ஐநா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் இலங்கை பிரதிநிதி Robert Juhkam அவர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.

ஐநா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறி்த்து இதன்போது ஐநா. பிரதிநிதி ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார். இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கேற்ப பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு உதவுவதாக அவர் ஜனாதிபதி அவர்களிடம் உறுதியளித்தார்.