கொழும்பு நகரை அண்டிய நகர அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உலக வங்கியின் நிதியுதவியிலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள பேரை வாவியின் நீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்த சமரசிங்ஹ, பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்ஹ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பேரை வாவி கரையோர பூங்காவை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார்
