மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். 1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது.

இத்தொழிற்சாலை 728 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தாலும் தற்போது அதன் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்புக்களாக மாறியுள்ளன. 
அமைச்சரவை தீர்மானத்துக்கமைய எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பயன்படுத்தக்கூடிய கட்டடங்களை தவிர ஏனைய கட்டடங்களை இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் பிரதமரின் இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது தொழிற்சாலையின் 80 வீதமான கட்டடங்களை புனரமைத்து பயன்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது. அதற்கமைய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை புனரமைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.