வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவினால் அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இன்று (13) வெகுசன ஊடக அமைச்சில் அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளளார்.

பணிப்பாளர் சபையில், பேராசிரியர் சமிந்த ரத்னாயக, பேராசிரியர்  டி.எம். அஜித் திசாநாயக்க,சட்டத்தரணி  ரகித அபேகுணவர்த்தன ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுயாதீன தொலைக்காட்சி(ஐ.ரி.என்) ஊடக வலையமைப்பின் தலைவராக  கணக்காளர் கனக்க அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிப்பாளர் சபையில் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, விரிவுரையாளர் திருமதி. மஹேஸ்வரி மஹிமதாஸ்,  ரவிந்திர குருகே, இந்திக லியனஹேவகே, ஹசந்த ஹெட்டியாராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹட்சன் சமரசிங்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிப்பாளர் சபையில் பேராசிரியர் வண. மாகம்மன பஞ்ஞானந்த தேரர், பிரியந்த கே. ரத்னாயக, ஜே. யோகராஜ், எம். சிசிர குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.