5வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதற்காக இலங்கை வந்திருந்த தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான டொன் பிராமுட்வினெய் கடந்த 30 ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இச்சந்திப்பின்போது தேராவாத பௌத்தம், புத்த சாசனம், மதகுருமார்களின் பிரயாணம், இலங்கை இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், நெற்பயிர்ச் செய்கையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.