சமீபத்திய செய்தி

156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் (03) பிற்பகல் விசேட நிகழ்வு பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதிக்கு, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கடமையின்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜயந்த குணவர்தன சார்பில் 'ஜனாதிபதி பொலிஸ் வீர பதக்கம்" வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், பாராளுமன்றத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 30 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது. இந்த இரண்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தொடர்ந்தும் முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அன்றையதினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை ஆக்கிரமித்திருந்தால் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்திருக்கும் என்பதுடன் சட்டத்தின் ஆட்சியும் மீறப்பட்டிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பொலிசார் சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பையும் பாதுகாத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முழு பொலிஸ் திணைக்களத்திற்கும் மரியாதை செலுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் பொலிஸ் வெகுமதி நிதியத்திலிருந்து, விரைவில் ஸ்தாபிக்கப்படவுள்ள சட்ட நிவாரண நிதியத்துக்கு மாற்றீடு செய்யப்படவுள்ள 100 மில்லியன் ரூபாவிற்கான காசோலையை பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஜனாதிபதியிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேற்கத்தேய இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் பொலிஸ் நாய் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன.

இலங்கையில் முதல் அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம்  2022 செப்டெம்பர் 01அன்று இலங்கை பாராளுமன்றத்தில் நினைவு அஞ்சல் அட்டையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளது.

1872 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கையின் முதலாவது தபால் அட்டையின் 150 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 1872 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் அட்டையின் புகைப்படத்துடன் கூடிய இந்தப் புதிய அஞ்சல் அட்டையை வெளியிடப்படவுள்ளது.

1872 ஆம் ஆண்டில், இந்த அஞ்சல் அட்டை 02 rjk; ngWkjpAld; விக்டோரியா மகாராணியின் மேல் உடலை சித்தரிக்கும் முத்திரை தலையுடன் வெளியிடப்பட்டது மற்றும் 20 ரூபாய் முகமதிப்புடன் புதிய அஞ்சல் அட்டை வெளியிடப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முத்திரை சேகரிப்பாளர்களுக்காக இந்த நினைவு அஞ்சல் அட்டையுடன் கூடிய சிறப்புப் பொதியை (கோப்புறை) குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகளில் வெளியிடவும் தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

 
 

 

அரசியல் நோக்கங்களை புறந்தள்ளிவிட்டு தேசிய இலக்குகளுக்காக மீண்டும் தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்போதே தாயகத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்துடன் போட்டியிட்டு முன்னேறக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உருவாக்க வேண்டும்.

இல்லையென்றால் நாட்டை உலகிலிருந்து தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான தருணத்தில் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தேசத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அனைவரினதும் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டம் இதுவரையில் நாட்டில் நிலவும் பொருளாதார முறையை மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.

உலகிற்கு ஏற்ற தேசிய பொருளாதாரக் கொள்கையை அமைப்பதற்கான அடிப்படையும் இதுவே.

அதன்படி, 25 ஆண்டுகளுக்கு தேசிய பொருளாதாரக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் கொண்டிருக்கும்.

புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விரிவான கொள்கை அடுத்த வருட வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் முன்வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

இலங்கையில் 100வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், அவை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் புதிய முன் மொழிவுகளை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

2021இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% ஆக உள்ள அரசாங்க வருமானத்தை 2025க்குள் 15%ஆக உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.

25 ஆண்டுக்கான தேசிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்படும்.

அக்டோபர் முதலாம் திகதி முதல் பெருமதி சேர்க்கப்ட்ட வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல வரித் திட்டங்கள் அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அரசு மற்றும் அரசு சார்பு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக குறைக்கப்படும். தற்போது பணியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெற வேண்டும்.

இலத்திரனியல் மின்சார வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும்.

வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் 2023 வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படும்.

