பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்கமைவாக பகலுணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக மேலும் 1 மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போஷாக்கு நிறைந்த ஒருவேளை உணவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு தேவையான நிதியை வெளிநாட்டு நன்கொடை மூலம் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு மேலதிகமாக இதற்கான நிதியையும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்து இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.