பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர். பந்துல குணவர்தன இன்று (25) வெகுசன ஊடக அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அமைச்சர் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (22) பெற்றுக்கொண்டார். அமைச்சர் குணவர்தன இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடதக்கது.

அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, அமைச்சின் மேலதிக செயலாளர் (நிருவாகம்) எஸ்.ஆர்.டபிள்யு.எம்.ஆர்.பி சத்குமார, மேலதிக செயலாளர் இ.எம்.எஸ்.பி ஜயசுந்தர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க உள்ளிட்ட அமைச்சின் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.