிணறுகள் முறைகேடான முறையில் நிர்மாணிக்கப்படுவதால் அதற்கான முறையான வேலைத்திட்டங்களையும், ஒழுங்குமுறைகளையும் நிறுவுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.

வீட்டுத்திட்டங்களில் வசிக்கும் மக்கள் முகங்கொடுக்கும் நீர் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அந்த வீட்டுத்திட்டங்களில் முறையான நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் இல்லையென சுட்டிக்காட்டினார்.

ஒழுங்கற்ற கட்டுமானங்கள் மூலம் நிலத்தில் நீர் உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளமை வெள்ளம் ஏற்படுவதற்கு பிரதான காரணமாகியிருப்பதாகவும், சட்டவிரோத கட்டுமானங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேல் மாகாணத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்படும் நட்டம் 300 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும். ஒழுங்கற்ற கட்டுமானங்களே அதற்கு காரணமாகும். இந்நாட்டில் நீர் தட்டுப்பாடு இல்லாததுடன், மொத்த நீரில் 50 சதவீதம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கடலில் சேர்க்கப்படுகின்றன என்றும் சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

முறையான நீர் முகாமைத்துவம் இன்மை காரணமாக ஏற்படும் இந்த பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்வதற்கு எதிர்வரும் வாரத்தில் நியமிக்கப்படவுள்ள புதிய குழு மாதம் ஒரு முறை ஒன்றுகூடவுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் முன்னெடுக்கப்படும் திட்ட முன்மொழிவுகள், கணக்கெடுப்பு அறிக்கைகள் என்பவற்றை இக்குழுவில் சமர்ப்பித்து நீர் பிரச்சினையை குறைப்பதற்கு உடனடி தீர்வுகளை பெறுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை (SMS) மீண்டும் நாளை ஆரம்பமாகவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்க உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை (Official SMS  News Alerts) பொது மக்களுக்கு மிக இலகுவான வகையில் நம்பிக்கை மற்றும் துரிதமான செய்தி வேவையாக முன்னெடுக்கும் நோக்கிலான குறுஞ்செய்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களை மீண்டும் கவர்ந்து நம்பகத்தன்மையுடனான உத்தியோகபூர்வ தகவல் குறியீடான அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்திற்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.news.lk மற்றும் dgi.gov.lk அமைவாக கையடக்க குறுஞ்செய்தி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வைபவம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளவில் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசாங்க அபிவிருத்தி தொடர்பான தகவல்களை உரிய வகையில் பொது மக்கள் மத்தியிலான தொடர்பாடலுக்காக அரசாங்க தகவல் திணைக்களம் எப்பொழுதும் செயற்பட்டு வருவதுடன், இதற்கான வேலைத்திட்டத்தை மேலும் துரிதப்படுத்தி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை இவ்வாறு மிகவும் விரிவான சேவையாக வழங்கும் நோக்குடன் மக்கள் மயப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை மொபிடெல் மற்றும் டயலொக் போன்ற கையடக்க தொலைபேசி வலைப்பின்னல் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மொபிடெல் வலைப்பின்னலில் REG (space)என்று டைப் செய்து 2299 என்ற இலக்கத்திற்கும், டயலொக் வலைப்பின்னலில் info என்று டைப் செய்து 678 என்ற இலக்கத்திற்கும் எஸ்.எம்.எஸ் செய்வதன் மூலம் உங்களது கையடக்க தொலைபேசியில் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

சிறு மற்றும் மத்திய தொழிற்துறை இன்று நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 2020.09.20 தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாகம் ருஹூணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில நடைபெற்ற 'சிறு மற்றும் நடுத்தர நிறுவன மேம்பாட்டு மாநாடு - 2020' இல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் என்ற ரீதியில் கடந்த குறுகிய காலத்திற்குள் சலுகை கடன் வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்தி பணி மூலதன தேவைகள் மற்றும் கடன் உத்தரவாதங்களை பூர்த்தி செய்ய முடிந்தது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கொவிட் -19 சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை தொடர்பான முன்மொழிவு, சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவரும் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் லக்ஷ்மன் ஆர் வடவலவினால் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளுக்கான கடன் உத்தரவாத நிறுவனத்தை நிறுவுதல், வருமான வரி நிவாரணம் வழங்குதல், தொழிலாளர் சட்டங்களை திருத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான நிறுவனத்தை நிறுவுதல் ஆகியவை இந்த திட்டத்தில் உள்ளடங்கும்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இந்த மண்டபத்தில் இவ்வாறானதொரு மாநாட்டை நடத்த முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஐந்து வருடங்களில் இந்த மாநாட்டு மண்டபத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்படாததால், இன்று உங்களுக்கு இதனை பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.

