கண்டி எசல பெரஹெரவின் இறுதி ரந்தொலி பெரஹெர இன்று (11) இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அவர்கள் கண்டிக்கு வருகைதந்திருந்தார்.

இதேவேளை கண்டி எசல பெரஹெரவின் உத்தியோகப்பூர்வ இறுதி நிகழ்வு கண்டியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் நாளை (12) நடைபெறவுள்ளது.

கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இவ்வருடம் ரந்தொலி பெரஹெர வெகுவிமர்சையாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.