கொழும்பிலிருந்து பதுளை வரையான வார இறுதி அதிசொகுசு 'எல்ல ஒடெசி' ரயில் பயணத்தை போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (13) அதிகாலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைத்தார்.

அதன் பின்னர் அமைச்சர் பயணிகளுடன் உரையாடியவாறு அதிகாரிகள் சகிதம் ரயிலில் பயணம் செய்தார்.

இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பதுளை நோக்கிச் சென்று ஞாயிறு கொழும்பை வந்தடையும். இதற்கு முன்னர் இச்சேவை கண்டியிலிருந்து எல்லை வரை ஒரு நாள் பயணமாகவே சென்று வந்தது. அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலுக்கமையவே ரயில்வே திணைக்களம் இச்சேவையை மீள ஆரம்பிக்க உத்தேசித்துள்ளமை குறிப்பிடதக்கது.