கடந்த காலத்தை குறை கூறுவதை விடுத்து, எதிர்காலத்தை நோக்கி விரல் நீட்டும் மக்கள் பிரதிநிதிகளாக ஒன்றிணைய வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 “கொள்கை அறிக்கை மீதான இன்றைய விவாதத்திற்கு மேலதிகமாக, கௌரவ சபாநாயகர் அவர்களே, நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற  பாராளுமன்றத்தின் தரம் தொடர்பாக, அதன் நடத்தை தொடர்பாக அறிக்கைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதற்கு இவ்வுரையில் ஒரு நிமிடத்தை நான் ஒதுக்க விரும்புகின்றேன்.  எமது அறிவு, எமது ஆய்வு தொடர்பாக பொதுமக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர் ஊடகங்களில் கூறிய கருத்து, அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த கொள்கைப் பிரகடன வெளியீட்டிற்கு மாத்திரம் இரண்டாவதாக பாரியதொரு இடம் கிடைத்துள்ளது.  இது தொடர்பாக அவதனாத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.

இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தியதற்காக கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கௌரவ சபாநாயகர் அவர்களே, இது ஒரு அரசாங்கம், ஒரு கட்சி, ஒரு தலைவர், ஒரு குழுவின் தவறு அல்ல. 1948ல் இருந்து நாம் செய்த பல மோசமான செயல்களின் இறுதி விளைவாக இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கௌரவ எதிர்க்கட்சி உறுப்பினர்களே, 13ம் எண் துரதிர்ஷ்டவசமானது என்ற அங்கீகாரம் உலகில் உள்ளது என்பதை நாம் மனதார ஒப்புக்கொள்ள வேண்டும். இது உண்மையாக இருக்காது, ஆனால் ஒரு பிரபலமான கருத்து உள்ளது. மேலும், 225 என்ற எண் குறித்து நம் நாட்டில் அவநம்பிக்கையான கருத்தும் உள்ளது. ஒரு தரப்பினர் மீது விரல் நீட்டாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே எனது பரிந்துரை. எனவே இந்த சந்தர்ப்பத்தை நாம் கூட்டாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது உரையில் கோரிக்கை விடுத்தார். அரசியலமைப்பின் மூலம் மேலாதிக்கத்தை கூட்டாகக் கூறும் இந்த பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளாகிய நாம் அந்த மேலாதிக்கத்தை யதார்த்தமாக்குகிறோமா?

மாண்புமிகு தலைவர் அவர்களே, அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் கடந்த இரண்டு வருடங்களை ஆராயும் போது, அவரது கொள்கைப் பிரகடனமான "சௌபாக்கியத்தின் நோக்கு" ஒப்பிடுவது மிகவும் நியாயமானது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் ஜனாதிபதி வேட்பாளராக அவர் முன்வைத்த கொள்கை அறிக்கையை வைத்தே கொள்கை அறிக்கை உரையை மதிப்பிட வேண்டும். எனவே,  நாம் இந்த இரண்டு வருட நெருக்கடியை எதிர்கொண்டு பயணித்த இந்தப் பயணத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி பாராட்ட வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

நாங்கள் அனைவரும் தடுப்பூசி பற்றி பேசினோம். இன்று நாம் இந்த தடுப்பூசியின் அடிப்படையில் உலகின் மற்ற நாடுகளை விட ஒரு படி மேலே இருக்கிறோம், நம்மைப் போன்ற பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பைக் கொண்ட நாடுகளுடன் மட்டுமல்லாமல், நம்மை விட உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆரோக்கியமான ஓர் இனமாக முன்னோக்கிச் சென்றுள்ளோம். அதற்காக பெரும் தியாகம் செய்த ஓர் அணி உள்ளது. அந்த பெரிய குழுவிற்குள் முன்னுரிமையை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவதில் எம்மிடையே எவ்வித வாதங்களும் இல்லை.  நான்கு நாட்களுக்கு முன், உலக சுற்றுலா கவுன்சில், ஆசிய பிராந்தியத்தில் சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடு இலங்கை என்று அறிவித்தது. இது வேறு எதனாலும் அல்ல, இந்த தடுப்பூசியில் நாம் அடைந்துள்ள சிறப்பின் காரணமாகவே எமக்கு அந்தச் சான்று கிடைக்கின்றது. எவ்வாறாயினும்,  தற்போது நாம் நெருக்கடியை எதிர்நோக்குகிறோம் என்பது மறைக்கக் கூடியதொன்றல்ல.

என்ன நெருக்கடி? இன்று உற்பத்தியை விட நுகர்வு முக்கியமானது எனக் கருதிய  ஒரு சமூகமாக நாம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அந்த நெருக்கடியின் வெளிப்பாடாகவே கோவிட் தொற்றுநோய் மாறியுள்ளது.

இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், அண்மைக் காலத்தில் அரசாங்கம் என்ற வகையில் நாம் எடுத்த சில சாதகமான நடவடிக்கைகள் குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். குறிப்பாக நமது கல்வி முறையில் நமது நாட்டின் குழந்தைப் பருவ வளர்ச்சி பற்றி. உலகின் எந்த நாட்டிலும் கல்வித் துறையில் ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சி ஒரு மையப் புள்ளியாக மாறி வருகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக ஆகக் குறைந்தது முழு நாட்டிற்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடநெறி, பாடத்திட்டம் மாகாண சபையிலிருந்து மாகாணசபை வரை வேறாக்கப்பட்ட வேலைத்திட்டம் எதுவும் எமது நாட்டில் இல்லை. அதை முறைப்படுத்த எடுத்த முடிவை நாம் பாராட்ட வேண்டும்.

மேலும் இந்த கொள்கை விளக்க விவாதத்தின் போது, ஜனாதிபதி அவர்கள் பாடங்கள் குறித்து பேசினார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை கொடுக்காதது வரலாற்று ரீதியாக நாம் செய்த ஒரு தவறு. எனவே பல்கலைக்கழக அமைப்பு முறையில் நாம் கோட்டை புகையிரத நிலையம், லிப்டன் சுற்றுவட்டத்திற்குப் பொருந்தக் கூடிய பட்டதாரிகளை உருவாக்கினோம்.

இது நெருக்கடியின் ஆரம்பம். புதிய பல்கலைக்கழக அமைப்பில், என்.எஸ்.பி.எம். மையும் நான் முன்னின்று நடத்தினேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சைடம்; பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதன் வேலைவாய்ப்பு விகிதம் 96 சதவீதம். தளத்தின் 94 சதவீதம். அரச பல்கலைக்கழக அமைப்பு தோல்வியடைவதற்கு அதுவும் ஒரு காரணம். எனவே, கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களில் ஒன்று, ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலத்தை உள்ளடக்குவது. குறிப்பாக கலைப் பாடநெறிகளுக்குள் அத்தகைய வசதி இல்லை. இதற்காக பெருந்தொகையை ஒதுக்குவதும், பல்கலைக்கழக அமைப்பிலும், ஒவ்வொரு பட்டப் படிப்பிலும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கிலமும் சேர்க்கப்படுவது முக்கியம். பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு 13வது திருத்தச் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என நண்பர் எம்.பி.சித்தார்த்தன் தெரிவித்த கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. உதாரணமாக வட மாகாணத்தில் 22 தேசிய பாடசாலைகளே இருந்தன. வடமாகாணத்தில் உள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தேசிய பாடசாலை ஒன்று கூட இருக்கவில்லை. எனவே நான் கல்வி அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்தேன். குறைந்தபட்சம் ஒரு பிரதேச செயலகத்திற்கு ஒரு தேசிய பாடசாலை இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன். ஏனெனில் வடக்கில் கல்வியில் பாரிய பிரச்சினை உள்ளது. வடமாகாணத்தில் உள்ள ஆரம்பக் கல்வி ஆசிரியர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் பயிற்சி பெறாத ஆசிரியர்களாக உள்ளனர். எனவே எதிர்காலத்தில் ஒரு நாள் நாம் ஏன் ஆயுதம் ஏந்துவதில்லை என்று குழந்தைகளிடம் கேட்போம். நாட்டின் உள்ளது 25 சதவீதம். வடக்கில் இது 53 சதவீதமாக உள்ளது. எனவே, 13வது திருத்தச் சட்டத்தை மீறிய செயலாக இதனைக் கருத வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக டிஜிட்டல் மயமாக்கல் பற்றி பேசினோம். இப்போது, வெகுஜன ஊடக அமைச்சு என்ற வகையில், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழு தீவையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனலாக் தொழில்நுட்பம் நம் நாட்டிற்கு வந்து 42 வருடங்கள் ஆகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் 2000 ஆம் ஆண்டு உலகிற்கு வந்தது. தாமரை கோபுரத்தை அடிப்படையாகக் கொண்ட 16 துணை கோபுரங்களுடன் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை இதனை நிறைவு செய்யும். 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி பார்வையாளர்களும் தங்கள் திரைகளில் மிகத் தெளிவான காட்சிகளைப் பார்க்கக் கூடியதாகவும் மற்றும் மலிவு விலையில் தொலைக்காட்சிகளை  நிறுவனங்களும்  மற்றும் தொடர்பாளர்களும் பெறுவார்கள் என்றுவாறு  நாங்கள் முடிவு செய்கிறோம்