சமீபத்திய செய்தி

 

 

Ø மாநாட்டை ஏற்பாடு செய்தல் நேர்மையான ஒரு முயற்சியாகும்.  அரசியல் இலாபம் பெறுவதற்கு அல்ல...

Ø கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு வருகை தந்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி...

Ø பங்கேற்காத கட்சிகளுக்கும் வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு அழைப்பு...

                                                                 சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.

 

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று(23) சர்வகட்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய மக்கள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா மகஜன கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை அமைப்பு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

லங்கா சமசமாஜ கட்சியின் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் வண. அத்துரலியே ரத்தின தேரர், 11 பங்காளிக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்த்து இந்த மாநாடு கூட்டப்பட்டது. கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர். நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் சர்வகட்சி மாநாட்டிற்கு எதிர்காலத்தில் வழங்குவதாகவும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், தற்போதைய பொருளாதார நிலைமையை மாநாட்டில் முன்வைத்தார்.

சர்வகட்சி மாநாடு நேர்மையான ஒரு முயற்சி ஆகும். இதில் எந்தவித அரசியல் இலாபமோ குறுகிய நோக்கமோ கிடையாது எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றதுடன், அதனை தேசிய தேவையாகக் கருதி பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார். கலந்து கொள்ளாத ஏனைய கட்சிகளுக்கும் வருகை தந்து, தமது நிலைப்பாட்டை சர்வகட்சி மாநாட்டின் முன்னிலையில் தெரிவிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மீளாய்வு செய்வதற்கு பொறிமுறை ஒன்றை உருவாக்கி பயனுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக குழுவொன்றை அமைக்க முடியுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலரும் இம்மாநாட்டில்  கலந்துகொண்டனர்.

 

   
 

மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். 1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது.

இத்தொழிற்சாலை 728 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தாலும் தற்போது அதன் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்புக்களாக மாறியுள்ளன. 
அமைச்சரவை தீர்மானத்துக்கமைய எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பயன்படுத்தக்கூடிய கட்டடங்களை தவிர ஏனைய கட்டடங்களை இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் பிரதமரின் இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது தொழிற்சாலையின் 80 வீதமான கட்டடங்களை புனரமைத்து பயன்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது. அதற்கமைய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை புனரமைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

2022 வானொலி அரச விருது விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி துறையின் வளர்சிக்கு பங்களிப்புச் செலுத்திய வானொலி கலைஞர்களை கௌரவிப்பதே இவ்விருது வழங்கும் நிகழ்வின் நோக்கமாகும். இந்நிகழ்வை கலாசார விவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது. 

 

யாழ்ப்பாணம் – மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார  மத்திய நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். விவசாயிகள் தமது அறுவடைகளுக்குத் தகுந்த விலையை பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோர் மலிவு விலையில் மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

தரமான சிறந்த தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப்படுவதன் முக்கியத்துவம் மற்றும் ரசிகர்களுக்கு உயர்ந்த தரமான ரசனையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெகுசனஊடக அமைச்சின் கேட்போர்கூடத்தில் கடந்த 16 ஆம் திகதி ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர்கள் பேரவைக்குமிடையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின்போது தொலைக்காட்சி நாடகங்கள் தொடர்பில்  தேசிய கொள்கையை உருவாக்குதல், வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும்  வர்த்தக விளம்பரங்களுக்காக வரி அறவீடு செய்தல், 2023 -2032 காலப்பகுதியை சிறந்த தொலைக்காட்சி தசாப்தமாக உருவாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல், தொலைக்காட்சி நாடகத்துறையின் தொழில் தன்மையை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

தேசிய தனித்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கி படைப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பான விடயங்களை ஊடகத்துறை அமைச்சர் இதன்போது முன்வைத்தார்.

இலங்கையின் தொலைக்காட்சித் துறை நவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட, தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர்கள் பேரவையின் தலைவர் சட்டத்தரணி டக்ளஸ் சிறிவர்தன, அதன் செயலாளர் நாலன் மெண்டிஸ், சுரேஸ் அபேசேகர, பேராசிரியர் செனேஷ் திசாநாயக்க, நிரோஸன் இளேபெரும, சந்தன லியனகுணவர்தன, பந்துல வீரக் கொடி, ரவீந்திர குருகே, ஆனந்த அபேநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சாதக, பாதகங்களை ஆராய்ந்து சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட முடிவு

அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன்,
ஏனைய மதத் தலைவர்களே,
தாய்மார்களே, தந்தையர்களே,
சகோதர சகோதரிகளே,
அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.

உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்தேன். இதன் மூலம், நான் எடுக்கும் முடிவுகள் செயற்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். எனவே, மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவன். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

இன்றைய இக்கட்டான நிலைமை, நம் நாடு மட்டும் முகங்கொடுக்கும் ஒரு விடயமல்ல. முழு உலகமும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிக்கலான சூழ்நிலையின் காரணமாக   பாதிக்கப்பட்டுள்ளன. கொவிட் நோய்த் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனாலும் நாம் மக்களின் பக்கம் நின்று  நிவாரண நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

இந்த நெருக்கடி ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல. அன்று இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை விரைவில் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சிக்கிறேன்.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நாட்டின் அரசியல்வாதிகளினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பு ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பதேயாகும்.

