சமீபத்திய செய்தி

இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து மகா நாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தூதுக் குழுவினர் 25ம் திகதி பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.

இந்திய பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இராணுவ வீரர்களின் போர்த்திறமை, தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான இரண்டாயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு ஜூலை மாதத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம்(சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

 

பிரமுகர்களின் வாகன போக்குவரத்திற்காக மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையில் எக்காரணம் கொண்டும் வீதிகளை மூடி வைக்கக் கூடாதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், பிரமுகர்களின் வாகன போக்குவரத்திற்காக வீதிகள் மூடப்படுவதனால் மக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அதற்கமைய பிரமுகர்களின் பாதுகாப்புத் துறையினருக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தாதவண்ணம் பிரமுகர்களின் வாகனங்களை செலுத்துமாறும் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Latest News right

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜன 01, 2025
நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின்…

தூதுவர்கள் ஒன்பது பேர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

டிச 02, 2024
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று…

இறுதி ரந்தோலி ஊர்வலத்தை பார்வையிட ஜனாதிபதி இணைந்து கொண்டார்

ஆக 20, 2024
Default Image
கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதி…

ஊடக விதிமுறைகள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – பிரதித் தேர்தல் ஆணையாளர்

ஆக 09, 2024
Default Image
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்கள் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்…

தேர்தல் காரணமாக IMF கடன் ஒப்பந்தத்தில் மாற்றம் இல்லை - அமைச்சரவை பேச்சாளர்

ஆக 06, 2024
Default Image
தேர்தல் அல்லது ஏனைய விடயங்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
சிறந்த சங்கப் பிதாமகராக இருந்து காலமான கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர்…

மறைந்த வணக்கத்துக்குரிய கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆக 05, 2024
Default Image
மறைந்த கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் தலைவர் கலபொட ஞானிஸ்ஸர நாயக்கருக்கு…