மிரிஹாணையிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கருகில் உருவான ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறுவதற்கு அடிப்படைவாத குழுவொன்றே காரணமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்கலவரத்துக்கு காரணமான பலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதக் குழுவென்பது தெரியவந்திருப்பதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.