டெலிகொம் நிறுவனத்தின் தொடர்பாடல் தொழிநுட்பங்களை பலப்படுத்தும் “தேசிய டிஜிட்டல் மயமாக்கத்திற்கான பயணம்” ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 11ம் திகதி பிற்பகல் கொழும்பு, தாமரை தடாக கலையரங்கில் வெளியிடப்பட்டது.
இதனூடாக Smart Government, Smart Security, Smart Transportation & Mobility, Smart Health ஆகிய துறைகளின் கீழ் நாட்டின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் உள்ளடக்கும் வகையிலான 16 எண்ணக்கருக்களின் ஊடாக நவீன தொழிநுட்பத்துடனான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான பயணப்பாதை இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டது.
“எல்லையற்ற நீங்கள்” எனும் எண்ணக்கருவினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த செயற்திட்டத்தினால் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் ஆகிய மூன்று தரப்பினரின் ஆற்றல்களை வரையறையின்றி விரிவுபடுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும்.
“தேசிய டிஜிட்டல் மயமாக்கத்திற்கான பயணம்” ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்டது.
நவீன தொழிநுட்ப இலங்கை பற்றிய எதிர்கால குறிக்கோள்களை யதார்த்தமாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை பாராட்டி ஜனாதிபதி விருதுகள் இதன்போது ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கே.கே.என்.டபிள்யு.பெரேரா, மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோருக்கும் தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, நிதியமைச்சு, இலங்கை முதலீட்டு சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
பௌத்த வழிபாட்டு நூல் வெளியீட்டிற்காக வண.மெதகொட அபயதிஸ்ஸ தேரருக்கும் விருது வழங்கப்பட்டதுடன், சிறுநீரக நோய் நிவாரண நிதியத்திற்கான நிதி அன்பளிப்பும் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, அஜித் பீ.பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேரா, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன உள்ளிட்ட அதன் பணிப்பாளர் சபையும் புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.