குறைந்த வருமானம் பெறுவோருக்கான 'உங்களுக்கு வீடு அனைவருக்கும் நாளை' திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மூன்று குடும்பங்களுக்கு வீடுகள் இன்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் கையளிக்கப்பட்டது.

இதன்படி, கங்கொடகம, உடுப்பிள்ளேகொட மற்றும் கிரிந்த மல்வத்துகொட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மூன்று குடும்பங்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.