காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ் அறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து, அமைச்சரவை உபகுழுவினை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.