அரச வளங்களின் அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பு மூலோபாய விடயங்களில் மறுசீரமைப்புக்கு முன்மொழிவு

அரசு நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் கழிவுப்பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் கண்காணிக்க அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்படும்

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மானியம் தொடர்ந்து வழங்கப்படும்

தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகம் உறுதிசெய்யப்படும். இதற்காக 25 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

மண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மானியம்.

முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு 5,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை உதவித்தொகை வங்கப்படும். பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக பல திருத்த சட்ட மூலங்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்டும்.

விவசாய அபிவிருத்திக்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், இளைஞர்களை விவசாயத்தில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கை.

வேலையற்று இருக்கும் குழுக்களுக்கு 20 ஏக்கர் நிலம் வழங்க நடவடிக்கை.

கர்ப்பிணி பெண்களுக்காக தற்போது வழங்கப்படும் 20 000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருள் பொதிக்கு மேலதிகமாக 2500 ரூபாய் வழங்கப்படும்.

சமுர்த்தி பயனாளிகள் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் 5,000 ரூபாவில் இருந்து 7,500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

தேசிய கடன் முகாமைத்து நிறுவனம் நிறுவப்படும். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

வெளிளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் கிளைகளை திறப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கும் மத விழாக்களில் கலந்துகொள்வதற்குமாக இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

அரச வங்கிகளின் 20% பங்குகள் அதன் ஊழியர்கள் மற்றும் வைப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும்.

மின்சார மோட்டார் சைக்கிளை தயாரிப்பதறகு தேவையான பாகங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு வரிச்சலுகை வழங்கப்படும்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக புலம்பெயர் அலுவலகம் மற்றும் நிதியம் ஒன்று நிறுவப்பபடும்

ஊழலை ஒழிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் மற்றும் பொறிமுறை அறிமுகப்படுத்தப்படும்.

களனி ரயில் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களிடம் இருந்து பெறுகைகள் கோரப்படவுள்ளது.

சிறு விவசாயிகள் மே மாதம் வரை அரசு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதற்காக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 680 மில்லியன் ரூபாய் திறைசேரியால் செலுத்தப்படும் என பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தார்.

கொழும்பு – யாழ். ரயிலில் நேற்று மதியம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் ரயில் நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை - கொழும்பு ரயில் சேவையை மேம்படுத்துவது, மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது அமைச்சர் இரவு தபால் சேவையின் மீள் ஆரம்பம் பற்றியும் அறிவியல் நகர் மற்றும் சாவகச்சேரி ரயில் நிலையங்களில் உத்தரதேவி ரயில் தரித்து நிற்குமெனவும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

 

 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆரம்பச் செயற்திட்டமான பஸ் பயணிகளுக்கான முற்கொடுப்பனவு பயண அட்டையை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டவையிலுள்ள மாக்கும்புர போக்குவரத்து நிலையத்திலிருந்து காலி நோக்கி பயணிக்கும் பஸ் பயணிகளிடம் அறிமுகம் செய்து வைப்பதனை படத்தில் காணலாம்.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஆரம்பச் செயற்திட்டத்தினூடாக அடையாளம் காணப்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறும் அமைச்சர் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இச்சந்தர்ப்பத்தில் அறிவுறுத்தல் விடுத்தார்.

 

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கலைஞர் ஜெக்சன் எந்தனியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) நேரில் சென்று பார்வையிட்டார்.

வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் குழாமை சந்தித்த ஜனாதிபதி ஜெக்சன் எந்தனியின் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்ததுடன் தற்போது தட்டுப்பாட்டிலுள்ள மருந்துகளை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கு வழிவகுப்பதாகவும் வைத்தியர்களிடம் உறுதியளித்தார்.

