யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டுப்போட்டி நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன யாழ் பல்கலைக்கழகத்திற்கும் விஜயம் செய்தார்.
அங்கு பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் நட்புறவுடன் கலந்துரையாடினார்.
 
யாழ்  பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவர்களின் குடிநீர் வசதிக்காக அமைக்கப்ட்ட இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் சம்பிரதாயபூர்வமாக இயக்கி வைத்தார்.
 
இதே போன்ற மேலும் 2 இயந்திரங்கள் மாணவர்களின் குடிநீர் தேவையை நிறைவுசெய்யும் வகையில் இங்கு அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.