இலங்கையின் சினிமா துறை மற்றும் திரைப்படக் கலாசாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தை அபிவிருத்தி செய்வதற்கும் தேசிய சினிமா கொள்கையொன்றை அமுல்படுத்துவது தொடர்பிலான திட்டமொன்றை நிறுவுவதுக்குறித்தும் கலந்துரையாடும் விசேட சந்திப்பொன்று வெகுசன ஊடக அமைச்சில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி. பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது. (10)

தேசிய திரைப்படக் கூட்டுதாபனத்தின் தலைவராக புதிதாக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி தீபால் சந்திரரட்ன திரைப்பட துறையில் தேர்ச்சிப்பெற்றவர்கள் கலைஞர்கள் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அத்துறையுடன் தொடர்புபட்ட பலரினதும் கருத்துக்களைப் பெறுவதே இச்சந்திப்பின் நோக்கமாகும்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன தற்போதைய இளைஞர்கள் மத்தியில் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் வழக்கம் குன்றி வருவதனால் மக்களை கவரும் வகையில் புதிய சினிமா கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

அத்துடன் சினிமா என்பது ஒரு கலை.எனவே இத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் இதற்கான திட்டங்களும் கொள்கைகளும் வடிவமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் இதன்போது கூறினார்.