சிகிச்சை தொடர்பில் எவ்வாறான உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக தன்னை தொடர்புகொள்ளுமாறும் ஜனாதிபதி ஜெக்சன் எந்தனியின் மனைவியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஜெக்சன் எந்தனி அண்மையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

 

2022.08.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தபட்ச தரநியமங்களை அறிமுகப்படுத்தல்

இலங்கையில் வாழ்கின்ற அநாதை, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ள பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, உடல் மற்றும் உள ரீதியான நல்விருத்தி போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறுவர் அபிவிருத்திச் சேவைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

 சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டிகள் மற்றும் முதன்மைச் சட்டங்கள் மாகாண மட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டியொன்று இல்லை. அதனால், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துறைசார்ந்த அனைத்துத் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த நிபுணர்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த 'இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தபட்ச தரநியமங்கள்' இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வருகின்ற 75 ஆவது சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள்

ஜனாதிபதி

பாதுகாப்பு மற்று நிதி உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர்

  • கௌரவ தினேஷ் குணவர்த்தன

பிரதமர்

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

  • கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கடற்றொழில் அமைச்சர்

  • கௌரவ சுசில் பிரேமஜயந்த

கல்வி அமைச்சர்

  • கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்த்தன

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வெகுசன ஊடக அமைச்சர்

  • கௌரவ அலி சப்ரி

 வெளிவிவகார அமைச்சர்

  • கௌரவ விதுர விக்கிரமநாயக்க

 புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர்

  • கௌரவ கஞ்சன விஜேசேகர

 மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்

  • கௌரவ டிரான் அலஸ்

 பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

03.  விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களுக்காக இலங்கை அரசு மற்றும் நேபாள அரசுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளல்

இலங்கை அரசு மற்றும் நேபாள அரசுக்கிடையில் விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களுக்கு புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக முன்பிருந்த திறன் விருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதிய உற்பத்திகள் இராஜாங்க அமைச்சுக்கு 2021.06.21 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை இதுவரை கையொப்பமிடவில்லை. இருதரப்பினர்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாடுகளுக்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. நாவலப்பிட்டி அல் - சஃபா ஆரம்பப் பாடசாலைக்கு இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியொன்றை ஒதுக்கி வழங்கல்

 

1000 இரண்டாம் நிலைப் பாடசாலைகள் மீள்கட்டமைத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நாவலப்பிட்டி அல் - சஃபா ஆரம்பப் பாடசாலை 2013 ஆம் ஆண்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்குத் தேவையான கட்டிட வசதிகள் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான நாலப்பிட்டி புகையிரத நிலையத்திற்குரிய பண்டங்கள் களஞ்சியத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அப்பாடசாலையின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் குறித்த கட்டிடம் போதுமானதாக இன்மையால், நிரந்தரமான கட்டிடமொன்றை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கைப் புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான நாவலப்பிட்டி கொடமுதுன கரஹந்துன்கலவில் அமைந்துள்ள 02 ஏக்கர்களைக் கொண்ட காணித்துண்டை பாடசாலைக்காக சட்டபூர்வமாக ஒதுக்கி வழங்குவதற்காக கல்வி அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்களால் கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்திற்காக இலங்கை மற்றும் இந்திய அஞ்சல் அதிகாரிகளால் கூட்டாக முத்திரை வெளியிடல்

2022 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்திற்கு இணையாக 'ஜனநாயகம்' எனும் தொனிப்பொருளில் இரண்டு நாடுகளின் 'பாராளுமன்றங்களை' பிரதிபலிக்கின்ற வகையில் எமது நாட்டின் அஞ்சல் திணைக்களம் மற்றும் இந்திய அஞ்சல் திணைக்களத்தால் இரண்டு முத்திரைகள் வீதம் வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு நாடுகளாலும் வெளியிடப்படும் முத்திரைகளில் 3,000 முத்திரைப் பொதிகளும், 5,000 நினைவுப் பத்திரங்களும், 2,000 முதல் நாள் அட்டைகளையும் பரிமாற்றிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக இரண்டு நாடுகளின் அஞ்சல் திணைக்களங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தை தாபிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரித்தல்

