சமீபத்திய செய்தி

நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

விசேடமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கன கடன் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போது வழங்கப்படும் இந்த குறைந்த வட்டியிலான கடன் தொகையின் எல்லையை அதிகரிக்குமாறு பல்வேறு தரப்புகளும் நிதியமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. 6 மாவட்ட செயலகங்கள் ஊடாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இதனை மேலும் ஒழுங்குபடுத்துவதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார். 

குறிப்பாக வடமாகாணத்திற்கென 292 மில்லியன் ரூபாவையும், வடமத்திய மாகாணத்திற்காக 250 மில்லியன் ரூபாவையும் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில், நுண்நிதி கடன் நெருக்கடியினால் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் மேற்கொண்டுள்ள இந்தத் தீர்மானம் காரணமாக, மேலும் பெரும் எண்ணிக்கையான மக்கள் கடன் பெறுவதற்கு தகுதிபெறவுள்ளனர். இது தவிர வருடாந்த வட்டி வீதத்தை 14 சதவீதத்திலிருந்து 9 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தின் முன்னேற்ற அறிக்கையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறைசேரிக்கு அனுப்புவதற்காக மாவட்ட நடவடிக்கைக் குழுவொன்றும் அமைக்கப்படும். கிராமிய மக்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் பொறுப்பு இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் (Portrait) மற்றும் புகைப்படங்களை கண்காணிப்பின்றி பாதையோரங்களில், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

தமது உருவத்தை வரையும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி, அதேவேளை அவ்வாறு செய்வதினை தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனிநபர் பிரபல்யத்தை தான் விரும்பவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்  கையளிக்கப்பட்டது. 

இதுதொடர்பான நிகழ்வு இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது முதலாவது இடைக்கால அறிக்கை 2019 டிசம்பர் 20ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மேலதிக விசாரணைகளை தொடர்ந்து தயாரிக்கப்படும்.

ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா ஏனைய உறுப்பினர்களான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் ஏ.எல்.பந்துலகுமார அத்தபத்து, நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் டப்ளியு.எம்.எம்.ஆர்.அதிகாரி, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பீ.ஹேரத் ஆகியோரும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இன்றுமுற்பகலதலதா மாளிகைக்கு சென்றஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.  அஸ்கிரிய பீடத்தின்மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீP ஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி;,தேரரின் நலன் கறித்து விசாரித்தறிந்தார். அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பிரித்பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு நல்லாசி வழங்கினார். 

ஜனாதிபதி அஸ்கிரிய ஸ்ரீசந்ராநந்த பௌத்த வித்தியாலயத்தில் ரங்கிரி தம்புலு மகா விகாரையின் விகாரதிபதிசங்கைக்குரிய கண்டி அஸ்கிரி மகாவிகாரையின் சிரேஷ்ட காரக்க சங்கசபா கலாநிதிசங்கைக்குரிய கொடகம மங்கள நாயக்க தேரரை சந்தித்தார்.  அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கதேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி நாயக்க தேரர் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில்இணைந்து கொண்டார். இந்நிகழ்வில் மத்திய மாகாணஆளுநர் லலித் யு கமகேயும் கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு 1000 புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.  

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மொஹமட் சாத் பட்டக்குக்குமிடையே அலரி மாளிகையில் (24) நடைபெற்ற சந்திப்பின்போதே பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இந்த புலமைப்பரிசில்களை வழங்க உறுதியளித்துள்ளார். அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் இலங்கை மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை சமர்ப்பிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலதிக தகவல்களை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.  

பாகிஸ்தான்-இலங்கை கல்வி ஒத்துழைப்புக்கான செயற்திட்டத்தின் கீழ் இந்த புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளதுடன் பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், பௌதிக விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானம், பட்டப்பின் படிப்பு, கலாநிதி பட்டம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு இதன்மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.    இலங்கை மாணவர்களுக்கு இத்தகைய புலமைப் பரிசில் வழங்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு நன்றி தெரிவித்ததுடன் யுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்தார்.       

பாதுகாப்பு, வர்த்தகம், அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தல் போன்ற துறைகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு துறையிலும் இலங்கைக்கு தேவையான முழுமையான உதவியை வழங்குவதற்கு பாக்கிஸ்தான் தயாராக உள்ளது.

இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டாக் அவர்கள் (Muhammad Saad Khattak) நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்.

 இரு நாடுகளுக்குமிடையில் தற்போதும் சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு இருந்து வருவதால் இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்குமிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து தான் கவனம் செலுத்தியிருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இருநாடுகளினதும் வர்த்தக சமூகத்தினர் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாநாடொன்றை நடாத்துவதற்கு பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மருத்துவம், பொறியியல் மற்றும் தகவல் தொழிநுட்ப துறைகளில் உயர்கல்வி வாய்ப்புக்காக இலங்கை மாணவர்கள் 1000 பேருக்கு பாக்கிஸ்தான் முழுமையான புலமைப்பரிசிலை வழங்கி வருகின்றது. தகைமையுடைய மாணவர்களுக்கு விண்ணப்பிக்குமாறு கோரி இலங்கையில் உள்ள முன்னணி ஊடகங்களில் இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு விரிவாக விளம்பரம் செய்யப்படுகின்றது. விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு உட்படுத்துவதற்காக பாக்கிஸ்தான் அதிகாரிகள் மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இந்த புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்திற்கு மேலதிகமாக உயர்கல்விபெறும் இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் பாக்கிஸ்தான் அக்கறை செலுத்தி வருவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்திலிருந்து பாக்கிஸ்தான் இந்த புலமைப்பரிசில் நிகழ்ச்சிதிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு குறிப்பாக நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு அதன் நன்மைகள் கிடைக்கின்றன.

குடிவரவு நடவடிக்கைகளில் சிறந்த தொடர்பு இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதியும் உயர்ஸ்தானிகரும் கலந்துரையாடினர். பிரச்சினைக்குரிய பின்புலத்தைக்கொண்ட ஆட்களின் பயணத்தை கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளினதும் நடைமுறைகளுக்கு இது உதவும்.

பழைமை வாய்ந்த உயர்கல்வி நிறுவனமான தக்சிலாவை அபிவிருத்தி செய்வதில் பாக்கிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்டுவரும் குறிப்பிடத்தக்க பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, இதற்கு இலங்கையின் ஒத்துழைப்பு கிடைக்குமெனக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, பாக்கிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்விர் அஹமட் (Tanvir Ahmad) இரண்டாவது செயலாளர் (அரசியல்) ஆயிஷா அபு பக்கர் பஹத் (Ayesha Abu Bakr Fahad) ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்று 2020.02.25 ஆம் திகதிக்கு 100 நாட்கள் நிறைவடைகின்றன.

கடந்த நூறு நாட்களில் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் சாரம்சம் பின்வருமாறு.

கல்வி மற்றும் எதிர்கால தலைமுறைக்காக...
• ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல்.

• உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல் கல்வியினால் பூரணத்துவமடைந்த சமூகத்தை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானமாகும்.

• உயர்கல்வி வாய்ப்பினை பெறாத இளைஞர் யுவதிகளை தொழிற் பயிற்சியும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழிநுட்ப அறிவுடனும் கூடிய தொழிநுட்பவியலாளர்களாக உருவாக்குவதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

• இருபது வயதாகும்போது பட்டம்பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழிலுக்காக தயார்படுத்தும் வேலைத்திட்டமொன்றை அறிமுகம்செய்தல்.

• வறிய குடும்பங்களிலுள்ள எந்தவித தொழிற் தகைமைகளையும் கொண்டிராத இளைஞர், யுவதிகளுக்காக செயலணியொன்றினை ஸ்தாபித்து ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

• எதிர்காலத்தில் தாதியர் மற்றும் ஆசிரியர் பயிற்சி நெறிகளை பயில்பவர்கள் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

• கல்வி நடவடிக்கைகள் பற்றிய செயலணியொன்றினை ஸ்தாபித்து கல்வி மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவினை முறையாக திட்டமிட்டு வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

• தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தை ஸ்தாபித்து தேசிய பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட பாடநெறிகளை உருவாக்குவதற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

• தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடியாக பங்களிப்பு செய்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து தொழிலற்ற பட்டதாரிகள்இ டிப்ளோமாதாரிகளை தொழிலில் அமர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.

 • வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் வயதெல்லையை 45 வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

அரச சேவைக்காக
• அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது விசேட நிபுணர் குழுவின் சிபாரிசை பெற்றுக்கொள்ளல்.

• அரச நிறுவனங்களில் ஜனாதிபதி அவர்களினதும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினதும் நிழற்படங்களுக்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல்.

• அரச நிறுவன தலைவர்களின் சம்பள திருத்தம், 20 இலட்சமாகக் காணப்பட்ட டெலிகொம் நிறுவன தலைவரின் சம்பளத்தை இரண்டரை இலட்சமாக குறைத்தல்.

• அரச நிறுவனங்களில் பெறுகை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• அரச நிறுவனங்களில் அவசியமற்ற அனைத்து வைபவங்களையும் நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படும்போது அனைத்து மாவட்டங்களும் சமமாக உள்வாங்கப்படுமாறு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளமை அரச சேவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான தீர்மானமாகும்.

• அனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் மற்றும் வினைத்திறன் உள்ள உயர் நிறுவனங்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

• இலாப நோக்கமற்ற நிறுவனங்களை மக்கள் விருப்பத்திற்குரிய சேவை வழங்கும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

• வினைத்திறனுள்ள மக்கள் சேவைக்காக அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்புக்கு உள்வாங்குதல்.

• 1919 அரச தகவல் மையத்தை உடனடியாக இற்றைப்படுத்தல்

 உள்நாட்டு விவசாயத் துறையை மேம்படுத்தி எமது மரபுரிமைகள் மற்றும் தனித்துவத்துடன் கட்டியெழுப்பப்படும் பொருளாதார கொள்கையொன்றை நோக்கி...

• பொருளாதார மறுமலர்ச்சிக்காக சுற்றுலாத்துறையின் துரித அபிவிருத்திக்கான திட்டமிடல் (2025 ஆகும்போது 10 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானம் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.)

• 300 மில்லியன்களுக்கு குறைந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்களை மீளச் செலுத்தும்போது பிணையாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் ஏல விற்பனையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

• பட்டங்கள்இ வெசாக் கூடுகள் போன்ற உற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குதல்.

• அரச முதலீடுகள்இ தேசிய அபிவிருத்தி திட்டங்கள், பெறுகை செயற்திட்டங்களின் பகுப்பாய்வு, முகாமைத்துவ துறைகளை வினைத்திறனாக்குவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகத்தை நிறுவுதல்.

• கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்திக்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றலில் அமைச்சு மட்டத்தில் செயலணியொன்றினை நிறுவுதல்.

• தேசிய கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறையில் மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மணல், களிமண் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரம் வழங்கும் முறையை நீக்குதல்.

• பாரம்பரிய சிறு கைத்தொழில் துறையில் ஈடுபடுபவர்கள் தமக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் அசௌகரியங்களை நீக்குவதற்கான திருத்தங்களை அறிமுகம் செய்தல்.

• மாதாந்தம் 21 மில்லியன் ரூபா வாடகை செலுத்தப்பட்ட தனியார் கட்டிடத்தில் இயங்கிய விவசாய அமைச்சினை அங்கிருந்து அகற்றி கமநல சேவைகள் நிலையத்திற்கு கொண்டு செல்லல்.

• கோதுமை மா இறக்குமதியில் நிலவிய பிரச்சினையை நீக்குவதற்காக ஏனையவர்களுக்கும் அதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல்.

• விவசாயம், வர்த்தகம் அல்லது வீடமைப்புக்காக 30 வருட குத்தகை அடிப்டையில் ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்குதல்.

• மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை நிறுத்துதல்.

• பெரும்போகத்தின் போது ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 50 குறைந்த விலையை நிர்ணயித்தல்.

• நியமங்களை பூர்த்திசெய்யாத ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 44

• மூடப்பட்டுள்ள சிறிய நெல் ஆலை உரிமையாளர்களை வலுவூட்ட நடவடிக்கை.

• வறுமையை ஒழிக்கவும் வாழ்வாதார அபிவிருத்திக்காகவும் செயலணியொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

• நாட்டுக்கும் மக்களுக்கும் நேயமான அரச நிர்வாகத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுள்ள முன்னுதாரண       நடவடிக்கைகள் ஏராளமானதாகும்.

