2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சையின் 07 பாடப் பிரிவுகளிலும் முதல் 05 நிலைகளைப் பெற்றுக்கொண்ட 35 மாணவ மாணவியரும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதிக புள்ளிகளைப் பெற்ற 12 மாணவ மாணவியரும் இதன்போது பாராட்டு பெற்றனர்.
மாணவர்களின் திறமையை மெச்சிய ஜனாதிபதி அவர்கள் அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம், மக்கள் வங்கி மற்றும் இலங்கை சிங்கர் நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் அவர்களுக்கு பணப் பரிசில்களும், மடிக் கணனிகளும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கல்வியமைச்சின் உயர் அதிகாரிகளும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

03 Grade 5 scholarship 1c

09 AL scholarship

10 Grade 5 scholarship Group

11 AL scholarship Group

{jathumbnail off}