2022 வானொலி அரச விருது விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 3 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி துறையின் வளர்சிக்கு பங்களிப்புச் செலுத்திய வானொலி கலைஞர்களை கௌரவிப்பதே இவ்விருது வழங்கும் நிகழ்வின் நோக்கமாகும். இந்நிகழ்வை கலாசார விவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.