• கடந்த அரசாங்கத்தை விமர்சிக்காது புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுத்து செல்லுதல்.

• அரச ஊடக நிறுவனங்களின் சுயாதீன செயற்பாட்டினை உறுதி செய்தல்.

• ஜனாதிபதி அலுவலக ஆளணியினர் மற்றும் வாகன பேரணியை மட்டுப்படுத்தல், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக தமது சொந்த வீட்டினை தேர்ந்தெடுத்தல்.

• இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையை 16 ஆக குறைத்து எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையும் குறைக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்தல்.

• பொதுமக்களின் நிதியில் அபிவிருத்தி செய்யப்படும் வீதிகளுக்கு அரசியல்வாதிகளின் உருவப்படம் தாங்கிய பெயர்பலகைகளுக்கு பதிலாக வீதிப்பெயருடன் அரச இலட்சினையை காட்சிப்படுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.

• தமது பதவிக் காலத்திற்குள் பாராளுமன்ற அமர்வுகளின் ஆரம்ப நிகழ்விற்காக பெருமளவு செலவில் ஏற்பாடு செய்யப்படும் இராணுவ அணிவகுப்பு போன்றவற்றை தடை செய்தல்.

 பொதுமக்களின் நலனிற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
• முதன்முறையாக வீடொன்றினை கொள்வனவு செய்யும்போது சலுகை வட்டி வீதத்துடன் நீண்டகால கடன் வழங்குதல்.

• உறுதிச் சான்றிதழ்களை ஒரே தினத்தில் வழங்குதல்.

• வீடுகள் மற்றும் சிறு வியாபார கட்டிட நிர்மாணிப்பின்போது பூரணப்படுத்தப்பட்ட திட்ட வரைபடங்களுக்கு ஒரே தினத்தில் அனுமதியளித்தல்.

• வீடில்லாத வறிய குடும்பம் ஒன்றை தெரிவுசெய்து ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் 14000 வீடுகளை நிர்மாணித்து வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்.

• கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமான கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல்.

• கிராமிய மக்களுக்காக 150000 குடிநீர் இணைப்புகளை ஆரம்பித்தல்.

• தொலைபேசி கட்டணத்துடன் அறவிடப்படும் 25 சதவீத வரியினை குறைத்தல்.

• 15 சதவீத ஏயுவு வரியை 8 சதவீதமாகக் குறைத்தல்.

• அனர்த்த நிலைமைகளின்போது போதுமான நிவாரணங்களை வழங்குவதற்கு தடையாகவுள்ள சுற்றுநிரூபங்களை திருத்துவதற்கு அறிவுறுத்தல்.

• வன ஒதுக்கீடுகளில் வசிக்கும் மக்களை பொருத்தமான இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

• இலகு வாகனங்களுக்கான சாரதி அத்தாட்சிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு கண் பரிசோதனையை மாத்திரம் மேற்கொள்ளல்.

 • நாடு பூராகவும் சிறிய நகரங்களை அழகுபடுத்தி நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

• ஜனவரி 01ஆம் திகதி முதல் ஊடகங்களில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு உரிய பாடகர், பாடகிகளுக்கு பாடல் உரிமைக்கான கொடுப்பனவினை வழங்குதல்.

• பாதாள உலக கோஷ்டியினரைக் கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் தேடுதல்களில் ஈடுபடுவதற்கு பொலிஸ் அதிரடிப்படையினருக்கு போதுமான அதிகாரங்களை வழங்குதல்.

• இந்தியா, சீனா போன்ற உலகின் பலசாலி நாடுகள் எம்மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதித்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.

• 09 மாகாணங்களின் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்திற்கு வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடல்.

• சுற்றாடலை தூய்மைப்படுத்தல் தொடர்பில் பொலிஸாரினதும் ஏனையவர்களினதும் கவனத்தை ஈர்ப்பதற்கான துரித வேலைத்திட்டம்.

• மார்ச் முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த சம்பளத் தொகையை 1000 ரூபாவாக நிர்ணயித்தல்.

• குறைந்த வருமானமுடைய மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்தல்.

• குறைந்த வருமானம் உடையவர்களுக்காக உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய விசேட இலத்திரனியல் அட்டையை விநியோகித்தல்.