ஊடகத் துறையில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை அதிகரிக்கும் நோக்கில் 'இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்களின் நிறுவனம்' இனைத் தாபிப்பதற்காக 2021.10.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடாத்தல் குழுவால் குறித்த நிறுவனத்தைத் தாபிப்பதற்கு ஏற்புடைய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கும், இதற்கு முன்னர் முன்மொழியப்பட்டுள்ள 'இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்  நிறுவனம்' எனும் பெயருக்கு பதிலாக முன்மொழியப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர் 'இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனம்' எனத் திருத்தம் செய்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுதல்

 

இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுவதற்காக 2013.08.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கான சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

கொழும்பிலிருந்து பதுளை வரையான வார இறுதி அதிசொகுசு 'எல்ல ஒடெசி' ரயில் பயணத்தை போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (13) அதிகாலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைத்தார்.

அதன் பின்னர் அமைச்சர் பயணிகளுடன் உரையாடியவாறு அதிகாரிகள் சகிதம் ரயிலில் பயணம் செய்தார்.

இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பதுளை நோக்கிச் சென்று ஞாயிறு கொழும்பை வந்தடையும். இதற்கு முன்னர் இச்சேவை கண்டியிலிருந்து எல்லை வரை ஒரு நாள் பயணமாகவே சென்று வந்தது. அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலுக்கமையவே ரயில்வே திணைக்களம் இச்சேவையை மீள ஆரம்பிக்க உத்தேசித்துள்ளமை குறிப்பிடதக்கது.

 

 

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

ஶ்ரீ தலதா உள்ளிட்ட அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதமும் அதற்கு பலமாக அமைய வேண்டும்
- கண்டி பெரஹரா நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த போதிலும் அந்த நெருக்கடியில் இருந்து நாடு நிச்சயம் மீண்டு வரும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு தலதா மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெரும் பலமாக அமையுமென சுட்டிக்காட்டினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா பெரஹரா விழா மற்றும் வருடாந்த நான்கு மகா விகாரைகளின் ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற வைபவத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வந்த தியவடன நிலமே நிலங்க தேல உள்ளிட்ட நான்கு மகா தேவாலயங்கள் உள்ளிட்ட ஏனைய தேவாலயங்களின் நிலமேக்கள் ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியினால் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் தியவதன நிலமே சம்பிரதாயபூர்வமாக பெரஹரா நிறைவடைந்தமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஓலையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

ஊர்வலத்தில் பயணித்த யானைகளுக்கு அடையாள ரீதியாக உபசாரம் செய்யும் வகையில் ஜனாதிபதி "சிந்து" எனும் யானைக்கு பழங்கள் வழங்கி உபசரித்தார்.

பெரஹராவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சம்பிரதாயபூர்மாக பரிசுகள் மற்றும் விருதுகளை ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் 07 அதி விசேட விருதுகள் உள்ளிட்ட 162 விருதுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. எசல பெரஹரா அறக்கட்டளை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன வருடாந்தம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் வரலாற்றுப் புகழ்மிக்க பெரஹரா (ஊர்வலம்) நிறைவு பற்றிய விடயங்கள் அடங்கிய அறிவிப்பை ஜனாதிபதி தலைமையிலான சபையில் சமர்ப்பித்தார்.

கிராமிய விகாரைகளுக்கான "எசல பெரஹரா அறக்கட்டளை" யிற்கான நிதியுதவி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதுடன், "புனித தலதா கலாசாரம்" எனும் நூலும் இதன்போது ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

 

கண்டி எசல பெரஹெரவின் இறுதி ரந்தொலி பெரஹெர இன்று (11) இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அவர்கள் கண்டிக்கு வருகைதந்திருந்தார்.