இன்றைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் நமது அந்நிய செலாவணி நெருக்கடி ஆகும்.

ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும். கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும்.

அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்கள் கிடைக்கக்கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம்  02 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.

ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

ஆனால் ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 07 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 04 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 05 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயற்பட வேண்டும்.

இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் எங்களது கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். இதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம்  செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடல் மூலம் நாம் எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலுக்குப் பிறகு, சாதக, பாதகங்களை ஆராய்ந்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நான் முடிவு செய்தேன்.

கடந்த காலத்தில் நான் எடுத்த சில முடிவுகளால் இறக்குமதிச் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்த பிரச்சினையை முன்கூட்டியே கண்டுகொண்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். மேலும், உள்நாட்டில் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கைத்தொழில்களை ஊக்குவித்தோம். அதேபோன்று, பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த பயிர்களை நம் நாட்டில் பயிரிடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அவற்றின் வெற்றிகரமான முடிவுகளை இப்போது காண்கிறோம்.

இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன்.

எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம். கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது. தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் என்னிடம் பாதுகாப்பு, ஒழுக்கம், நவீனமயமான அபிவிருத்தி அடைந்த நாடு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ஆகியவற்றையே கேட்டீர்கள். எனது பதவிக்காலத்தில் ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆரோக்கியமான தாய் நாட்டில் எனது எதிர்கால பதவிக்காலத்தை அந்த அடிப்படை இலக்குகளுக்காக அர்ப்பணிப்பேன்.

அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அரச ஊழியர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, எமது பிள்ளைகளுக்கு சிறந்த நாட்டை வழங்குவதற்காக, எம்மிடம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்ள நாம் ஒரு குழுவாக இலட்சியத்துடனும் தியாகத்துடனும் செயற்படுவதையே ஆகும்.

உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன்

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்! 

எசிதிசி ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தின் கீழ் முதலாவது திடீர் மரணத்துக்கான காப்புறுதியை வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்த 16 ஆம் திகதி கையளித்தார்.

கோவிட் தொற்றுக்குள்ளாகி கடந்தவாரம் உயிரிழந்த பிராந்திய ஊடகவியலாளர் சுனில் பத்தேவித்தானவின் பெயரில் வழங்கப்பட்ட ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெருமதியான காப்புறுதியை அவரது மனைவி சமரவீர முதலிகே தோனா சோமாவத்தியிடம் அமைச்சர் கையளித்தார்.

களுத்துறை தொடங்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட பத்தேவித்தான(63) லங்காதீப்ப பத்திரிகையில் 30 வருடங்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் 10 வருடங்களும் பிராந்தியச் செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.

 இந்நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவும் கலந்து கொண்டார்.

 

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று, (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ (Changyong Rhee),  பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏன்-மெரீ கல்டே-வூல்ஃப் (Anne-Marie Gulde-Wolf) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெரிடானுஸெட்யாவான் (Tubagus Feridhanusetyawan) ஆகியோர் இதில் அடங்குவர்.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

கிரிந்த-புகுல்வெல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழு ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் மார்ச் 04ஆம் திகதி கிரிந்த-புகுல்வெல்ல பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கூடியது.

பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் தமது பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளை கலந்துரையாடக்கூடிய கௌரவமான இடம் எனவும், உள்ளூர் மற்றும் கிராமிய மட்டங்களில் வெளிவரும் முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் குழு அதிக கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய பரிசோதனை உத்தியோகத்தர்கள், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோரின் கூட்டு அர்ப்பணிப்பே கிராம அபிவிருத்திக்கான பங்களிப்பின் அடிப்படையாக அமைவதாகவும் அவர்களின் முறையான சேவை மிகவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிரிந்த புழுல்வெல்ல பிரதேச சபையின் தலைவர் சனத் ஹெட்டியாராச்சி, கிரிந்த புழுல்வெல்ல பிரதேச செயலாளர் ஏ.பி.டபிள்யூ.டி. திருமதி ராஜபக்சே மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டொபின்க் ஆகியோருக்கிடையிலான இருதரப்புச் சந்திப்பு கடந்த மார்ச் 02ஆம் திகதி ஊடக அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் ஆரம்பத்தில், இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மக்களுக்கும் அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களை இந்தோனேசிய தூதுவரிடம் தெரிவித்துக்கொண்டார். மேலும் பாளி நகரில் நடைபெறவுள்ள பாராளுமன்ற சங்கங்களுக்கிடையிலான 144வது மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக தான் கலந்துகொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். இலங்கையில் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் முதலாவது வெகுசன ஊடகப் பயிற்சி நிலையத்துக்கு இந்தோனேசிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இதன் போது இருதரப்பினரும் கலந்துரையாடினர். இலங்கை-இந்திய நாடுகளுக்கு இடையிலான  70 வருட இராஜதந்திர உறவை கொண்டாடும் வகையில் இலங்கை யில் முத்திரையொன்றை வெளியிட்டு வைக்குமாறு இந்தோனேசிய தூதுவர் முன்வைத்த கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அமைச்சர் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உறுதிபூண்டார். இச்சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ஓஷதி அழகப்பெரும மற்றும் இந்தோனேசிய தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் ஹெரு பிரயிட்னோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதில் அரசியல்வாதிகளை விட ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் பெரும் பங்காற்ற முடியும் எனவும், இது வரலாற்று ரீதியாக  நிரூபணமாகியுள்ளது என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 18 ஆம் திகதி யாழ்.மாவட்ட அரசாங்க வெளியீட்டுப் பணியகத்தை திறந்து வைத்ததன் பின்னர் யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர், பொருளாதாரம் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் தேசிய ஒருமைப்பாடு நாட்டின் மிக முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும் என்றார்.

ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் உரையாற்றுகையில்...

“தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு அரசியலை விட ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் முக்கிய பங்காற்ற முடியும்.  இது வரலாற்று ரீதியாக நிருபணமாகியுள்ளது.  ஜனநாயகத்தின் எல்லைக்குள் விமர்சனங்கள் இருக்கலாம், ஆர்ப்பாட்டாங்கள் இருக்கலாம், வாதப் பிரதிவாதங்கள் இருக்கலாம், இவற்றை ஜனநாயகத்தின் பண்புகளாக குறிப்பிடலாம்.  அது ஒரு போதும் உங்களுக்கு இடையேயான நட்பு தடையாக இருக்கக் கூடாது.  ஒரு நாடு முன்னேறுவதற்கு மோதல் அவசியம் இ ஆனால் மோதல் இறுதியில் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.

சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட ஊடகவியலாளர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர் எவ்வாறு சிந்திக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக எதிர்காலத்தில் ஊடக பரிமாற்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். மேலும், யாழ்ப்பாணம் மிகவும் மேம்பட்ட ஊடகப் பாவனையைக் கொண்ட ஒரு இடம். ஏன் தெரியுமா? இந்தப் பகுதியில் ஐந்து பிராந்திய அச்சு ஊடகங்கள் உள்ளன. இலங்கையில் வேறு எங்கும் இப்படி ஒரு இடம் இல்லை.  அவ்வாறே, பேச்சு சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். ஊடகங்களை கடுமையான விதிகளால் கட்டுப்படுத்த முடியும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. அதற்கு சுய கட்டுப்பாடு தேவை. அது நமக்குள் இருக்க வேண்டும். "

ஊடகவியலாளர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அசிதிசி காப்புறுதி,  இலங்கையில் முதலாவது பட்டய ஊடகவியலாளர் நிறுவகத்தை ஸ்தாபித்தல் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுகள் தொடர்பிலும் அமைச்சர் விளக்கமளித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேஸ் ராகவன், வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம் . சமன் பந்துலசேனஇ அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் மகேசன் உட்பட அரச அதிகாரிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கல்வியின் எதிர்காலம் இணையத்தில் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும், நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இணைய வசதிகள் மற்றும் தேவையான கருவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள டெல்ஃப்ட் சைவப்பிரகாசா கல்லூரிக்கு அத்தியாவசியமான மடிக்கணினி மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

16 ஆசிரியர்களைக் கொண்ட இப்பாடசாலையில் 68 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன் அவர்களின் எதிர்காலப் படிப்பிற்காக கணினி மற்றும் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்இ நாட்டில் நிலவும் கல்வி ஏற்றத்தாழ்வை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

"இலங்கையில் 25% ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள்  பயிற்சி பெறாதவர்களே.  வட மாகாணத்தில் மாத்திரம் 53% பயிற்சி பெறாத ஆரம்பத் பிரிவு ஆசிரியர்கள் உள்ளனர்.  இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இதற்கு மேல் உதாரணம் தேவையில்லை. நான் கல்வி அமைச்சராக இருந்த போது வடமாகாண கல்வித்துறையை ஆராய்ந்தேன். வடமாகாணத்தில் 22  தேசிய பாடசாலைகள் உள்ளதாக அப்போதுதான் தெரிய வந்தது.  ஜனாதிபதியின் ஆயிரம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றும் நிகழ்ச்சியில் வட மாகாணத்திற்கு தேசிய பாடசாலைகளாக 76 பாடசாலைகள் உயர்ந்துள்ளது.  இலங்கையில் 10142 பாடசாலைகள் உள்ளன.  ஒவ்வொரு பாடசாலைக்கும் இணையம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில்,  பிள்ளைகளின் கல்வி இணையத்தில் தங்கியிருக்கும்இ எனவே தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வது அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பாகும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற பிரதித் தலைவர், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட செயலாளர் மகேசன்இ மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். பிரதீபன், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, சைவப்பிரகாச கல்லூரியின் அதிபர் அகிலன் தேஷ்வரி மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…