• வறுமை மற்றும் குறைந்த வருமானமுடையோரை அடையாளம் கண்டு அவர்களுக்காக காணி அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் 'பிம் சவிய' உடன் தொடர்புகளை மேற்கொண்டு விவசாய உற்பத்தி மற்றும் வீடு, வியாபாரத்திற்கான 30 வருட குத்தகை அடிப்படையில் ஒரு இலட்சம் காணித் துண்டுகளை வழங்குதல்.

• நாட்டிலிருந்து வெளியேறும்போதும் நாட்டுக்குள் பிரவேசிக்கும்போதும் எந்தவொரு விமானப் பயணியும் சங்கடங்களுக்கோ அல்லது தாமதங்களுக்கோ உள்ளாகாதவாறு விமான நிலையத்தின் செயற்பாடுகளை முறைமைப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தல்.

• இந்நாட்டின் அனைத்து காணிகளையும் உடனடியாக அளவீடு செய்து நிறைவு செய்வதற்கு குறித்த பிரிவினருக்கு பணிப்புரை வழங்கல்.

• மத்திய மற்றும் ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளை உடனடியாக நிர்மாணிப்பதற்கான ஆலோசனை வழங்கல்
- இரத்தினபுரி அதிவேகப் பாதைக்கு முன்னுரிமை
- கொழும்பு வீதிகளில் வாகன நெரிசல்களுக்கு உடனடித் தீர்வு
- காலி வீதிக்கு சமனாக கடற்கரையோர பாதை பாணந்துரை வரை
- பொது போக்குவரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம். 
- நிர்மாணப்பணிகள் உள்நாட்டு பொறியியலாளர்களின் தலைமையில்

சுயாதீன பொருளாதார கொள்கையை நோக்கி...
• சகல மாவட்டங்களிலும் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு அவற்றிற்கு அரசினூடாக அனுமதியளித்து வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தினை தயாரித்தல்.

• எம்சீசீ ஒப்பந்தம் தொடர்பில் விரிவான கற்கையை மேற்கொண்டு சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றினை நியமித்தல்.

• நாட்டிற்கு எதிராக செயற்படும் அரச சார்பற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை மேற்பார்வை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

• கடந்த அரசாங்கம் கைவிட்டிருந்த பாரிய அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

அனைவருக்கும் பொதுவான சட்டம் ஒன்றிற்காக

• எந்தவொரு நபரையும் கைது செய்யும்போது தனிப்பட்ட புகழுக்கோ அல்லது சமூக அந்தஸ்துக்கோ பங்கம் ஏற்படாத வகையில் மிகக் கவனமாகவும் சட்டத்திற்குட்பட்ட வகையிலும் செயற்படுவதற்கு பதிற் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்குதல்.

நாட்டில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு உடனடித் தீர்வு

• கொரோனா வைரஸ் பரவுகின்ற சீனாவில் வசித்து வந்த அனைத்து மாணவர்களையும் திருப்பி அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல் மற்றும் இலங்கை பிரஜைகளை பாதுகாப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்களை உடனடியாக செயற்படுத்தல்.

• வூஹான் நகரத்தில் இருந்த மாணவர்களை தாய் நாட்டுக்கு அழைத்துக்கொண்ட ஐந்தாவது நாடாக இலங்கை காணப்பட்டதன் ஊடாக சர்வதேச ரீதியாக நாட்டுக்கு பெருமையை பெற்றுக்கொடுத்தல்.

 விசேட தருணங்கள்

• ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் சமூகமளித்த இந்நாட்டின் முதலாவது மற்றும் ஒரே ஆட்சியாளராக டெங்கு தடுப்பு ஊழியர்சங்க ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொள்ளல்.