முதலாவது பிராந்திய சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு மாநாட்டை ஆரம்பிப்பதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில், சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவரும் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் லக்ஷ்மன் ஆர் வடவல அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

தொழில்முறை நிறுவனங்கள், வர்த்தக சபை, வணிக வங்கிகள் மற்றும் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய இந்நிறுவனத்தின், சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக் குழுவை நிறுவுவது மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இது உண்மையிலேயே சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு மேற்கொள்ளும் ஒரு முக்கியமான சேவையாகும்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இன்று நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். அது நம் நாட்டின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதத்திற்கு இத்துறை பங்களிக்கிறது. இது அனைத்து வேலைவாய்ப்புகளிலும் 45 சதவீதம் ஆகும். மேலும், இத்துறை நாட்டின் மொத்த தொழில்முனைவோரின் எண்ணிக்கையில் 75 சதவீதமாகும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஒன்பது வங்கிகளின் சுமார் 300 வாடிக்கையாளர்கள் இந்த முக்கியமான மாநாட்டில் பங்கேற்றதை நான் பாராட்டுகிறேன்.

'புதிய பொருளாதாரத்தில் நிதி முகாமைத்துவம், வங்கி நிதி வழங்கல் மற்றும் தொழில் முனைவோர் தலைமைத்துவம் தொடர்பில் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இன்று முகங்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான தீர்வு' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாட்டை நடத்துவது மிகவும் உகந்ததாகும்.

நிதி அமைச்சின் கீழ், இலங்கை மத்திய வங்கியின் ஆதரவுடன், கொவிட் -19 இனால் பாதிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதற்கு ரூபாய் 100 பில்லியன் நிதியை நன்கொடையாக வழங்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

நாம் கடந்த குறுகிய காலத்திற்குள் கடன்களுக்கு சலுகை வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்தி, பணி மூலதன தேவைகள் மற்றும் கடன் உத்தரவாதங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தோம்.

இந்த மாநாட்டில், முறையான நிதி நிர்வாகம், வணிக மேம்பாட்டுக்கு நிதியை முறையாகப் பயன்படுத்துதல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைப்படுத்தல், தொழிலாளர் போன்ற முக்கியமான பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் உலக ஏற்றுமதியின் சராசரி சதவீதம் 30 சதவீதமாகும். இருப்பினும், இலங்கையைப் பொறுத்தவரையில் அதில் 5 சதவீதமாகும். இதை அதிகரிக்க ஒரு அரசாங்கமாக எங்கள் ஆதரவை வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையின் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி மையத்தை நிறுவியமை தொடர்பில் அக்குழுவை நான் வாழ்த்துகிறேன். இலங்கைக்கு மதிப்புமிக்க அந்நிய செலாவணியை சம்பாதிப்பதற்கான இச்செயற்பாட்டிற்கு ஊக்குவிப்பது அரசாங்கம் என்ற வகையில் எமது பொறுப்புகளை நிறைவேற்றுவோம்.

ஹம்பாந்தோட்டை போன்ற மிகவும் கஷ்ட பகுதிகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தொடர்பில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

கடன் உத்தரவாத அமைப்பை நிறுவுவதற்கான இந்த குழுவின் பரிந்துரைகள் குறித்து தொழில்துறை அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை குறிப்பு தொடர்பிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சொத்துக்கள் இல்லாததால் புதிதாக இணை உத்தரவாதங்களை வழங்க முடியாத சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக, வெளிநாட்டு கடன் வழங்கும் நிறுவனங்களின் உதவியை பெற்று இந்த நிறுவனத்தை நிறுவ எனது ஆதரவை வழங்குவேன்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு வங்கித் துறைக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம். இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு பிற மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று நம்புகிறேன்.

