கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கலைஞர் ஜெக்சன் எந்தனியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) நேரில் சென்று பார்வையிட்டார்.

வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் குழாமை சந்தித்த ஜனாதிபதி ஜெக்சன் எந்தனியின் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்ததுடன் தற்போது தட்டுப்பாட்டிலுள்ள மருந்துகளை தடையின்றி பெற்றுக்கொள்வதற்கு வழிவகுப்பதாகவும் வைத்தியர்களிடம் உறுதியளித்தார்.

சிகிச்சை தொடர்பில் எவ்வாறான உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக தன்னை தொடர்புகொள்ளுமாறும் ஜனாதிபதி ஜெக்சன் எந்தனியின் மனைவியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஜெக்சன் எந்தனி அண்மையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.