• வெலிக்கடை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டு சிறைக் கைதிகள் பற்றி கேட்டறிதல் மற்றும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி விசாரிப்பதற்காக குழுவொன்றை நியமித்தல்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.02.24

மக்களின் முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்களுக்காக செலுத்தப்படவேண்டிய கொடுப்பனவுக்காகவே குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் கட்சி தலைவர்கள் மத்தியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கும் மக்கள் நலன் கருதி முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்காகவே அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பித்திருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கம்பரெலிய, என்டர் பிறைஸ் ஸ்ரீ லங்கா போன்ற திட்டங்களை முன்னெடுத்த ஒப்பந்தகாரர்களுக்கு செலுத்தவேண்டிய நிலுவைக்காகவே அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணைய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட நடவடிக்கையினால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கட்சி தலைவருக்கு எதிராக கருத்துக்களை முன்னெடுத்துள்ளனர். கட்சிக்குள் இப்பொழுது நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. குறை நிரப்பு பிரேரணையில் சுமூகமான தீர்வு ஒன்று காணப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் முதல் வீண் செலவுகளை குறைத்து முன்னர் எப்பொழுதும் நிர்வாகத்தில் இருந்த அரசாங்கம் மேற்கொள்ளாத முற்போக்கு நடவடிக்கையின் மூலம் அரசாங்க செலவீனங்களை குறைப்பதில் எடுத்துக்காட்டாக செயற்படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு செயற்படும் அரசாங்கத்தை எதிர்கட்சி விமர்சித்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவை வீண் விரயம் செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது மக்களை திசை திருப்பும் முயற்சியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். உர இறக்குமதியை மேற்கொண்டவர்களுக்கு அதற்குரிய பணம் செலுத்தப்பட வேண்டும். அதனைச் செலுத்தினாலே தொடர்ந்தும் அவர்களால் உரத்தை இறக்குமதி செய்யமுடியும்.

இதற்காக வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் நாணய கடிதத்திற்கான கொடுப்பனவை திருப்பி செலுத்த வேண்டும். இது ஒவ்வொரு நாட்டிலும் இருந்துவரும் நடைமுறையாகும். முன்னைய அரசாங்க காலத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஒப்பந்தகாரர்களுக்கு இதற்கான நிலுவை செலுத்தப்படவேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டுக்காக இந்த குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை சர்வதேச விமான நிலையம் வர்த்தக நகரான கொழும்புடன் இணையும் தெற்கு அதிவேகப் பாதையின் இறுதிக் கட்டமான பாலட்டுவ தொடக்கம் பரவகும்புக்க வரையான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (23) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

கொடகம, பாலட்டுவ வெளியேறும் வாயிலுக்கு அருகில் பாதையை திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பாலட்டுவ தொடக்கம் தெற்கு அதிவேகப் பாதையினூடாக பரவகும்புக்க வரை பயணித்தனர்.

அங்கு கடந்து வந்த அனைத்து நுழைவாயில்களுக்கு அருகிலும் கூடியிருந்த மக்கள் பாரிய வரவேற்பளித்தனர்.

திறந்து வைக்கப்பட்ட பாலட்டுவ தொடக்கம் பரவகும்புக்க வரையான பகுதியின் நீளம் 58 கிலோமீற்றர்களாகும். இதற்காக 169 பில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.

பாலட்டுவ தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி 96 கிலோமீற்றர்களாகும். நான்கு கட்டங்களின் கீழ் மாத்தறை – பெலியத்த, பெலியத்த – பரவகும்புக்க, பரவகும்புக்க – அந்தரவெவ மற்றும் அந்தரவெவ – மத்தளை வரையான பகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்காக 225 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து 222 கிலோமீற்றர்களைக் கொண்ட இப்பாதையே இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக நீண்ட அதிவேகப் பாதையாகும். புதிய பகுதி வாகனப் போக்குவரத்திற்கு இணைக்கப்பட்டுள்ளமையால் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு மூன்றரை மணித்தியாலங்களில் பயணிக்க முடியும்.