இதன்மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கும் இலங்கை பொருளாதாரத்திற்கும் நன்மை கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முதலீட்டாளர்கள் உயர்ந்து வருவதாக வங்கிகள் சாட்சியமளிக்கின்றன.

வங்கிகளிடமிருந்து எடுக்கப்பட்ட கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது வங்கித் துறையின் கடன் இழப்பைக் குறைக்கிறது. இது அனைத்து வங்கிகளுக்கும் அதிக கடன் வழங்குவதை சாத்தியமாக்கும்.
இறுதியாக, சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் சந்தையில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அந்நிய செலாவணி சம்பாதிப்பதில் பங்களித்ததற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என பிரதமர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (19 .09.2020) புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஜனாதிபதி அவர்கள் தனது பயணத்தை ஆரம்பித்து மதுரங்குளி பாலச்சோனை விவசாய தோட்டத்தின் செயற்பாடுகளை கேட்டறிந்து கொண்டார். 900 ஏக்கர் நிலப்பரப்பில் தேங்காய், மரக்கறிகள் உள்ளிட்ட பல பயிரினங்கள் பயிரிடப்பட்டுள்ளன. 10 ஏக்கர்களில்வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாதிரி திராட்சை பயிர்ச் செய்கையும் ஜனாதிபதி அவர்களின் பாராட்டைப் பெற்றது.

இத்தாலி அரசாங்கத்தினால் பேராயர் வண.கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கிடைத்த நன்கொடை ஒன்றின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட விவசாய தொழிநுட்ப நிறுவனத்தை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார். 50 மாணவர்கள் தங்கி இருந்து பயிற்சி பெறக்கூடிய வகையில் நிறுவனம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் குறைந்த வருமானமுடைய பிள்ளைகளுக்கு பயிற்சியை வழங்குவதற்கு இங்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கார்தினல் ஆண்டகை அவர்கள் குறிப்பிட்டார்.

  • மதுரங்குளி விவசாய தொழிநுட்ப நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது….
  • ஆதர்ஷ (மாதிரி) பாடசாலைக்கு விளையாட்டு மைதானம்…

கொழும்பு பேராயர் மாளிகையின் கண்காணிப்பின் கீழ் நிறுவனம் நிர்வகிக்கப்படும். பயிற்சி நிலையத்தின் பாதிரிமாருடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.மதுரங்குளி ஆதர்ஷ (மாதிரி) பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்துத் தருமாறு மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை இராணுவ தளபதிக்கு அறிவித்த ஜனாதிபதி அவர்கள், உடனடியாக அதனை நிர்மாணித்துக் கொடுக்குமாறு குறிப்பிட்டார்.வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றை நிர்மாணித்துத் கொடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார். வீதிகள் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் பொதுமக்களின் பல பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அவற்றுக்கு உடனடியாக தீர்வினையும் வழங்கினார்.

மதுரங்குளி பாலச்சோனை முதல் தலுவ பிரதேசத்திற்கு பயணித்த ஜனாதிபதி அவர்கள், வீதியின் இருபுறமும் கூடியிருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். பீட்ரூட், புகையிலை, மிளகாய் மற்றும் வெங்காய பயிர் நிலங்களை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், பயிர்ச் செய்கைக்காக விவசாயிகளை ஊக்குவித்தார்.

தலுவ நிர்மலபுர காற்று விசையின் மூலம் இயங்குகின்ற மின் நிலையத்தையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார். பேராயர் வண.கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சின்தக்க மாயாதுன்னேவும் இதன்போது இணைந்து கொண்டனர்.

