மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான முதலாவது பாதுகாப்பு மத்திய நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மக்களிடம் கையளித்தார்.

களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் வழங்கிய காணியில். இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மத்திய நிலையத்திற்கு 55 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.13 மாத காலப்பகுதியில் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் பல பங்களிப்புக்களை வழங்கியிருந்தன. மாற்றுத் திறன் கொண்ட பிள்ளைகள் இலவசமாக இந்த நிலையத்தில் சிகிச்சைகளைப் பெற முடியும்.