தெற்கு அதிவேகப் பாதையில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் மாத்தறை கொடகம நுழைவாயில் இதன் பின்னர் பயன்படுத்தப்படாததுடன், பாலட்டுவ புதிய நுழைவாயில் இதன் பின்னர் பயன்படுத்தப்படும். மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி அப்பரெக்க, பெலியத்த, கசாகல, அங்குனு கொல பெலஸ்ஸ, பரவகும்புக்க மற்றும் சூரியவெவ என்ற ஆறு நுழைவாயில்களைக் கொண்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் கைவிடப்பட்டிருந்த பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதாக பரவகும்புக்க வெளியேறும் இடத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அதிவேகப் பாதைகளை நிர்மாணிப்பதோடு அவற்றில் சுதந்திரமாக பயணிக்கக்கூடிய வகையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்கா விமான நிலையத்தை மையமாகக்கொண்டு வர்த்தக மற்றும் நிதி கேந்திர நிலையமொன்று உருவாக்கப்படுவதோடு, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையத்தை மையமாகக்கொண்டு சர்வதேச தொழிநுட்ப சேவை வழங்கும் கேந்திர நிலையமொன்று அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை மையமாகக்கொண்டு ஒன்பது “சி” வடிவிலான பொருளாதார மையங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இவை அனைத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சாணக்க மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாத்தறை பாலட்டுவ பௌத்தோதய மகா விகாரைக்குச் சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டனர்.

விகாராதிபதி சங்கைக்குரிய கெட்டமான்னே குணாநந்த தேரர் உள்ளிட்ட விகாரைக்கு சமூமளித்திருந்த மகாசங்கத்தினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆசிர்வதித்தனர்.

 மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.02.23

 

நாட்டைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தின் மற்றுமொரு கட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (19) ஆரம்பமானது.

நாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் பிரதான வீதிகளுக்கு பிரவேசிக்கக்கூடிய வகையில் மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்துவது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டத்தின்மூலம் பேராதனை, கலஹா, தெல்தோட்டை ஊடாக ரிக்கில்லகஸ்கட வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ்வீதியின் மொத்த தூரம் 52 கிலோமீற்றர்களாகும். இதற்காக 60 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இவ்வீதி காப்பற் இடப்பட்டு புனரமைக்கப்பட்டதன் பின்னர் வாகனப் போக்குவரத்திற்காக இதுவரை செலவிடப்பட்ட நேரத்தைப் பார்க்கிலும் சுமார் 45 நிமிடங்கள் குறைவடையும்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றிய முதலாவது மக்கள் கூட்டம் இதுவாகும். தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றி பொதுமக்கள் சந்திப்பில் பங்குபற்றக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

மக்களிடம் தான் கூறிய “பாதுகாப்பான நாட்டை” உருவாக்குவதற்காக கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இதற்காக பாதுகாப்புச் செயலாளர் முதல் திறமைவாய்ந்த அதிகாரிகள் புலனாய்வு துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் நாட்டில் பயங்கரவாதமோ மத அடிப்டைவாதமோ உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென்றும் ஜனாதிபதி  அவர்கள் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்திலில் ஈடுபட்டுள்ள பாரிய வலையமைப்பொன்று கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர் தலைமுறையை அதிலிருந்து மீட்பதற்கு தேவையான பின்புலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மக்களுக்கு சுதந்திரமும் நீதி, நியாயமும் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சேர்ந்த மக்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தனது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதற்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல், வறிய மக்களுக்காக “கிராமத்திற்கு ஒரு வீடு” நிகழ்ச்சித்திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டமும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளாகும். அக்கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்காக பலமானதொரு அரசாங்கத்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் செயற்படுவார்களென்று ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

அதிகாரிகளுக்கு பயமின்றி தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி நாட்டுக்காக பணியாற்றுமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.  

கடந்த 5 வருடக் காலப் பகுதியில் நாட்டுக்கு கிடைத்த முதலீட்டு வாய்ப்புகளை அன்றைய அரசாங்கத்தின் செயற்திறனின்மை காரணமாக இழக்க வேண்டியதாயிற்று. முதலீடுகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இந்தியா, சீனா மற்றும் மேற்கு நாடுகள் எமது அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. அந்நாடுகளின் முதலீடுகள் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டப்ளியு.ஆர்.பேமசிறி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், கலஹா பிரதேசத்தில் உள்ள மரக்கறி வியாபாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். சில கடைகளுக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், மரக்கறிகளின் விலைகளை கேட்டறிந்ததுடன், அதிக விலைக்கான காரணத்தையும். விசாரித்தார். தமது பிரதேசத்தில் உள்ள மரக்கறிகள் தம்புல்லை நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுவதே விலை அதிகரிப்புக்கு காரணமாகுமென வியாபாரிகள் தெரிவித்தனர்.

