பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. ஏதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மியான்மாரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இணையமூடாக இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
ஏதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உச்சி மாநாட்டை தலைமை தாங்கவுள்ளார். இதன்போது பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் இணையமூடாக உச்சி மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.
உச்சி மாநாடு மற்றும் அதனை தொடர்ந்து வரும் கூட்டங்களில் பிரதிநிதிகள் ஒரு பிராந்தியக் குழுவாக பிம்ஸ்டெக் மாநாட்டின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவர். இதன்போது, பிம்ஸ்டெக்கிற்கான சாசனம் ஒன்று பிரகடனப்படுத்தப்படும் அதேநேரம் பல சட்ட ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.