5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதற்காக இலங்கை வந்திருந்த பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.எ.கே.அப்துல் மோமனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸிற்குமிடையில் கடந்த 30 ஆம் திகதி இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வர்த்தக உடன்படிக்கை, உயர் கல்விக்கான ஒத்துழைப்பு, ஆடைக் கைத்தொழிலை தரமுயர்த்துதல், கொழும்பு மற்றும் சிட்டாகொங் துறைமுகங்களை இணைத்தல் மற்றும் சர்வதேச வர்த்தகத்துடன் இணைதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.