பாக்கிஸ்தான் விமான படை அதிகாரி எயார் சீப் மாஷல் முடாஹிடி அன்பர் ஹான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு இவர் கடந்த 5 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார். பிரதமருக்கும் பாகிஸ்தான் விமானப் படை அதிகாரிக்கும் இடையிலான சந்திப்பு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் பிரதமருக்கும் பாக்கிஸ்தான் விமானப்படை அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.