இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினூடாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும். அரச ஊழியர்கள் காத்திரமான சேவையை நாட்டுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன்போது 22ஆம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவையெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.