இந்த நிகழ்வில் அமைச்சரவையினால் அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளாகத்தில் பலாமரக்கன்றுகள் நடப்பட்டன. அரச ஊழியர்களுக்கும் பலாமரக்கன்றுகள் அமைச்சரினால் வழங்கப்பட்டன. விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நாம் "உற்பத்தி செய்வோம் நாம் உண்போம்" என்ற துரித விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 10 இலட்சம் பலாமரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இதன் ஒரு நடவடிக்கையான 5 இலட்சம் பலாமரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டமாக தேசிய வைபவத்தின் ஒரு பகுதி இன்று ஆரம்பிக்கப்பட்டது.
விவசாய அமைச்சு மற்றும் விவசாய சேவைகள் திணைக்களம் தேசிய உரமேம்பாட்டு சபை மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
விவவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெகுசன ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல , அமைச்சின் செயலாளர் கலாநிதி சரித ஹேரத் , அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 YAM0228

IMG 0209

c9107801061ae4fa692192a612d2c1c8 XL

 YAM0301

{jathumbnail off}