பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இன்று (25) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.
வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக மீண்டும் நியமனம் பெற்றுள்ள நிருவாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அனுஷ பெல்பிட்ட இன்று (25) வெகுசன ஊடக அமைச்சில் வைத்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவரது நியமனக் கடிதம் நேற்று (24) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இதற்கு முன்னரும் இவர் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக பதவி வகித்தமை குறிப்பிடதக்கது.
தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷ சார்பு அரசாங்கமென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தான் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெறுவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமென்கின்றபோதிலும் இதற்கான தீர்வை காண்பதற்குரிய மாற்று யோசனையை முன்வைக்க எவராலும் முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்துச் செல்கின்றது. உலக சந்தையில் நிலவும் விலையை விட குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. அத்துடன் போதுமானளவு டொலரும் எமது கையிருப்பில் இல்லை. எனவே மக்கள் பெரும் அழுத்தத்துக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். மக்கள் முகம் கொடுத்துவரும் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவையும் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்சி தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இத்திருத்தச் சட்டமூலத்தின் நகல்களை பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) ஆராயப்படவுள்ளது. இதனை தொடர்ந்து திருத்தச் சட்டமூலத்தின் இறுதி தீர்மானத்தை பெற்றுக்கொள்வதற்காக அதனை மீண்டும் அமைச்சரவையிடம் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அமைச்சரவை பேச்சாளராக வெகுசன ஊடக மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இணை அமைச்சரவை பேச்சாளர்களாக, விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணை அமைச்சரவை பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன வெகுசன ஊடக அமைச்சர் பதவிக்காக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவர் இன்று (23) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 08 பேர் இன்று (23) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்த வகையில், புதிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 20 அமைச்சர்கள் தற்போது அங்கம் வகிக்கின்றனர்.
சர்வகட்சி அரசாங்கத்தின் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று, (20) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
01. திரு.நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பற்துறை
மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
02. கலாநிதி சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்
03. கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல - சுகாதார அமைச்சர்
04. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ - நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர்
05. திரு.ஹரின் பெர்னாண்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
06. திரு. ரமேஷ் பத்திரன - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
07. திரு. மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
08. திரு. நலின் பெர்னாண்டோ - வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
09. திரு. டிரன் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
20.05.2022
பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, இன்று (12) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடமிரருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
சமன் ஏக்கநாயக்க, இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். 2015 - 2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக கடமையாற்றிய அவர், நான்காவது தடவையாகவும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதல் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவராவார். இவர் தனது 30 வருடங்களுக்கும் அதிகமான நிர்வாக சேவையில், இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுக்களிலும், மலேசியா மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்களிலும் சேவையாற்றியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு 73 வயதாகும்.
இன்று (12) பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஐந்து முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.
அந்த வகையில் அதிக தடவை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவராக ரணில் விக்ரமசிங்க விளங்குகின்றார்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி விடுத்துள்ள மேதினச் செய்தி வருமாறு,
உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது.
நமது நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக தொழிலாளர் வர்க்கமே பாரிய சவாலுக்கு உள்ளாகியுள்ளது. அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதி பூண்டவர்களும் அவர்கள்தான். நாளுக்கு நாள் அவர்கள் மீதான அழுத்தங்கள் தற்போது அதிகமாக உள்ளன. அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், நிலவுகின்ற சிக்கலான நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்நியச் செலாவணி இழப்பானது பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அவை அனைத்தையும் முகாமைத்துவம் செய்வதுதான் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியாகும்.
ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதை பின்தொடர்வதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் கவனம் செலுத்துவதுதான் இப்போது நாம் செய்ய வேண்டியது. அதற்கான மிகவும் பொருத்தமான மற்றும் செயற்திறன்மிக்க வேலைத்திட்டத்திற்கு மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.
இந்நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அரச தலைவர் என்ற வகையில் மக்கள் சார்பாக நான் அழைத்தேன். ஒவ்வொரு நொடியும் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதே எமது குறிக்கோள்.
இந்த தொழிலாளர் தினத்தில், அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ள மக்களுக்காக ஒருமித்த கருத்துக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நான் மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன்.
உழைக்கும் மக்களுக்காக அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, போராட்டத்தை மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் நேர்மறையான திசையில் கொண்டு செல்ல ஒன்றிணையுமாறும் உழைக்கும் மக்களிடம் கெளரவமாக கேட்டுக்கொள்கிறேன்.
உலகளாவிய தொழிலாளர் சக்தியான தொழிலாளர் சகோதரத்துவத்தை உருவகப்படுத்தும் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதில் நான் உங்களுடன் இணைந்துகொள்வது அந்த அபிலாஷைகளுடனேயே ஆகும்.