புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதி பிரியசாத் டெப் இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தின் தலைமை சட்ட ஆலோசகராக கடமையாற்றிய பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக பல்வேறு சந்தர்ப்பங்களில் கடமையாற்றியுள்ளார்.
இப் பதவிப்பிரமாண நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.அபேகோன் மற்றும் பிரியசாத் டெப் அவர்களின் குடும்பத்தினரும் பிரசன்னமாகியிருந்தனர்.

justic