பிரமுகர்களின் வாகன போக்குவரத்திற்காக மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையில் எக்காரணம் கொண்டும் வீதிகளை மூடி வைக்கக் கூடாதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், பிரமுகர்களின் வாகன போக்குவரத்திற்காக வீதிகள் மூடப்படுவதனால் மக்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அதற்கமைய பிரமுகர்களின் பாதுகாப்புத் துறையினருக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்துமாறும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தாதவண்ணம் பிரமுகர்களின் வாகனங்களை செலுத்துமாறும் உரிய துறையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.