இதேவேளை கண்டி எசல பெரஹெரவின் உத்தியோகப்பூர்வ இறுதி நிகழ்வு கண்டியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் நாளை (12) நடைபெறவுள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இவ்வருடம் ரந்தொலி பெரஹெர வெகுவிமர்சையாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

இலங்கையின் சினிமா துறை மற்றும் திரைப்படக் கலாசாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தை அபிவிருத்தி செய்வதற்கும் தேசிய சினிமா கொள்கையொன்றை அமுல்படுத்துவது தொடர்பிலான திட்டமொன்றை நிறுவுவதுக்குறித்தும் கலந்துரையாடும் விசேட சந்திப்பொன்று வெகுசன ஊடக அமைச்சில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது. (10)

தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தின் தலைவராக புதிதாக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி தீபால் சந்திரரட்ன திரைப்பட துறையில் தேர்ச்சிப்பெற்றவர்கள் கலைஞர்கள் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அத்துறையுடன் தொடர்புபட்ட பலரினதும் கருத்துக்களைப் பெறுவதே இச்சந்திப்பின் நோக்கமாகும்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன தற்போதைய இளைஞர்கள் மத்தியில் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் வழக்கம் குன்றி வருவதனால் மக்களை கவரும் வகையில் புதிய சினிமா கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

அத்துடன் சினிமா என்பது ஒரு கலை.எனவே இத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் இதற்கான திட்டங்களும் கொள்கைகளும் வடிவமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் இதன்போது கூறினார்.

 

அனைத்துக் கட்சிகளுக்கும் நியாயமான  பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு

ஆட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்.

ரிஷாத், மனோ, சீ.வி, ஹக்கீம், அனுர பிரிதர்ஷன ஆகியோருடன் ஜனாதிபதி சந்திப்பு

 

ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC), பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுத்தன.

பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேலும் பல இடைக்கால குழுக்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை தாம் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய சபையை ஸ்தாபிப்பதே பிரதான இலக்கென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவமும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் முழுமையான பிரதிநிதித்துவமும் அவசியமானதெனவும் தெரிவித்தார்.

குழுத் தலைவர்களுக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு சமமான அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும் தேவையான சந்தர்ப்பங்களில்  அவர்களை அமைச்சரவைக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளச் செய்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.

குழு முறைமையை பிரதிநிதித்துவம் செய்வதா, அல்லது அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதா என்பதை அந்தந்தக் கட்சிகள் கலந்துரையாடி தமக்கு அறிவிக்குமாறும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

Latest News right

இலங்கையின் ஊடகக் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயம் சர்வதேச ஒத்துழைப்புடன் MMC–ITN கல்வி வளாகம் புதிய மைல்கல்லை எட்டியது

ஜன 08, 2026
இலங்கையின் ஊடகக் கல்வித் துறையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும்…

2026 புதிய ஆண்டை முன்னிட்டு வெகுஜன ஊடக பிரதி அமைச்சரின் வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
2026 புதிய ஆண்டின் வருகை, நாம் நாடாக முன்னேறிச் செல்ல வேண்டிய புதிய திசையை மீண்டும்…

இலங்கை /பவுண்டேஷன் நிறுவகம் (SLFI) புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியது

ஜன 01, 2026
இலங்கை/பவுண்டேஷன் நிறுவனத்தின் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம்…

இனம் – மதம் – கட்சி வேறுபாடுகள் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.

ஜன 01, 2026
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தரமான மற்றும் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்துவதும், இரக்கமுள்ள…

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2026
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல்…

தேசிய பாதுகாப்பு தினம்

டிச 26, 2025
சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி…

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
டிசம்பர் மாதம் துவக்குதத்துடன் கிறிஸ்துவர்கள் ஆராதனையுடனும் ஆனந்தத்துடனும்…

நத்தார் வாழ்த்துச் செய்தி

டிச 25, 2025
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று…

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் இன்று (24) நள்ளிரவில் ஆரம்பமாகிறது.

டிச 24, 2025
உலகத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக இந்த உலகில் அவதரித்த அவரின் மனிதநேயக் கருணையின்…