நீண்டகாலமாக உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தரத் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சீனி, குளுக்கோஸ் வகைகள் மற்றும் சோடியம் பைகாபனேட், பெரசல்பேட் போன்ற பொருட்களைக் கலந்து தேயிலை உற்பத்தி செய்தல் தொடர்பாக அண்மைக் காலங்களில் ஊடகங்களின் மூலம் அறியக் கிடைக்கின்றது. அவ்வாறான தேயிலை உலக சந்தையில் நிராகரிக்கப்படுவதன் மூலம் தேயிலைக் கைத்தொழில் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

நாட்டின் புகழுக்கும் உலக சந்தையில் Ceylon Tea க்கும் உள்ள கேள்விக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு எதிர்காலங்களில் எவ்வகையிலும் இடமளிக்க முடியாதென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சந்தையில் மிளகுக்கு ஏற்பட்ட பாதிப்பு தேயிலை கைத்தொழிலுக்கும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அவர்கள் உறுதியாக குறிப்பிட்டார்.

உயர் தரத்திலான தேயிலை உற்பத்தி தொடர்பாக சிறு மற்றும் மத்திய தர தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுடனும் ஏற்றுமதியாளர்களுடனும் இன்று (18) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலக சந்தையில் தேயிலைக்கான கேள்வி 65 வீதத்திலிருந்து 45 வீதமாக குறைவடைவதற்கு தரம் குறைவான தேயிலை உற்பத்தி காரணமாக அமைந்துள்ளது. இந்நாட்டில் 705 தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. 45 தொழிற்சாலைகளின் முறையற்ற செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் 18 தொழிற்சாலைகளின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டதாக தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்தார்.

கழிவுத் தேயிலை மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய இரசாயனப் பொருட்களை பயன்படுத்தி தேயிலை உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களை சுற்றி வளைப்பதற்கு புலனாய்வு துறையினரின் தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட படையணி மற்றும் பொலிஸாரினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்திற்கோ தேயிலை கைத்தொழிலுக்கோ தரம் குறைவான தேயிலை உற்பத்தி தடையாக அமைவதற்கு இடமளிக்கக்கூடாது. உயர் தரத்திலான தேயிலையை உலக சந்தைக்கு வழங்குவதற்கு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த தரத்திலான தேயிலை உற்பத்திக்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதனையும் தாண்டி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் தொழிற்சாலைகளை மூடுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

புலனாய்வுத் துறையினரின் உதவியுடன் தொடர்ச்சியான விசாரணைகளை நடத்தி இவ்வாறான நிறுவனங்களை சுற்றி வளைக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், பதில் பொலிஸ்மா அதிபர், புலனாய்வுத்துறை பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தேயிலை கைத்தொழிற்சாலை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும் வருடாந்த வெகுஜன ஊடக உதவித்தொகை திட்டத்தை வெகுசன ஊடக அமைச்சு செயல்படுத்தவுள்ளது.

"அசிதிசி ஊடக புலமைப்பரிசில் செயற்றிட்டம் – 2020" க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, இலங்கையின் அங்கீகாரம் பெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதி நேர அடிப்படையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், இணையத்தள ஊடகவியலாளர்கள் இந்தப் புலமைப் பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். தகைமைகளைப் பூர்த்திசெய்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு இன்று ஆரம்பமான நிலையில், இன்றும் (18), நாளையும் (19), நாளை மறுதினமும் (20) வெகுசன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது.

கற்கை நெறியின் பொருட்டு, பட்டதாரி மற்றும் பட்டப் பின்படிப்புக்கான உதவித்தொகை திட்டம் அதிகபட்சமாக ரூ. 200,000 மற்றும் நீண்ட கால மற்றும் குறுகிய கால சான்றிதழ் கற்கை நெறிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 100,000 வழங்கப்படவுள்ளது.

மேலதிக தகவல்களை 0112513645/ 0112513459/ 0112513460 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும்.

Latest News right

“அஸிதிஸி வெகுசன ஊடக புலமைப் பரிசில் நிகழ்ச்சித் திட்டம் – 2023” விண்ணப்பம் கோரல்

செப் 10, 2023
Default Image
இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் வருடாந்தம்…

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

மே 23, 2023
Cabinet Decisions on 22.05.2023 Tamil page 0001
2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…