உள்ளூர் ஆடை உற்பத்தி உபகரணங்கள் அல்லது உபகரணங்களின் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரனவினால் முன்வைக்ககப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன (3) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடுவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே கோவிட் 19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக ஆடைத் துறைக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் நாட்டில் நிலவும் சாதகமற்ற பொருளாதார சூழல் காரணமாக, உள்ளுரில் உற்பத்தி செய்யப்படாத ஆடை உற்பத்திக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது, உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதன்படி, நிலவும் சூழ்நிலைக்கு ஒரு தீர்வாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத மற்றும் ஒத்திசைக்கப்பட்ட அமைப்பு (HS) குறியீடுகளின் கீழ் வரும் உள்ளூர் ஆடை உற்பத்தி உபகரணங்கள் அல்லது / பொருட்கள் இறக்குமதிக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கு கைத்தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதென்றும் தெரிவித்தார்.