குறித்த தரப்பினருடன் விரைவாக கலந்துரையாடி தீர்வொன்றுக்கு வருமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நிகழ்வில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்களுக்கு பிரதேச மக்கள் பெரும் வரவேற்பளித்தனர். ஜனாதிபதி அவர்கள் அம்மக்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.

மொஹான் கருணாரத்ன

பிரதிப் பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.02.19

தபால் துறை சேவையில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்குமாயின் அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஆணைக்குழு மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்;ஷ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உப அஞ்சல் அலுவலர்கள் மற்றும் தரம் 1 அஞ்சல் சேவை பதவி உயர்வை பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்த கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னைய அரசாங்க காலத்தில் ஒப்பந்ந காரருக்கு செலுத்தப்பட வேண்டிய உரிய கொடுப்பனவுகள் இன்னும் நிலுவையில் இருந்து வருகின்றது. வரவு செலவு திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலை தற்பொழுது அரசாங்கத்துக்கு உண்டு.

இதன் காரணமாகவே அரசாங்கம் குறைநிரப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தை முழு அளவில் செயற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிட்டும். அதன் மூலம் தபால் துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும்  அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

தபால் திணைக்களத்தில் நீண்ட காலமாக பதவி உயர்வு தொடர்பில் நிலவிய பிரச்சினைக்கு தீர்வைக்காணும் வகையில், இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தபால்மா அதிபர் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையின் பெறுபேறாக இந்த பதவி உயர்வு இன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்காக விடயதான அமைச்சர் என்ற ரீதியில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதியின் சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்திற்கு அமைவாக பணியாற்றும் ஊழியர்கள் தாம் திருப்தி கொள்ளக்கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே செயற்திறன் மிக்க அரச சேவையை முன்னெடுக்க முடியும். இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் செயல்ப்பட்டு வருகின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தொடர்ச்சியான வேலைப் பகிஸ்கரிப்பு, வேலை நிறுத்தம் முதலானவை இடம்பெற்றன. அதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான தபால்கள் ஒரே இடத்தில் குவிந்தன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 
 

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக நாடு முழுவதும் இடம்பெற்று வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில் நெல் சந்தைப்படுத்தம் சபையயினால் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வரையில் 5,217 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதற்காக அரசாங்கம் 260.5 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் வன்னி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கை தற்பொழுது இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 1878.2 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்திவ மாவட்டத்தில் 776 மெற்றிக்தொன் நெல்லும், கிளிநொச்சி மாவட்டத்தில் 454 மெற்றிக்தொன் நெல்லும், மன்னார் மாவட்டத்தில் 782.8 மெற்றிக்தொன் நெல்லும், யாழ் மாவட்டத்தில் 21.9 மெற்றிக்தொன் நெல்லும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Latest News right

எமது பல்கலைக்கழகங்களின் தரம், நற்பெயர் மீண்டும் உலகின் முன் உறுதிப்படுத்தல் அவசியம் அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்க முடியும் - ஜனாதிபதி

ஜூன் 12, 2023
Default Image
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அன்று ஆசிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில்…

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு “அபிநந்தன” விருது வழங்கி கௌரவிப்பு

மார் 13, 2023
தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க…

2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

ஜன 23, 2023
2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல்…

சீன கடனை செலுத்த 2 ஆண்டுகள் நிவாரணம் - எக்ஸிம் வங்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஜன 23, 2023
இலங்கைக்கு வழங்கிய கடனை மீளச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கத் தயார் என…

"சீதாவக்க ஒடிஸி" பயணம் தொடங்குகிறது.

ஜன 15, 2023
சீதாவக்க நகருக்குச் செல்ல ஒரு புதிய வழியைத் திறந்து "சீதாவக்க ஒடிஸி" தனது பயணத்தை…

“அஸிதிஸி” வெகுசன ஊடக புலமைப்பரிசில் வழங்கல் – 2021/2022

டிச 20, 2022
அனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன ஊடகத்…

"வரவுசெலவுத்திட்ட உரை – 2023" இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி....

நவ 14, 2022
வரவு செலவுத்திட்ட உரை – 2023 இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.... ​ கௌரவ சபாநாயகர்…

2022 புக்கர் விருது இலங்கையருக்கு ஷெஹான் கருணாதிலக்க விருதை வென்றார்

அக் 19, 2022
2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார். கடந்த…