அரசியலமைப்பின் 21 வது திருத்தச் சட்டமூலம் திங்கட்கிழமையன்று (23) அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்சி தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இத்திருத்தச் சட்டமூலத்தின் நகல்களை பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) ஆராயப்படவுள்ளது. இதனை தொடர்ந்து திருத்தச் சட்டமூலத்தின் இறுதி தீர்மானத்தை பெற்றுக்கொள்வதற்காக அதனை மீண்டும் அமைச்சரவையிடம் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.