கலைகளினூடாக சிறுவர்களின் மனதினை ஆற்றுப்படுத்தும் நோக்குடன் Art of Life சிறுவர் ஓவியப் பயிற்சி மன்றத்தினால் இந்த சித்திரக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், 03 முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள் இதில் பங்குபற்றினர்.
கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களை சிறுவர், சிறுமியர்கள் மிகுந்த அன்புடன் வரவேற்றனர்.
சிறுவர் மன ஓவியங்கள் நினைவு மலர் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், விசேட திறமைகளை வெளிக்காட்டிய சிறார்களுக்கு ஜனாதிபதி அவர்கள் பரிசில்களை வழங்கினார்.
இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் திசினி சமந்தா லியனகே என்ற சிறுமிக்கு ஜனாதிபதி அவர்கள் மரக்கன்று ஒன்றினை வழங்கினார்.
பிரபல ஓவியக் கலைஞர் திலக் கலுலியனகே உள்ளிட்ட Art of Life சிறுவர் ஓவியப் பயிற்சி மன்றத்தின் சிறார்களால் வரையப்பட்ட ஜனாதிபதி அவர்களின் உருவப்படமும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பிரபல கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்ஹ, எட்வின் ஆரியதாச உள்ளிட்ட கலைஞர்களும் புத்திஜீவிகளும் அதிதிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.