இன்று (15) முற்பகல் 11.17 மணிக்கு மலர்ந்துள்ள சுபவேளையில் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் பழ மரக்கன்றொன்றை நாட்டி, சுபவேளையில் மரக்கன்றொன்றை நாட்டும் பாரம்பரியத்துடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் இணைந்துகொண்டார்.

முக்கொத்து சுபவேளையான இன்று மு.ப. 11.17 மணிக்கு வெண்ணிற ஆடையில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றொன்றை நடுவது இம்முறை சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
எதிர்கால தலைமுறைக்காக சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகம் உணரப்படும் இக்காலத்தில், அந்த பாரம்பரியத்துடன் இணைந்து பிரஜை என்ற தமது பொறுப்பை நிறைவேற்றுமாறு புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அவர்கள் அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.